En Devathai Neeye
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Ingu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Iraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsThisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsSorna Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Vidhi Seival Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsAdichuvadugal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Iniyaa Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Vizhundha Macham Rating: 0 out of 5 stars0 ratingsNeruppin Nizhalil... Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsIravu Sooriyan Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Yaarendru Enni... Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Devathai Neeye
Related ebooks
Azhagin Muzhumathi Neeye...! - Part - 2 Rating: 5 out of 5 stars5/5Azhagin Muzhumathi Neeye...! - Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sootchama Ulagam...! Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsAnbe, Kannaley Kollathey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsKaraiyaangal Rating: 5 out of 5 stars5/5Un Madiyil Kaithanean! Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratingsSooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Mannin Mathagu Rating: 0 out of 5 stars0 ratingsPunnagai Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsT.R.vin Thernthedukkappatta Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSorgathin Nizhal Rating: 3 out of 5 stars3/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Paavai Vilakkin Olichitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsUravukkendru Virintha Ullam Rating: 1 out of 5 stars1/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsOondru Kol Rating: 0 out of 5 stars0 ratingsJannal Nila Rating: 0 out of 5 stars0 ratingsAnthikaala Mogam Rating: 0 out of 5 stars0 ratingsநெஞ்சுக்கு நீ அழகு..! Rating: 0 out of 5 stars0 ratingsNenjukku Nee Azhzgu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thozhugai Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthaal Rating: 5 out of 5 stars5/5Ninaivey Sangeethamai... Rating: 4 out of 5 stars4/5Kaadhalenum Puyal Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Ammavukku Rating: 0 out of 5 stars0 ratingsVaanathai Thottavan Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Devathai Neeye
0 ratings0 reviews
Book preview
En Devathai Neeye - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
என் தேவதை நீயே
En Devathai Neeye
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
***
என் தேவதை நீயே
ஹம்சா தனகோபால்
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
மேகலா, அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள். தன் தோள் பையில் பணமும், சில்லறையும் இருக்கிறதா? என சரிபார்த்துக்கொண்டாள். அப்போது சமையல் அறையிலிருந்து வெளிவந்தாள், அவள் தாய் கற்பகவல்லி. மதியத்துக்கு நித்தமும் தயிர் சோறும், ஏதாவது பொரியலும் கொடுத்து அனுப்புவாள்.
சாப்பிடுவதிலிருந்து எதிலும் மேகலாவிற்குப் பிடிவாதம் அதிகம். அவள் விரும்பியதைத்தான் சாப்பிடுவாள். அவள் விரும்பியதைத்தான் செய்வாள். வெள்ளை வெளேரென்று அல்லிப் பூப்போல சுடிதார் அணிந்து, கூந்தலில் ரோஜா அழகு சேர்க்க நின்றிருக்கும் தன் கண்மணியின் முகம் வழித்துச் சொடுக்கிக்கொண்டாள்.
உள்ளுக்குள் எப்போதும் நினைப்பது போல அதை அப்போதும் சொல்லிக்கொண்டாள். ‘நல்ல காலம். மேகலா என்னை மாதிரியே பிறந்திருக்கிறாள். அவனைப் போல பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால்…' நினைத்துப் பார்க்கமுடியாமல் உடல் சிலிர்த்துக்கொண்டாள்.
என்னம்மா…. எனக்குப் போய் திருஷ்டி கழிச்சிட்டு... நான் என்ன சின்னக் குழந்தையா?
கன்னத்தில் குழிகள். நடிகை லைலா போன்ற அழகும், இளமையும் கொண்டவள், மேகலா. அவளைக் கடந்து போகிறவர்கள் திரும்பிப் பார்க்காமல் போகமாட்டார்கள்.
கூந்தலை தூக்கிச் சீவி அப்படியே விட்டிருந்தாள். தொட்டால் சிவந்துவிடும் மேனி சற்றே நீள முகத்தில் கண்கள் வைரங்களாய் ஒளிரும்.
எனக்கு நீ எப்பவும் குழந்தைதான் மேகலா. இன்னிக்கு சீக்கிரம் வந்திடுறியா?
எதுக்கும்மா?
கோவிலுக்குப் போகணும். நீ வந்தால் உன்னோடு வந்திடுவேன்.
நான் அத்தை வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேம்மா.
இத்தனை நேரம் அந்தி மந்தாரைப் போல விரிந்திருந்த கற்பகவல்லியின் முகம் சுருங்கி கருத்துப்போயிற்று. அவள் முகவாட்டத்தைப் பார்த்துவிட்டாள், மேகலா.
என்னம்மா, நான் அங்கே போறது பிடிக்கலையா?
நான் பலமுறை சொல்லிட்டேன். நீ கேட்கலை. எங்க அண்ணன் உயிரோட இருந்தா பரவாயில்லை. அவரே போயிட்டார். அப்புறம் உறவு என்ன வாழுது?
அப்படி சொல்லாதேம்மா. அத்தை என் மேலே உயிரா இருக்காங்க. சூர்யாவும் என் மேலே ரொம்ப அன்பு வைச்சிருக்கார். அதை எப்படிம்மா முறிச்சுப் போடறது?
சூர்யா நல்ல உடல் ஆரோக்கியத்தோட இருந்தா நான் எதுக்குத் தடுக்கப்போறேன்? அவனும் என்னோட அண்ணன் மகன்னு அனுமதிக்கமாட்டேனா? அவனுக்கு அப்படி இருக்கிறப்ப அவங்க மனசிலே நீ ஆசையைத் தூண்டுறது எனக்குப் பிடிக்கலைம்மா
சரிம்மா…. அப்புறம் பேசலாம். என்க்கு ஆபீசுக்கு நேரமாச்சு. நான் வரேன்.
தாய் கொடுத்த சாப்பாட்டுப் பாத்திரத்தை தோள் பையில் திணித்துவிட்டு வெளியே வந்தாள்.
‘மொபட்’டை தள்ளி உயிர்ப்பித்துக்கொண்டே குரல் கொடுத்தாள். அம்மா, சாயங்காலம் நான் வர நேரமாகும். நீஆட்டோ பிடிச்சு கோவிலுக்குப் போய் வா.
வண்டி, கற்பகவல்லியின் பார்வைக்குப் புகையைக் காண்பித்துவிட்டு பறந்தது. கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தாள். எப்பவும் போல, கூடத்தில் மாட்டி இருந்த தாயுமானவனின் புகைப்படத்தைப் பார்த்தாள். கண் கலங்கினாள்.
‘என்னங்க.. என் பேச்சை மேகலா கேட்கமாட்டேன்கிறா. எல்லாச் சுமையும் என் மேலே சுமத்திட்டு நீங்கபோயிட்டீங்க.’
தாயுமானவன் புகைப்படத்தில் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைச்சரத்தைச் சரிப்படுத்தினாள். கற்பகவல்லியின் கண்கள், புகைப்படத்தைப் பார்க்கப் பார்க்க கலங்கின. அவளைப் பொறுத்தவரை தாயுமானவன் வெறும் கணவன் அல்ல. அதற்கும் மேலே…. தெய்வம்.
அவளைக் காக்க வந்த தெய்வம். சமூக அந்தஸ்தைக் கொடுத்த தெய்வம்.
அப்பா இருந்தால் அவர் பேச்சை மேகலா கேட்பாள். அம்மாவிடம் அவளுக்கு ஒரு விட்டேற்றித்தனம்.
என்ன சொல்ல… தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறாள். முப்பது வயதாகும் மகள், தாய் சொல்லும் பேச்சை எல்லாம் கேட்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
அதுதான் அந்தக் காலத்தில் பெண்களுக்குச் சிந்தனைகள் வளராதபோதே திருமணம் செய்துவிட்டார்கள் போலும். இப்போது படிப்பும், அது கொடுத்த சிந்தனையும் பெண்களை நிறையவே மாற்றிவிட்டன. தனக்கென்று ஒரு துணையைத் தேர்ந்தெடுக்க அது கைகாட்டுகிறது.
அதில் தாயும்,தந்தையும்கூட அந்நியர் ஆக்கப்படுகிறார்கள். பெற்றோரின் பேச்சு அந்நிய மொழியாகிவிடுகிறது.
மேகலாவும் இப்படித்தான் இருக்கிறாள்.
சூர்யா, நல்ல உயரமாகவும் திடகாத்திரமாகவும் இருக்கும் வாலிபன். முப்பத்தைந்து வயது ஒரு வயதல்ல. ஆனால், வசதி போதாது.
‘பெற்றோர்கள், சொந்தம் விட்டுப்போகக்கூடாது' என்று சொல்வார்கள்.
படித்த பெண்களோ… ‘சொந்தத்தில், அதுவும் நெருங்கின சொந்தத்தில் திருமணம் செய்தால், பிறக்கும் குழந்தை, ஊனமாய் பிறக்கலாம்' என்பார்கள்.
ஆனால், இங்கே கற்பகவல்லியின் தலைவலியோ வேறு மாதிரி. அண்ணன் மகன் சூர்யாவைத் தன் மகள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதுதான். மேகலாவோ ‘மணந்தால் மாமன் மகன்தான்’ என்று பிடிவாதமாய் இருக்கிறாள்.
மேகலாவின் அலுவலகத்தில் ஒன்றாகப் பணியாற்றும் அபூர்வன், அடிக்கடி வீட்டிற்கு வருவான். கற்பகவல்லிக்குப் பலவகையில் உதவியாய் இருப்பான். சூர்யாவுக்கு அந்த உதவி செய்யும் குணம் இல்லை.
எல்லாவற்றையும்விட சூர்யாவின் உடம்பு… அதைத்தான் வெறுத்தாள், கற்பகவல்லி. அவனைக் கணவனாக்கிக் கொண்டு,