Naayagan Nizhal
By Devibala
()
About this ebook
Read more from Devibala
Amma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsAssai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsSokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSeetha Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsMannil Iranguthu Aakaayam Rating: 5 out of 5 stars5/5Azhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Jodi Thevai Rating: 5 out of 5 stars5/5Madiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Un Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5
Related to Naayagan Nizhal
Related ebooks
Amma Endral Anbu Rating: 0 out of 5 stars0 ratingsThaanaagath Thriyum Rating: 0 out of 5 stars0 ratingsThappu Thaalangal Rating: 0 out of 5 stars0 ratingsTharasu Mul Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsAaniver Rating: 0 out of 5 stars0 ratingsதொட்டில் வரை காதலி! Rating: 0 out of 5 stars0 ratingsMelam Kotta Vaa Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsUn Manaivi, En Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKallana Mullai..! Rating: 0 out of 5 stars0 ratingsKanavil Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsKadhali Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsMayangum Vayathu Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsIlavu Kaatha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsKetten Thanthaai Rating: 5 out of 5 stars5/5Ichai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsKaaval Deivam Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Mudhal Kadhali Rating: 5 out of 5 stars5/5Jeevanamsam Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5தான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Naayagan Nizhal
0 ratings0 reviews
Book preview
Naayagan Nizhal - Devibala
20
1
இருக்கவே இருக்காது! இது பொய்!
என்றாள் வாகினி.
இல்லைடி. நான் எதுக்கு பொய் சொல்லி, உன்னை டென்ஷன்படுத்தணும்? ஆதாரபூர்வமான நிஜம்!
திரும்பவும் சொல்லு!
நீ காதலிக்கற ராக்கேஷ் ஒரு பணக்காரப் பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறார். முடிவாயாச்சு. நாளை மறுநாள் தாம்பூலம் மாத்தப் போறாங்க. அந்தப் பொண்ணு ஒரு பெரிய மில் ஓனரோட மகள். க்ரூப் ஆஃப் கம்பெனிகள் நிறைய. கோடீஸ்வர அந்தஸ்து!
வாகினி முகம் இருண்டது.
இதப்பாரு பணம் பெரிசா வரும்போது யாருமே மாறக் கூடும்! உன் ராக்கேஷ் மட்டும் விதிவிலக்கா என்ன?
வாகினி பேசவில்லை. உடனே மேஜையில் இருந்த ரிசீவரைக் கையில் எடுத்தாள், செல்போனுக்கு டயல் செய்தாள்.
எதிர்முனையில் ராக்கேஷ்.
சொல்லு வாகினி!
நான் உன்னை உடனே பாக்கணும் ராக்கேஷ்!
அப்படி என்ன அவசரம்?
அதை நேர்ல சொல்றேன். நாம வழக்கமா சந்திக்கற ரெஸ்டாரெண்ட்டுக்கு இன்னும் அரைமணி நேரத்துல நீ வரணும்
நீ கேட்டு நான் எப்ப இல்லைன்னு சொல்லியிருக்கேன்? இப்பவே வர்றேன்
வாகினி ரிசீவரை வைத்தாள்.
இது பொய்டி. குற்ற உணர்ச்சி இருந்தா, நான் கூப்பிட்டதும் அவன் வருவானா?
தெரியலைடி. பொய்யா இருந்தா நல்லதுதானே? நீ ஏமாந்துடக் கூடாதேன்னு நான் கவலைப்பட்டேன்
அந்த மில் ஓனர் மகள் பேரு?
அவர் ராஜலிங்கம். அவ பேரு சுலேகா
சரி, நான் பாத்துக்கறேன்!
வாகினி அரை நாள் லீவை எழுதிக் கொடுத்து விட்டு வேகமாக வெளியே வந்தாள்.
தன் டூவீலரை இயக்கி போக்குவரத்தில் கலந்தாள்.
வாகினி முதுகலை பட்டதாரி. அழகானவள். வயது 24. இந்த தனியார் நிறுவனத்தில் மாதம் 12 ஆயிரம் சம்பாதிக்கும் பெண். புத்திசாலிப் பெண். அப்பா, அம்மா இல்லை. அண்ணன், அண்ணியுடன் வாழ்கிறாள். அண்ணனுக்கு பத்து வயதில் ஒரு பையன் மட்டும். இவள் மேல் உயிர். இவளைத்தான் இருவரும் தன் மகளாக நினைக்கிறார்கள்.
அண்ணனுக்கு சொந்த வீடு. அவரும் பெரிய உத்யோகம். அண்ணி ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சர். குடும்பமே வசதியான, கண்யமான குடும்பம்.
ராக்கேஷை விரும்புவதை மட்டும் இதுவரைக்கும் வாகினி வீட்டில் சொல்லவில்லை!
ராக்கேஷ், அவன் அப்பாவுடன் சேர்ந்து ஒரு சின்ன பேக்டரி நடத்துகிறான். அதற்கான ஸ்பேர் பார்ட்களை வாங்க, விற்க ஒருமுறை வாகினி அலுவலகத்துக்கு வந்து அதிலிருந்து ஆரம்பித்த நட்பு மெல்லக் காதலாகி விட்டது.
வாகினி வழக்கமாக சந்திக்கும் உணவகத்துக்கு வந்து விட்டாள். வாசலில் தன் வண்டியை நிறுத்தி பூட்டிவிட்டு திரும்ப, ராக்கேஷ் ஒரு ஜென் காரில் வந்து இறங்கினான். எப்போதுமே பைக்கில்தான் வருவான்.
காரைப் பூட்டிவிட்டு வந்தான்.
இப்பத்தான் வர்றியா வாகினி!
கார் வாங்கினியா ராக்கேஷ்? எப்ப?
நீயும் நானும் சந்திச்சு நாலு நாளாச்சு...
அதுக்குள்ளே ஒரு புது மாற்றமா?
சரி, வா! உள்ளே போகலாம்!
இருவரும் உள்ளே புகுந்து ஏ.ஸி. அறையில் ஒரு தனி இடத்தை வழக்கம் போல தேர்ந்தெடுத்தார்கள்.
என்ன அவசரம்?
யாரு ராஜலிங்கம்? அவர் மகள் பேரு சுலேகாவா?
ராக்கேஷ் எதுவும் பேசவில்லை.
சொல்லு ராக்கேஷ்! உனக்கும், சுலேகாவுக்கும் நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். இந்தக் கார்கூட ராஜலிங்கம் உனக்குத் தந்த பரிசுதானா? கம்மான்!
க்கேஷ் குளிர்ந்த நீரை எடுத்து நிதானமாகக் குடித்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
இன்னும் ஏதாவது கேள்விகள் இருக்கா?
இல்லை! சொல்லு ராக்கேஷ்!
நீ கேள்விப்பட்ட எல்லாமே உண்மைதான் வாகினி!
வாகினி அதிர்ந்து போனாள்.
நீ... நீ... என்ன சொல்ற?
ஆமாம். எதுவுமே தப்பில்லை. நிஜம்தான். ராஜலிங்கம் வாங்கிக் குடுத்த கார்தான். நாளை மறுநாள் நிச்சயதார்த்தம். இந்த மாசக் கடைசில கல்யாணம். அடுத்த மாசம் முதல் வாரம் நாங்க லண்டன் போறோம். தேனிலவு + பிஸினஸ் ட்ரிப்
வாகினியின் முகம் சுண்டிப் போய் ஒரு மாதிரி வியர்வை ஊற்றெடுத்து உடம்பு முழுக்க நடுங்க ஆரம்பித்தது.
இப்ப நீ பேசலாம் வாகினி!
என்ன பேசறது? ராக்கேஷ்! இது நியாயமா? நாம நெருங்கிப் பழகியிருக்கோம். சில முறை எல்லைகளைக் கூட மீறியிருக்கோம்!
அதனால நீ கர்ப்பம் ஆயிட்டியா?
இல்லை. ஆனா மீறினது மீறினதுதானே?
லுக் வாகினி! கொஞ்சம் பிராக்டிகலா பேசலாமா? இந்தக் காலத்துல பழக்கத்தோட உச்சகட்டம் கர்ப்பமா இருந்தா, ஒரே நாள்ல கழுவித் துடைச்சிர்றாங்க. புரியுதா?
இப்படிப் பேச உனக்கு வெக்கமால்லை?
இதப்பாரு. எதிர்பாராதவிதமா ராஜலிங்கம் என் வாழ்க்கைல க்ராஸ் பண்ணினார். என்னை புடிச்சுப் போய் மாப்பிள்ளையாக்கிக்க முடிவெடுத்துட்டார். காதலைவிட, நிரந்தரமா செட்டில் ஆகக்கூடிய எதிர்காலம் உசத்தியில்லையா? பல கோடிகள் சொத்து! சுலேகா அவருக்கு ஒரே மகள். எல்லாம் எனக்குத்தான். பல கோடிகள் காலடிக்கு வரும்போது எட்டி உதைச்சா அவன் பைத்தியம்! உன்னைக் கட்டிக்கிட்டா இதுல நூறுல, ஆயிரத்துல ஒரு பங்கு கூட எனக்குக் கிடைக்காது. ஸாரி வாகினி!
கொஞ்சமும் தயங்காமல் அவன் பளீரென பேசிவிட, வாகினி இன்னும் ஆடிப் போனாள்.
உனக்கு எல்லா தகுதிகளும் இருக்கு. தகுதியுள்ள ஒருத்தனை தேடி கல்யாணம் செஞ்சுக்கோ!
ஒருத்தனுக்கு பாய் விரிச்சிட்டு அடுத்தவனுக்கு கழுத்தை நீட்ட, என்னை என்ன தேவடியான்னு நினைச்சியா?
ராக்கேஷ் வாய் விட்டு சிரித்தான்.
நீ எந்தக் காலத்துல இருக்கே? காதல் முத்தினா காமம்தான். அதெல்லாம் இயற்கை. அது கை கூடலைன்னா எது அமையுதோ அந்த வாழ்க்கைல பொருத்திக்க வேண்டியதுதானே?
நீ என்ன சொல்ற?
எல்லாத்தையும் சொல்லிட்டேன். நாளை மறுநாள் தாஜ்ல வச்சு நிச்சயதார்த்தம். நீயும் வர்றே! சரியா?
ராக்கேஷ்!
இதப்பாரு! நான் ஓடிப் போகலை. சொல்லிட்டுத்தான் செய்யறேன்! இது சினிமா இல்லை. வாழ்க்கை! என்னை வில்லனா பாக்காதே. யதார்த்தமான நண்பனா கருது!
எழுந்து விட்டான் ராக்கேஷ்.
பை வாகினி! தவறாம வந்துரு!
அவன் போய்க் கொண்டேயிருந்தான்.
வாகினி நவநாகரீக யுகத்தில் இருந்தாலும் அவளால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
சட்டையில் இருக்கும் தூசியைத் தட்டுவதைப் போல காதலை தட்டி விட்டுப் போவதை மனது ஏற்கவில்லை.
ராக்கேஷ் காரை உசுப்பி போக்குவரத்தில் கலந்தான்.
வாகினிக்குள் ஒரு வெறி மூண்டது. அவளால் அத்தனை சுலபமாக ஏமாற்றத்தை தாங்க முடியாது. அவள் தேர்ந்தெடுத்த ஒரு ரெடிமேட் ஆடையை வேறொரு பெண் ஒருமுறை கடையில் எடுத்து விட்டதால் வாகினி கடுப்பாகி, அந்தப் பெண்ணை கை நீட்டி அடித்து கடையே அமளிதுமளிப்பட்டதுண்டு.
அழகான வாகினிக்குள் ஒரு சின்ன மிருகம் உண்டு. அது எப்போது வெளிப்படும் என்று அவளுக்கே தெரியாது.
அந்த மிருகத்தை ராக்கேஷ் தட்டி எழுப்பிவிட்டு போய் விட்டான்.
வாகினி மெதுவாக எழுந்து தன் வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.
புறப்பட்டாள். கடற்கரை சாலையில் வண்டி போனது. நிறுத்திவிட்டு மணலில் இறங்கி நடந்தாள்.
உடம்பும், மனதும் கொதிநிலையில் இருந்தது.
‘பல கோடிகள் காலடிக்கு வரும்போது, எட்டி உதைச்சா அவன் பைத்தியம். உன்னைக் கட்டிக்கிட்டா இதுல ஆயிரத்துல