Dubai Kizhavi!
()
About this ebook
கிழவியின் மகன் துபாயிலிருந்து எழுதும் கடிதங்களைப் படித்துக் காட்டி, அதற்கு பதில் போடும் வேலையை, மனிதாபிமான அடிப்படையில் செய்து வந்தார் ராஜாஜி. ஒரு நாள் துபாய் போலீஸிடமிருந்து கிழவி மகன் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாய் கடிதம் வருகின்றது.
பெரும் குழப்பத்திலாழ்ந்த ராஜாஜி, அந்த விஷயத்தை கிழவியிடமிருந்து மறைக்கிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாய், கிழவியின் மகன் எழுதுவது போல், தானே கடிதம் எழுதி கிழவிக்கு அனுப்பி வந்தார்.
கிழவி மரணிக்கும் போது, தன் மகன் எங்கோ உயிரோடு இருக்கிறான், என்கிற நிம்மதியான சந்தோஷத்தோடு மரணிக்கட்டும், என்கிற நல்ல எண்ணத்தில் ராஜாஜி அந்தப் பழக்கத்தை தொடர்ந்து வந்தார்.
“கிழவிக்கு அந்த உண்மை தெரிய வந்ததா?..அதன்...பின் நடந்தது என்ன?” என்பதை அறிந்து கொள்ள கதையை வாசியுங்கள்...வாசகர்களே!
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratings"Aasai Mugam Arugirundhal...!" Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Saami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsKutram Muthal Kutram Varai Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Netru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsSoftware Kuttrangal! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Ini Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Ippadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Dubai Kizhavi!
Related ebooks
Cylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Swasikiren… Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Manam Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsPachaikili Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsSorry, Konnutten! Rating: 3 out of 5 stars3/5Thoorigai Erigindra Poothu…! Rating: 0 out of 5 stars0 ratingsMangai Enthan Nenjukkul! Rating: 0 out of 5 stars0 ratingsChittukuruvi Suttu Pazhagu Rating: 0 out of 5 stars0 ratingsSeenupayal Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAnbudan Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsதீயாய் வந்த தென்றல்... Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsIrandaam Manaiviyagiya Naan... Rating: 0 out of 5 stars0 ratingsPesu... Malarey... Pesu! Rating: 0 out of 5 stars0 ratingsNinaikka Therindha Manamey! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Banthalitten! Rating: 0 out of 5 stars0 ratingsPoisugam Rating: 0 out of 5 stars0 ratingsManasu Valikkuthu Mathumitha! Rating: 0 out of 5 stars0 ratingsShruthi - Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsKichu Kichu Rating: 0 out of 5 stars0 ratingsஉயிரே... உருகாதே..! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Oru Neela Devathai! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Un Per Solla Aasaithan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Dubai Kizhavi!
0 ratings0 reviews
Book preview
Dubai Kizhavi! - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
துபாய்க்கிழவி!
Dubai Kizhavi!
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
ஒருவன் மனது ஒன்பதடா!... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா!...உருவத்தைப் பார்த்தவன் மனிதனடா!...அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா!....ஏறும் போது எரிகின்றான்!...இறங்கும் போது சிரிக்கின்றான்!..வாழும் போது வருகின்றான்!...வறுமை வந்தால் பிரிகின்றான்!
தொலைக்காட்சியில் பழைய தத்துவப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த ராஜாஜி, தெருவில் ஏதோ கூச்சல் கேட்க, எழுந்து சென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். ஆறடி உயரத்தில் சிவந்த மேனி. நல்ல வாட்டசாட்டமாக இல்லாது போனாலும், சராசரி உடலமைப்போடுதானிருந்தார்.
தெருவில், துபாய்க்கிழவி முன்னே செல்ல, அவள் பின்னால் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து சிறுவர்கள் அவளைக் கிண்டல் செய்தபடியே சிரித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.
துபாய்க்கிழவி பாருங்க...ருபாய் நோட்ட கேளுங்க!
துபாய்க்கிழவி பாருங்க!...ருபாய் நோட்ட கேளுங்க!
துபாய்க்கிழவிக்கு அறுபத்தியேழு...அறுபத்தியெட்டு வயதிற்கும். ஒல்லியான சாட்டை உடல். இளம் வயதில் வேலை வெட்டிக்கு அஞ்சாதவளாய் இருந்து, ஏகப்பட்ட வேலைகளை எளிதாகச் செய்தவளானதால் இன்னமும் ஆரோக்கியத்திற்கு குறைவில்லாது இருந்தாள். கந்தலாகிப் போன நூல் சேலையில் இருந்தாலும் கிழவி வசம் காசு பணத்திற்குக் குறைவில்லை. துபாயிலிருந்து அவள் மகன் அனுப்பும் பணத்தையெல்லாம் அப்படியே பத்திரமாக சேர்த்து வைத்திருக்கிறாள். வாய் எப்போதும் வெற்றிலையை மென்று கொண்டிருக்கும்.
தன் பின்னால் பாடிக் கொண்டு வரும் சிறுவர்கள் மீது எரிச்சலான கிழவி, நின்று விருட்
டென்று திரும்பி அவர்களைப் பார்த்து த்தூ...சனியன்களா!
என்று துப்பிவிட்டு, கொழந்தைகளா நீங்கெல்லாம்? கோட்டானுக!...உங்காத்தாக்காரிக வேற வேலையில்லாம உங்களைப் பெத்துப் போட்டிருக்காளுக!...அதான் ஊடு அடங்காம இப்படி ரோட்டுல திரியறீங்க!..நல்ல கருங்கல்லா எடுத்து மண்டைல போட்டேன்னா...மண்டை பொளந்துக்கும் ஆமா...
திட்டித் தீர்த்தாள்.
ஆனால், அந்தச் சிறுவர்களோ அவள் திட்டலைச் சிறிதும் சட்டை செய்யாமல், கெழவி...கருங்கல்லைத் தூக்கி எங்க மண்டைல போடறதுக்கு முன்னாடி நீ மண்டையப் போட்டுருவே ஜாக்கிரதை!
என்று சொல்லி விட்டு கொல்
லென்று சிரித்து மகிழ,
ராஜாஜிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்ன பசங்க இவனுக?...பாவம் அந்தக் கிழவி...இவனுகளோட இம்சையினாலேயே கிட்டத்தட்ட பாதிப் பைத்தியமாயிடுச்சு!...இதை முழுப் பைத்தியமாக்காம விட மட்டானுக போலிருக்கு!
என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அவசர அவசரமாய் வாசல் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினார்.
ராஜாஜியைப் பார்த்ததும் சற்றுத் தெம்பான கிழவி, சாரு...பாரு சாரு...இந்தக் கொரங்குக...என் பின்னாலேயே வந்து...தொந்தரவு பண்ணுதுக சாரு
என்றாள்.
டேய் உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா?...போங்கடா...வேற எங்காச்சும் போய் விளையாடுங்கடா!...
என்று கத்தலாய்ச் சொல்லித் துரத்தினார்.
இனி தங்கள் வேலையைத் தொடர முடியாது என்று தெரிந்து கொண்ட சிறுவர்களில் ஒருவன், டேய் கரிபால்டி...வாடா நாம போடியம்மா காட்டுக்குள்ளார போயி
கிளியார் கிளி வெளையாடலாம்!
என்று ஒரு கருத்த சிறுவனைப் பார்த்துச் சொல்ல,
ஆமாம்டா..அங்கியே போகலாம்டா!
என்றான் அந்தக் கருப்பன். கருப்பாய் இருக்கும் காரணத்தால் அவனுக்குக் கிடைத்த பட்டப் பெயர் கரிபால்டி.
திரும்பி எதிர்த் திசையில் ஓடிய மொத்த சிறுவர்களும், போகும் போது ஹேய்ய்ய்ய்ய்ய்
என்று கோரஸாய்க் கத்திக் கொண்டு ஓடினர்.
அவர்கள் போன பின், கிழவி பக்கம் திரும்பிய ராஜாஜி, என்ன துபாய்...என்ன சமாச்சாரம்?
கேட்டார்.
ஒண்ணுமில்லை சாரு...எம் மகன் துபாயிலிருந்து கடுதாசி போட்டிருக்கான்!...அதைப் படிச்சுக் காட்டச் சொல்லிக் கேட்கத்தான் உங்கிட்ட வந்தேன் சாமி!...
என்றபடி ஒரு ஏர்மெயில் கவரை நீட்டினாள்.
ஓ...பையன்கிட்டயிருந்து லெட்டரா?
என்றவாறே அதை வாங்கிப் பிரித்து, தலையை இட, வலமாய் ஆட்டியபடியே, சன்னக் குரலில் படிக்க ஆரம்பித்தார் ராஜாஜி. ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்...ம்ம்ம்.
சத்தமாப் படி சாமி...நானுங் கேட்டுக்கறேன்!
அவள் கை அனிச்சையாய் சுருக்குப் பையை எடுத்து அதனுள்ளிருந்த வெற்றிலையை வெளியே எடுத்தது.
கடிதத்தை முழுவதுமாய்ப் படித்து முடித்த ராஜாஜி, கெழவி...இதுல ஒண்ணும் முக்கியமான விஷயம் இல்லை கிழவி!...வழக்கமான குசல விசாரிப்புத்தான்!
என்றார்.
அதை அப்படியே வாசி ராசா!...அவன் எழுதினதைக் கேட்கும் போது எனக்கு அவனையே நேர்ல பார்க்கற மாதிரி இருக்கும் சாமி!
அவள் கண்களில் பாசம் தெரிந்தது. மகனைப் பார்க்க வேண்டும் என்கிற ஏக்கமும் இருந்தது.
நெகிழ்ந்து போன ராஜாஜி, கடிதத்தை அப்படியே ஒரு வரி விடாமல் வாசிக்கலானார்.
அன்புள்ள அம்மாவுக்கு!...தங்கராசு எழுதிக் கொள்வது. நான் இங்க நல்லா இருக்கேன். வேலைதான் கொஞ்சம் ஜாஸ்தி..இருந்தாலும் பரவாயில்லை...அந்த அளவுக்கு சம்பளம் குடுத்துடறாங்க!...லீவுதான் கிடைக்கவே மாட்டேங்குது!...உடம்பை நல்லா பார்த்துக்கோ!...கஞ்சத்தனம் பண்ணாம நேரா நேரத்துக்கு சாப்பிடு!..மருந்து மாத்திரை வேணும்னா தாராளமா வாங்கிக்கோ...உடம்பைப் பார்த்துக்கோ!....நிறைய சம்பாதிச்சதும் நம்ம ஊருக்கே திரும்பி வந்துடுவேன்...நான் வந்த்தும் உன்னைய நல்லா கவனிச்சுக்கறேன்!
ராஜாஜி படிக்க படிக்க, அந்த துபாய்க்கிழவி விழிகளில் கண்ணீர்.
என்ன கெழவி?...எதுக்கு அழறே?
அழுவலை தம்பி!...ஆனந்தத்துல கண்ணீர் விடறேன்!...இங்க பத்துக் காசு சம்பாதிக்கத் துப்பில்லாம...தெருத்தெருவா சுத்திக்கிட்டுக் கெடந்த கழுதை...இப்ப நிறைய சம்பாதிச்சிட்டு வர்றேன்னு சொல்லுறதை கேட்கும் போது மனசு நெறைஞ்சிட்டுது சாமி...அவன் கொண்டாந்து குடுக்கறானோ...இல்லையோ...குடுக்கறேன்னு சொன்னதே மனசு நெறைஞ்சு போச்சுப்பா!
சரி...சரி...அவ்வளவுதான் படிச்சு முடிச்சாச்சு...இந்தா உன் கடுதாசி எடுத்திட்டுப் போ!
சொல்லியவாறே ராஜாஜி கடிதத்தை நீட்ட,
அய்யய்யா...இரு தம்பி...பதில் கடுதாசி போடணுமல்ல?
என்றாள் கிழவி.
ஓ...அது வேற இருக்கா?
ராஜாஜி சலிப்புடன் கேட்டார்.
அவர் சலித்துக் கொள்வதைப் புரிந்து கொண்ட கிழவி, அய்யா...சலிச்சுக்காத அப்புனு!...இத்தினி நாளு எனக்கு அந்த இஸ்கூலு வாத்திதான் படிச்சுக் காட்டுவாரு!...பதில் கடுதாசியும் எழுதிப் போடுவாரு!...இப்பத்தான் அந்த வாத்தியை வேற ஊருக்கு மாத்திப் போட்டாங்கல்ல?...அதான் உன்கிட்ட வந்தேன் சாமி!...படிப்பறிவில்லாத இந்தக் கிழவிக்கு...கொஞ்சம் ஒத்தாசை பண்ணு சாமி!...உனக்குப் புண்ணியமாப் போகும்!
அந்தக் கிழவி தான் பேசும் விதத்தில் ராஜாஜியின் தாயை ஞாபகப்படுத்திய காரணத்தினாலோ என்னவோ, ராஜாஜியும் ஒப்புக் கொண்டு, வீட்டினுள் எழுந்து சென்று ஒரு வெள்ளைத் தாளும், பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து, வாசலின் மேல் படியில் அமர்ந்து கொண்டு எழுதத் தயாரானார்.
கடைசி வாசற்படியில் அமர்ந்த கிழவி, சொல்ல ஆரம்பித்தாள். சம்பாதிச்ச வரையில் போதும்னு சொல்லி அவனைத் திரும்பி வரச் சொல்லு சாமி!
அவள் சொல்வதை அப்படியே எழுதுவதா, இல்லை அதன்