Oru Srirangathu Devathai
3.5/5
()
About this ebook
He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Read more from Indira Soundarajan
Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Srirangathu Devathai
Related ebooks
Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Naandhan Avan! Rating: 5 out of 5 stars5/5Sorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsShshsh… Rating: 0 out of 5 stars0 ratingsYezham Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsKannethiril Thondrum Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsBest Of Yandamoori Veerendranath Rating: 5 out of 5 stars5/5Sumai Rating: 0 out of 5 stars0 ratingsAasai Ther Rating: 0 out of 5 stars0 ratingsYathirai Gnanam Rating: 0 out of 5 stars0 ratingsPaathiramarinthu... Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsMaalayil Pookkum Malargal Rating: 0 out of 5 stars0 ratingsEn Yaaththirai Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsKappal Paravai Rating: 0 out of 5 stars0 ratingsVidiyatha Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsJhangiri Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsUyirin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsEnnarumai Thozhi..! Rating: 0 out of 5 stars0 ratingsSivakamiyin Sabatham - 3 Rating: 5 out of 5 stars5/5Gowri Kalyanam Vaibogame Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kiliye! Azhagiya Rani! Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAmma, Please, Enakkaga... Rating: 2 out of 5 stars2/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNathiyin Vegathodu… Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Oru Srirangathu Devathai
2 ratings1 review
- Rating: 3 out of 5 stars3/5This story is very beautiful. The way author has expressed the feelings of everyone towards the kid is very nice
Book preview
Oru Srirangathu Devathai - Indira Soundarajan
http://www.pustaka.co.in
ஒரு ஸ்ரீரங்கத்து தேவதை
Oru Srirangathu Devathai
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
***
1
பொழுது விடிந்து விட்டது! சூரியனும் கிழக்கில் ஜிகுஜிகு வென்று வழக்கம் போல் காட்சி தந்தான். வாழ்க்கையில் அலுக்காத விஷயங்கள் என்று யானையைப் பார்ப்பதையும் ரயிலைப் பார்ப்பதையும் சொல்வார்கள். எதனால், சூரியனைப் பார்ப்பதை விட்டு விட்டார்கள் என்று தோன்றியது மீராவுக்கு.
மூன்றாம் மாடியில் தன் படுக்கையறை ஜன்னல் கதவைத் திறக்கவும் ‘ஹாய் மீரு’ என்பது போல் அவளை ஊடுருவியவன் சூரியன் தான். அதிலும் புரட்டாசி மாத சூரியனுக்கு புஷ்டி அதிகம். வழக்கத்திற்கு மாறான வோல்டேஜோடு கண்களை கூசச் செய்தான். மீராவின் அந்த படுக்கை அறையும் பளிச்சென்று மாறிப்போனது. அடுத்த காரியமாக அதுவரை ஓடிக்கொண்டிருந்த ஏ.சி.யின் ஸ்விட்சை அணைத்தாள். பின் ஒரு நாட்டிய பாவனைபோல விரல்களைப் பிணைத்து சோம்பல் முறித்தாள்.
நைட்டி உடையில் மெல்லிய தங்கச் சங்கிலி கழுத்தில் மினுக்கி நெளிந்த நிலையில் முன் மார்புகள் தானாக சில அங்குலங்கள் உயர்ந்து அடங்க ‘ரங்கநாதா’ என்று அவள் உதடுகள் ஆசுவாசித்தன. பெண்களின் சராசரி உயரம் என்பது ஐந்திலே இருந்து ஐந்தரை அடிக்குள்தான் என்று ‘வாட்ஸ் அப்’பில் எவனோ ஒருவன் தட்டி விட்டிருந்தான். மீரா அந்தக் கணக்கை மீறிய உயரத்தோடு இருந்தாள். அவள் தலைமுடியும் நல்ல நீளம்! அதை பார்லருக்குப் போய் வெட்டி விட்டுக்கொள்ள அவள் முனைந்த போது அவள் பாட்டி பங்கஜம், ‘வேண்டாம் கொழந்த, புருஷாளே முடியை வெட்டிக்க கணக்கு இருக்கு," பொம்மனாட்டிக்கு அது புரதச் சொத்து. அதை வெட்டிக்க அவளுக்கு ஒரே ஒரு தருணம் தான் சொல்லப்பட்டுருக்கு. அது எப்பன்னு நான் உன்கிட்ட இப்ப சொல்ல விரும்பல. உன் பங்கஜம் சொல்றத செத்த கேள்.
பிரம்மா உன் வரைல வஞ்சனையில்லாம வாரிக்கொடுத்துருக்கான். அதை சீவிச் சிங்காரிச்சிக்காம வெட்டி விட்டுக்கறது நன்னா இருக்காதுடா கண்ணு" என்று கூறி தடுத்து விட்டாள்.
எப்போதும் பாட்டியை 'பாட்டி' என்று கூறுவது தான் உலக வழக்கம். 'பெரும்பாடுகளை உடையவள்’ என்பதில் இருந்தே இந்த பாட்டி வந்தது. இந்த 2015-ல் அதில் நிறையவே மாறுதல்கள். கிராண்ட்மா, ‘சீலே' (சீனியர் லேடியின் சுருக்கம்) என்று ஆங்கில மீடியமாக அவர்கள் மாறி விட்டார்கள் பல வீடுகளில். இதில் மீரா சற்று வித்தியாசப்பட்டு பாட்டியை ஒரு சிநேகிதி போல கருதிக்கொண்டு பாட்டியின் பெயரைச்சொல்லி அழைத்தே பழகி விட்டாள். விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் தொடர்கதையாகி விட்டது. பாட்டிக்கும் அதில் ஆனந்தம். பாட்டின்னு கூப்பிடும் போது வயசாகிவிட்டது போல இருக்கு. நீ என் பேரைச் சொல்லும்போது எனக்கும் நான் இளமைல இருக்கற மாதிரியே இருக்கு. ஆகையால நீ பேரைச் சொல்லித்தான் கூப்பிடணும்
என பாட்டி உத்தரவே போட்டு விட்டாள். அதைச் கேட்டு வீடே ஆச்சரியப்பட, நல்ல பாட்டி, நல்ல பேத்தி
என்று மீராவின் அப்பா சந்தானகோபாலன் தன் திருமண் ஸ்ரீச்சூரண நெற்றியில் செல்லமாக அடித்துக்கொண்டாலும் அவர் அதை ரசிக்கவே செய்தார்.
பொதுவாக மீரா எதைச் செய்தாலும் ரசிக்கும் விதமாகத்தான் இருக்கும். அவள் ஆறாம் அறிவுக்குள் பொலிவு மிகவே அதிகம். காலையில் எழுந்த உடன் அவள் முதலில் சொல்வது ‘ரங்கநாதா’ எனும் மந்திரப் பெயரை அடுத்து அவள் காண்பதும் அந்த ரங்கன் பள்ளி கொண்ட தங்கக் கோபுரம் வேயப்பட்ட விமானத்தை தான். அவள் வீட்டு மொட்டை மாடிக்குப் போய் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால் பளிச்சென்று தெரியும். அப்படியே ஒரு சுற்று பார்த்தால் வரிசையாக கோபுரங்கள் கண்ணில் படும். அவற்றில் புறாக்கள் படபடக்கும்.
முன்பெல்லாம் ஊருக்குள் கோபுரங்கள் தான் உயரமானதாக இருந்தது. இப்போது போட்டிக்கு செல்போன் டவர்கள் வந்து விட்டன. பெருக்கல் குறியொன்று ராட்சசன் போல எழுந்து நிற்கிற மாதிரி அவை நிற்பதைப் பார்க்கும்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்டது போல தோன்றினாலும் அந்த டவர்களால் மிக நுண்மையாக மனிதர்கள் பாதிப்புக்கு ஆளாவதை என்னவென்று சொல்வது? கோயில் கோபுரத்திற்கும் இதற்கும்தான் எத்தனை வேற்றுமை.
மீரா, அரங்கனின் கோபுரங்களைப் பார்த்து மனம் மலர்ந்த நிலையில் அந்த இரும்பு டவர்களைப் பார்த்து வருந்தவும் செய்தாள். ஸ்ரீரங்கம் பல வகைகளில் வேறுபட்ட ஒரு நகரம்!
சுற்றிலும் நன்னீர் இருக்க ஒரு தீவுப்பகுதி நகரமாக இருப்பது என்பது அனேகமாக இங்கேதான் இருக்க முடியும். அடுத்து அந்த நகரம் கலாசாரச் சிறப்போடு ஜேஜே என்று ஜனத்திரளோடு இருப்பதும் இங்கே மட்டும்தான்.
ஒருமுறை ரங்கநாதனை தரிசிக்கப் போய் வந்தால் போதும் சென்னைவாசிகள் கடலோரம் நடந்து நடைப்பயிற்சி செய்து பெற்றிடும் பயனை அந்த முயற்சி தந்து விடும். கூடுதலாக ரங்கநாதரின் அனுக்ரஹம், ரங்கநாயகியின் தனிப்பெரும் வாஞ்சை
இதெல்லாம் ஸ்ரீரங்கத்துவாசிகளுக்கு மட்டுமே கிடைக்கும் விலைமதிப்பில்லாத விஷயங்கள். மீரா இதை எல்லாம் பெரிதாக நினைத்த காரணத்தால்தான் பெங்களூருவில் அவளுக்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தபோது அவளுக்கு அங்கே போகத் தோன்றவில்லை.
பைத்தியம், பெங்களூரு எப்படி ஜில்லுனு இருக்கும் தெரியுமா? கார்டன் சிட்டிடி
என்று அவள் சிநேகிதி ரேணு என்கிற ரேணுகா சிலிர்த்தபோது மீரா காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
அவள் காலேஜில் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதும் போதே ஒரு அமெரிக்க வரன் அவளுக்காக வந்தது. அமெரிக்காவில் வெர்ஜீனியாவில் வேலை பார்த்து வரும் அந்த மாப்பிள்ளைக்கு பல லட்சங்களில் சம்பளம். அதை நாட்கணக்காக்கி, மணிக் கணக்காக்கி, நிமிடக்கணக்காக்கி ஒரு நிமிஷத்துக்கு நூற்றி ஐம்பது ரூபாய் என்று யாரோ கணக்கு போட்டு சொன்னபோது மீராவின் அப்பா சந்தானகோபாலன் விட்ட மூச்சில் மார்பு முடியெல்லாம் கருகிவிட்டது. அவ்வளவு உஷ்ணம்!
சீதா… என்னடி இது காலம் எனக்கு ஒரு வருஷ இங்கிரிமென்ட்டே நூறோ, நூத்திப்பத்தோ தான். இங்க மாப்ளைக்கு ஒரு நிமிஷத்துக்கு நூத்தி ஐம்பதுன்னா பணத்தோட மதிப்பு பாதாளத்துக்குப் போயிடுத்தா? இல்ல மாப்ளைதான்மலை மாதிரி ஒசரத்துல இருக்காரா தெரியலியேடி
என்று பெருமிதமாக அன்று சந்தானகோபாலன் தன் மனைவியிடம் பேசிக்கொண்டார். சீதா என்னும் அவர் மனைவியும், தத்து பித்துன்னு ஒளறாம இந்த வரனை முடிக்கப்பாருங்கோ. வந்துருக்கறது மாப்ளை இல்லை குபேரன்
என்றாள். ஆனால், அந்த குபேரனோடு தனியே பேசும்போது அவன் பார்வை மிக அதிகபட்சமாக மீரா மார்பு மேல் தான் இருந்தது. துப்பட்டாவை மீறிக்கொண்டு அவன் ஊடுருவியாக இருந்தான். அதைக்கூட வாலிபப்பாடு என சகிக்கலாம். நெற்றியில் அவள் இட்டுக்கொண்டிருந்த ரங்கநாயகித் தாயாரின் மஞ்சள் காப்பை அவன் கேலியாக பார்த்து சிரித்தது அவள் மனதை மிகவே பாதித்துவிட்டது.
"இது என்ன வேஷம்? அங்க வந்தப்புறமும் இதெல்லாம் நீ வெச்சுண்டா எனக்குப் பிடிக்காது. ஆமா நீ பார்லருக்கெல்லாம் போய் ஹேர் ‘டிரிம்மெல்லாம் பண்ணிக்க மாட்டியா?’ என்று அவன் கேட்டபோது, இவன் தான் மதிக்கும் பாட்டி பங்கஜம் முதல் ரங்கநாயகித் தாயார் வரை எல்லோருக்கும் சற்று எதிரானவன் போலவே உணர்ந்தாள். அவன் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வாழ்வது என்று சகலமும் மேல் நாட்டில். நல்ல வேளையாக தமிழ் பேசினான். 'ஹரீஷ்' என்று வைணவப்பெயர் கொண்டிருந்தான். அந்த இரண்டைநீக்கம் செய்தால் அவனை ஒரு வெள்ளைக்காரனாகவோ இல்லை செவ்விந்தியனாகவோதான் நினைக்க முடியும்.
சாரி ஹரீஷ்! நீ எனக்கான புருஷனா ஃபிட் ஆக முடியாதுன்னு எனக்குத் தோண்றது. நீ வேற இடம் பார்த்துக்கோ. இந்த நிமிஷத்துல இருந்து நீ என் நண்பன். நான் உன் சிநேகிதி. பை த பை பெண்களைப் பார்க்கும்போது நீ பதிலுக்கு அவா கண்களைப் பார்த்து பேசு. உனக்கு வாயில் மட்டும் பல் இல்லை. கண்ணுலயும்… காணாததைக்கண்டவன் மாதிரி உறுப்புகளை எல்லாம் அநியாயத்துக்கு கடிக்கறே. எனக்கு எவ்வளவு வலிக்கறது தெரியுமா?
என்று மீரா கேட்டபோது அந்த ஹரீஷ் வெலவெலத்துப்போய்விட்டான். அவனை நிர்வாணமாக்கி கன்னத்தில் அறைந்த மாதிரி இருந்தது. அன்று வீடே களேபரமாகிப் போனது. பாட்டி மட்டும், மீராவை தனியே அழைத்து ‘நீ அப்படியே என்ன மாதிரியே இருக்கிறே பேத்தி" என்று திருஷ்டி கழித்தாள்.
என்ன பங்கஜ். நீ எப்ப இப்படியெல்லாம் பேசினாய்?’ என்று மீரா கேட்டதற்கு,
உன் தாத்தா எதிர்ல நான் பேச நினைச்சேன்டா கண்ணு. அது 1955 பாரு, நினைக்க மட்டும்தான் முடிஞ்சது என்று பாட்டி தன் தோல்வியை ஒப்புக்கொள்ள,
அப்ப என்தாத்தா ஒரு பாதி ஆம்பளையா? என்று மீரா கேட்க,
மெல்லப் பேசு. அந்தக் குப்பையை எல்லாம் எதுக்கு கிளறிண்டு. நாங்கள்லாம் ‘தலையெழுத்தேன்னு’ எல்லாத்தையும் ஏத்துண்டவா. நீங்கள்லாம் இப்ப தலையெழுத்தை மாத்தி எழுதறவாளா இருக்கீங்க" என்று பாட்டி பஞ்ச் டயலாக் பேசினாள்.
அப்படிப் பேசிய பாட்டிதான் அந்த வீட்டில் மீராவுக்கு உற்ற பலம். அம்மா சீதாகூட அப்புறம் தான். அப்புறம் தம்பி ஸ்ரீராம். பெர்முடாஸ் டிரவுசர், கை வைத்த பனியன் என்று வீட்டில் வளைய வருபவன். இன்ஜினீயரிங் முடித்து விட்டான். மனசுக்குள்ளே அமெரிக்க கனவோடு இருக்கிறான். அதனால் எப்போதும் இன்டர்நெட்டோடுதான் கிடப்பான்.
மீரா அந்தக் காலை வேளை அவன் அறைப் பக்கம் எட்டிப் பார்த்தபோது காதில் இயர்போன் மாட்டப்பட்டிருந்த நிலையில் அப்படியே தூங்கிப்போயிருந்தான். அருகில் அதன் தொடர்போடு அவனது ஆன்ட்ராய்டு போன் கிடந்தது. சைலன்ட் மோடில் கிடந்த அந்த போனை இயர் போன் இணைப்பில் இருந்து நீக்கி மெல்ல கையில் எடுத்து அந்த போனின் மெஸேஜ் பாக்சை திறந்து ஒரு சின்ன திருட்டுத்தனத்தோடு அவனுக்கு வந்திருக்கும் மெஸேஜ்களை ஊடுருவினாள் மீரா. முக்காலே மூணு வீசம் பெண்கள்தான் செய்தி அனுப்பி இருந்தனர். கடைசி செய்தியாக பிரீத்தி என்பவள் ஸ்வீட் கிஸஸ்
என்று டைப் செய்து உதட்டுப் பதிவை பிரின்ட் அவுட் எடுத்து அனுப்பியிருந்தாள். அப்போது பார்த்து அதன் வைப்ரேடர் சப்தமிடவும் திரையை கவனித்தாள். 'பத்ரி’ என்கிற பெயர் மின்னியது. இவன் சுப்ரமணியபுரத்தில் இருக்கும் கோதண்டம் மாமாவின் புதல்வன்.ஆன் செய்து காதைக் கொடுத்தாள்.
ஸ்ரீ… ரெடியாயிட்டியா, வரட்டுமா?
……
என்னடா பதிலைக் காணோம்? டிக்கட்டை நான் புக் பண்ணிட்டேன். பிரீத்தியும் வரா…
அவன், மீரா கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது தெரியாமல் பேசியதில் பல விஷயங்கள். மீராவும் அதற்கு மேல் பேசாமல் போனைகட் செய்தவளாக ஸ்ரீராம் அருகிலேயே வைத்து விட்டு அவனை திரும்பித்திரும்பிப் பார்த்தபடியே அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
கீழே அம்மா சீதாவின் குரல்!
மணி எட்டாகப் போறது. நம்ம குலக்கொழுந்துகள் இரண்டும் எழுந்துட்டாளா இல்லையான்னு கொஞ்சம் பாருங்களேன்
என்று கத்துவதும் காதில் கேட்டது.
அம்மா நான் எழுந்து ஒரு மணி நேரமாச்சு. ஸ்கிப்பிங் எக்ஸர்சைஸ் பண்ணிண்டிருந்தேன். காபி ரெடியா?
என்று கேட்டுக்கொண்டே, தலை முடியை அள்ளி முடிந்து கொண்டே, படி இறங்கினாள்.
புளுகாதடி… பத்து நிமிஷம் முன்னாடி கூட வந்து பார்த்தேன். முட்டாக்கு போட்டுண்டு தூங்கிண்டிருந்தே. ஏ.சி.யை அணைச்சேன். நான் உன் ரூம் வாசலைத் தாண்டறதுக்குள்ள எழுந்து அதை திரும்ப ஆன் பண்ணிட்டு திரும்பவும் சுருட்டிண்டு படுத்துட்டே இப்ப என் கிட்ட ஸ்கிப்பிங்னு புளுகறியா?
என்று அம்மாவை மெலிந்த புன்னகையோடு பார்த்தவள், அம்மா நீ பயங்கர ஷார்ப்பும்மா. உன்ன யாராலயும் ஏமாத்த முடியாது. ஆமா என் ரூமுக்கு வந்து ஏ.சி.ய அணைச்சியே… உன் அருமைப் புள்ள ரூமுக்கு அவன் காதோட காதா இருந்த இயர் போனை எடுத்தியா? ஐயா தூக்கத்தில கூட அவன் காதுல பாட்டு கேட்டுண்டே இருக்கணும். அதுவும் எப்படிப்பட்ட பாட்டு தெரியுமா?
இதோ பார். நீ முதல்ல உன் முதுகைப் பார். அவனை இழுத்து விட்டு நீ தப்பிக்க நினைக்காதே.
தெரியுமே, நீ இப்படித்தான் சொல்வேன்னு நன்னா தெரியுமே
என்னடி தெரியும். என்ன தெரியும் உனக்கு? அவன் ஆம்பளை அவனும் நீயும் ஒண்ணா… இதோ இந்த உத்தரத்துல அவன் வவ்வால் மாதிரிதலைகீழா தொங்குவான். உன்னால முடியுமா?
சிறியபடி கேட்டாள் சீதா.
அவள் எப்பவுமே அப்படித்தான். அவளுக்கு ஸ்ரீராம் ஒரே பிள்ளை. அவளோடு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். யாருக்கும் ஆண் வாரிசு இல்லை. அவள் கணவர் சந்தானகோபாலனின் உடன் பிறப்புகளும் மூன்று பேர். அவர்களுக்கும் வாரிசு இல்லை. கறிவேப்பிலை போல இரு தரப்புக்கும் இடையே ஒரு அபூர்வம் போல வந்து பிறந்திருப்பவன்தான் ஸ்ரீராம். அந்த பாசம் அவளை அப்படியே பேச வைத்தது.
ஆரம்பிச்சுட்டியா? அடுத்து, ‘அவன் தாடி மீசை வெச்சுப்பான் உன்னால முடியுமா’ ன்னு கேப்பே. ‘குட்டிக்கரணம் அடிப்பான் அதுவும் உன்னால முடியுமான்னு கேப்பே.
தெரியறதோல்லியோ போய் பல் தேச்சுட்டு மொகத்த கழுவிண்டு வா. இப்படியே சமையல் கட்டுக்குள் நுழைஞ்சே காலை ஒடிச்சிப்பிடுவேன்
அதிகாரமா பேசிவிட்டு விலக, பங்கஜம் பாட்டி கேட்டபடியே வந்தாள்.
என்னடா கண்ணு உன் அம்மா காத்தாலேயே டிஸ்கோ ஆட ஆரம்பிச்சிட்டாளா?
ஆமாம் பங்கஜ் அவன் என்ன செஞ்சாலும் தப்பு கிடையாது. ஆனா நான் நின்னா தப்பு. குனிஞ்சா தப்பு.
விட்டுத்தள்ளு அவன் அமெரிக்கா போயிட்டா அவனை பார்க்க முடியாதேன்னு உன் அம்மா இப்பவே அவன் வரைல பொங்கி வழியறா.
இவன் அமெரிக்கா போய் படிச்சு பாஸ் பண்ணுவான்னு நீ நம்பறே?
ஏண்டி அப்படி கேக்கறே... நீ கேக்கறத பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கே?
அப்படியே இரு. அவன் போறப்ப பாத்துக்கலாம். ஐய்யா இன்னிக்கு காலைக்காட்சிக்கு போகப்போறார். உன்கிட்ட காலேஜுக்குன்னு சொல்வான் பார்.
சொல்லிவிட்டு மீரா பாத்ரூம் நோக்கிச் செல்ல, அதுவரை ஹிந்துவை மேய்ந்து கொண்டிருந்த சந்தானகோபாலன் சிந்தனையோடு அதை மூடி வைத்து விட்டு பொடி டப்பாவை எடுத்தார். உள்ளே பேஸ்ட்டை நுரையாக்கித் துப்பிக் கொண்டிருந்தாள் மீரா. அந்த நொடிகளில் அவள் செல்போனில் இருந்து அழைப்பொலி. அவசர அவசரமாக வாயை கொப்பளித்து விட்டு டி.வி. மேல்பரப்பில் இருந்தபடி ஒலித்துக் கொண்டிருந்த செல்போனை எடுத்து ஹலோ என்றபடி காதில் வைக்கவும், மறுபுறம் "மீரா நான் டாக்டர் பேசறேம்மா. உன் ஃபிரெண்டுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு’ என்று ஒலித்தது.
ஓ… ரொம்ப சந்தோஷம் டாக்டர்.
ஆனா…
என்ன டாக்டர்?
உன் ஃபிரெண்டை எங்களால் காப்பாத்த முடியலம்மா
அந்த பதில் மீராவை சிலையாக்கியது!
***
2
சிலையாகிப் போன மீரா மீள்வதற்கு சிறிது நேரம் தேவைப் பட்டது. அருமையாகவும் கலகலப்பாவும் தொடங்கிய அவளது காலைப்பொழுது அப்படியே தலைகீழாக மாறிப்போனது. பாட்டிதான் முதலில் அதை கவனித்தாள். உதட்டில் சஹஸ்ரநாமம் சொன்னபடி இருந்தவள், அருகில் வந்து கூர்ந்து பார்த்தாள்.
பங்கஜம்.
சொல்லுடா, யார் போனில்?
அது அது…
எதாவது கெட்ட சேதியா?
ஆமாம்
ஐயோ, யாரு வைகுண்டம் போனது?
பரலோகம் போனது யாருன்னு கேளு.
என்னடி சொல்றே நீ?
என் சிநேகிதி ஆஷா
மீராவால் தொடர முடியவில்லை. கண்களிரண்டும் நீர் முத்துக்களை உருட்டத் தொடங்கிவிட்டன.
ஐய்யோடா, ஆத்துக்காரனை தொலைச்சிட்டு நிறைமாசமா இருந்தாளே அவளா?
அவளேதான். செத்த மெல்லப் பேசு.
ரங்கநாதா… என்ன கொடுமை இது? ஆமா எப்போ, எங்கே?
இப்பதான் பங்கஜம். திருச்சில ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல்ல நான்தான் அவளை அட்மிட் பண்ணிச் சேர்த்திருந்தேன்.
புரிஞ்சு போச்சு நேக்கு. டெய்லி நீ உறையூர் பெருமாளை சேவிக்கறேன். கல்லுக்குழி ஆஞ்சநேயரை சேவிக்கறேன்னும் இதுக்காகத்தான் போய்ட்டு வந்தியா?
செத்த மெல்லப் பேசுன்னு சொன்னேனோல்லியோ?
மீரா அதட்டவும், வா இப்படி
என்று பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்ட பாட்டி, அவளையும் அழைத்து நிறுத்திய வளாக கதவை மெல்ல சத்தமின்றி சாத்திவிட்டு, இப்ப சொல்லு, அவ குழந்தை என்னாச்சு? அதுவும் போய்டுத்தா?
இல்ல, குழந்தை நன்னா இருக்காம் அவதான்…
மீரா சொல்லும்போதே நெஞ்சு விம்ம, புடவை முந்தியை வாய்க்கு கொடுத்து குமுறத் தொடங்கினாள்.
ரங்கா… ரங்கா… இது என்ன கொடுமை! குழந்தை இருக்கு. தாய் போய்ட்டா… ஐயோ அது பாலுக்கு என்ன பண்ணும்?
அதைவிட பெருசு தாய்ப்பாசம்! அதுவே போயிடுத்தே பங்கஜம்.
வாஸ்தவம்தான். என் காலத்துலகூட நான் இப்படி கேள்விப்பட்டதில்லை. எங்கம்மா காலத்துலதான் பிள்ளையை பெத்துப் போட்டுட்டு தாய்க்காரி செத்துப்போற கொடுமை எல்லாம் நிறைய நடந்தது. அப்ப ஸ்கேன், எக்ஸ்ரேன்னு ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இந்தக் காலத்துலயும் இப்படி நடந்துடுத்தே. இதை என்னன்னு சொல்றது?
பாட்டி பங்கஜமும் பதைக்க, மீரா புறப்பட ஆயத்தமானாள்.
எங்க கிளம்பிட்டே?
இது என்ன கேள்வி பங்கஜம்? ஆஸ்பத்திரிக்கு தான்.
ஆமா, அங்க கூட யார் இருக்கா?
அது… அது….
ஏன் மென்னு துப்பறே?
ஆஷாக்கு யாரும் இல்லைன்னு உனக்குத் தெரியாதா?
நீ என்ன சொல்றே?
எல்லாத்தையும் வந்து சொல்றேன். பேசநாழியில்லை. விடு
உன் அப்பா அம்மாகிட்டே என்ன சொல்லிட்டு போகப் போறே.?
நான் போனப்புறம் நீயே எல்லாத்தையும் சொல்லிடு.
உண்மையை சொல்லச் சொல்றியா?
ஆமாம்
அப்புறம் இங்க என்ன நடக்கும்னு தெரியும் தானே?
பங்கஜம், அங்க தாயில்லாக் குழந்தை தவிச்சுண்டு இருக்கு. அதைவிடவா இங்க பெருசா ஒண்ணு நடந்துடப் போறது?
இதோ பார், நீயே உன் அப்பன்கிட்ட சொல்லிட்டுப்போ... அப்புறமா அவன் தாம்தூம்னு குதிச்சா
என்னால அவனை கட்டுப் படுத்த முடியாது. அப்புறம் எல்லாம் நீ கொடுக்க இடம்னு ராமாயணம் படிக்கத் தொடங்கிடுவான்."
"பங்கஜம், செத்துருக்கறவ என் உயிர் சிநேகிதி!நான் டூர் போன இடத்தில் ஆக்ஸிடெண்ட் ஆகி உயிருக்குப் போராடினப்ப எனக்கு தன் ரத்தத்தை தந்து காப்பாத்தினவ அவ. காதல் கல்யாணம் பண்ணிண்டு அவ நாசமா போனதை எல்லாம் நினைச்சு அவளைவிட்டு ஒதுங்கிப்போகச் சொல்றதும், விலகி நிக்கச் சொல்றதும் பழம் பெட்டித்தனம். இது ஆன்ட்ராய்ட் போன் காலம். நான் இப்ப அவ காலமாயிட்டதச் சொன்னா யாரும் வருத்தப்படமாட்டா. ‘நன்னா வேணும் அவளுக்கு’ ன்னு தான் சொல்வா. அதை எல்லாம் இப்ப என் மனசு இருக்கற நிலைல என்னால கேட்டுக்க முடியாது. நீ எப்படியாவது சமாளி. இல்லையா எதாவது பொய்யச் சொல். எல்லா பொய்யையும் உன் பேரன் மட்டுமே சொல்லணுமா என்ன? நானும் சில நல்லதுக்காக சொல்லலாம். நான் கிளம்பறேன் மீரா வேகமானாள்.
முகம் கழுவிக்கொண்டு வந்தவள், கைக்கு வந்த புடவையை எடுத்து கட்டிக்கொண்டாள். ஸ்டிக்கர் பொட்டைக் கூட சற்று கோணலாக ஒட்டிக்கொண்டவள், பீரோவை திறந்து ஒரு பருத்த சங்கிலியை எடுத்து அணிந்து கொண்டாள். போட்டுக்கொள்ளும் முன் கையால் எடை போட்டு மனசுக்குள்ளே நிச்சயம் ஐந்து பவுனுக்கு குறையாது என்று தீர்மானித்தாள்.
மெல்ல எட்டிப் பார்த்தாள். அப்பா சந்தானகோபாலன் இல்லை. மொபட்டும் அதன் இடத்தில் இல்லை. அவர் காவேரிக்குப் போய்விட்டது தெரிந்தது. பாத்ரூம் தாழிடப் பட்டிருந்தது. அம்மாதான் உள்ளே குளித்தபடி இருக்க வேண்டும். ஸ்ரீராம் தொடர்ந்து தூங்கியபடியே இருந்தான்.
பங்கஜம் மட்டும் மலங்க மலங்கப் பார்க்க, "போய்ட்டு வரேன். அவளுக்கான க்ரிமேஷன்லாமும் நானும் என் ஃபிரெணட்ஸும் தான் செய்ய வேண்டி இருக்கும். போலீஸ் ஸ்டேஷனுக் கெல்லாமும் போக வேண்டி வரலாம். அதனால நிச்சயமா வரதுக்கு ராத்திரி ஆயிடும், பேசாம உண்மைய சொல்லிடு’ என்று சொல்லிவிட்டு பாட்டி பங்கஜத்தின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் தெருவில் இறங்கினாள்.
விறுவிறுப்பாக நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு போய் பஸ் பிடிப்பதெல்லாம் அந்தக் காலம். ஷேர் ஆட்டோ புயல் போல வந்துநின்று ஆட்களை அடைத்து ஏற்றிக்கொண்டு சீறிச் செல்வதே இந்தக் காலம்.
அப்படி ஒரு அசுர ஷேர் ஆட்டோவில் ஏறினாள். அதில் எஃப்எம். ரேடியோ அலை வரிசையில் தேவனே என்னைப் பாருங்கள், என் பாவங்கள் தம்மை வாங்கிக்கொள்ளுங்கள்’ எனும் பழைய பாட்டின் ஒலிபரப்பு.
ஆஷாவுக்கும் இந்தப் பாட்டு ரொம்பவே பிடிக்கும். மீராவுக்குள் இந்த பாட்டைத் தொட்டு ஆஷா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி விட்டாள்.
ஆஷா பளிச்சென்று இருப்பாள். துளியும் வியர்க்காத ஒரு சரீரம் அவளுக்கு. கழுத்தில் சிலுவை தொங்கும். ஒரு சன்னமான சங்கிலி மார்பு மேல் அது தவழும் அழகே அலாதியாக இருக்கும். உடை உடுத்துவதிலும் அவளது நாகுக்கு யாருக்கும் வராது. எப்போதும் வழவழப்பான சில்க் ஐட்டங்களைத்தான் அணிவாள். சேலை முகப்பு நீளமாக முழங்காலைத் தாண்டும். அதை அடுக்கு மடிப்பாக்கி அவள் கையில் பிடித்திருப்பதே ஒரு அழகு!
கல்லூரியில் தான் மீராவுக்கு பரிச்சயமானாள். அதுவும் பாட்டுப்போட்டியில் மீராவுக்கு மிகப்பிடித்த ஒரு கர்நாடக சங்கீதப் பாடலைப் பாடி ஆஷா பரிசு வாங்கவும், மீராவின் கவனம் அவள் மேல் ஆழமாக பதிவானது. அடுத்து மீரா ஒரு விஷயத்தைச் சொல்ல வந்தால் அதே விஷயத்தைத்தான் ஆஷாவும் சொல்லி நிற்பாள்.
இதெல்லாம் அவர்களுக்கான அலைவரிசை ஒரே நேர்கோட்டில் இருப்பதை உணர்த்தி விட்டது. இந்த உணர்வின் முன்னால் ஜாதியும் மதமும் சங்கடமே இல்லாமல் ஒதுங்கி