Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mudhal Moochu...!
Mudhal Moochu...!
Mudhal Moochu...!
Ebook84 pages44 minutes

Mudhal Moochu...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604280
Mudhal Moochu...!

Read more from Devibala

Related to Mudhal Moochu...!

Related ebooks

Reviews for Mudhal Moochu...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mudhal Moochu...! - Devibala

    http://www.pustaka.co.in

    முதல் மூச்சு...!

    Mudhal Moochu…!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அண்ணே இதைப் பார்த்தீங்களா?

    பதறிக் கொண்டு வந்து நின்றான் உதவி.

    ஒரு சிகரெட்டை எடுத்து நிதானமாகப் பற்ற வைத்துக் கொண்ட இளங்கோ, மூடி திறந்து ஐஸ் பேக்கிலிருந்து நாலைந்து ஐஸ் துண்டங்களை எடுத்து விஸ்கியில் நுழைத்தான். கோப்பையை நாசூக்காக எடுத்து உதட்டு விளிம்பில் பதித்து மெல்ல உறிஞ்சத் தொடங்கினான்.

    அண்ணே! மறுபடியும் பதறியது உதவியின் குரல்.

    என்ன கோண்டு?

    இந்தப் பேப்பர்ல உங்களைப் பற்றி...

    கிசுகிசு வந்திருக்கா? அலட்சியமாகக் கேட்ட இளங்கோ, அதை ஒரு செத்த எலியின் வாலைப் பிடிப்பது போல நுனி விரலால் பிடித்து தூர வீசினான்.

    அண்ணே!

    பாரு கோண்டு! இது ஒரு மஞ்சள் பத்திரிக்கை. சினிமாக் காரங்களை, அரசியல் வாதிகளை தேர்ந்தெடுத்து அவுங்க அந்தரங்களை அம்பலத்துக்குச் கொண்டு வர்ற பத்திரிக்கைனு எனக்கு ஏற்கனவே தெரியும். விடு. நம்மை என்ன செய்ய முடியும்?

    அதில்லை அண்ணே!

    பின்ன என்ன கோண்டு?

    ஏற்கனவே நடந்ததை, நடக்காத சில விஷயங்களையும் கற்பனை சேர்த்து எழுதினா அது பழசு. ஆனா இவன் அப்படி இல்லை!

    பின்ன?

    ஆருடம் சொல்றான்!

    புரியலை!

    படிங்க! புரியும் உங்களுக்கே!

    நீயே படி கோண்டு! அடுத்து மடக்கை உறிஞ்சி விட்டு கண்கள் சிவக்க நிமிர்ந்தான் இளங்கோ.

    கோண்டு அந்தப் பத்திரிகையைப் பிரித்து, சற்று தயங்கி விட்டு, படிக்க ஆரம்பித்தான்.

    'திரையுலக இந்திரன் பிரபல சினிமா நடிகர் இளங்கோவின் லீலைகள்...’

    ம்! படி!

    வீட்டில் மனைவியும் வெளியில் தினசரி மூன்று வைப்பாட்டிகளுமாக வாழும் இந்த மன்மதனின் கொக்கோக சோஷங்களை வாசகர்களுக்கு அறிவிக்கிறோம்.

    நேற்று ரேணுகா ஸ்ரீயோடு நட்சத்திர ஓட்டலில் நடத்திய ஜல்சாவை சொல்ல நாங்கள் வேண்டாம். அதை நாடே அறியும். இது உங்களுக்கு புதிய பகுதி வாசகரே! இது ஆருடம். இனி நடக்கப் போகும் காதல் களியாட்டங்களை இப்போதே சரியாகச் சொல்லி விடும் ஜோசியப் பகுதி.

    இன்று இரவு (மார்ச் 26,) வைரக் கடற்கரையில் மன்மதனின் வாரிசான நடிகர் இளங்கோவும், கற்புக்கு இலக்கணம் வகுத்த குணச்சித்திர நடிகை குமாரியும் கூடிக் களிக்கும் குதூகலக் காட்சியை இலவசமாகக் கண்டு களிக்கலாம். அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

    ஸ்டாப் இட் கோண்டு! கோப்பையை இளங்கோ வீச, அது சுவரில் ஜலீரெனப் பட்டு பொடிப் பொடியாகச் சிதறியது. நெருப்பில் நிற்பது போல நின்றான் இளங்கோ.

    அண்ணே!

    இன்னிக்கு குமாரியோட டயமண்ட் ஷோர்ல நாள் இருக்கப் போறது இவனுக்கு எப்படீடா தெரிஞ்சது?

    அதான் புரியலைண்ணே. எத்தனை ரகசியமா பாதுகாத்தாலும் அவன் காதுக்கு செய்தி போகத் தான் செய்யுது!

    நோ!

    இனிமே டெலிபோன்ல எதையும் முடிவு செய்ய கூடாது. நேர்ல பேசிரணும், போகட்டும்! உடனே குமாரிக்கு போன் பண்ணி, ரத்து பண்ணிருங்க!

    எப்படீரா?

    ஏண்ணே?

    நாளைக்கு குமாரி லண்டன் போறா. அவளுக்கு ஒரு மாசம் அங்கே அவுட்டோர். அவளே விரும்பி வரத்தயாரா இருக்கும்போது நான் எப்படி கோண்டு?

    இது ஆபத்து அண்ணே! பத்திரிக்கை காலைல வந்தாச்சு. எவனாவது குறும்புக்கார வாசகன் வேணும்னே வந்து நின்னா, நல்லாருக்குமண்ணா? உங்க இமேஜ் என்னாறது?

    அதுக்காக?

    கேன்சல் பண்ணிருங்க

    Enjoying the preview?
    Page 1 of 1