Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Idhayam
Innoru Idhayam
Innoru Idhayam
Ebook133 pages47 minutes

Innoru Idhayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் அக்கா அலமேலுவைக் காதலித்து, கர்ப்பமாக்கி விட்டு, அவளைக் கை கழுவி விட்டுச் செல்கிறான் சூப்பர்வைசர் இதயா.

தற்கொலை செய்து கொண்ட அக்கா, அதற்கான காரணத்தை தங்கை ப்ரியாவிற்கு மட்டும் கடிதம் மூலம் தெரிவித்து விட்டுப் போகிறாள். ஆனால், அந்தக் கயவன் யார் என்பதை மட்டும் சொல்லாமலே போய் விடுகிறாள்.

அவனைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்கிய தங்கையால் “இதயா” என்கிற அவன் அரைகுறைப் பெயரை மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறதே தவிர, அவன் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் கிடைக்காது போகின்றது.

அக்காவின் சாவிற்கு பழி தீர்க்கத் துடித்த ப்ரியா….கொலைகாரியாய் மாறுகிறாள்….

அவள் யாரைக் கொலை செய்தாள்?......

நாவலைப் படியுங்கள்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580130007276
Innoru Idhayam

Read more from Mukil Dinakaran

Related to Innoru Idhayam

Related ebooks

Reviews for Innoru Idhayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Idhayam - Mukil Dinakaran

    https://www.pustaka.co.in

    இன்னொரு இதயம்

    Innoru Idhayam

    Author:

    முகில் தினகரன்

    Mukil Dinakaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 1

    தியேட்டர் வாசலில் கைகளைப் பிசைந்தபடி டென்ஷனாக நின்று கொண்டிருந்தாள் நிர்மலா. நெற்றிப் பொட்டில் பூத்திருந்த வியர்வை மொட்டுக்களை கர்ச்சீப்பால் துடைத்தாள். ச்சை!... இந்த ராஸ்கலைத் திருத்தவே முடியாது. அவள் ரோஸ் நிற உதடுகள் திட்டித் தீர்க்கும் ராஸ்கல் வேறு யாருமில்லை அவள் காதலன் இருதயராஜ்தான்.

    அது மூன்று தியேட்டர்களை உள்ளடக்கிய காம்ப்ளெக்ஸ் தியேட்டரானதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

    கல்லூரி மாணவர் கும்பலொன்று தனியாய் நின்று கொண்டிருக்கும் அவளைப் பார்த்துப் பார்த்து ஏதோ கமெண்ட் அடித்துச் சிரித்துக் கொண்டிருக்க, அவளுக்கோ நெருப்பின் மீது நிற்பதைப் போலிருந்தது. அடேய் காதலா…சீக்கிரம் வந்து தொலைடா... எனக்கு முன்னாடி வந்து வெய்ட் பண்றேன்!னு சொல்லிட்டு…இன்னும் வராம இருக்கியே இது நியாயமாடா பிசாசு?

    ஆபீஸில் இயர் எண்டிங் வேலை அதிகமாயிருப்பதால் சாயந்திரம் வீட்டுக்கு வர லேட்டாகும்! என்று வீட்டிலேயும், வீட்டில் அம்மாவுக்கு ரொம்ப முடியலை…அவங்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்…அதனால் ஒரு மணி நேரம் பர்மிஸன் வேண்டும் என்று ஆபீஸிலேயும் பொய் சொல்லி விட்டு அங்கு வந்து காத்திருக்கும் தன்னை நினைக்கையில் அவளுக்கே பரிதாபமாயிருந்தது.

    அய்யய்யோ…இந்தக் கூட்டத்துல தெரிஞ்சவங்க எத்தனை பேர் என்னை நோட் பண்ணிட்டு இருக்காங்களோ?... என்னைக்கு வீட்டு வரைக்கும் வந்து போட்டுத் தரப் போறாங்களோ... தெரியலையே?... அச்சத்தோடு நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தலை குனிந்தபடியே நின்றிருந்தாள்.

    இத்தோட சரி…இனிமேல் இவனை நம்பி இவன் கூட படத்துக்கு வரக் கூடாது!... வரவே கூடாது! தீர்மானமாய் முடிவு செய்தவளின் தோளில் ஒரு கை வந்து உட்கார,

    திடுக்கிட்டுத் திரும்பினாள்.

    இருதயராஜ் பல்லிளித்துக் கொண்டு நின்றான். சிகரெட் வாடை.

    ச்சீ…போய்யா…இதான் வர்ற நேரமா?... .அங்க பாரு அந்தப் பசங்க எல்லோரும் இத்தனை நேரம் என் கூட பார்வையாலேயே குடும்பம் நடத்திட்டானுக என்றாள் கோபமாய்.

    நான் அதைப் பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப் பட மாட்டேன்…ஏன்னா…எனக்குத் தெரியும்… என் காதலி ஒரு நெருப்பு…யாரும் அவளைப் பார்வையாக் கூட நெருங்க முடியாது!ன்னு ஒரு சமாளிப்பு டயலாக்கைக் கொளுத்திப் போட்டான்.

    போதும்…போதும்…ரொம்ப ஐஸ் வைக்காதே…ஏற்கனவே நான் குளிர்ல நடுங்கிட்டிருக்கேன்

    ம்ம்ம்…தியேட்டருக்குள்ளார வா…உன்னோட குளிரை நான் போக்கி விடறேன் என்று சொல்லியவாறே அவன் தியேட்டர் அரங்கினை நோக்கி நடக்க, அவள் பின் தொடர்ந்தாள்.

    அந்த மாணவர் கும்பலும் அவர்களுக்குப் பின்னாடியே உள்ளே வந்தது.

    இன்னும் படம் ஆரம்பிக்கவில்லை.

    இருவரும் தங்கள் இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்தனர்.

    அந்த மாணவர் கும்பலும் அவர்களுக்குப் பின் வரிசையில் அமர்ந்தது.

    நிர்மலாவிற்கு தர்ம சங்கடமாயிருந்தது. என்னப்பா…அவனுக நமக்குப் பின்னாடி வந்து உட்கார்ந்திட்டானுக?

    திரும்பிப் பார்த்து விட்டு, அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?... கேட்டா… எங்க சீட் நெம்பர்லதான் நாங்க உட்கார்ந்திருக்கோம்ன்னு சொல்லுவானுக என்றான் இருதயராஜ்.

    படம் ஆரம்பித்து நியூஸ் ரீல் ஓடியது.

    நிர்மலாவும் இருதயராஜும் நெருங்கி அமர்ந்து கிசு…கிசுப்பாய் பேச ஆரம்பித்தனர்.

    இங்க பாருடா…இன்னியோட லாஸ்ட்…இனிமேல் இந்த மாதிரியெல்லாம் உன் கூட வர மாட்டேன்!... எவ்வளவு டென்ஷன் தெரியுமா?... அப்பப்பா… புலம்பினாள் நிர்மலா.

    டென்ஷன் ஒரு பக்கம் இருந்தாலும்…என் கூட உட்கார்ந்து படம் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் இருக்குதல்ல?... அதை வேண்டாம்ன்னு சொல்ல முடியுமா உன்னால?

    ஆமாம்…இருக்கு…ஒத்துக்கறேன்!... அதுக்காக அடிக்கடி இப்படி வந்திட்டிருந்தா… ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாள் யாராவது தெரிஞ்சவங்க கண்ணுல பட்டு…விஷயம் வீட்டு வரைக்கும் போயிடும்!... அப்புறம் எல்லாம் மொத்தமா ஆஃப் ஆயிடும் என்றாள் நிர்மலா.

    சரி…பேசிட்டேயிருந்தா எப்படி? அவன் பேச்சில் ஏதோ எதிர்பார்ப்பு இருந்தது.

    மூச்…பேசாம படத்தைப் பாரு... மெயின் பிக்சர் போட்டாச்சு

    இங்க இன்னும் நியூஸ் ரீலே ஆரம்பிக்கலையே? என்றான் இருதயராஜ்.

    ச்சூ…பின்னாடி பசங்க உட்கார்ந்திட்டு நம்மையே நோட் பண்ணிட்டிருக்கானுக என்றாள் லேசான பயத்துடன்.

    இருட்டுல அவனுகளுக்கு என்ன தெரியப் போகுது?... லைட்டா…ஒரே ஒரு இச்…ப்ளீஸ் கெஞ்சினான்.

    ப்ச்…என்னப்பா நீ? குழைந்தாள். அந்தக் குழைவில் லேசாய் ஆசை இருப்பாதய் அவனுக்குத் தோன்ற, மெல்ல தன் முகத்தைத் திருப்பி, அவள் காதருகே சென்று, ப்ளீஸ்மா…ஒன்லி ஒன் என்றான் ஹஸ்கி வாய்ஸில்.

    அவனது சூடான மூச்சுக் காற்று அவளை உசுப்பி விட, கன்னத்தில்தான் குடுப்பேன் என்றாள்.

    ம்ஹூம்…அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்!... ஐ வாண்ட் இங்கிலீஸ் ஸ்டைல்

    என்னய்யா... என்று முனகலாய்ச் சொன்னவள், அவன் எதிர்பாராத வினாடியில் பளிச் சென்று அவன் உதட்டில் ஒரு முத்திரையைப் பதித்தாள்.

    கிறங்கிப் போனான்.

    அதே நேரம், டேய்…சூப்பர்டா…தமிழ்ப் படத்துல இங்கிலீஸ் படம்டா என்று பின்னாலிருந்து ஒரு குரல் வர,

    சட்டென்று இருவரும் விலகி அமர்ந்தனர்.

    ஐந்து நிமிட அமைதிக்குப் பின், பார்த்தியா?... நான் சொன்ன மாதிரியே பசங்க கிண்டலடிக்கறானுக? என்றாள் நிர்மலா.

    அவனுக கிடக்கறானுக விடு நிம்மி... நாளைக்கு அவனுகளும் எவளையாவது தள்ளிட்டு வந்து இதைத்தான் செய்யப் போறானுக என்றவனின் கைகள் மெல்ல அவள் தோள் மீது ஊர்ந்து கழுத்துப் பகுதியில் கிச்சுக் கிச்சு மூட்ட,

    ச்சூ…சும்மாயிருப்பா

    அவள் சொல்வதை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன் வேலையிலேயே அவன் மும்முரமாயிருந்தான்.

    அவனுடைய அந்த சுகமான குறும்பு அவளுக்கும் சுவையாகவே இருக்க எதிர்ப்புக் காட்டாமல் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    அவர்களிருவரும் மெய் மறந்திருந்த நேரத்தில் பளீரென அரங்கினுள் விளக்குகள் எரிய, திடுக்கிட்டு விலகினர்.

    Enjoying the preview?
    Page 1 of 1