Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanga Kaadu
Thanga Kaadu
Thanga Kaadu
Ebook132 pages2 hours

Thanga Kaadu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100705946
Thanga Kaadu

Read more from Indira Soundarajan

Related to Thanga Kaadu

Related ebooks

Related categories

Reviews for Thanga Kaadu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanga Kaadu - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    தங்கக்காடு

    Thangakaadu

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    ‘கேளப்பா...

    பூமிதனில் அவ்வளவும் சிவநவம்!

    ஒன்றில் தொடங்கி எட்டில் ஒடுங்கி

    நன்றில் நன்றாய்

    அடுத்தே அடைவதே சிவ நவம்!

    நவமும் சிவமும் ஒன்றென்றே

    ஓதினேன் சீடனே

    ஒன்றியே கேட்பாய்...'

    - சிவ சித்தன்

    சென்னை விமான நிலையம்!

    சிறகு முளைத்த இரும்புப் பறவையைப் போல் மிதந்தே வந்து தரையில் இறங்கி, சீற்றம் குறையாமல் ஓடிப் பிறகு மெல்ல வேகத்தை இழக்கத் தொடங்கி ஒரு வழியாகத் தேங்கி நின்றது அந்த விமானம்.

    உள்ளிருந்து மிடுக்காகப் பல பேர் உதிர்ந்து வெளியே வந்தனர். அவர்களில் ரிஷபன் தனியே தெரிந்தான். சிவ நெறிச் செம்மல், ஆன்மீக மாமணி, ஆலயங்களின் காவலர் என்று நெல்லை பகுதியே கொண்டாடும் சிவஞானம் பிள்ளையின் ஒரே மகன் தான் ரிஷபன். நல்ல உயரம், அமெரிக்க ஊட்டம் என்று உச்சபட்ச சினிமா ஹீரோக்களே பொறாமைப்படும் தோற்றத்துடன் அவன் வருவதை வைத்த கண் வாங்காதபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்னேகா.

    சுடிதார் துப்பட்டாவில் அவளும் சில ஹிந்தி நடிகைகளை ஞாபகமூட்டுவது போலத்தான் இருந்தாள்.

    அவளே ஒரு மலர்க்கொத்து.

    அவள் கையிலும் ஒரு மலர்க்கொத்து.

    அவளுக்கு சில அடிகள் தள்ளி பலர் சந்தன மாலை மலர்க்கொத்து, பொன்னாடை என்று விதம் விதமான மரியாதைப் பொருட்களுடன் நின்றபடி இருந்தனர் ரிஷபன் அவர்கள் அருகே வரவும், அவர்களும் தங்கள் மரியாதையை அவனிடம் போட்டி போட்டுக் கொண்டு காட்ட ஆரம்பித்தனர்.

    கோட் சூட்டில் மிடுக்காய் இருந்த ரிஷபம் கோட்டைக் கழற்றித் தோளில் போட்டிருந்தான். உள்ளே அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ரெடிமேட் ஷர்ட்டான காலிபர் பிராண்ட் ஷர்ட். அதில் எப்பொழுதும் லாவண்டர் வாசம் வந்தபடி இருக்கும். எத்தனை முறை தோய்த்தாலும் போகாது.

    ஸ்னேகாவை அந்த வாசம் கிறக்கியது. அவனது தோளில் கிடந்த கோட்டைக் கேட்டு வாங்கிக் கொண்டு அவனோடு தொடர்ந்தாள்

    ஒரு ஐந்து நிமிட காலத்தில் எல்லோருடைய நலத்தையும் விசாரித்துக் கொண்டவன் ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருந்த அவனது சித்தப்பா அருணாசலத்திடம் வந்து அப்பாக்கு இப்ப எப்படி இருக்கு? என்று கேட்கத் தவறவில்லை.

    அப்படியேதான் ரிஷபா இருக்கு. என்று அவரும் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.

    அவன் எதைக் கேட்கிறான் என்பது ஸ்னேகாவுக்குத் தெரிந்தது. ஆனால், அவளிடம் கேட்காததால் அவளால் அவன் கேள்விக்கான உண்மையான பதிலைக் கூற முடியவில்லை.

    மௌனமாகவே இருந்தாள்.

    அவனுக்கான கார் வெளியே டிரைவரோடு காத்திருந்தது. ஏ.சி. செட் ஆகவேண்டும் என்பதற்காக ஒருமணி நேரமாக அது இயக்கத்திலேயே இருந்தது. காரில் ஏறி அமர்ந்தவன், ஸ்னேகா, கெட் இன் என்று அவளையும் ஏற்றிக் கொண்டான். இதை அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.

    எக்ஸ்க்யூஸ்மி சார். என்று பின்னால் திரும்பி சற்று தொலைவில் நின்றபடி இருந்த தான் ஏறி வந்திருந்த ஆபிஸ் காரைத் தன் பின்னால் தொடரச் சொல்லி சைகை காட்டிவிட்டு ரிஷபனின் காருக்குள் ஏறிக் கொண்டாள் ஸ்னேகா.

    காரும் ரதம் போல் ஓட ஆரம்பித்தது.

    தேங்ஸ் ஸ்னேகா.

    எதுக்கு சார்?

    ஏர்ப்போர்ட்டுக்கு வந்து என்னை ரிசீவ் பண்ணதுக்கு. ஆமா, எதுக்கு இத்தனை பேர்?

    எல்லாருக்கும் உங்கள பார்க்கணும், விஷ் பண்ணணும்கற ஆசை

    இதுக்காக திருநெல்வேலில இருந்து வரணுமா? அங்கேயே வீட்ல வந்து பார்க்கலாமே.

    சார்... இதெல்லாம் வழக்கமா நடக்கற விஷயங்கள். நம்ம பெரிய சார் எப்ப ஃபாரீன்ல இருந்து வந்தாலும் இப்படித்தான். எல்லோரும் வந்துடுவாங்க.

    அப்பாவோட அப்ரோச்சே வேற ஸ்னேகா. நான் ரிஷபன். டைம் கான்செப்ட்ல ரொம்ப நம்பிக்கை உள்ள நபர் நான். இதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்.

    ஓ.கே. சார்... நான் இனி அவங்க இப்படி நடக்காம இருக்க முயற்சி எடுக்கறேன்.

    குட். கடைசியா அப்பா எப்ப ஃபேக்டரிக்கு வந்தார்?

    அவர் வந்து கிட்டத்தட்ட அஞ்சாறு மாசம் ஆச்சு சார்.

    மை காட்... அப்ப இவ்வளவு நாளும் ஜி.எம். தான் பாத்துக்கிட்டாரா?

    ஆமாம். உங்களுக்காக இங்க நாங்கல்லாம் கிட்டத்தட்ட நாலு மாசமா தவம் கிடக்கறோம்.

    ஐ.சீ... ரிஷபன் சிந்தனையோடு நெற்றியை தேய்த்துக் கொண்டான். எதுவும் பேசாதபடி வெளியே பார்த்தான் சூடான நூற்றி இரண்டு டிகிரி வெப்ப அளவிலான வைகாசி மாசத்து சென்னை வெய்யில் அவன் கண்ணைக் கரித்தது.

    பளீச்சென்று ஒரு சுவர் இல்லை.

    பரமசிவன், கலாபக் காதலன், சித்திரம் பேசுதடி ஆதி என்று சினிமா பட சுவரொட்டிகளின் அத்து மீறிய ஆக்கிரமிப்புகள், போதாக்குறைக்கு ஐம்பது அறுபது மீட்டர் நீளத்திற்கெல்லாம் அரசியல் தலைவர்களின் பெயர்கள்!

    அப்படியே தான இருக்கு மெட்ராஸ் என்று முணுமுணுத்தான். அவள் அவனிடம் ஏதேதோ கேட்டான் ஆனால் அவன் அப்பா தொடர்பான ஒரு முக்கியமான கேள்வியை மட்டும் ஏனோ கேட்கவேயில்லை.

    பர்சனல் என்று நினைத்து விட்டானோ என்னவோ இருந்தாலும் அவளே அவனிடம் அந்தக் கேள்வி குறித்து ஆரம்பித்தாள்.

    சார்

    யெஸ்

    பர்சனலா ஒரு விஷயம்.

    அவசியம்னா தாராளமா சொல்லுங்க, ஸ்னேகா.

    இது நம்ம பெரிய சார் பத்தின விஷயம்.

    அப்பா பத்தியா... சரி சொல்லுங்க.

    அவரை நான் இரண்டு நாள் முன்னால சந்திச்சேன்.

    வாட்? ரிஷபன் அதிர்ச்சியைக் காட்டினான்.

    ஆமாம் சார்... அவரே என்னை சில ஃபைல்களோட வரச் சொல்லியிருந்தார்.

    நிஜமாவா... அவர் யாரையும் பார்க்கறது இல்லைன்னுல்ல சித்தப்பா சொன்னார்.

    அதுவும் உண்மைதான். கடந்த நாலு மாசத்துல அவர் பார்த்த ஒரு மூணாவது நபர் நான் மட்டும்தான்.

    சரி... விஷயத்துக்கு வாங்க.

    அவர் என்கிட்ட ஒரு போன் நம்பர் கொடுத்து குருராஜன்னு ஒருத்தரைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.

    அது யார் குருராஜன்?

    அவர் ஒரு நாடி ஜோசியர். சில வருஷங்களுக்கு முந்தி நம்ம பெரிய சார் அவர்கிட்ட நாடி ஜோசியம் பார்த்தாராம்.

    சரி அதுக்கென்ன?

    அந்த குருராஜனைத் தேடிப் போனப்போ அவர் அந்த அட்ரஸ்ல இல்ல. சிங்கப்பூர் டூர் போயிருக்கிறதா சொன்னாங்க."

    அதனால...

    பெரிய சார் அவரைப் பார்க்கத் துடிக்கிறார். அவர் இல்லாம அடுத்து நீ என்னைப் பார்க்க வரக் கூடாதுன்னும் சொல்லிட்டார்.

    எதனாலன்னு காரணம் தெரியுமா?

    எனக்குத் தெரிஞ்ச வரை அந்த நாடி ஜோசியர் சொன்ன மாதிரியே பெரிய சார் லைஃப்ல எல்லா விஷயமும் நடந்திருக்கு. குறிப்பா, அவருக்கு அறுபதாவது வயசுல லெப்ரசி வரும்னு அந்த நாடி ஜோசியம் சொல்லியிருந்திருக்கார்னு கேள்விப்பட்டேன்.

    ஸ்னேகாவின் பதில் ரிஷபனைக் கொஞ்சம் ஸ்தம்பிக்க வைத்தது. சற்றுத் தடுமாறிவிட்டு, டு யூ பிலீவ் திஸ் நான்சென்ஸ்? என்று எதிர் கேள்வி கேட்டான்.

    "எக்ஸ்க்யூஸ்மீ

    Enjoying the preview?
    Page 1 of 1