Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam
Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam
Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam
Ebook272 pages1 hour

Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam

Read more from Rajeshkumar

Related to Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam

Related ebooks

Related categories

Reviews for Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Aththiyaayam and Pagal Nera Paathagam - Rajeshkumar

    28

    1

    "சாந்தா! உனக்கு போன் வந்திருக்கு..." - டெஸ்பாட்ச் கிளார்க் சுந்தரம் குரல் கொடுக்க - ஒரு இன்வாய்ஸை மும்முரமாக டைப் செய்து கொண்டிருந்த நான், நாற்காலியை பின்னுக்கு தள்ளிக் கொண்டு எழுந்தேன். வேகவேகமாய் நடந்து போய் - சுவரோரமாய் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஒருக்களித்து வைக்கப்பட்டிருந்த ரிஸீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தேன்.

    ஹலோ...

    பேசறது யாரு...? சாந்தாவா?

    ஆமா...

    சாந்தா! நான் பக்கத்து வீட்டு ஹெட்மாஸ்டர் ராஜகோபாலன் பேசறேம்மா...

    சொல்லுங்க ஸார்.

    அம்மா! நீ ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு உடனே கங்கா நர்சிங் ஹோமுக்கு புறப்பட்டு வாம்மா...

    ஏன்... ஸார்... என்ன விஷயம்...?

    உங்கப்பா... திடீர்னு மாரைப் பிடிச்சுக்கிட்டு... கீழே விழுந்துட்டார். அம்மா... ‘ஹார்ட் அட்டாக்’ன்னு சொன்னார்... டாக்டர்... தலையில வேற அடிபட்டிருக்கு.

    என் நெஞ்சுக்குள் அப்பாவைப் பற்றிய அதே செய்தி ஒரு தீக்கட்டி மாதிரி விழ, துடித்துப் போனேன்.

    இப்ப வந்துடறேன் ஸார்...

    சீக்கிரமா... வாம்மா... - அவர் ரிஸீவரை வைத்து விட நான் பட்டனைத் தட்டி விட்டு - என் கணவர் வேலை செய்யும் கம்பெனிக்கு டயலைச் சுழற்றினேன். மறுமுனையில் ரிஸீவர் எடுக்கப்பட்டதும் கேட்டேன்:

    மெட்ரோ டயர்ஸ்?

    எஸ்...

    அக்கௌண்டண்ட் மிஸ்டர் குணசேகரனை கொஞ்சம் லைன்ல கூப்பிட முடியுமா?

    நீங்க யாரு...?

    நான் அவரோட ஒய்ப்...

    லைன்ல இருங்க...

    நான் காத்திருந்தேன். நெற்றியில் பொல பொலவென்று வியர்வை அரும்பி, குங்குமப் பொட்டை இளக வைத்துக் கொண்டிருந்தது. ‘அப்பாவுக்கு இப்படி ஹார்ட் அட்டாக் வருவது இரண்டாவது தடவை. என் கல்யாணத்திற்கு முன் ஒரு தடவை ஒரு மத்தியான நேரத்தில் - முதல் தடவையாய் - அந்த அட்டாக் வந்தது. உடம்பெல்லாம் தண்ணீர் ஊற்றிய மாதிரி வியர்த்துக் கொட்ட - இரண்டு கைகளாலும் மார்பைப் பற்றிக் கொண்டு - அவர் துடித்த துடிப்பு என் கண் முன்னால் பிரேம் போட்டு மாட்டின படம் மாதிரி தொங்கியது.

    லைன் உயிர்க்கு வந்தது.

    ஹலோ...

    மிஸ்டர் குணசேகரன் சீட்ல இல்லையே...

    அவர் எங்கே போயிருக்கார்?

    தெரியலையே... ப்ராஜெக்ட் சென்டர்க்கு போயிருக்கலாம்.

    நான் உடனடியா அவர் கூட பேசணுமே...?

    விஷயம் என்னான்னு சொல்லுங்க. கன்வே பண்ணி அவரை வரச் சொல்றோம்...

    என்னோட ஃபாதர்க்கு - ஐ.மீன்... அவரோட மாமனார்க்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும்... கங்கா நர்ஸிங் ஹோம்ல அட்மிட் பண்ணியிருக்கிறதாகவும்... சொல்லி உடனடியா அவரை ஹாஸ்பிடலுக்கு வரும்படியாகவும் சொல்லிடுங்க..

    கண்டிப்பா... சொல்லிடறேன்...

    ரிஸீவரை வைத்து விட்டு - ஹெட் கிளார்க்கிடம் திரும்பினேன். அவர் சொன்னார்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. லீவு வேணும். இல்லையா...?

    ஆமா... ஸார்...

    புறப்படு.

    ஸார்... லீவ் லெட்டர்...?

    நாளைக்கு குடுத்துக்கலாம். நீ மொதல்ல உங்கப்பாவை போய் பாரம்மா...! முடிஞ்சா நானும் சாயந்திரம் வந்து பார்க்கிறேன்.

    தாங்க்யூ ஸார்...

    என் இருக்கைக்கு திரும்பி - நாற்காலியின் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த - வானிடி பேக்கை எடுத்து என் தோளில் சரித்துக் கொண்டு பக்கத்து சீட்டு கல்யாணியிடம் விபரத்தை சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.

    ஆட்டோ பிடித்து கங்கா நர்சிங்ஹோம் போய் சேர்ந்த போது இன்டென்ஸிவ் வார்டுக்கு முன்பாய் - ரிடையர்ட் ஹெட்மாஸ்டர் ராஜகோபாலன் மோவாயைத் தேய்த்தபடி கவலையாய் நின்றிருந்தார்.

    ஸார்...

    வாம்மா... அவர் எதிர்கொண்டார்.. டாக்டர்ஸ் உள்ளே ட்ரீட்மெண்ட் குடுத்திட்டிருக்காங்க. உங்கப்பா மயக்கமா சாய்றப்போ... நல்ல வேலையா நான் எங்க வீட்டு ஜன்னல்லயிருந்து பார்த்துட்டிருந்தேன்.

    உங்க உதவிக்கு ரொம்ப நன்றி ஸார்.

    நன்றியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்தாதேம்மா. எனக்கும் உங்கப்பா வயசுதான் ஆகுது. நாளைக்கு என்னோட உடம்புக்குன்னு ஏதாவது வந்தா... உதவி பண்ண மாட்டீங்களா என்ன...?

    இன்டென்ஸிவ் வார்டின் அறைக் கதவு தயக்கமாய் திறக்க - டாக்டர் ஒருவர் வியர்த்த நெற்றியோடு வெளிப்பட்டார். நானும் ரிடையர்ட் ஹெட் மாஸ்டரும் அவரை நோக்கி வேகவேகமாய் போனோம்.

    டாக்டர்...

    பெதடின் குடுத்திருக்கோம். இது ஹார்ட் அட்டாக் ரகமில்லை. இருதய வால்வுகளில் ஏதோ கோளாறு. கார்டியாக் மானிட்டர் மூலம் இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்க அவரோட டாட்டரா?

    ஆமா...

    சன் யாருமில்லையா...?

    இல்ல டாக்டர். எங்க ஃபாதர்க்கு நான் மட்டும்தான்.

    உங்களுக்கு மதர்...?

    எப்பவோ இறந்துட்டாங்க...

    நீங்க மேரீட் பேர்சன். ஃபாதர் உங்க கூட இருக்காரா...? இல்லே அவர் தனியா இருக்காரா...?

    தனியாத்தான் இருக்கார்.

    இனிமே அவர் வீட்ல தனியா இருக்கிறது உசிதமில்லை. அவர் மூணு மாசம் ரெஸ்ட்ல இருக்கணும். உங்க ஹஸ்பெண்ட் வரலையா?

    அவர்க்கு போன் பண்ணியிருக்கேன். வந்துடுவார். டாக்டர்

    அவர் வந்ததும் அவரைக் கூட்டிகிட்டு என்னோட ரூமுக்கு வாங்க... கொஞ்சம் பேசணும்...

    நான் தலையசைக்க டாக்டர் நகர்ந்தார். ஹெட்மாஸ்டர் என்னை ஏறிட்டார். ஏம்மா... வரும் போதே உம் புருஷனையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே?

    போன்ல அவர் கிடைக்கல சார். ஆபீஸ்ல தகவல் சொல்லிட்டு வந்திருக்கேன்.

    இங்கிருந்து மறுபடியும் போன் பண்ணிப் பாரும்மா. ஆபீஸ்ல ஒருவேளை சொல்ல மறந்தாலும் மறந்துடுவாங்க.

    அவர் சொன்னதும் - என் மனசுக்கு சரியாகப் படவே ஆஸ்பத்திரியின் விசாரணைக் கௌண்டரை நெருங்கி - உள்ளே உட்கார்ந்திருந்த நர்ஸிடம் அனுமதி வாங்கிக் கொண்டு டெலிபோனைத் தொட்டேன். என் கணவரின் ஆபீஸுக்கு மறுபடியும் டயலைச் சுழற்றி விட்டு காத்திருந்தேன்.

    ரிஸீவர் எடுக்கப்பட்டது.

    மெட்ரோ டயர்ஸ்...?

    எஸ்.

    அக்கௌண்டண்ட் மிஸ்டர் குணசேகரன் ப்ளீஸ்...

    அடுத்த சில விநாடிகளில் - என் கணவரின் குரல் ரிஸீவரில் அலட்சியமாய் கேட்டது.

    என்ன...?

    என்னங்க... எங்கப்பாவை கங்கா நர்சிங்ஹோம்ல அட்மிட் பண்ணியிருக்கு. கொஞ்ச நேரத்துக்கு முந்தி உங்க ஆபீஸுக்கு போன் பண்ணியிருந்தேன். யாரும் தகவல் சொல்லலையா...?

    சொன்னாங்க...

    பின்னே ஏன் ஹாஸ்பிடலுக்கு வரலை...?

    ஆபீஸ் வேலை தலைக்கு மேல் குவிஞ்சு கிடக்கு... இந்த மாச பாலன்ஸ் ஷீட்டுக்காக எம்.டி.காத்திட்டிருக்கார். நான் எப்படி வரமுடியும்...?

    ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டு வந்திருக்கலாமே...?

    சரி... சரி... உங்கப்பாவுக்கு என்ன உடம்பு...?

    ஹார்ட் அட்டாக் மாதிரி வந்து மயங்கி விழுந்துட்டார். ட்ரீட்மெண்ட் எடுத்த டாக்டர் வேற எதையோ சொல்றார். நீங்க உடனே புறப்பட்டு வாங்க...

    நான் வந்து என்ன பண்ணப்போறேன்? நீ உங்கப்பாவுக்கு பக்கத்துல இரு. நான் சாயந்தரம் ஆபீஸ் முடிஞ்சு வர்றேன்.

    நீங்க இப்பவே வந்தா பரவாயில்லை. உங்ககிட்டேயும், என்கிட்டேயும் டாக்டர் என்னமோ பேசணுமாம்.

    நீயே கேட்டு வை...

    என்னங்க இவ்வளவு அலட்சியமா பேசறீங்க...? எனக்கு அவர் அப்பான்னா உங்களுக்கு மாமனார் இல்லையா...?

    அட! எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்லி என்னை புல்லரிக்க வெச்சிட்டே... நீ...? ஆபீஸ்ல தலைக்கு மேல வேலை இருக்குன்னு சொல்றேன். அதை காதிலேயே போட்டுக்காமே... நீ பாட்டுக்கு... ஆஸ்பத்திரிக்கு வாங்கன்னு கூப்பிட்டா... என்னடி... அர்த்தம்? நான் ஆஸ்பத்திரிக்கு வந்து என்ன பண்ணணுங்கறே...? உங்கப்பாவோட கட்டிலுக்கு பக்கத்துல உட்கார்ந்துகிட்டு அவர் மூஞ்சியையே பார்த்திட்டிருக்கச் சொல்றியா...?

    என் கணவர் போனில் எரிந்து விழ - நான் கண்களில் நிரம்பிய நீரோடு - எதுவும் பேசாமல் ரிஸீவரை வைத்தேன். கண்களை சேலைத் தலைப்பால் ஒற்றிக் கொண்டு - ஹெட்மாஸ்டரை நெருங்கினேன்.

    என்னம்மா! உம் புருஷன் வர்றேன்னு சொன்னாரா...?

    ஆபீஸ்ல ஏதோ வேலையிருக்காம். சாயந்திரம் வர்றேன்னு சொன்னார்.

    சாயந்தரமா...? டாக்டர் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் ஏதோ பேசணும்னு சொன்னாரேம்மா...?

    சொன்னார்... ஆனா அவர் வரணுமே...?

    என்ன கொஞ்சம் கூட பொறுப்பில்லாத மனுஷனா இருக்கார்...? ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன விபரம் தெரிஞ்சதும் உடனே புறப்பட்டு வர வேண்டாமா...? நீ வாம்மா... டாக்டர்கிட்டே நீயும் நானுமே போய் பேசலாம்.

    நானும் அவரும் டாக்டரின் அறையை நோக்கிப் போனோம். டாக்டர் அறையில் ஓய்வாய் உட்கார்ந்து ‘லாபி’யில் எக்ஸ்ரேக்களை போட்டு பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் கேட்டார்.

    என்ன உங்க கணவர் வந்துட்டாரா...?

    இல்ல டாக்டர்! அவர் இப்போ வரக்கூடிய சூழ்நிலையில் இல்லை. நீங்க எதைப் பேசறதாயிருந்தாலும் என்கிட்டேயே பேசலாம். இவரும் அப்பாவுக்கு வேண்டியவர்.

    டாக்டர் நாற்காலிகளைக் காட்டினார்.

    நாங்கள் உட்கார்ந்தோம்.

    டாக்டர் சில விநாடிகள் மௌனம் சாதித்து விட்டு - என்னை ஏறிட்டார். உங்க ஃபாதர்க்கு இன்னும் ஒரு மாசத்துல ஹார்ட்ல ஒரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருக்கும். ஏறக்குறைய பைபாஸ் சர்ஜரி மாதிரிதான்.

    நான் அதிர்ச்சியில் விழிகளை விரித்தேன்.

    டாக்டர்...

    ஆபரேஷன் சார்ஜஸெல்லாம் அதிகமாயிருக்கும்... உங்களாலே சமாளிக்க முடியுமா...?

    எவ்வளவாகும் டாக்டர்...?

    கிட்டத்தட்ட ஒரு லட்சம்...

    2

    கல்கத்தா. காலை 10.30 மணி.

    பிரின்ஸ் அன்வர்ஷா ரோட்டில் - நான்கு மாடி கட்டிடத்தின் முகப்பில் - ‘சுரேந்தர் - ஜே - சுந்தர்’ - என்ற எழுத்துக்கள் எவர்சில்வர் உடம்போடு வெய்யிலில் மின்னிக் கொண்டிருக்க - அதன் வாசலில் ஆட்டோவை நிறுத்திக் கொண்டு கீழே இறங்கினாள், அந்த இளம்பெண்.

    25 வயது உடம்பு, பாப் தலை, உருண்ட முகம், காதில் இளம் பச்சை நிற ஸ்டட்ஸ், நெற்றியில் பச்சை நிற ஸ்டிக்கர், ஸல்வார் கம்மீஸுக்குள் நுழைந்திருந்தாள். தோளில் வானிடி பேக்.

    ஆட்டோவை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தாள். விசாரணை கௌண்டரில் ஜி.எம்.அறை எங்கே என்று தெரிந்து கொண்டு லிப்டில் பயணம் செய்ய ஜில்லிப்பான வராந்தாவில் நடந்து-

    Enjoying the preview?
    Page 1 of 1