Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anthapurathil Oru Nandhalala
Anthapurathil Oru Nandhalala
Anthapurathil Oru Nandhalala
Ebook125 pages43 minutes

Anthapurathil Oru Nandhalala

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மரத்தால் வடிவமைக்கப்பட்ட வீடு. அந்தத் தீவிலேயே அது ஒன்றுதான் வீடு. இந்தத் தீவிற்கே சொந்தக்காரனான மேஜர் ராஜேந்தருக்கு, தன் காதல் மனைவி மதுவின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு காரணம் என்ன? இறுதியில் மதுவின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? அந்தத் தீவிற்கே சென்று நாமும் காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateOct 9, 2023
ISBN6580152609603
Anthapurathil Oru Nandhalala

Read more from Rajendrakumar

Related authors

Related to Anthapurathil Oru Nandhalala

Related ebooks

Related categories

Reviews for Anthapurathil Oru Nandhalala

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anthapurathil Oru Nandhalala - Rajendrakumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அந்தப்புரத்தில் ஒரு நந்தலாலா

    Anthapurathil Oru Nandhalala

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ராஜேந்திரகுமார் பேசுகிறேன்!

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    ராஜேந்திரகுமார் பேசுகிறேன்!

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ‘என்ன லக்ஷ்மி ஆண்ட்டி? கங்கா ஸ்நானம் ஆச்சா?’ (இதுதான் தீபாவளியில் ஒரு சங்கடம். ஒரு பெண்ணைப் பார்த்து ‘ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்கச் சங்கடமாக இல்லையோ?)

    ‘இந்த தடவை ‘தீபாவளி போனஸ்’ தருகிறோம்’ என்றதும் பூரித்துப் போனேன்.

    ஆனால்,

    ‘எழுத நிறைய அவகாசம் தர முடியாது’ என்றதும் துவண்டு போனேன். ஆசிரியர் சொன்ன தேதிக்குள் நான் நாவலை முடிக்க வேண்டுமென்றால்,

    இரவுக் காட்சி சினிமாவைத் தியாகம் பண்ணவேண்டும். (அனேகமாக தினம் போவேன்).

    ஊர் சுற்ற முடியாது. (சாரி கஞ்சாமி, நான் வரலே. எழுதணும்).

    வயிறு முட்டத் தின்ன முடியாது. (கோழிகளே, ஆடுகளே, துள்ளி நீந்தும் மீன்களே, கொழுப்புப் பிடித்த உருளைக்கிழங்கே!, பிரியாணியே விடை கொடுங்கள். ச்சே, பிரியா விடை கொடுங்கள். உங்களைத் தின்றால் தூக்கம்தான் வரும். எழுத முடியாது).

    என்ன கதை?

    ஸாரி. இந்த நிமிஷம் வரை எனக்குத் தெரியாது.

    திடீர் என்று அதெப்படி கதை வரும்?

    இன்ஸ்டண்ட் காபி மாதிரி இன்ஸ்டண்ட் கதை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    புராணங்கள்தான் இன்ஸ்டண்ட் கதை.

    அதில் யதேச்சையாக வரும் இரண்டொரு வார்த்தைகளை வைத்து ஆயிரம் பக்கம் நாவலே எழுதிவிட முடியும்.

    போன தடவை குந்திதேவி ரெஃப்ரென்ஸை வைத்து எழுதிய கதைக்கு நன்றாகத்தான் ரெஸ்பான்ஸ் இருந்தது.

    ஆகவே தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்.

    இந்தக் கதையில் தலைப்பிலும் கண்ணன்.

    இதழ் வெளிவரும் தீபாவளியும் கண்ணன் சம்பந்தப்பட்ட ஒன்றுதான்.

    ஆகவே கண்ணன் கதையிலிருந்தே ஒரு கருவை காப்பியடித்தால் என்ன என்ற ஆசைதான் பிரதானமாக எழுகிறது.

    தீபாவளி ஸ்பெஷல் என்றால் தீபாவளி கதையிலே கை வைக்க வேண்டும். அதுதான் நியாயம், நீதி, நேர்மை எல்லாம்.

    புண்ணியத்துக்குப் புண்ணியம். சீக்கிரமாகவும் முடிக்கலாம்.

    தீபாவளி கதையைக் கொஞ்சம் ஆராய்வோமா?

    ரொம்ப நாள் முன்னால் ‘தெலுங்கு தேசம்’ ஹீரோ நடித்து வெளிவந்த டப்பிங் தீபாவளி பார்த்த ஞாபகத்தில் எழுதுகிறேன்.

    சும்மா சொல்லக்கூடாது சார். நன்றாகவே ஞாபகம் இருக்கிறது.

    ராமராவும், ரங்காராவும், சாவித்திரியும் யுத்த காட்சியில் சண்டையை விட அதிகமாகப் பாட்டுதான் பாடினார்கள். கேள்விபதில் பாட்டு தெருக்கூத்து மாதிரி.

    சரி, சரி, அவர்கள் ரசனை அப்படி. விடுங்கள்.

    கதைக்கு வருவோமா?

    நரகாசுரன் என்று ராட்சதன், பயங்கரமான கொடுவாள் மீசை ஒன்றை எழுதுங்கள். மேலே முட்டை முட்டையாகக் கண்களுக்கு நடுவே ஒரு குடமிளகாய் மூக்கு எழுதுங்கள். தடிமனான உதடுகளுக்கு நடுவே கரடு முரடாகப் பற்களை எழுதி விட்டு, கிழங்கு கிழங்காக கன்னம் தீட்டிவிட்டுக் கொஞ்சம் தள்ளி நின்று பாருங்கள், பயப்படாமல்.

    அவன்தான் நரகாசுரன்.

    கிருஷ்ணாவதார சீசனில் இருந்தவன்.

    புத்திசாலி. கடும்தவம் புரிந்து சிவனை மகிழ்வித்து தனது தாயால் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாதென்று வரம் வாங்கிய புத்திசாலி. ஆசீர்வதிக்கப்பட்டவன்.

    எந்தத்தாய்தான் பெற்ற பிள்ளையைக் கொல்லுவாள்.

    நல்ல வேளை. அவன் அம்மா பெயர் எஸ்தர் இல்லை. பூமாதேவி.

    அந்த நரகாசுரனின் கொடுமை தாங்காத தேவர்களும் ரிஷிகளும் கிருஷ்ணாவதாரத்தில் இருந்த கண்ணனிடம் சென்று முறையிட,

    நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் போங்கள் என்றார்.

    கிருஷ்ண, நரகாசுர யுத்தம் துவங்கியது.

    ருக்குமிணிக்கு வெறுப்பு காட்டவும், சத்தியபாமாவை குஷிப்படுத்தவும், அந்த பாமாவை தனது தேரோட்டியாக்கி போர்க்களம் வந்தான் கண்ணன்.

    பாதிப் போரில் நரகாசுரனின் அம்பு தாக்கி கண்ணன் மயங்கி விழ, நரகாசுரன் சிரிக்க, கோபம் வந்த பாமா கண்ணனின் வில்லை எடுத்து அம்பு தொடுக்க அது நரகாசுரனைக் கொன்றது.

    விழுந்த பிறகுதான், பாமாவாக இருப்பவள் தனது தாய் பூமாதேவி என உணருகிறான் அவன்.

    பாமாவிலும் பூமாவிலும் பெயர் ஒற்றுமை இருப்பதைக் கவனிக்க வேண்டாமோ? (நரகாசுரனை புத்திசாலி என்றது தப்போ?)

    சாகும் தறுவாயில் கண்ணனிடம் தவறுக்கு வருந்தி, தனது இந்த இறந்த நாளை உலகத்து இந்துக்கள் எல்லோரும் தீமை ஒழிந்து இன்ப ஒளி வந்த நாளாகக் கருதி. புத்தாடை அணிந்து, தீபமேற்றி, வாணம் கொளுத்தி சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்று வரம்கேட்க, கண்ணனும் ‘அங்ஙனமே ஆகுக’ என்றாராம்.

    செத்தும் கெடுத்த சீதக், ஸாரி, நரகாசுரன்.

    பாவி. போகிற மனுஷன் சும்மா - போகாமல் வம்பிலே மாட்டிவிட்டுப் போனான்.

    இல்லாவிட்டால்,

    அகவிலை ஏறிக்கிடக்கும் இந்த நாளில்,

    விபரம் புரியாத நிலையில் இந்த தீபாவளிக்காவது ஒரு பட்டுப் புடவை உண்டா? ஒரு வைர பேசரி உண்டா? என்று கன்னத்தை இடிக்கும் மனைவியிடமும்,

    பட்டாசு கேட்கிற விதத்திலே காதைச் செவிடாக்கும் பிள்ளைகளிடமும்,

    ஐம்பது சத விலையை ஏற்றிப் போட்டுவிட்டு ‘இருபது சதம் தள்ளுபடி’ என்று பெரிதாக விளம்பரம் செய்து வயிற்றைக் கலக்குகிறவர்களிடமிருந்தும்,

    அப்பாவி ஆண்வர்க்கம் சிக்கித் தவித்து இருக்காது.

    இரண்டு கிலோ சர்க்கரைக்காக, ஒன்பதுமணிக்கு திறக்கப்படும் ரேஷன்கடை வாசலில் விடிய விடிய நான்கு மணிக்கே ஓடிப்போய் க்யூவில் நிற்கவேண்டிய அவசியம் ஏன்வருகிறது?

    ஆனால் ஒன்று,

    இந்த தீபாவளி கதையிலே என்னை ரொம்பவும் இம்ப்ரெஸ் செய்தது ஒன்று.

    கணவனுக்காக ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்கிறார்கள். அப்கோர்ஸ்,

    இதைவிடப் பெரிய காரியமாக ஒரு ஊரையே எரித்து இருக்கிறாள் பத்தினிப்பெண் ஒருத்தி.

    அதில் தப்பு ஒன்றும் இல்லை சார்.

    அப்புறம் அடுத்த மாதம் சம்பளம் யார் கொண்டு வருவார்கள்? இந்தப் பெண் தன்மை இப்போதும் இருக்கிறது. அதை மறுக்க முடியாது.

    ‘பாழும் பிராமணன். வயசுப் பிள்ளைங்க

    Enjoying the preview?
    Page 1 of 1