Uravugal Enbathu Poithane?
()
About this ebook
அவள் மகனைக் கூட்டி வரும் நோக்கத்தில் புறப்பட்டுச் சென்ற சித்ரா, அவன் அந்த ஊரை விட்டே போயிருப்பதைக் கண்டுபிடித்து வேதனையாகிறாள். லட்சுமியம்மாள் மரணப் படுக்கைக்கே போய் விட, வேறு வழியில்லாமல் அவள் மகனின் புது இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அவனைக் கடத்தி வர ஆளை ஏவுகிறாள்.
கடத்தி வரப்பட்ட மகன் தாயைச் சந்தித்தானா?...அவனைச் சந்தித்த பின் லட்சுமியம்மாள் உணவருந்தினாளா?
நாவலை வாசித்த பின் கண் கலங்காத மனிதர்கள் இருந்தால், அவர்கள் நிச்சயம் மனிதப் பிறவிகளே இல்லை, எனலாம்.
Read more from Mukil Dinakaran
Athu Oru Varam! Rating: 0 out of 5 stars0 ratingsVinnai Thodalam Unthan Siragu Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Viri!!... Sigaram Thodu!! Rating: 0 out of 5 stars0 ratingsEnnil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsUyirulla Bommaigal Rating: 0 out of 5 stars0 ratingsMul Naduve Malar Valarthu! Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku... Un Uyir! Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Haikku Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai Malare! Rating: 5 out of 5 stars5/5Vidiyalukku Illai Thooram Rating: 0 out of 5 stars0 ratingsPanthaya Purakkal Rating: 0 out of 5 stars0 ratingsPetraalthan Magala? Rating: 0 out of 5 stars0 ratingsIthuve Iruthi Aagattum...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mattum Kadanthu Pogathu! Rating: 0 out of 5 stars0 ratingsTherodi Ointha Theru Rating: 0 out of 5 stars0 ratingsKaatrin Viralgal! Rating: 0 out of 5 stars0 ratingsOru Panthu... Aaru Run... Oru Aavi Rating: 0 out of 5 stars0 ratingsMr And Mrs Pei Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsIni Ellam Sugame! Rating: 3 out of 5 stars3/5Malaiyum Avaney!... Mazhaiyum Avaney! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Ullathu Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsInnarkku Innarendru! Rating: 4 out of 5 stars4/5Naalellam Pournami Rating: 0 out of 5 stars0 ratingsOotha Colouru Helmet! Rating: 0 out of 5 stars0 ratingsManasu Valikkuthu Mathumitha! Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Sudugindrathu Rating: 0 out of 5 stars0 ratingsInge Oru Shahjahan Rating: 0 out of 5 stars0 ratings
Related to Uravugal Enbathu Poithane?
Related ebooks
Tharkaliga Unnathangal Rating: 0 out of 5 stars0 ratingsNee Enthan Athisayam! Rating: 5 out of 5 stars5/5Needhan... Nee Mattum Dhan! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Indira Soundarajan Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Kangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Neruppu Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Uyire Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Manasu Vetcha Maranam! Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsNeruppai Oru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsTheeyai Theendiya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNan Ramaseshan Vanthirukkiren Rating: 5 out of 5 stars5/5Maayam Seithayo Mayava Rating: 0 out of 5 stars0 ratingsEllam Poi Rating: 0 out of 5 stars0 ratingsPashana Lingam Rating: 0 out of 5 stars0 ratingsThanithiru! Vizhithiru! Rating: 5 out of 5 stars5/5Ragasiyam Parama(n) Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Yazhini Endroru Thenaruvi Rating: 4 out of 5 stars4/5Nin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Inba Naalum Indru Thaane! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Paattu Kalantidave Rating: 0 out of 5 stars0 ratingsThiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Samsaram Enbathu Veenai! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa… Rating: 0 out of 5 stars0 ratingsVishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Uravugal Enbathu Poithane?
0 ratings0 reviews
Book preview
Uravugal Enbathu Poithane? - Mukil Dinakaran
http://www.pustaka.co.in
உறவுகள் என்பது பொய்தானே?
Uravugal Enbathu Poithane?
Author:
முகில் தினகரன்
Mukil Dinakaran
For more books
http://www.pustaka.co.in/home/author/mukil-dinakaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
1
அறை வாசலில் நிழலாட மெல்லத் தலையைத் தூக்கிப் பார்த்தார் சங்கர் பெருமாள். அந்த தெரஸா முதியோர் இல்ல
த்தின் தலைமை நிர்வாகி. கடந்த முப்பது வருடங்களாக இதே முதியோர் இல்லத்தில் பணி புரிந்து, தன் மொத்த வாழ்க்கையையும் மூத்தோர் நலனுக்காகவே அர்ப்பணித்து வாழ்பவர். பேச்சில் நல்ல தெளிவும், செயல்பாட்டில் நல்ல நிதானமும் கொண்ட மனிதர்.
என்ன ஜீவா?... என்ன விஷயம்?
வழக்கமான தனது மென்மைக் குரலில் கேட்டார்.
சார்... அந்த லட்சுமியம்மா இன்னிக்கும் அதே மாதிரியேதான் பிடிவாதம் பிடிக்கறாங்க சார்!
என்றான்.
ஓ காட்!
என்றவாறே தன் நெற்றியில் கை வைத்தவர், சரி... நீங்க போங்க ஜீவா... நானே நேர்ல வர்றேன்!
என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு, தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலை மூடி வைத்து விட்டு. எழுந்தார் சங்கர் பெருமாள்.
வராண்டாவில் நடந்து, லட்சுமியம்மாளின் அறையை அடைந்தவர், நாசூக்காக கதவைத் தட்டி விட்டு, வெளியிலேயே காத்து நின்றார்.
வெள்ளுடையணிந்த செவிலிப் பெண் ஒருத்தி கதவைத் திறந்து விட, மெல்ல உள்ளே சென்றவர், ஈஸிசேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த லட்சுமியம்மாளின் அருகில் சென்று நிற்க,
சாய்வுக் கோணத்திலேயே தலையை உயர்த்திப் பார்த்த லட்சுமியம்மாள் சங்கர் பெருமளைக் கண்டதும், மரியாதை நிமித்தமாக எழ முயற்சித்தாள். தள்ளாமை காரணத்தால் அதை உடனே செய்ய முடியாது அவள் திணறுவதைக் கண்ட சங்கர் பெருமாள்,
பரவாயில்லை... பரவாயில்லை... அப்படியே இருங்கள்!
என்றார் சுற்றும் முற்றும் எதையோ பார்வையால் தேடியபடியே,
அவரது அந்தத் தேடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட செவிலிப்பெண், சற்றுத் தள்ளியிருந்த ஒரு நாற்காலியை எடுத்து வந்து போட, தாங்க்ஸ்ம்மா!
என்றபடி அதை இழுத்து லட்சுமியம்மாளின் ஈஸிசேருக்கு அருகில் போட்டு அமர்ந்தார்.
என்ன லட்சுமியம்மா.. உங்களுக்கு என்ன ஆச்சு?... ஏன் திடீர்ன்னு சாப்பாடு எடுத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்க?... உடம்புக்கு ஏதாவது சுகமில்லையா?... சொல்லுங்க டாக்டரை வரவழைச்சுப் பார்த்திடலாம்!
மிகுந்த பரிவோடு கேட்டார்.
அவருடைய அந்தக் கேள்விக்கு வாயைத் திறந்து பதிலேதும் சொல்லாமல், வெற்றுப் பார்வை மட்டும் பார்த்தாள் லட்சுமியம்மாள்.
த பாருங்க லட்சுமியம்மா... நீங்க கரெக்டா சாப்பாடு சாப்பிட்டாத்தானே அதுக்கப்புறம் மருந்து... மாத்திரையெல்லாம் எடுத்துக்க முடியும்?... வெறும் வயித்துல மாத்திரையெல்லாம் போடக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியும்தானே?
லட்சுமியம்மாளிடம் அதே அமைதி தொடர்ந்தது.
அப்போது, இடையில் புகுந்த செவிலிப்பெண், சார்... இவங்க சாப்பாடு சாப்பிட்டு சுத்தமா ரெண்டு நாளாச்சு!" என்றாள் அங்கலாய்ப்புடன்.
அதைக் கேட்டு நெற்றியைச் சுருக்கிய சங்கர் பெருமாள், அப்ப... மருந்து... மாத்திரையெல்லாம்?
சந்தேகத்துடன் கேட்டார்.
ம்ஹும்.. ரெண்டு நாளா மருந்து மாத்திரைகளையும் அவங்க எடுத்துக்கறதில்லை!
ஓ.. மை.. காட்!... அது ரொம்ப டேஞ்சராச்சே?
என்று விழிகளை விரித்துச் சொன்ன சங்கர் பெருமாள், மறுபடியும் லட்சுமியம்மாளிடம் திரும்பி, த பாருங்க லட்சுமியம்மா... உங்களுக்கு இங்க ஏதாவது குறை இருந்தா... அதை நேரடியாச் சொல்லுங்க!... நான் சரி செய்து தருகிறேன்!... அதை விட்டுட்டு இப்படி உண்ணாவிரதம் இருந்து அடம் பிடிக்கறது... உங்க வயசுக்கும்... உங்க உடல் நிலைக்கும் சரியானதில்லை!
விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்து விட்டுச் சொன்னார்.
லட்சுமியம்மாள் அப்போதும் ஒரு வெற்றுப் புன்னகையைச் சிந்தினாளே தவிர, வாய் திறந்து எதுவுமே பேசவில்லை.
குழப்பமான சங்கர் பெருமாள் அந்தச் செவிலிப் பெண்ணிடம், சிஸ்டர்... கடந்த ரெண்டு மூணு நாளில் இங்க இவங்க மனசு நோகற மாதிரி ஏதாவது நடந்ததா?... இல்லை யாராவது இவங்களை எதுவும் திட்டிட்டாங்களா?
என்று கேட்க,
சார்... நான் அதையும் விசாரிச்சுப் பார்த்திட்டேன் சார்!... அப்படி எதுவும் நடந்த மாதிரித் தெரியலை சார்!
நோ... ஸம் திங் ராங்கா நடந்திருக்கு!... ஏன்னா இந்தம்மா இங்க இந்த இல்லத்துக்கு வந்து... மூணு வருஷத்துக்கும் மேலாச்சு!... இது வரைக்கும் இவங்க இருக்கற இடம் தெரியாத மாதிரி... அமைதியாய்த்தான் இருந்தாங்க!... இப்ப திடீர்னு இப்படி அடமண்ட்டா பிஹேவ் பண்றாங்கன்னா... நிச்சயம் இதுக்குப் பின்னாடி ஏதாவது வலுவான காரணம் இருக்கணும்!... இருக்கும்!
ஆமாம் சார்!
அந்தச் செவிலிப் பெண்ணும் அதை ஆமோதிக்கும் விதமாய் பதில் சொல்ல,
ஓ.கே!... இவங்களுக்கு மெடிக்கல் செக்கப் பண்ணின் எத்தனை நாளாகுது
ஒரு வாரத்துக்கு முன்னாடி... எல்லோருக்கும் ரெகுலரா பண்ணுற செக்கப் பண்ணினோமே?... அப்பப் பண்ணினதுதான் சார்!
நோ... இப்ப இவங்களுக்கு உடனே ஒரு மெடிக்கல் செக்கப் ஏற்பாடு பண்ணுங்க!... இந்த ரெண்டு நாள்ல இவங்க உடம்பு ரொம்பவே பலஹீனமாயிருக்கு!
பார்வையால் லட்சுமியம்மாளை மேலிருந்து கீழ்வரை பார்த்து விட்டுச் சொன்னார் சங்கர் பெருமாள்.
ஓ.கே.சார் இம்மீடியட்டா ஏற்பாடு பண்ணிடறேன் சார்!
ம்ம்ம்... அப்புறம்... உங்ககிட்ட கவுன்சிலிங் மேடம் சித்ராவோட மொபைல் நெம்பர் இருக்கா?...
சங்கர் பெருமாள் கேட்க,
இல்லையே சார்!
ப்ச்... என்னம்மா?... அந்த மாதிரி முக்கியமானவங்க நெம்பரையெல்லாம் நோட் பண்ணி வெச்சுக்க மாட்டீங்களா?
அது வந்து... ஸாரி சார்!
செவிலிப் பெண் நெளிந்தாள். வழிந்தாள்.
இட்ஸ் ஓ.கே!... நான் என் ரூமுக்கே போய் அங்கிருந்தே பேசிக்கறேன்!
என்ற சங்கர் பெருமாள், போகும் முன் கடைசி முயற்சியாய் லட்சுமியம்மாளிடம், லட்சுமியம்மா... கொஞ்சம் ஜூஸாவது குடிக்கலாமே?
என்று கேட்க,
வேகமாய்த் தன் தலையை இட வலமாய் ஆட்டி மறுத்தாள் அவள்.
தோள்களைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் சங்கர் பெருமாள்.
***
தன் அறைக்கு வந்த சங்கர் பெருமாள், மொபைலை எடுத்து கவுன்சிலிங் ஸ்பெஷலிஸ்ட் சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார்.
முதியோர் சைக்காலஜியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் சித்ரா, அந்த முதியோர் இல்லத்திற்கு அவ்வப்போது வந்து, அங்கிருக்கும் மூத்த பெண்மணிகளை நேரில் சந்தித்து, உரையாடி அவர்களது மனக்குறைகளை தெரிந்து கொண்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் பணிக்காக நியமிக்கப் பட்டிருக்கும் ஒரு ஜீனியஸ் பெண். இருபத்தி நான்கு வயது இளம் யுவதிதான், ஆனால் அவளது பேச்சும் செயல்பாடும் எழுபது வயதிற்குரிய முதிர்ச்சியை வெளிப்படுத்தும். சொல்லப் போனால், அந்த அனுசரணையான பேச்சும், அன்பான முகமும்தான் அவளுக்கு முதலீடே. வார்த்தைகளால் மூத்தோர்களின் மனக் காயங்களுக்கு மருந்திடுவதில் அவளுக்கு நிகர் அவளே. அதே போல், அந்தப் பணியை இலவசமாக, ஒரு சேவையாக்க் கருதி அவள் செய்து கொண்டிருப்பது, அவளுக்கு சமூகத்தில் ஒரு பெரிய மரியாதையையும் மதிப்பினையும் உருவாக்கியிருந்தது.
ஹலோ... சித்ரா ஹியர்!
தெளிவான, பவ்யமான குரலில் சித்ரா பேச,
ஹலோ சித்ரா மேடம்... எப்படி இருக்கீங்க?... நான் சங்கர் பெருமாள் பேசறேன்!
ஓ... ஸார்!... ஐ யாம் ஃபைன்!... நீங்க எப்படி இருக்கீங்க?
"கொய்ட் ஓ.கே!... வந்து