Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kollathey Yaarum Paarthal!
Kollathey Yaarum Paarthal!
Kollathey Yaarum Paarthal!
Ebook64 pages22 minutes

Kollathey Yaarum Paarthal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரேவதி, சுமதி இருவரும் சகோதரிகள். தங்களின் தாயார் மாரடைப்பில் இறந்துபோன பிறகு தன் தந்தையின் பாசத்தால் வளர்கின்றார்கள். தன் தாயின் இறப்பால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள் சுமதி. தங்களுடைய தந்தையும் இறந்து போகவே, தங்களின் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். அங்கு தான் ஆரம்பமாகிறது பிரச்சனை. சுமதியின் நடவடிக்கைகள் அனைத்தும் திகில் நிறைந்தவையாகவே இருப்பதைக் கண்டு அச்சம் கொள்கிறாள். தினமும் ஒரு திகில் சம்பவம் செய்துகொண்டிருக்கும் தன் தங்கையை மாற்றுவதற்கு அவள் எடுக்கும் முயற்சிகள் என்ன? பிறகு அங்கு வசிக்கும் இரண்டு காமக் கொடூரர்களின் கையில் தன்னுடைய தங்கை சிக்கிக்கொள்ளவே, அவளை காப்பாற்ற போராடுகிறாள். இறுதியில் தன்னுடைய தங்கையின் அந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து போகிறாள். அவள் அதிர்வுக்கு காரணம் என்ன? திகில் அனுபவத்தை பெற இக்கதையை வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580152608041
Kollathey Yaarum Paarthal!

Read more from Rajendrakumar

Related to Kollathey Yaarum Paarthal!

Related ebooks

Related categories

Reviews for Kollathey Yaarum Paarthal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kollathey Yaarum Paarthal! - Rajendrakumar

    https://www.pustaka.co.in

    கொல்லாதே யாரும் பார்த்தால்!

    Kollathey Yaarum Paarthal!

    Author:

    ராஜேந்திரகுமார்

    Rajendrakumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rajendrakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    அறிமுகம்: ரேவதி-சுமதி

    நான் ரேவதி! வயது பதினேழு. ஆங்கிலத்தில் சொன்னால் ஸ்வீட் செவன்டின்.

    இப்போதைய நிலைமைக்கு முன் பழைய நிலையைச் சொல்லுவது அவசியம்.

    ஆரம்ப நாட்களில் எங்கள் குடும்பம் உங்கள் குடும்பத்தைப் போலவே கச்சிதமாக, திருத்தமாகயிருந்தது.

    அப்பா, அம்மா இருவர், அவர்களுக்கு நாங்களிருவர். சொத்துக்களுக்காக பிள்ளை வேண்டுமென்று என் அம்மா நினைக்க மறுத்தார்.

    மகன் ஆசையில்லாததினால் போதுமென்று அப்பா நினைக்க, அம்மாவும் அதை ஒப்புக்கொண்டு அமைதியாகிவிட்டாள்.

    ஆனால் அம்மாவுக்கு எங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது. பெரியவ நல்லா படிக்கிறாங்க. நேத்து அவங்க டீச்சரை மார்க்கெட்ல வச்சு சந்திச்சேன். புள்ளே பெரமாதமா இங்கிலீஷை பிச்சு உதறுதாமில்லே. நல்லா படிச்சு முன்னுக்கு வரும்னு சொன்னாங்க. டாக்டருக்கு இல்லேன்னா வக்கீலுக்கு ஏதாச்சும் ஒண்ணைப் படிக்க வைக்கச் சொன்னாப்பல என்றாள் பெருமையாக.

    ஆகட்டும். அப்படியே செய்துடுவோம் என்றார் அப்பா உற்சாகமாக, பூரிப்பாக.

    சின்னதுதான் துறுதுறுன்னு பேசுது. குறும்பு பண்ணுது. ஸ்கூலுக்குப் போக மாட்டேங்குது. கையை காலை ஆட்டி ஆட்டி டான்ஸ் எல்லாம் ஆடுது. பேசாம அதைப் பெரிய சினிமா ஸ்டார் ஆக்குவோமா?

    நீ சொன்னா மறுபேச்சு எது? அப்படியே ஆக்கிடுவோம் என்றார் அப்பா மகிழ்ச்சியாக.

    ஆனால்,

    கணக்கில் எங்கேயோ உதைக்கிறது போலிருக்கிறது.

    அவர்கள் நினைத்ததைப்போல என்னை டாக்டராகவோ, சுமதியை நடிகையாகவோ ஆக்கவில்லை. பதிலாக,

    அனாதைகளாக்கிவிட்டார்கள்.

    ***

    ஒரு கொடிய மாலைப் பொழுதில் அம்மா சொன்னாள்

    என்னங்க நெஞ்சிலே எதுவோ சுருக்சுருக்குன்னு ஒரு வலி இருக்குதுங்க. மூச்சுக்கூட திணறுது.

    டாக்டர்கிட்டே போகலாம் வா" என்று அப்பா அழைத்தபோது மறுத்தாள்.

    அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க. நேத்து அரைப் படி கடலையை அவிச்சி சுண்டல் வச்சேன். நீங்க கிராமத்துக்கு போயிட்டீங்க. புள்ளைங்களும் சரியா திங்கல்லே. எதுக்கு பாழாக்கறதுன்னு நினைச்சு எல்லாத்தையும் நானே தின்னேன். அதான், வாய்வு பிடிச்சிருச்சு. வெறும் வாய்வு குத்தல் தானுங்க. இஞ்சியைத் தட்டி சாறு பிழிஞ்சு குடிச்சா வாய்வுக்கு உடனே கேட்கும் என்றாள்.

    அது ஒரு கடுமையான மாரடைப்பு என்பதை உணராமலே!

    ***

    இரவு பத்து மணி சுமாருக்கு வியர்வைக் குளமானாள். உச்சந்தலையும், முதுகும் நிறைய வியர்த்தது.

    என்ன இது? இந்த குளிர் நாளிலேயும் இப்படி வேர்த்துப் போவுது?

    நான் தான் பூத்துவாலையால் தலையையம், முதுகையும் ஒட்டத் துடைத்து நிறையப் பிழிந்தேன்.

    பதினொரு மணிக்கெல்லாம் களைத்துப் போனாள்

    Enjoying the preview?
    Page 1 of 1