Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Petraalthan Magala?
Petraalthan Magala?
Petraalthan Magala?
Ebook153 pages53 minutes

Petraalthan Magala?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனைவியை இழந்த தன் அண்ணன் ராஜேந்திரன் ஒற்றை மகனை அழைத்துக் கொண்டு துபாய் செல்ல முயல, அவன் மகன் கோபியைத் தானே வளர்ப்பதாய்ச் சொல்லி தன்னுடனே வைத்துக் கொள்கிறாள் ராஜாத்தி. அவளும், அவள் கணவன் மேகநாதனும் கோபி பெரியனானதும் அவனையே தன் மகள் சங்கமித்ராவிற்குத் திருமணம் செய்து விடலாம், எனவும் தீர்மானிக்கின்றனர். அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்ல, கோபியும் அதே கனவோடு வளர்கிறான்.
ஆனால், பல வருடங்களுக்குப் பிறகு., இளம் யுவதியான சங்கமித்ரா ஒரு இளைஞனை அழைத்து வந்து, அவனைத் தன் காதலன் என கோபியிடமே அறிமுகப்படுத்தி, தங்கள் காதலுக்கு உதவச் சொல்கிறாள்.
சோகத்தை உள்ளே வைத்துக் கொண்டு அவர்களிருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைக்கிறான் கோபி. ஆனால், பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் “கல்யாண மன்னன்” அவன் என்பது தெரிய, பைத்தியக்காரியாய் தெருவில் திரிகிறாள் சங்கமித்ரா. அவளை எதேச்சையாக சந்தித்த கோபி, வீட்டிற்கு அழைத்து வருகிறான்.
தொடர்ந்து அந்தக் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை எளிய நடையில் எழுதியுள்ளார் கதாசிரியர். இக்கதை பெண்களால் அதிகம் விரும்பப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580130005254
Petraalthan Magala?

Read more from Mukil Dinakaran

Related to Petraalthan Magala?

Related ebooks

Reviews for Petraalthan Magala?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Petraalthan Magala? - Mukil Dinakaran

    http://www.pustaka.co.in

    பெற்றால்தான் மகளா?

    Petraalthan Magala?

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    1993

    டவுன் பஸ்ஸிலிருந்து இறங்கிய ராஜேந்திரன், தனக்குப் பின்னால் இறங்கிய தனது ஆறு வயது மகன் கோபியை கையைப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார். பஸ் நகர்ந்ததும் தன் கையை அவனிடம் நீட்டி, அப்பாவோட கை விரலைப் பிடிச்சுக்கிட்டே நடந்து வரணும்...என்ன?என்றார்.

    சிறுவன் மிரட்சியுடன் சரி யென்று தலையாட்டினான். ஒல்லியான தேகம், நீண்ட முகம், கண்களில் நிரந்தர சோகம்.

    ராஜேந்திரனின் கால்கள் அங்கிருந்த டீக்கடையை நோக்கிச் சென்றன.

    வாங்க சார்...என்ன சாப்பிடறீங்க?... உளுந்து வடை...பருப்பு வடை...எல்லாமே சூடாயிருக்கு! டீக்கடைக்காரன் தன் வியாபாரத் தூண்டிலை மெல்ல இறக்கினான்.

    கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்..துடுப்பு கூட பாரமென்று கரையைத் தேடும் ஓடங்கள்! டீக்கடை ஸ்பீக்கர் சோகமான அந்தப் பாடலை கரகரப்புடன் பாடிக் கொண்டிருந்தது.

    என்னப்பா....என்ன சாப்பிடறே? மகனைப் பார்த்துக் கேட்டார் ராஜேந்திரன். அவரது கைகள் அனிச்சையாய் உட்புறம் மடங்கிக் கிடந்த மகனின் சட்டைக் காலரை சரிப்படுத்தின.

    கண்களில் விழுந்த தூசியைத் துடைத்துக் கொண்டே, ம்ஹூம்!... எனக்கு எதுவும் வேண்டாம்! இட,வலமாய்த் தலையாட்டி மறுத்தான் சிறுவன்.

    கடைக்காரன் முந்திக் கொண்டு, அப்ப தம்பிக்கு...தேங்காய் பன்!னோ...ப்ளம் கேக்!கோ...தந்துடலாமா? அது போன்ற பதார்த்தங்களை எந்தக் குழந்தையும் மறுக்காது, என்கிற மகா நம்பிக்கையுடன் டீக்கடைக்காரன் வாய் மலர்ந்தான்.

    ஆனால், கோபி அதற்கும் மறுப்புத் தெரிவிக்க, தன் தோல்வியை விழுங்கிக் கொண்ட கடைக்காரன் ராஜேந்திரன் பக்கம் திரும்பி, சாருக்கு...என்ன?... டீயா?... இல்லை காஃபியா? கடுப்புடன் கேட்டான்.

    டீயே போடுப்பா! என்ற ராஜேந்திரன், சிறுவனிடம், கொஞ்சம் டீயாவது சாப்பிடறியாப்பா? பாசம் பொங்கக் கேட்டார்.

    வேண்டாம்ப்பா! ‘வெடுக்’ கென்று பதில் சொன்னான் அவன்.

    ஹி...ஹி...தம்பிக்கு ஏதோ கோபம் போலத் தெரியுது!... சொல்லியவாறே டீயை ஆற்றி ராஜேந்திரனிடம் நீட்டினான் கடைக்காரன்.

    ஆறு மாதங்களுக்கு முன்பு தாயை இழந்து விட்ட சிறுவனுக்கு எதில்தான் நாட்டமிருக்கும்?... சாப்பிடத்தான் பிடிக்குமா?... இல்லை எல்லோரிடமும் சகஜமாகப் பேசிப் பழகத்தான் முடியுமா?. கோபியின் அந்தப் போக்கிற்கான உண்மையான காரணம் தெரியாத டீக்கடைக்காரன் கோபியை ஒரு விதக் கோபத்துடனேயே பார்த்துக் கொண்டிருந்தான். பொடிப்பயல்...என்னோட வியாபாரத் தந்திரத்தையே பொசுக்குன்னு ஆக்கிட்டானே?

    டீக்கான சில்லரையைத் தந்து விட்டு, அங்கிருந்து கிளம்பி, பையனுடன் நடக்க ஆரம்பித்தார் ராஜேந்திரன்.

    எதிரே வந்த ஐஸ் வண்டிக்காரன் சிறுவனைப் பார்த்து அவனைக் கவரும் விதமாய், பால் ஐஸ்...குச்சி ஐஸ் என்று கூவ, அதைச் சற்றும் கண்டு கொள்ளாமல் நடந்தான் சிறுவன்.

    அரை மணி நேர நடைக்குப் பின், ஏழெட்டு தெருக்கள் தள்ளியிருந்த தன் மைத்துனர் மேகநாதன் வீட்டையடைந்து, காலிங் பெல்லை அழுத்தினார் ராஜேந்திரன்.

    நான்காம் நிமிடத்தில் திறந்த கதவிற்குப் பின்னால் மைத்துனர் மேகநாதன்.

    வாங்க மாப்ள!... உள்ளார வாங்க!... அடேய் குட்டி மாப்ளை...எப்படிடா இருக்கே? கேட்டவாறே அவர்கள் உள்ளே வர வழி விட்டார் மேகநாதன்.

    உள்ளே வந்த ராஜேந்திரன், கூடத்து நாற்காலியில் அவராகவே அமர்ந்தார்.

    ஏய்...ராசாத்தி...இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கன்னு? சமையலறையைப் பார்த்துக் குரல் கொடுத்தார் மேகநாதன்.

    இடுப்பில் தன் ஒரு வயதுக் குழந்தை சங்கமித்ராவைச் சுமந்தபடி கூடத்திற்கு வந்தவள், வந்ததும் வராததுமாய் ராஜேந்திரனைப் பார்த்து ஒரு சின்ன அழுகையை உதிர்த்து விட்டு, சிறுவன் கோபியைத் தன் இடுப்போடு இறுக அணைத்துக் கொண்டு, இன்னொரு அழுகையைத் தந்தாள்.

    இப்படி...சின்னப் பையனை உங்க கைல கொடுத்துட்டு அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்திட்டாளே இவனோட அம்மா! அழுகையினூடே அவள் சொல்ல,

    ப்ச்...ராசாத்தி...நீ கொஞ்சம் அமைதியாயிருக்கியா?... ஆறுமாசமா அழுது...அழுது...மனசெல்லாம் இறுகிப் போய்...கண்ணீரெல்லாம் வத்திப் போய் வந்திருக்கற மனுஷனை மறுபடியும் ஏன் சோகப்படுத்தறே? என்று மனைவியை அடக்கிய மேகநாதன், மாப்பிள்ளை ராஜேந்திரன் பக்கம் திரும்பி, மாப்ள...என் தங்கச்சிக்கு உங்களை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சப்ப அவள் ரொம்பக் குடுத்து வெச்சவள்னு நினைச்சோம்!... ஆனா...அவ அப்பேர்ப்பட்ட புருஷனோட வாழக் குடுத்து வைக்காதவள்னு நாங்க நெனைச்சுக் கூடப் பார்க்கவேயில்லை மாப்ள!

    தன் தலையை நிதானமாய்த் தூக்கி மைத்துனர் மேகநாதனை நேர்ப்பார்வை பார்த்த ராஜேந்திரன், மேகநாதன்...உன் தங்கச்சி என்னை துபாய் வேலைக்கு முயற்சி பண்ணுங்க!... துபாய் வேலைக்கு முயற்சி பண்ணுங்க!ன்னு சதா சொல்லிட்டேயிருப்பா!... நானும் அவ ஆசைக்காக ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஏஜென்ஸில பணம் கட்டி அப்ளை பண்ணி வெச்சேன்!... இது நாள் வரைக்கும் வராத அந்த சான்ஸ்...இப்ப...அவ போனப்புறம் வந்திருக்கு!... சொல்லி விட்டு விரக்திச் சிரிப்பொன்றை வீசினார் ராஜேந்திரன்.

    க்கும்...அதைத் தூக்கிக் குப்பைல போடுங்க மாப்ள!... அது எதுக்கு வேணும் இப்ப? எரிச்சலுடன் சொன்னார் மேகநாதன்.

    இல்லை மேகநாதன்...அது வேணும்!... ஏன்னா?... நான் துபாய் வேலைக்குப் போகப் போறேன்! பட்டென்று சொன்னார் ராஜேந்திரன்.

    என்னது...துபாய் வேலைக்குப் போகப் போறீங்களா?... என்ன மாப்ள..தமாஷ் பண்ணரீங்களா?... எப்படி மாப்ள முடியும்?

    ஏன் முடியாது?... எனக்காக இல்லாட்டியும் உங்க தங்கச்சியோட ஆசை....அதுக்காக வேணும் போகணும்! ராஜேந்திரன் உறுதியாய்ச் சொன்னார்.

    என்ன மாப்ள...இப்படிப் பேசறீங்க?... ஒருவேலை அவ உயிரோட இருந்திருந்தா நிச்சயம் நானே உங்களை சந்தோஷமா வழியனுப்பி வெச்சிருப்பேன்!... இப்பத்தான் நிலைமையே தலைகீழாக மாறிப் போயிடுச்சே?... மகராசி பொசுக்குனு கண்ணை மூடி உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையே திசை மாறிப் போக வெச்சிட்டாளே!

    சில நிமிடங்கள் அமைதி காத்த ராஜேந்திரன், மேகநாதன்...நான் ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சுப் பார்த்திட்டுத்தான் இந்த முடிவுக்கே வந்தேன்!... கோபியை ஏதாவது ஒரு அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுட்டு...நான் துபாய் கிளம்பலாம்னு இருக்கேன்! தீர்மானமாய்ச் சொன்னார்.

    சட்டென்று கோபத்திற்கு ஆளான மேகநாதன், இல்லை மாப்ள...உங்க முடிவு நல்ல முடிவா எனக்குப் படலை!... இப்ப நீங்க துபாய் போய்ச் சம்பாதிக்கணும்னு என்ன அவசியம்? சற்றும் காட்டமாகவே கேட்டார்.

    மெலிதாய்ச் சிரித்த ராஜேந்திரன், நீங்க உங்க அபிப்பிராயத்தைச் சொல்றீங்க!... .நானும் கேட்டுக்கிட்டேன்!... .ஆனா என் முடிவு அதேதான்!... அதில் துளியும் மாற்றமில்லை! ஆணித்தரமாய்ச் சொன்னார்.

    தன் மனைவி பக்கம் திரும்பிய மேகநாதன், ஏய்...ராசாத்தி....மாப்பிள்ளை சொன்னதைக் கேட்டியா?

    ம்..கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்!... .நான் பேச நினைச்சதையெல்லாம் நீங்களே பேசிட்டதினால நான் அமைதியாயிட்டேன்!... எனக்கும் உங்களை மாதிரியே அவர் முடிவுல உடன்பாடு இல்லை!... இந்த வயசிலிருந்து பையன் அனாதை ஆசிரமத்துல வளர்ந்தா...அவன் மனசளவுல ரொம்பவே பாதிக்கப் பட்டுடுவான்ங்க!... தாயன்பும்...தாயின் பராமரிப்பும்தான் இல்லாமப் போச்சு...தந்தையன்புமா இல்லாமப் போகணும்? சொல்லியவாறே இடுப்பிலிருந்த குழந்தை சங்கமித்ராவை கீழே இறக்கி விட்டாள் ராசாத்தி.

    அது

    Enjoying the preview?
    Page 1 of 1