Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Uravugal
Iraval Uravugal
Iraval Uravugal
Ebook142 pages52 minutes

Iraval Uravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஜஸ்டின் செல்வரங்கம் சிவகாமி தம்பதியின் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால், சீர்திருத்த பள்ளியில் இருந்து நல்லமுத்துவையும், அனாதை விடுதியில் இருந்து பிரபா என்கிற விபச்சார பெண்னையும் தத்தெடுத்து வளர்க்கின்றனர். நல்லமுத்து அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம் காண நினைப்பவன். பிரபா சூழ்நிலை காரணமாக விபசாரத்தில் தள்ளப்பட்டவள். சிவகாமிக்கு இவர்களை தத்தெடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கணவனின் சவாலுக்கு இணங்கி பின்பு ஒப்புக்கொள்கிறார். செல்வரங்கம் தன் சவாலில் ஜெயித்தாரா? அல்லது இரவலாக வந்த உறவுகள் அவரை ஜெயிக்க வைத்தனரா?

Languageதமிழ்
Release dateMar 5, 2022
ISBN6580152608161
Iraval Uravugal

Read more from Rajendrakumar

Related to Iraval Uravugal

Related ebooks

Reviews for Iraval Uravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Uravugal - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    இரவல் உறவுகள்

    Iraval Uravugal

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    திடுக்கிட்டு பிரபா கண் விழித்தபோது அறைக்கு வெளியே குழப்பமான கூச்சல் கேட்டது. அழுகையும், மிரட்டலும் அவளை அதிர வைத்தது. அவசரமாக எழுந்த போது பிறந்த மேனியாக இருந்தாள்.

    அவசரமாக ஆடைகளைப் பொறுக்கிக் கொண்டு ஆளை எழுப்பினாள். எழுந்த அந்த ஆள் கண்ணாடியில்லாமல் விழித்தான். என்ன?

    சீக்கிரமா டிரஸ் மாட்டிக்க.

    ஏன்?

    போலீஸ் ரெயிடு, அவள் சொல்லும் போதே கதவு பலமாக இடிபட்டது. சீக்கிரம் என்றவள் அவசரமாக பாத்ரூம்முக்குள் நுழைந்தாள்.

    அவன் நடுங்கிக் கொண்டே இதோ வரேன் என்று அவசரமா ஆடைகளை மாட்டிக் கொண்டான்.

    போலீஸ். கதவைத் திற. அதட்டல் வந்து கொண்டே இருந்தது.

    திறந்தான். போலியாகக் கொட்டாவி விட்டான்.

    வாட் இஸ் திஸ். தூங்கிறவனை எழுப்பி இதென்ன தொல்லை?

    எங்கே அந்தப் பெண்?

    பெண்? அப்பாவியாக விழித்தான். பெண் இங்கே யாருமில்லை. நான் தானியாக இருக்கேன். நான் நாட்டின் கௌரவமான ஆள். என்னை அவமானப்படுத்தப் பார்க்கிறது தப்பு.

    இன்ஸ்பெக்டர் குனிந்த இடத்தைக் கண்டதும் திக்கென்று விழித்தான்.

    நாட்டில் எந்த கௌரவமான ஆளும் பிரா போட்டுக்கறதா கேள்விப்பட்டதில்லே நான்... சரிதானே.

    ஙே என்று விழித்தான்.

    பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்து நின்றாள் பிரபா,

    நான் ஒண்ணும் பண்ணலியே. அந்த ஆள் அலறினான். என்னை விட்டுடுங்க.

    ஒண்ணும் பண்ணல்லியா? இன்ஸ்பெக்டர் அர்த்தத்துடன் சிரித்தார்.

    இன்ஸ்பெக்டர், தொழில் எனக்கு புதுசில்லேன்னாலும், போலீஸ் எனக்கு புதுசு. பிரபா தயாரானாள். போகலாமா?

    ***

    நானும் இந்த சீர்திருத்த பள்ளியின் முதல்வராகி எத்தனையோ முரட்டுப் பையன்களை பார்த்திருக்கிறேன். திருத்தி இருக்கிறேன். மூக்குக் கண்ணாடியை உயர்த்திக் கொண்டார். ஆனால் நல்லமுத்து! நீ முழுக்க முழுக்க வித்தியாசமானவன்.

    அந்த நல்லமுத்து அலட்சியமாக நிமிர்ந்திருந்தான். பதினைந்தே வயதில் நல்ல வளர்த்தி செதுக்கினாற் போன்ற உறுப்புகள். நெற்றியில் வழியும் முன்னுச்சி மயிர் காற்றில் விளையாடியது. அது கண்ணை மறைக்கும் போதெல்லாம் இடது கையால் ஒதுக்கிவிட்டுக் கொண்டான். அவன் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது. குரூரத்திருப்தி.

    பதில் சொல்லு நல்லமுத்து முதல்வர் கேட்டார். ஒண்ணில்லே ரெண்டில்லே இருநூறு கோழிகள்... அத்தனையையும் ஓரே ராத்திரியில் கழுத்தை முறிக்க உனக்கு எப்படி மனசு வந்தது? சொல்லுப்பா.

    கோழிக்கறி சாப்பிட ஆசையாயிருக்கு. ஹாஸ்டல் சமையலறைக்கு நாலு கோழிகளை கொடுன்னு மரியாதையாதான் கேட்டேன் சார். பண்ணை நிறைய கோழிகளை வைச்கிருக்கிற இந்த முதலாளியம்மாவுக்கு மனசு வரல்லே. அதான் ராவோடு ராவா பழி தீர்த்துட்டேன். அவுங்க கஞ்சத்தனத்துக்கு தண்டனை வேண்டாமா?

    நீ கொடுத்த தண்டனை அவங்களுக்கில்லே. இருநூறு கோழிகளுக்கு. நீ இவ்வளவு பெரிய சாடிஸ்டா இருப்பேன்னு நான் எதிர்பார்க்கல்லே

    எஸ். ஐயாம் எ சாடிஸ்ட். மத்தவங்க துன்பத்திலே இன்பம் தேடுகிற நான் ஒரு விசித்திரமான பிறவி.

    செய்யறதையும் செய்துட்டு நெஞ்சை நிமிர்த்தி வேறே பேசறியா? முதல்வர் கோபமாகக் கேட்டார். இதுக்கான தண்டனை என்னன்னு தெரியுமா?

    பண்ணை அம்மாளின் முகம் கறுத்தது. பீதியுடன் பார்த்தார்.

    தெரியும். வேகமாக நடந்து சுவரில் தொங்கிய சாட்டையை உருவி எடுத்து நீட்டினான் நல்ல முத்து. இந்த நல்லமுத்து கோழையில்லே. தப்பு செய்யறதிலே இருக்கிற அதே துணிச்சல் தண்டணையை ஏத்துக்கறதிலேயும் இருக்கு உம்.

    அடுத்த வினாடி அவன் உடம்பைத் தீ நாக்குகளாகத் தீண்டி விலகியது சவுக்கு. அந்தத் துடிப்பிலும் அவனுக்கு ஒரு இன்பம் இருந்தது.

    சிரித்தான். ரசித்து சிரித்தான்.

    ஐயே கோழிப் பண்ணை அம்மாள் பாய்ந்து சவுக்கை பிடுங்கி எறிந்தாள். போறும் விடுங்க. செய்த தப்பு செஞ்சுட்டான். போன கோழி போயிடுச்சு. இதுக்கேன் புள்ளையை இப்படி கண்ணு மண்ணு தெரியாம அடிக்கிறீங்க? நானும் நாலை பெத்து குழியிலே வச்ச பாவியாச்சே. என்னாலே தாங்க முடியல்லே. அவனைத் தொட்டுத் தூக்கினாள். தா தம்பீ. எல்லாத்தையும் வாங்கிட்டு போய் ஆக்கிப் போட சொல்லி ஆசை தீர தின்னு தொலை. இனிமே கோழிக் கறி வேணும்னா என்னை கேளு. நானே ஆக்கிப்போடறேன்.

    அவளைப் பார்த்தான். அவள் கண்ணீரைப் பார்த்தான். பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தான். திருப்தி. பரம திருப்தியுடன் சிரித்தான்.

    ஷட் அப் யூ என்றார் முதல்வர் கோபமாக.

    2

    அட்டகாசமாக நடந்து மாடி இறங்க ஆரம்பித்த ஜஸ்டிஸ் செல்வரங்கம் சட்டென்று நின்று திக்கென்று விழித்தார்.

    முதுகை காட்டியவாறு கையிலிருந்த தம்ளரிலிருந்து தூசைகண்டு விரலால் வழித்து எடுக்கும் மனைவி சிவாமிகாமியைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்.

    இந்த நேரத்தில் தம்ளரும் தண்ணீருமாக அவள் நிற்கும் காரணம் அவருக்குத் தெரியும்.

    மாத்திரைகள்... காப்ஸ்யூல்கள்... சே!

    ரகசியமாகத் திரும்பி மாடி ஏற முயன்றவரைப் பிடித்து இழுத்தது சிவகாமியின் குரல்.

    எங்கே நழுவப் பார்க்கறீங்க? வாங்க இறங்கி. மாத்திரை சாப்பிடணும் என்றாள் சிவகாமி திரும்பாமலே.

    சனியனுக்கு முதுகிலேயும் கண்! என்று நினைத்துக் கொண்ட ஜஸ்டிஸ் அங்கிருந்தே கத்தினார். முடியாத்... முடியவே முடியாத். எனக்குத்தான் உடம்புக்கு ஒண்ணுமேயில்லியே சிவகாமி. அப்புறம் ஏன் மருந்தும் மாத்திரையும்?

    அதை நீங்க சொல்லிப் பிரயோஜனமில்லே. டாக்டர் சொல்லட்டும். நம்பரேன்.

    அட சொன்னா கேளு சிவகாமி. அடம்பிடித்து கெஞ்சினார். வியாதி குணமானதுக்கு அப்புறம் மாத்திரை சாப்பிட்டா ஆபத்தாம். சயன்ஸ் டூடேயிலே ஒரு ஆர்ட்டிகல் சொல்லுது.

    ஆர்ட்டிகல் ஆட்டுக்கல் எது சொன்னாலும் நம்பமாட்டேன்.

    பின்னே?

    அதையும் நம்ம டாக்டர் சொல்லட்டும் நம்பரேன்.

    டாக்டர் என்னடி டாக்டர்? முதல்லே அவன் ஈளை இருமலை நிறுத்திக்கச் சொல்லு. இரண்டடி பின்வாங்கினார். அப்புறம் எனக்கு வைத்தியம் பார்க்கலாம்.

    என்ன அங்கே முணுமுணுப்பு?

    அந்த டாக்டர் மூஞ்சே எனக்கு பிடிக்கல்லே.

    டாக்டர்... ஓ. மைடியர் பாய். டாக்டர் மூஞ்சி எப்படியிருந்தா நமக்கென்ன? அவர் தருகிற மருந்து எஃபெக்டிவா இருக்கே. அது போதுமே. என்றவள் திடீரென்று கத்த ஆரம்பித்தாள். இப்ப இறங்கி வரப்போறீங்களா இல்லியா?

    என்ன செய்வே... இறங்கி வரல்லேன்னா என்ன செய்வே? என்று ஜஸ்டிஸ் கத்தும்போது...

    நான் மேலே வந்துட்டுப் போறேன். கமான் பாய்... காமன் பாய், என்று சிவகாமி கொஞ்சும்போதுதான்

    அந்த இளம் வாலிபன் உள்ளே வந்தான்.

    யாரு, அவனை சொன்னியா?

    நோ. உங்களைத்தான் சொன்னேன். ஓ. பாய். காமன் ஐயே.

    என்ன சிவகாமி? கையைக் காலை உதறினார். முன்னேபின்னே தெரியாத பையன். அவன் எதிரிலே...

    சார். அவன் கேட்டான். நான் வேணுமானா கொஞ்சம் வெளியே போயிருக்கவா?

    அந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும். இளம்தம்பதிகளிருக்கிற வீடாச்சே, அட்லீஸ்ட் கதவை தட்டிட்டாவது வரணும்னு தோணல்லே. நேரே வந்துட்டே.

    இளம் தம்பதி? விழித்தான். யாரு சார்?

    தலையிலடித்துக்

    Enjoying the preview?
    Page 1 of 1