Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rajesh Kumarin Arputha Sirukathaigal
Rajesh Kumarin Arputha Sirukathaigal
Rajesh Kumarin Arputha Sirukathaigal
Ebook228 pages2 hours

Rajesh Kumarin Arputha Sirukathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403575
Rajesh Kumarin Arputha Sirukathaigal

Read more from Rajesh Kumar

Related to Rajesh Kumarin Arputha Sirukathaigal

Related ebooks

Reviews for Rajesh Kumarin Arputha Sirukathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rajesh Kumarin Arputha Sirukathaigal - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    ராஜேஷ்குமாரின் அற்புதச் சிறுகதைகள்

    Rajesh Kumarin Arputha Sirukathaigal

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. உறவுகள் உன்னதமானவை

    2. ஜன்னலோர சொர்க்கம்

    3. எண்ணி பத்தே நாட்கள்

    4. ப்ளு

    5. ஒத்தக்கால் மண்டபம்

    6. பூநாகம்

    7. புரியாத புதிர்

    8. கணேச பாண்டியனின் கடைசி கேஸ்

    9. என் விழி உன் பார்வை

    10. யாரும் புரிஞ்சுக்கவே இல்லை

    11. கன்னிக் கடன்

    12. நிறமில்லாத பறவை

    13. நொண்டிக் குதிரை

    14. தீப்பந்தங்கள் தீபங்கள் அல்ல

    15. வேண்டும்

    16. இசைக் கொலை

    17. பொன் வாத்து

    1. உறவுகள் உன்னதமானவை

    ஜி.ஹெச். கேஷுவாலிடி வார்டு. இரவு ஒரு மணிக்கு மேல் 'ரவுண்ட்ஸ்' போய்விட்டு அறைக்குத் திரும்பித் தூங்குவதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் இருந்த ஆஸ்பத்திரிக் கட்டிடங்கள் கனமான இருளில் மூழ்கியிருக்க கேஷுவாலிடி வார்டில் மட்டும் மெலிதான வெளிச்சம் சோகையாய்த் தெரிந்தது. கோட்டைக் கழற்றி ஹாங்கரில் மாட்டிவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன்.

    டாக்டர்!

    அறைக்கு வெளியே நர்ஸ் ஸ்டெல்லாவின் குரல் பதற்றத்தோடு கேட்டது.

    எஸ்! என்றபடி வெளியே வந்தேன்.

    நர்ஸ் ஸ்டெல்லா தரையில் கால் பாவா அவசரத்தோடு பரபரத்தாள். ஆக்ஸிடென்ட் கேஸ் வந்திருக்கு டாக்டர்! வயசான தம்பதிங்க... ஸீம்ஸ்டுபி வெரி சீரியஸ்! ஸ்டெல்லா சொல்லி முடித்த அடுத்த விநாடியே - அவளுடைய பரபரப்பு என்னையும் தொற்றிக் கொள்ள - கோட்டை எடுத்து மாட்டிக் கொண்டு - டேபிளின் மேலிருந்து ஸ்டெத்தை எடுத்து தோளில் போட்டபடி இன்டென்ஸிவ் வார்டை நோக்கி வேகமாய் நடைபோட்டேன்.

    அந்த நேரத்திலும் இன்டென்ஸிவ் வார்டில் ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்றிருந்தார்கள். பஸ் டிரைவர், கண்டக்டர், அழுது கொண்டிருந்த ஐந்தாறு பெண்கள், இறுகிவிட்ட முகங்களோடு நின்றிருந்த ஆண்கள்.

    என்னைக் கண்டதும் சரசரவென்று வழிவிட்டார்கள். அறைக்குள் நுழைந்தேன்.

    அந்த நீண்ட வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப் பெற்ற மேசையின்மேல், அந்த வயதான தம்பதிகள் கிடத்தப்பட்டிருந்தார்கள்.

    சலனமில்லாத உடல்கள்.

    அவர்களை நெருங்கினேன்.

    இரண்டு பேருமே ரத்தத்தில் நனைந்திருந்தார்கள். இருவருக்குமே மெலிதான உடம்பு வாகு. கிழவருக்கு மிஞ்சிப் போனால் வயது அறுபது இருக்கலாம். மாநிறம். கட்டியிருந்த புதுவேஷ்டியும் சர்ட்டும் கிழிபட்டிருந்தன. பெயருக்கு இரண்டொரு ரோமங்கள் இருந்த வழுக்கைத் தலையில் ரத்த விளாறுகள் ஆழமாய்த் தெரிந்தன.

    அவருடைய மனைவிக்குக் கிட்டத்தட்ட வயது ஐம்பது இருக்கலாம். உரித்த மரவள்ளிக் கிழங்காய் நிறம். நரையோடியிருந்தாலும் அழுத்தமான கூந்தல். உடுத்தியிருந்த மஞ்சள் பட்டுப் புடவை பூராவும் புட்டாப் போட்ட மாதிரி ரத்தத் தெளிப்புகள். வலது முழங்கை ஏகமாய் சிராய்த்துக் கொண்டு போயிருந்தது.

    பார்த்த உடனேயே புரிந்து கொண்டேன்.

    இருவருடைய பின்னந்தலைகளும் செம்மையாய்ச் சேதப்பட்டிருக்கின்றன. மூளையில் ரத்தம் உறைந்திருக்க வாய்ப்பு அதிகம். உடனடியாய் ஆப்ரேஷன் தேவை!

    புயல் வேகத்தில் செயல்பட்டேன். இருவரையும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு ஆஸ்பத்திரி சீஃப் சர்ஜன் சத்தியநாதனுக்குப் போன் செய்தேன். பங்களாவில் சுகமாய்த் தூங்கிக் கொண்டிருந்த அவர் போனில் கிடைக்கப் பதினைந்து நிமிஷமானது.

    கிடைத்ததும் விஷயத்தைச் சொன்னேன்.

    அவர் தூக்கக் கலக்கத்தில் சலித்துக் கொண்டார். நீங்களே ட்ரை பண்ணுங்களேன் தியாகராஜன்.

    நோ... டாக்டர்... இட்ஸீம்ஸ் டுபி வெரி க்ரிடிகல்... ப்ளீஸ் கம்... ஐ வில் அஸிஸ்ட் யூ...

    அவருடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் ரிஸீவரை வைத்துவிட்டு - முகத்தில் வழிந்த வியர்வையைப் புறங்கையால் துடைத்துக் கொண்டேன்.

    சுற்றி நின்றிருந்தவர்களிடம் கேட்டேன். ஆக்ஸிடென்ட் எப்படி ஆச்சு...?

    நடுத்தர வயதான ஆசாமி ஒருவர் எனக்கு முன்பாக வந்தார். ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் டாக்டர் இந்த ஆக்ஸிடென்ட் நடந்துச்சு. நிறுத்தியிருந்த பஸ்ஸுக்கு முன்னாடி வேகமா வந்த லாரிக்காரன் மோதி விட்டான்... பின்னாடி சீட்ல உட்கார்ந்திட்டிருந்த அந்த வயசானவங்க ரெண்டு பேருக்கு மட்டும் சரியான அடி... முன்னாடி உட்கார்ந்திட்டிருந்த மத்தவங்களுக்கு ஒண்ணும் ஆகல்லே.

    ஆக்ஸிடென்ட் எந்த இடத்துல நடந்தது...?

    சுங்கத்துக்கு கிட்ட.

    லாரிக்காரன் எங்கே?

    லாரியை அங்கேயே விட்டுட்டு ஓடிட்டான்... போலீஸுக்கு தகவல் சொல்லிட்டீங்களா?

    ம்... போன் பண்ணிச் சொல்லிட்டோம்.

    அந்த வயசானவங்களோட உறவு ஜனம் யாராவது இங்கே இருக்கீங்களா?

    ........

    நான் கேட்ட அந்தக் கடைசிக் கேள்விக்கு நீண்ட மௌனம்தான் பதிலாய்க் கிடைத்தது.

    என்ன பேசாம இருக்கீங்க? நான் மறுபடியும் கேட்க, அழுது கொண்டிருந்த பெண்களில் ஒருத்தி மட்டும் கண்களில் வழிந்த நீரைப் புடவைத் தலைப்பால் ஒற்றிய படி கம்மிப்போன குரலில் சொன்னாள். டாக்டர்! இங்கே இருக்கிற நாங்க அத்தனை பேரும் அந்த வயசான தம்பதிங்க குடியிருக்கிற வீட்டுக்குப் பக்கத்திலே குடியிருக்கிறவங்க...! அவர்களுக்கு உறவுன்னு சொல்லிக்க யாருமே இல்லை. குழந்தைங்களும் இல்லே... அவருக்கு உறவு அந்த அம்மாதான்; அம்மாவுக்கு உறவு அவர்தான். பாவு வாங்கி நெசவு பண்ணி அதுல வர்ற கூலியை வெச்சுக்கிட்டு ரெண்டு பேரும் வயித்தைக் கழுவிட்டிருந்தாங்க. அந்தப் பெரியவருக்கு நேத்தைக்குத்தான் அறுபதுக்கு அறுபது நிறைஞ்சுது... குழந்தைங்க இருந்திருந்தா பெத்தவங்களோட சஷ்டியப்தப் பூர்த்தியை சந்தோஷமாக் கொண்டாடும்... அந்தப் பாக்கியம் அவங்களுக்கு இல்லாததினாலே அந்தக் குறையைத் தீர்த்து வெக்கப் பக்கத்து வீட்டுக்காரங்க நாங்க முடிவு செஞ்சு, அவங்களோட சஷ்டியப்தப் பூர்த்தியை திருநீர் மலையில் வெச்சு சிறப்பாச் செஞ்சோம். சஷ்டியப்தப் பூர்த்தியை முடிச்சுக்கிட்டுத் திரும்பி வர்ற நேரத்துலதான் இந்த விபத்து நேர்ந்துச்சு டாக்டர்...

    அந்த அம்மாள் சொல்லச் சொல்ல... என்னுள் ஏதோ சரிவதுபோல் இருந்தது.

    அறுபதுக்கு அறுபதைக் கொண்டாடிவிட்டு, நெஞ்செல்லாம் இனிப்பை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இந்த முதிய தம்பதிகளுக்கா இப்படியொரு விபத்து?

    என் இதயச் சுவர்களெல்லாம் வலியால் பம்மின.

    திடீரென்று ஆஸ்பத்திரியின் காம்பவுண்ட் கேட் அருகே வெளிச்சம் குப்பலாய்ப் பிரசவமாக – காரின் ஹாரன் சத்தம் கேட்டது.

    பெரிய டாக்டர் வந்துட்டார்... எல்லாரும் இங்கே கும்பல் போடாம வராந்தாவில் போய் இருங்க... அங்கே நின்றிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டே பரபரப்பாய் வாசலுக்குப் போனேன்.

    சத்தியநாதன் காரினின்றும் இறங்கிக் கொண்டே கேட்டார்.

    தியாகராஜன்! அவங்களைத் தியேட்டருக்குக் கொண்டு போயிட்டீங்களா?

    எஸ்... டாக்டர்!

    ஓ... கே... ப்ளட்க்ரூப் என்னன்னு பார்த்துடுங்க. அந்த க்ரூப் ப்ளட் ஸ்டாக் இல்லேன்னா, இங்கே இருக்கிறவங்கள்லே யாருடைய ரத்தமானது சூட் ஆகுதான்னு பாருங்க...! சத்தியநாதன் ஆப்பரேஷன் தியேட்டரை நோக்கி நடந்து கொண்டே பேசினார்.

    எஸ்... டாக்டர்...!

    இன்னிக்கு ட்யூட்டி யார்? ஸ்டெல்லாதானே?

    ஆமாம் டாக்டர்...!

    தட்ஸ் குட்...!

    தியேட்டருக்குள் நுழைந்தார் டாக்டர் சத்தியநாதன்.

    நானும் டாக்டர் சத்தியநாதனும் முழு வேகத்தோடு இயங்கினோம்.

    வயதாகி விட்ட உடம்புகள். இருந்த ரத்தமும் சேதப்பட்ட நிலையில் ஆப்ரேஷனைத் தாங்க மாட்டாமல் திணறின. ரத்தம் கொடுக்க முன்வந்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களைச் சோதித்து - பொருந்துகிற ரத்தத்தை. எடுத்துச் செலுத்தினோம். ஆக்ஸிஜன் கம்பங்கள் கை கொடுக்க, குளுக்கோஸும் சலைன் வாட்டரும் துளித்துளியாய் ட்யூபுகளில் சாவகாசமாகப் பயணம் செய்து உடம்புகளுக்குள் ஐக்கியமாக - நலிந்து போக ஆரம்பித்திருந்த உயிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் மீட்க முன்னேறிக் கொண்டிருந்தோம்.

    ஏறக்குறைய நான்கு மணி நேரம் ஆப்ரேஷனை முடித்துவிட்டு நானும் சத்தியநாதனும் வெளியே வந்தோம். அறைக்கு வெளியே நின்றிருந்த கும்பல் குப்பென்று எங்களைச் சூழ்ந்து கொண்டது.

    டாக்டர்! அவங்க ரெண்டு பேரும் பொழைச்சுக்குவாங்களா...?

    நான் வறண்டுபோன என் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டேன். சொன்னேன். ஆப்ரேஷனை நல்லபடியா முடிச்சுட்டோம்... ஒரு நாள் முழுக்கத் தாண்டணும்... அப்பத்தான் உறுதியாகச் சொல்ல முடியும்!

    உள்ளாரப் போய் அவங்களைப் பார்க்கலாமா டாக்டர்...?

    நோ...! யாரும் போகக்கூடாது... நாங்க சொன்ன பின்னாடி போய்ப் பார்த்தா போதும்... - சொல்லிவிட்டு என் அறைக்குத் திரும்பினேன். சத்தியநாதன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போகத் தன் காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

    வாட்சைப் பார்த்தேன். மணி ஐந்து.

    ஆஸ்பத்திரிக்கு அருகிலிருந்த கோணியம்மன் கோயில் கோபுர உச்சியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியிலிருந்து ‘திருப்பாவை' சிந்திக் கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்குப் பால் சப்ளை செய்யும் பால் வேன்கள், பால் கேன்களைக் கீழே இறக்கிக் கொண்டிருந்தன.

    உடம்பெல்லாம் களைப்பால் கெஞ்ச, அலுப்போடு படுக்கையில் சாய்ந்தேன். ராத்திரி முழுக்கக் கண்விழித்ததன் விளைவு விழிகள் அனல் குண்டுகளாய் எரிந்தன.

    கண்களை மூடினேன். ஜன்னல் வழியே வந்த குளிர்க் காற்று கண்களை வருடிக் கொடுக்கத் தூக்கத்தின் பிடியில் சிக்கினேன்.

    எவ்வளவு நேரம்? தெரியவில்லை.

    அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கூடவே, டாக்டர்! என்ற ஸ்டெல்லாவின் பதற்றமான குரல். விருட்டென்று எழுந்து கதவைத் திறந்து விட்டேன். படபடப்போடு சொன்னாள்.

    அந்தப் பெரியவருக்கு ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்!

    ஈஸிட்! வியப்போடு மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள அப்படியே விரைந்தேன். யாரையும் உள்ளே அனுப்ப வேண்டாம்! வராந்தாவில் வேகமாய் நடை போட்டேன்.

    கிழக்குப் பக்கமாய் சூரியன் பரவலாக முயன்று வானத்தை ரத்தமாய் மாற்றிக் கொண்டிருந்தான்.

    பெரியவரைப் போட்டிருந்த அறைக்குள் நுழைந்து - ஆர்வமாய் அவரை நெருங்கினேன். பெரியவரின் கண்கள் திறந்திருந்தன. கண்ணின் பார்வைகள் அங்குமிங்கும் அலைந்தன.

    பெரியவரே! - அவருக்கருகாகக் குனிந்து அழைத்தேன்.

    பாக்கியம்!... பாக்கியம் எங்கே...? குரல் பிசிறு தட்டிக் கொண்டு பலவீனமாய் ஒலித்தது.

    பாக்கியமா? யார் அது...? நான் நர்சைப் பார்த்தேன்.

    அந்த அம்மாவைக் கேக்குறாங்க டாக்டர்!

    ஓ! இவருக்கு இருக்கும் ஒரே உறவு அந்த அம்மாள் தானே! - மனம் சொல்லிக் காட்டியது. குனிந்து சொன்னேன். உங்க மனைவி பாக்கியம். நல்லாயிருக்காங்க பெரியவரே! பக்கத்து அறையில் படுத்திருக்காங்க... அவங்களுக்கு ஒண்ணுமேயில்லை... லேசான காயம்... தைரியமா இருங்க...! அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டேன்.

    அவர் கரம் நடுங்கியது.

    திடீரென்று மூச்சுவிடச் சிரமப்பட்டு மார்பை உயர்த்தினார். என் கைகளை அசுரப் பிடியாய் பற்றிக் கொண்டு சோகை படிந்த பார்வையை என் மீது பாய்ச்சினார்.

    டாக்டர்...! என்னோட பாக்கியம் அடிபட்டு ரத்தக் களறியா விழுந்ததை என் கண்ணாலேயே பார்த்தேன்... என்னைவிட அவளுக்குக் காயம் அதிகம் டாக்டர்... ஒருவேளை அவளோட உயிருக்கு ஏதாச்சும் ஆயிருந்தா... என்னைப் பிழைக்க வைக்க முயற்சி பண்ணாதீங்க டாக்டர்... ஏதாவது ஊசி போட்டு என்னையும் அவ கூடவே அனுப்பிச்சுடுங்க டாக்டர்... அவ இல்லாம என்னால இருக்க முடியாது டாக்டர்... நிச்சயமாக இருக்க முடியாது...!

    அவர் சொல்லச் சொல்ல என் உடல் என்னையுமறியாமல் சிலிர்த்தது.

    அப்படியெல்லாம்... ஒண்ணும் ஆயிடலை பெரியவரே. உங்க மனைவி பாக்கியம் நல்லாயிருக்காங்க... நீங்க மனசப் போட்டுக் குழப்பிக்க வேண்டாம்... தைரியமா இருங்க...

    ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை.

    பாக்கியம்...! பாக்கியம்... என்னோட பாக்கியம்... என்று. புலம்பிக் கொண்டே சூரியன் முழுசுமாய் உதிப்பதற்குள் - தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

    அறைக்கு வெளியே பரவியிருந்த கூட்டம் கதறியபடி அழ ஆரம்பிக்க - வலிக்கிற மனசோடு கையமர்த்தினேன்.

    "யாரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது... சொல்லிக் கொண்டே அந்த அம்மாள் இருந்த அறைக்குள் நுழைந்தேன். காயங்கள் சற்று அதிகம்தான். தலை முழுக்கத் தலைப்பாகையைச் சுற்றின மாதிரி வெள்ளை வெளேரென்று பேண்டேஜ்! கன்னப்பகுதிகளில் தையல் நாசித் துவாரங்களில் உறைந்து நின்ற ரத்தம். 'விசுக் விசுக்’கென்று ஏறி இறங்கும் சுவாசம். நெற்றியில் கலைந்த குங்குமப் பொட்டு.

    என்னம்மா? - என்றேன் கனிவாய்.

    அந்த அம்மாள் திணறினாள். அ... அ... அ... அவர்... எ...ங்...கே... இருக்...கார்?

    என் விழிகளில் சுறுசுறுவென்று நீர் சுரந்தது. அந்த அம்மாளின் கைகளைப் பற்றினேன். இருக்கார்...! சௌக்யமாக இருக்கார்...பக்கத்து ரூம்லதான் இருக்கார்...

    அ... அ... அவரைக் கூ... கூப்புட்டு வாங்க...

    நான் அதிர்ந்தேன். கொஞ்ச நேரம் போகட்டும்... அவரே வந்து பார்ப்பார். நீங்க அதிகமா பேசாதீங்கம்மா... அசையாதீங்க... அப்படியே படுத்திட்டு இருங்க...!

    அவருக்கு ஒண்ணும் இல்லையே... அவருக்கு ரத்தம் அதிகமாப் போவதை என் கண்ணாலே பார்த்தேன் டாக்டர்...!

    நான் முகத்தைத்

    Enjoying the preview?
    Page 1 of 1