Vidiyalukku Illai Thooram
()
About this ebook
இறுதியாய் அந்த அப்பார்ட்மெண்டின் வாட்ச்மேன் சாரங்கன் தன் பேத்தியின் நிகழ்ச்சியை அந்த மேடையில் நிகழ்த்த சிரமப்பட்டு அனுமதி பெறுகிறார்.
பணக்காரக் குழந்தைகள், பெரிய பெரிய வித்தகர்களின் பயிற்சியின் உதவியால் செய்த அத்தனை பர்ஃபாமென்ஸையும் சர்வ சாதாரணமாய் ஒரே நிகழ்ச்சியாய் அச்சிறுமி செய்து விட, தனிப்பட்ட பரிசினை வழங்குகிறார். குழந்தை தன் தாயை மேடைக்கு அழைக்கிறாள். எழுந்து வந்த அந்த தாய், சிவஞானத்தை அருகில் வந்து பார்த்ததும் அதிரிச்சியாகை அப்படியே திரும்பிச் செல்கிறாள்.
ஜட்ஜ் சிவஞானமும் அவளைக் கண்டு பேரதிர்ச்சியடைகிறார்.
காரணமும், முன் கதையும் நாவலின் சிறப்புக்கள்.
Read more from Mukil Dinakaran
Siragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratings"Aasai Mugam Arugirundhal...!" Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Saami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsVithiyin Kaigal Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsKutram Muthal Kutram Varai Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthal! Rating: 5 out of 5 stars5/5Netru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsNaalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsSoftware Kuttrangal! Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Ini Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Ippadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsPaaraikkul Panneer Pushpam Rating: 0 out of 5 stars0 ratingsUyirgalidathu Anbu Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsSaathan Sollai Thattu Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidiyalukku Illai Thooram
Related ebooks
Uyiraal Inainthirupean Rating: 0 out of 5 stars0 ratingsKalluri Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Enbathu Poithane? Rating: 0 out of 5 stars0 ratingsNetru Vaarai Nee Yaaro? Rating: 0 out of 5 stars0 ratingsMedhuvaga Sellum Ambulancegal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Krishna Kudil Rating: 0 out of 5 stars0 ratingsKanavaana Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAthe Athe... Saba Pathe... Rating: 0 out of 5 stars0 ratingsPerum Mazhai Naatkal Rating: 2 out of 5 stars2/5Kannale Kollathey! Rating: 5 out of 5 stars5/5Un Nizhalum Naanthane? Rating: 0 out of 5 stars0 ratingsKangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsAntharangamana Abathu Rating: 5 out of 5 stars5/5Kodungal Ketkapadum Rating: 5 out of 5 stars5/5Kaanal Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsMaayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsVaarangal Valartha Nila Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKalaimamani V.C. Guhanathan Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Brahma Rating: 0 out of 5 stars0 ratingsOru 'Century'um Oru 'Duck'um Rating: 0 out of 5 stars0 ratingsNaan Avan Than...! Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsBoologa Sorgankal Rating: 0 out of 5 stars0 ratingsKaanal Neer Kanavugal Rating: 5 out of 5 stars5/5Thithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Poonthotiti... Rating: 0 out of 5 stars0 ratingsAasaiye Alai Polea...! Rating: 0 out of 5 stars0 ratingsகலைந்து போகும் கோலங்கள் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vidiyalukku Illai Thooram
0 ratings0 reviews
Book preview
Vidiyalukku Illai Thooram - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
விடியலுக்கில்லை தூரம்
Vidiyalukku Illai Thooram
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
1
காலை ஒன்பது மணி.
ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானத்தின் பங்களா முன், கால் டாக்ஸியிலிருந்து இறங்கிய கோகுலனும், முகிலனும், கால் டாக்ஸிக்காரனை வெய்ட் பண்ணச் சொல்லி விட்டு, நேரே கேட்டின் முன் நின்று கொண்டிருந்த வாட்ச்மேனிடம் சென்றனர்.
ஜட்ஜ் அய்யா... இருக்காரா?... அவரைப் பார்க்கணும்!
கோகுலன் கேட்க,
அய்யா இருக்கார்!... நீங்க யாரு?... எங்கிருந்து வர்றீங்க?... என்ன விஷயமாய் அய்யாவைப் பார்க்கணும்?
வாட்ச்மேன் தன் பணியில் சிரத்தை காட்டினான்.
நாங்க...
பத்ரி அப்பார்ட்மெண்ட்ல இருந்து வர்றோம்!... எங்க அப்பார்ட்மெண்ட்ல நடக்கற ஒரு ஃபங்ஷன் விஷயமா அய்யாகிட்டப் பேசணும்!
அப்படியா?... அப்ப ஒரு நிமிஷம் இருங்க!... அய்யாகிட்ட கேட்டுடறேன்!
என்ற வாட்ச்மேன், தன் சிறிய கூண்டிற்குள் இருந்த இண்டர்காம் மூலமாய் யாருடனோ பேசி விட்டு, மீண்டும் இவர்களிடம் வந்தான்.
அய்யா வரச் சொல்றார்!...
என்று சொல்லியபடியே கேட்டைத் திறந்து விட்டவன், இப்படியே நேராப் போனீங்கன்னா!... போர்ட்டிகோ வரும்... அங்க வலது பக்கம் விஸிட்டர்ஸ் உட்கார சேர்கள் போடப்பட்டிருக்கும்!... அங்க போய் உட்கார்ந்து வெய்ட் பண்ணுங்க!... அய்யா வந்திடுவார்!
என்றான்.
திறக்கப்பட்ட கேட்டினுள் நிதானமாய் நுழைந்த கோகுலனும், முகிலனும் நேரே போர்ட்டிகோவை நோக்கி நடந்தனர். அங்கே, விஸிட்டர் ஏரியா
என்று எழுதப்பட்டிருந்த இடத்தில் நிறைய சேர்கள் போடப்பட்டிருக்க, சென்று அமர்ந்தனர். இத்தனை சேர்கள் போடப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது... தினமும் இவரைப் பார்க்க நிறைய விசிட்டர்ஸ் வருவாங்க போலிருக்கு!
என்றான் முகிலன் சன்னக் குரலில்.
இருக்காதா பின்னே?... ரிடையர்டு ஜட்ஜ்... சொஸைட்டில ஒரு வி.ஐ.பி...?
என்றார் கோகுலன்.
அவர்கள் எதிரிலிருந்த டீப்பாயின் மீது அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்த முகிலன் பெருத்த ஆச்சரியத்திற்குள்ளானான். அவ்வளவுமே இலக்கியப் புத்தகங்களாகவும், வாழ்வியல் கருத்துக்களைக் கூறும் புத்தகங்களாகவும், தன்னம்பிக்கைத் தத்துவங்களைப் போதிக்கும் புத்தகங்களுமாகவே இருக்க, கோகுலன் சார்!... ஜட்ஜ் அய்யாவுக்கு நல்ல இலக்கிய ரசனையும், புத்தக வாசிப்பில் நல்ல ஈடுபாடும் உண்டு போலத் தெரியுது!
என்று சொல்ல,
அதிலென்ன சந்தேகம்?... இவரே ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருக்கார்!... எழுத்து மட்டுமில்லை மேடைப் பேச்சிலும் நல்ல திறமைசாலி!... நான் ரெண்டு மூணு ஃபங்ஷன்ல இவரோட பேச்சைக் கேட்டிருக்கேன்!... வாய்ப் பேச்சாலேயே எல்லோரையும் மெய் மறக்கச் செய்திடுவார்!
என்றார் கோகுலன்
ஓ... அப்ப நாம சரியான ஆளைத்தான் செலக்ட் பண்ணியிருக்கோம்!
அப்போது, முகம் நிறைய புன்னகையோடு, வங்க... வாங்க!
என்றாவாறே ஓய்வு பெற்ற் நீதிபதி சிவஞானம் அவர்கள் எதிரில் வந்து நிற்க, இருவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
பதில் வணக்கம் தெரிவித்த நீதிபதி சிவஞானம், உட்காருங்க... உட்காருங்க!
என்று சொல்லியவாறே எதிர் சோபாவில் அமர்ந்தார்.
கோகுலனும், முகிலனும் நுனி சோபாவில் ஒருவித தயக்கத்துடன் அமர்ந்தனர்.
தங்களின் வருகைக்கான காரணத்தைச் சொல்ல கோகுலன் மெல்ல வாயெடுக்க,
ஒரு நிமிஷம்!... ரெண்டு பேரும் என்ன சாப்பிடறீங்க? காஃபியா?... டீயா?
சிவஞானம் கேட்டார்.
இல்லை சார்... பரவாயில்லை சார்!
நோ... நோ... அதெல்லாம் முடியாது... ஏதோ ஒண்ணு சாப்பிட்டே ஆகணும்!
என்று உரிமையோடு சிவஞானம் சொல்ல,
மெலிதாய் முறுவலித்த கோகுலன், டீயே சாப்பிடறோம் சார்!
என்றார்.
கோவிந்து... கோவிந்து
என்று வீட்டினுள்ளே பார்த்து சிவஞானம் அழைக்க, எங்கிருந்தோ ஓடி வந்தான் அந்த கோவிந்து.
ரெண்டு டீ கொண்டு வாப்பா!
அவன் சென்றதும், ம்ம்... வாட்ச்மேன் இண்டர்காம்ல நீங்க ரெண்டு பேரும் பத்ரி அப்பார்ட்மெண்ட்டுல இருந்து வந்திருக்கறதா சொன்னான்!... பத்ரி அப்பார்ட்மெண்ட்ன்னா... இந்த ரேஸ் கோர்ஸ் ரோட்டுல இருக்கே... அதுதானே?
கேட்டார்
ஆமாம் சார்
என்ற கோகுலன், முகிலனைக் காட்டி, இவர் முகிலன்!... அந்த அப்பார்ட்மெண்ட்டோட மனமகிழ் மன்றத்தின் பொருளாளர், நான் கோகுலன்... செகரட்டரி
என்றார்.
ஓ... வெரி குட்!... வெரி குட்!
வந்து... எங்க அப்பார்ட்மெண்டோட ஐந்தாம் வருட ஆடு விழா... வர்ற இருபத்தி ஐந்தாம் தேதி செலிபரேட் பண்றோம்!... அந்த ஃபங்ஷன்ல குழந்தைகளுக்கான போட்டிகள் நிறைய வெச்சிருக்கோம்!
நல்ல விஷயமாச்சே... தாராளமாய்ச் செய்யுங்க!
என்றார் ஜட்ஜ் முக மலர்ச்சியுடன்.
அந்த ஃபங்ஷனுக்கு... சாரை சீஃப் கெஸ்டா இன்வைட் பண்ணத்தான் இப்ப வந்திருக்கோம்!
கோகுலன் சொல்ல,
சில விநாடிகள் யோசித்த சிவஞானம், எந்த டேட் சொன்னீங்க?
திருப்பிக் கேட்டார்.
இருபத்தி ஐந்தாம் தேதி சார்!
ம்ம்ம்... ஓ.கே!... அந்த டேட்ல நான் ஃபிரீயாத்தான் இருப்பேன்!... கண்டிப்பா வந்துடறேன்!...
என்று சந்தோஷமாய் ஒப்புதல் தந்த ஜட்ஜ் சிவஞானம், அங்க வந்து நான் என்ன பண்ண வேண்டியிருக்கும்?
கேட்டார்.
வந்து... சீஃப் கெஸ்டா ஒரு சிறப்புரை வழங்கணும்!... அப்புறம் குழந்தைகள் போட்டிக்கு நீங்களே நடுவராயிருந்து... குழந்தைகளோட ஈவெண்ட்டுகளைப் பார்த்து... பரிசுக்குரிய குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கணும்!... அவ்வளவுதான் சார்!
என்றான் முகிலன்.
அப்போது வேலைக்காரன் கோவிந்து டீ டம்ளர்களை ஒரு டிரேயில் வைத்து எடுத்து வர,
ம்... அவங்களுக்குக் குடு கோவிந்து
என்றார் ஜட்ஜ்.
கோவிந்து நீட்டிய டம்ளர்களை வாங்கி, நிதானமாய்ப் பருக ஆரம்பித்தனர் கோகுலனும், முகிலனும். பருகி முடித்த பின், அவர்கள் டம்ளர்களை அந்த கோவிந்திடம் நீட்ட, அவன் வாங்கிக் கொண்டு நகர்ந்தான்.
ஏன் அந்தப் பொறுப்புக்கு என்னைத் தேர்ந்தெடுத்தீங்க?ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?
சிவஞானம் கேட்க,
சார்... போன வாரம் நீங்க எழுதின
வருங்காலத் தூண்கள் புத்தகத்தை வாசித்தேன்!... அதுல குழந்தைகளைப் பற்றியும், அவங்களோட மனப் போக்குகளைப் பற்றியும், அவங்களை எப்படி ஹேண்டில் பண்ணினா எதிர்கால இந்தியா வளர்ச்சியின் உச்சத்தைத் தொடும்!ன்னு நீங்க எழுதியிருந்ததைப் படித்த பிறகுதான் நான் இந்த முடிவே எடுத்தேன் சார்!... அதனால உங்க கோணத்துல நீங்க தர்ற ஜட்ஜ்மெண்ட் நிச்சயம் சரியாயிருக்கும்னு நாங்க உறுதியா நம்பறோம் சார்!
என்றார் கோகுலன்.
ஹா... ஹா... ஹா...
என்று வாய் விட்டுச் சிரித்த சிவஞானம், சுமார் எத்தனை குழந்தைகள் போட்டியில் கலந்துக்குவாங்க?
ம்ம்ம்... இருவது... இருபத்தி அஞ்சு பேர் இருப்பாங்க சார்!
அப்ப... இது எஅனக்கு பெரிய அஸைன்மெண்ட்டுன்னு சொல்லுங்க!...
கோகுலனும், முகிலனும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர்.
எனி வே!... அந்த இண்ட்ரஸ்டிங் அஸைன்மெண்டை நான் சந்தோஷமா ஏத்துக்கறேன்!
என்று சிவஞானம் சொல்ல,
ரொம்ப நன்றி சார்!
இருவரும் ஒரே குரலில் சொல்லி விட்டு எழுந்தனர்.
ஃபங்ஷனுக்கு ஒரு நாள் முன்னாடி எனக்குப் போன் பண்ணி ஞாபகப்படுத்திடுங்க!... ப்ளீஸ்!
கண்டிப்பா பண்றோம் சார்
கிளம்பும் முன், மரியாதை வணக்கத்தைத் தெரிவித்து விட்டு வெளியேறிய கோகுலனும் முகிலனும், காத்திருந்த கால் டாக்ஸியில் ஏறிப் பறந்தனர்.
2
மேல் தட்டு மக்கள் மட்டுமே வாழும் அந்த பத்ரி அப்பார்ட்மெண்ட்
கடந்த பத்து நாட்களாகவே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
சமூக அந்தஸ்திலும், பொருளாதார வசதியிலும் மேம்பட்டிருக்கும் அந்த அப்பார்ட்மெண்ட்வாசிகளை குழந்தைகளுக்கான போட்டி
அறிவிப்பு ஏகமாய் உசுப்பி விட்டிருந்தது.
எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம்