Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Konjam Kaathiru!
Konjam Kaathiru!
Konjam Kaathiru!
Ebook105 pages47 minutes

Konjam Kaathiru!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604249
Konjam Kaathiru!

Read more from Devibala

Related to Konjam Kaathiru!

Related ebooks

Reviews for Konjam Kaathiru!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Konjam Kaathiru! - Devibala

    http://www.pustaka.co.in

    கொஞ்சம் காத்திரு!

    Konjam Kaathiru!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    வடநாட்டிலிருந்து மாற்றலாகி அப்போதுதான் அந்த அலுவலகத்தில் சேர்ந்திருந்தான் ரகுநந்தன்.

    அன்று காலையில் வந்து இறங்கி, ஒரு லாட்ஜில் பெட்டி, படுக்கையை போட்டுவிட்டு குளித்ததும் அலுவலகம் வந்துவிட்டான். ட்யூட்டியில் கையெழுத்துப் போட்டதும்,

    யாரிங்கே தியாகராஜன்?

    நம்ம கேஷியர். இன்னிக்கு லீவு. அவங்கப்பாரு திதி. அதனால ஏன்? அவரை உங்களுக்குத் தெரியுமா?

    அவரைத் தெரியாது. என்னோட இட்டார்ஸி ஆபிஸ்ல தியாகராஜனுக்கு லெட்டர் தந்து அனுப்பியிருக்கார் ஒருத்தர்.

    அப்படியா? ஆபீஸ்ல வீட்டு விலாசம் வாங்கிட்டு சாயங்காலம் போய்ப் டாருங்க?

    சரி! தன் வேலைகள் என்னவென்பதை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். புதியவனாக இருந்ததால் ரகுநந்தனிடம் யாரும் அவ்வளவாக ஒட்டவில்லை.

    மூன்று மணிக்கே பர்மிஷன் வாங்கிக் கொண்டு கொஞ்சம் இனிப்பு பழ வகைகளோடு ரகு புறப்பட்டான் தியாகராஜன் வீட்டுக்கு.

    போகும் நேரம் ரகு பற்றி கொஞ்சம் சொல்லிவிடலாம்.

    முப்பத்தைந்து வயதை எட்டி விட்ட ரகுவுக்கு இன்னமும் கல்யாணம் ஆகவில்லை. அதில் ரகுவுக்கு நாட்டமில்லை. அப்பா இறந்துவிட்டார். அம்மா அண்ணன் குடும்பத்துடன். சொல்லிக் கொள்ளும்படி யாருமில்லை.

    நாலாயிரத்துக்கு மேல் சம்பளம். அதில் அம்மாவுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பிவிட்டு, மெஸ்ஸுக்கு ஆயிரம் ரூபாயும் தந்துவிட்டால் வாடகை, சோப் இத்யாதிச் செலவுகள் அதிகபட்சம் ஐநூறு. மீதி இரண்டாயிரம் சேமிப்பு.

    இட்டார்ஸி என்ற வட நாட்டு ஊரில் பத்து வருடங்களாக இருந்துவிட்டு சமீபத்தில் ஆவடியில் உள்ள டேங்க் பேக்டரிக்கு மாற்றல். வந்து இறங்கியதும் குவார்ட்டர்ஸ் கிடைக்காது. இட்டார்ஸியில் உள்ள குப்தா தியாகராஜனுக்கு கடிதம் தந்துவிட்டார்.

    தியாகு வீட்டு வாசலில் வந்து நின்று விட்டான் ரகுநந்தன். கதவைத். தட்டினான்.

    யாருன்னு பாரு ரேகா!

    கதவு திறந்தது. திறந்தவள் ஒரு பெண். பதினாலு பதினைந்து வயது இருக்கலாம்.

    மிஸ்டர் தியாகராஜன்...?

    டாடி! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க!

    தியாகு வேட்டியும், திறந்த உடம்புமாக எழுந்து வந்தான்.

    ஐயாம் ரகுநந்தன். புதுசா உங்க செக்க்ஷன்ல ஜாயின் பண்ணியிருக்கேன் இன்னிக்கு. மிஸ்டர் குப்தா இந்த லெட்டரை உங்ககிட்ட தரச் சொன்னார்.!

    உட்காருங்க சார்! ரேகா என் ஷர்ட்டை எடுத்துட்டு வாடா! அது வந்தது.

    மாட்டிக் கொண்டே கடிதத்தைப் பிரித்தான் தியாகு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

    டியர் தியாகு! இந்தக் கடிதம் கொண்டு வரும் ரகுநந்தன் எனக்கு நெருங்கின நண்பன். மிகவும் நல்லவன். அங்கு வருகிறான். அவனுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் எனக்கு செய்வதாக நினைத்துச் செய். அவன் தனி மனிதம். யாருக்கும் பாரமாக இருக்க மாட்டான் தொடர்ந்து குடும்ப நலம் விசாரித்து கடிதம் நீண்டது.

    மடித்தான் தியாகு.

    சிரித்தான் ரகுநந்தனைப் பார்த்து.

    உங்களுக்கு தமிழ் தெரியுமா?

    தெரியுமாவா? நான் தஞ்சாவூர்காரன் சார். படிச்சதெல்லாம் மாயவரத்துல காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்த உடம்பு!

    நளினி!

    தியாகுவின் மனைவி வெளியே வந்தாள்.

    இவர் ரகுநந்தன். நம்ம குப்தா அனுப்பியிருக்கார். மாற்றலாகி எங்க செக்க்ஷனுக்கு வந்திருக்கார். உங்க ஊர்க்காரர்!

    "வணக்கம்!''

    இன்னிக்கு அப்பா திதி! அதான் வரலை. உங்க குடும்பமெல்லாம்

    அம்மா, அண்ணன் வீட்ல இருக்காங்க!

    ''கல்யாணம்?"

    பண்ணிக்கலை. பண்ணிக்கறதா உத்தேசம் இல்லை. வந்ததே இன்னிக்கு தான். லாட்ஜ்ல ரூம் போட்டுட்டு ஆபீஸ் வந்தேன்!"

    அப்படியா?

    இங்கே பேச்சிலர் ஷேரிங் அக்காமடேஷன் உண்டா? தனி ரூமா இருந்தாலும் வாடகை தந்திர்றேன்!

    தெரியலை! விசாரிக்கணும். ஒண்ணு செய்யுங்க.

    சொல்லுங்க தியாகு!

    பெட்டி படுக்கையை எடுத்துட்டு நாளைக்கே நம்ம வீட்டுக்கு வந்துருங்க மாடில ஒரு ரூம் இருக்கு எனக்கு. அதை நீங்க உபயோகப்படுத்திக்குங்க. அப்புறமா வீடு தேடிக்கலாம்!

    உங்களுக்கு தொந்தரவா...

    எனக்கென்ன கஷ்டம்? நண்பருக்கு இந்த உதவிகூடச் செய்யலைனா? எப்படி?

    காபி கொண்டு வந்தாள் நளினி.

    அதைப் பருகிவிட்டு எழுந்தான் ரகு.

    எங்க போறீங்க? ராத்திரி சாப்டுட்டுப் போகலாம்!

    அய்யோ சார் நான்...!

    நத்திங் டூயிங். குப்தா அனுப்பியிருக்கார். சாப்பிடாம அனுப்பக் கூடாது உங்களை. எல்லாம் திதிச் சமையல். நளினி! அவருக்குத் தனியா செய்!

    சரிங்க!

    என்ன வயசு ரகு உங்களுக்கு?

    முப்பத்தி அஞ்சு!

    என்னை விட ஒரு வயசு இளையவர். ஆனா உங்களைப் பார்த்தா முப்பது கூட மதிக்க முடியலை!

    அந்தப்பக்கமாக வந்த நளினி உடம்பை ஸ்லிம்மா வச்சிருக்கார். உங்களுக்கு சதை போட்டு தொப்பையும் விழுந்தாச்சு. யோகா பண்ணச் சொல்லி நான் கெஞ்சறேன். சோம்பேறித்தனம். கேட்டாத் தானே?

    எங்கே ரகு நேரமிருக்கு?

    "காலைல

    Enjoying the preview?
    Page 1 of 1