Kavithai Arangerum Neram
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Vaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kavithai Arangerum Neram
Related ebooks
Poruthathu Pothum! Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsபாப விமோசனம் Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsAmma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsNanthavana Theru Rating: 0 out of 5 stars0 ratingsVaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsAdutha Idhazhil Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsNaayagan Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsபோகட்டும், விடு..! Rating: 0 out of 5 stars0 ratingsKaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Kanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Devan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsMudichugal Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsபுது அவதாரம் Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Indru Paathi Rating: 0 out of 5 stars0 ratingsMothers Touch! Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsThottuvidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsPonal Varathu! Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsSiragukal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kavithai Arangerum Neram
0 ratings0 reviews
Book preview
Kavithai Arangerum Neram - Devibala
http://www.pustaka.co.in
கவிதை அரங்கேறும் நேரம்
Kavithai Arangerum Neram
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
*****
பொருளடக்கம்
பதிப்புரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
*****
பதிப்புரை
ஆசிரியர் தேவிபாலா அவர்கள் தனது 'கவிதை அரங்கேறும் நேரம்' நாவல் மூலம் பல வாழ்க்கைப் போராட்ட நிகழ்வுகளை அரங்கேற்றியிருக்கிறார்.
சுகமான காதல் கதையாக ஆரம்பித்து, 'மனிதன் சொகுசான வாழ்வை அனுபவிக்கும் போதும் சரி, சோகமான முடிவைச் சந்திக்கும் போதும் சரி, நிலைகுலையாமல் திடமாக நின்று சாதிக்க வேண்டும்' என்ற மனோதிடத்தை நிலை நிறுத்துகிறார்.
மனைவிகளுக்கு அடங்கிப்போய் பெற்றவர்களை மறந்துவிடும் சில கோழை மகன்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்குகிறார்.
மகள் வாழ்வு முக்கியம், மருமகள் வாழ்வு அப்புறம் என்று மருமகள்களை மருள வைக்கும் சில தாய்மார்களுக்கு சரியான சூடு கொடுக்கிறார்.
ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரிந்தவனுக்கு அவளைக் கைப்பிடிக்கும் கட்டத்தில், தன்னை எதுவும் பாதிப்பதாக இருந்தால் மற்றவர்கள் மேல் பழியைச் சுமத்திவிட்டு நழுவும் சில ஆண் கதாநாயகர்களின் கயமைத்தனத்தைக் கிழித்துக் காட்டுகிறார்.
வாழ்க்கைச் சுமையைச் சுமக்கவே பிறப்பெடுத்த சில பெண்களின் மென்மையையும், மேன்மையையும் சொல்லி வாசகர்களின் நெஞ்சை நெகிழ வைக்கிறார்.
ஆண்களை ஆட்டிப்படைக்கவே பிறப்பெடுத்த சில சுயநலப்பூச்சிப் பெண்களின் அகங்கார, அலங்கார, ஆடம்பரப் போக்குகளால் சில குடும்பங்கள் சீரழிகின்றன என்பதையும் 'ஆம்பிளை திடமா நின்னா, குடும்பத்துல குழப்பம் வராது' என்பதையும் எழுதி வாசகர்களைக் கொதிக்க வைக்கிறார்.
இப்படி மனித வாழ்வின் பல பரிணாம நிலைகளை அரங்கேற்றிக் காட்டும் தேவிபாலா அவர்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துத் தெரிவித்து கவிதை அரங்கேற்றத்திற்குள் நுழையலாம் வாருங்கள்.
அன்புள்ள
புத்தக நிலையத்தார்
*****
அத்தியாயம் 1
'உலகில் அழகான பொய் எது தெரியுமா?'
கவிதை
'வசிகரமான பாசாங்கு?'
காதல்
'சுகமான ஏமாற்றம்?'
கல்யாணம்
––யாரோ.
என் முகத்தையே பார்த்துட்டு இருந்தா எப்படி?
அங்… என்ன சொன்னே ரவி?
கலைந்தபடி கேட்டாள் நந்தினி.
சரியாப்போச்சு! இங்கே வந்தும் தூக்கமா?
இ… இல்லைப்பா!
"
போகலாமா?
"ம்!... மணலைத் தட்டியபடி எழுந்தாள் நந்தினி. ரவிக்குச் சட்டென கோபம் வந்துவிட்டது.
உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டு இருக்கே நந்தினி?
உன்னைத்தான் ரவி!
ய்யோ! ஏன் என்னைப் போட்டுப் படுத்தறே இப்படி?
சரி! ஏன் கோபம்? என்ன சொல்லணும் ரவி நீ?
மறுபடியும் மண்ணில் உட்கார்ந்துவிட்டாள்.
இருட்டத் தொடங்கிவிட்டது. இதமான குளிர்காற்று சுற்றி சுற்றி அடித்தது. அலைகள் அழகாக சுருண்டு சுருண்டு திரும்ப, மழையின் அறிகுறி சன்னமாக இருந்தது.
நீ நாளைக்கு என்னோட என் வீட்டுக்கு வர்ரே நந்தினி.!
எதுக்கு?
சும்மாத்தான்! வீட்டைச் சுற்றிப் பார்த்துட்டு, காபி குடிச்சிட்டுத் திரும்பிடலாம்!
ரவி!
ஏன்மா இப்படி இருக்கே? எங்கப்பாவுக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்து கடவுள் கண் திறந்ததால பிழைச்சிட்டார். உடனடியா எனக்குக் கல்யாணம் செய்யணும்னு சொல்றார்!
நந்தினி பேசவில்லை.
நான் அவருக்கு ஒரே பிள்ளை. தான் அதிகநாள் இருக்கப் போறதில்லைன்னு அப்பா முடிவு செஞ்சாச்சு. இந்த நிலைமையில எனக்குனு ஒருத்தி வந்து அதை அவர் பார்க்கணும்னு ஆசைப்பட்டா அது தப்பா நந்தினி?
……….!
அம்மாவுக்கும் அதே நினைப்புதான். விளைவு. நாளைக்கு தரகரை வரச் சொல்லியாச்சு!"
ம்!
ஜாதகம் எடுத்துட்டா, மற்றது மளமளனு நிறைவேறத் தொடங்கிடும். ரெண்டு வருஷமா ரெண்டுபேரும் லவ் பண்றோம். இனிமேலும் நான் மறைச்சா, நிலைமை வேற மாதிரி ஆயிடும்!
ம்!
நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. காலைல நீ என் வீட்டுக்கு வர்றே. நானே உன்னை வந்து கூட்டிட்டுப் போறேன். அப்பா, அம்மாகிட்ட அறிமுகப்படுத்தி நம்ம காதலைச் சொல்றேன்! என் விருப்பத்துக்கு எதிர்ப்பு இருக்காது. நமக்குள்ளே ஜாதி பிரச்னை இல்லை. நீயும் நானும் ஒரே பிரிவுதான். நீ படிச்சவள். நல்ல உத்யோகத்துல இருக்கே. அழகானவள். உன்னைப் பெரியவங்க வேண்டாம்னு சொல்ல எந்தக் காரணமும் இருக்க முடியாது. என்ன சொல்ற?"
ரவி என்னைக் கொஞ்சம் பேச விடறியா?
சொல்லு!
என்னைவிட அஞ்சு வயசு மூத்தவ எங்கக்கா. அவளுக்கு இன்னமும் கல்யாணம் ஆகலை. அப்பா இல்லை. எங்களுக்கு விதவைத் தாயார் மட்டும்தான்!
அதான் சொல்லியிருக்கியே!
என் வருமானத்துல குடும்பம் ஓடுது. இந்த நிலைல திடீர்னு அவங்க ரெண்டுபேரையும் 'அம்போனு' விட்டுட்டு எப்படி ரவி நான் வர முடியும்?
யாரு அவங்களை விடச் சொன்னா?
விடாம எப்படி ரவி? நான் கல்யாணமாகிப் போகும்போது அவங்களையும் கூட்டிட்டுப் போகவா முடியும்? எந்தப் புருஷன் வீட்ல சம்மதிப்பாங்க? சொல்லு ரவி?
ரவி தடுமாறிப் போனான்.
என் பிரச்னை உனக்குப் புரியலையா ரவி?
அவளை நிமிர்ந்து பார்த்தான் ரவி.
சரி நந்தினி! இதுதான் உன் பிரச்னைனா நீ காதலிச்சே இருக்கக்கூடாது என்னை. கல்யாணமும் நீ சாகற வரைக்கும் நடக்காது!
ரவி!
உங்கக்காவுக்கு படிப்பு, அழகு, சாதுர்யம் எதுவும் இல்லை. ஸாரி, நீ சொல்லி நான் தெரிஞ்சுகிட்டதுதான். இந்த நிலைல காலம் முழுக்க அவ உனக்கொரு கால்கட்டுதான். என்ன செய்யப்போறே? உன் வாழ்க்கையும் இப்படியே போகட்டும்னு விட்ரப்போறியா?
ரவி!
தியாகம், மனுஷனாப் பொறந்தா அவசியம்தான். ஆனா அதுக்கும் வரம்பு இருக்கு. உன்னையே நீ அழிச்சுக்கறது அத்தனை புத்திசாலித்தனமா எனக்குத் தோணலை!
நந்தினி மணலைக் குவித்து வீடு கட்டத் தொடங்கினாள்.
இதுதான் நம்ம வாழ்க்கையா நந்தினி?
ரவி! எனக்கு என்ன பேசறதுன்னே தெரியில!
நாளைக்கு என்னோட வா! எங்கப்பா, அம்மாவைப் பாரு! ஒண்ணு செய். உன் சம்பளத்தை அப்படியே உங்க வீட்ல குடுத்துடு. நீ பக்கத்துல இல்லைனாலும், அவுங்க ரெண்டுபேரும் பிழைச்சுக்கலாம் இல்லையா?
பேசும்போது சுலபம் ரவி. நடைமுறை வாழ்க்கைல நாளைக்கு நீயே அதை விரும்பமாட்டே ரவி!
நீ இப்போ என்னதான் சொல்றே நந்தினி?
ஆத்திரப்படாதே ரவி! உன்னால முடியுமானா கொஞ்சநாள் கூடப் பொறுத்துக்கோ!
கொஞ்ச நாள்னா?
தெரியல! ஏதாவதொரு விரும்பத்தக்க மாற்றம் வரும்னு என் மனசு சொல்லுது.
எங்கப்பாவுக்கு அட்டாக்தான் வரும். அவர் ஆசை நிறைவேறாம அவர் போய் சேரணுமா? நாளைக்கு நீ வரணும். என்னைப் பெத்தவங்களுக்கு நான் ஒரே பிள்ளை. அவங்களையும் நான் கொஞ்சம் பார்க்கணும் நந்தினி!
நந்தினி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஸாரி ரவி! நீ வேற கல்யாணம் செஞ்சுக்கோ!
நந்தினி!
உனக்கு உன் மனிதர்கள்கிட்ட பாசம் இருக்கலாம் எனக்கது இருக்கக்கூடாதா?
நந்தினி நான் அப்படிச் சொல்லவில்லை!
மருமகளை உங்கப்பா பார்க்கணும். பார்த்துட்டா அவருக்கு நிம்மதி. அதுக்காக என் தாய், சகோதரியை தவிக்க விட்டுட்டு நான் வர முடியுமா ரவி?
நந்தினியின் குரலில் கோபம் இருந்தது. ரவிக்கும் 'சுர்'ரென வந்துவிட்டது. எழுந்துவிட்டான்.
பாரு நல்லா பார்த்துட்டே இரு! காலம் முழுக்க கன்னியாகுமரி மாதிரி கடலைப் பார்த்துட்டு உட்கார்ந்திரு! உன்னைக் காதலிச்சேன் பாரு! என்னை செருப்பால அடிக்கணும்.
ஸாரிபா! தப்பு என் மேலதான். குடும்பத்துல பொறுப்புகளைச் சுமக்கற பெண்ணுக்குக் காதல் எல்லாம் கூடாதுதான்!
அந்த அறிவு முன்னாலேயே இருந்திருக்கணும்!
நிஜம்தான்! என்ன செய்யறது? காலம் தாழ்ந்து வந்த ஞானம். நல்லதுதானே!
அவனை நெருங்கினாள்.
ரவி!
என்னா?
உங்கப்பா இதய நோயாளி! ஒரு மருமகளை உடனடியா பார்க்க ஆசைப்படறார். அதை நிறைவேத்தறது ஒரே பிள்ளையான உன் கடமை. என்னை மன்னிச்சிடு! எனக்குக் குடுத்து வைக்கலை உன்னைப் புருஷனா அடைய. வரப்போறவளுக்கு என் வாழ்த்துக்கள் குட்பை!
நந்தினி!
அவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள். ரவி அப்படியே நின்றுவிட்டான். காற்றில் சேலை படபடக்க அவள் நடந்து போய்க்கொண்டே இருந்தாள்.
ரவி தடுக்கவில்லை.
அவனுக்கும் அவள்மேல் கோபம் வந்தது.
என்னைத்தவிர எல்லாரும் முக்கியமா உனக்கு?
போ!
நீதான் வேணும்னு அழற அளவுக்கு நானும் மலிவாகல
––சாலை ஓரம் நிறுத்தியிருக்கும் தன் பைக்கை நோக்கி நடந்தான்.
வரப்போறவளுக்கு என் வாழ்த்துக்கள். குட்பை!
சுருக்கென்று முள்ளாகக் குத்தியது. நந்தினி முடிவே செய்துவிட்டாளா?
அவளைப் பிரிந்து இன்னொருத்தி கழுத்தில் தாலி கட்டுவதா?
நடக்கும் காரியமா இது?
இரண்டு வருடங்களாக தினசரி அவளை சந்திக்காவிட்டால் உயிர் தவிக்கும். நடுவில் வரும் ஞாயிறு பரம விரோதி. நான் தயாராக இருந்தாலும் அவளால் விடுமுறை நாளில் வீட்டை விட்டு வர முடியாது.
'அம்மா, அக்காவை விட்டுவிட்டு நான் எப்படி வர முடியும்?' ரவியின் கோபம் விலகி சிந்தனை வந்தது.
நியாயம்தானே? எனக்குள்ள பாசம் அவளுக்கு மட்டும் கூடாதா? உன் மனிதர்களை வீசி எறிந்துவிட்டு என்னோடு வந்துவிடு என்றா சொல்ல முடியும்.
அப்பா அம்மாவிடம் எல்லாம் சொல்லி, நந்தினிதான் வேண்டும் எனக்கு என்று சொல்லலாமா?
பேசிப் பார்த்தால்?
இன்று பேசிவிட வேண்டும்!
அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தான். அப்பா