Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Gangai Ingey Thirumbugirathu!
Gangai Ingey Thirumbugirathu!
Gangai Ingey Thirumbugirathu!
Ebook95 pages35 minutes

Gangai Ingey Thirumbugirathu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is well known for his detective and thriller stories. He also had written excellent stories in social theme. These short stories collection is published in many popular magazines.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789352850396
Gangai Ingey Thirumbugirathu!

Read more from Rajesh Kumar

Related to Gangai Ingey Thirumbugirathu!

Related ebooks

Reviews for Gangai Ingey Thirumbugirathu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Gangai Ingey Thirumbugirathu! - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    கங்கை இங்கே திரும்புகிறது!

    Gangai Ingey Thirumbugirathu!

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books
    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ***

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    ***

    1

    இந்திய புண்ணிய பாரத மண்ணில் பிறந்ததற்காக ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். கர்வப்பட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த மண்ணில்தான் கங்கை பாய்கிறது.

    அண்ணா...!

    குரல் கேட்டுக் கண் விழித்தான், நிவேதன். வீட்டுக்குப் பின்புறம் இருந்த வேப்ப மரத்தில் குருவிகளின் கீச் கீச் சத்தமும் - அம்மா ராஜத்தின் இருமல் சத்தமும் சுருதி பேதத்தோடு செவிப்பறையில் மோதியது.

    கஷ்டப்பட்டுக் கண் விழித்தான்.

    எதிரே தங்கை சுவாதி. முகத்தில் கலக்கம். வியர்வை.

    என்ன சுவாதி…?

    அம்மாவுக்கு உடம்பு ரொம்பவும் முடியலை….

    மாத்திரை கொடுத்தியா…? போர்வையைக் காலால் எத்திவிட்டு வேகவேகமாய் உள்ளே போக, சுவாதி தொடர்ந்தாள், சொன்னாள்.

    மாத்திரை கொடுத்தேன்… ஓயாம இருமல். வெந்நீர் பையை வெச்சு ஒத்தடம் கொடுத்தேன்…. இருமல் நிக்கல.

    நிவேதன் கட்டிலில் படுத்திருந்த அம்மாவை நெருங்கினான். ராஜம், கண்களில் நீர் தளும்ப - முகம் சிவக்க இருமிக் கொண்டிருந்தாள்.

    அம்மா…

    பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.

    டேய்… நிவேதா…. மகனின் கைகளைப் பற்றிக் கொண்டாள், ராஜம்.

    "உனக்கு என்னம்மா பண்ணுது…?

    நிவேதன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ராஜம் மூச்சுத் திணற - சுவாதி அவனுடைய தோளைத் தொட்டாள்.

    அண்ணா…! அடுத்த தெருவுல புதுசா டாக்டர் ஒருத்தர் குடி வந்திருக்கார். ரேஷன் கடைக்குப் பக்கத்திலேயே வீடும் டிஸ்பென்ஸரியும் ஒண்ணாவே இருக்கு… போய் கூட்டிட்டு வந்துடு… டாக்டர் பேர் வேல் முருகன்….

    நிவேதன் எழுந்து - ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்து உடம்புக்குக் கொடுத்துக் கொண்டே - வீதிக்கு வந்தான். விடிந்து வெளிச்சம் வந்திருந்த தெருவில் பெண்கள் சாணநீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். பால் பூத்தில் ஒரு கூட்டம் தெரிந்தது. அரச மரத்தடிப் பிள்ளையார், மஞ்சளில் குளித்து அருகம்புல் மாலையைத் தரித்திருந்தார். அண்ணாச்சி, தன் மளிகைக் கடைப் பலகைகளை ஒவ்வொன்றாய்க் கழற்றி ஒரமாய் வைத்துக் கொண்டிருந்தார்.

    நிவேதன் வேகவேகமாய் நடந்தான். மனசு பரபரத்தது.

    ‘கடவுளே….! அம்மாவுக்கு ஒண்ணும் ஆயிடக்கூடாது…. சுவாதி கல்யாணத்தைப் பார்க்கிற வரைக்குமாவது உயிரோடு இருக்கணும்…!’

    தெருவை இரண்டு நிமிஷத்தில் கடந்து அடுத்த தெருவுக்குள் நுழையும் முன் - நிவேதன் வெகுவாய் வியர்த்துப் போயிருந்தான்.

    ரேஷன் கடைக்குப் பக்கத்தில் - டாக்டர் வேல் முருகனின் பெயர்ப்பலகை தாங்கிய சிறிய டிஸ்பென்ஸரியும் - உட்புறமாய் வீடும் தெரிந்தது. டிஸ்பென்ஸரி சாத்தியிருந்தது.

    வீட்டின் சிறிய காம்பெளண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனான் நிவேதன்.

    ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பாடப் புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஒரு பனிரண்டு வயதுப் பெண், நீவேதனைப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

    யாரு வேணும்…?

    டா… டாக்டர் இருக்காரா…?

    அந்தப் பெண் உள்ளே திரும்பிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.

    அப்பா… உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க…

    உள் அறையில் ஷார்ட்ஸ் அணிந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டாக்டர் வேல்முருகன் எட்டிப் பார்த்தார்.

    யாரு...?

    டாக்டர். என்னோட மதருக்கு உடம்பு ரொம்பவும் முடியலை. பக்கத்துத் தெருவுலதான் வீடு. வந்து பார்த்தீங்கன்னா…

    வேல்முருகன் வெளியே வந்தார்.

    பேஷண்ட்டை இங்கேயே கூட்டிட்டு வந்திடுங்க….

    "ஸாரி டாக்டர்… எங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு வர

    Enjoying the preview?
    Page 1 of 1