Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thisai Thedum Paravaigal
Thisai Thedum Paravaigal
Thisai Thedum Paravaigal
Ebook118 pages1 hour

Thisai Thedum Paravaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204071
Thisai Thedum Paravaigal

Read more from Hamsa Dhanagopal

Related to Thisai Thedum Paravaigal

Related ebooks

Reviews for Thisai Thedum Paravaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thisai Thedum Paravaigal - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    திசைதேடும் பறவைகள்

    Thisai Thedum Paravaigal

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    1

    ஞாறு. தொலைக்காட்சி திரைப்படத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தாள் தர்ஷனா. அப்போது தான் அவள் தாய் கேட்டாள்.

    தர்ஷனா, உனக்கு மாப்பிள் ளையைப் பிடிச்சிருக்கா.

    கல்யாணப் பத்திரிகையும் குடுத்திட்டிருக்கோம். இப்பப்போய்....

    என் சுமை குறைக்கறதுக் காக நீ தலையாட்டிட்டதா இருக்கப்படாது பாரு.

    ஐயோ அம்மா, நீ பார்த்து யாரை செஞ்சு வச்சாலும் எனக்கு சரிதான். எதுக்கு உனக்கு திடீருன்னு சந்தேகம்.

    கலக்கம் தாயின் முகத்தில்.

    இல்லம்மா தர்ஷனா, நம்ம தெருல உஷாவைத் தெரியுமில்ல உனக்கு....

    உம் அவளுக்கு அடுத்தவாரம் கல்யாணம் பேசினாளே.

    அவ யாரையோ காதலிச்சாளாம். ஆனா அவ அப்பங்காரன் சொந்தத்தில் முடிக்கப் பார்த்திருக்கிறார். மருந்து குடிச்சு தற்கொலை செய்துட்டா. எல்லோரும் ஜி. எச்சுக்கு ஓடியிருக்காங்க.

    நெற்றிக்கு ஸ்டிக்கர் ஒட்டி தன் நிலா முகம் கண்ணாடியில் பார்த்து தானே ரசித்திருந்த தர்ஷனா, ஒடி வந்து தாயை அணைக்கிறாள். தாயின் நெற்றியில் சில்லென அவள் இதழ்கள் பதிகின்றன.

    இங்கே பார்மா, எனக்கு இந்த மேரேஜ்ல உன் விருப்பம்தான் பெரிசு. முக்கியமா நான் மாசா மாசம் என் சம்பளத்தில் ஐநூறு ரூபா உனக்குக் குடுக்க அவங்க சம்மதிச்சிருக்காங்க. அதுதான் எனக்கு வேணும்.

    வெளியே பழைய மோட்டர் சைக்கிள் சத்தம். உள்ளே ஓடிவந்து இவர்களை எட்டிப் பார்க்கத் தூண்டிற்று.

    வாங்க... வாங்க மாப்பிள்ளை. தர்ஷனா அந்த சேர் எடுத்து வந்துபோடுமா.

    சொட்டு நீலம் விளம்பர வெண்மையில் பேண்ட் ஷர்ட்டில் தருண்குமார் கூலிங் கிளாஸ் கழற்றியபடி உள் நுழைந்து, ஷூ-க்கள் கழற்றபிரியப்படாமல் அப்படியே நாற்காலி இழுத்து அமர்ந்தான்.

    தர்ஷனா நீண்ட பின்னல் பின்னியபடி தலையசைத்து சின்ன சிரிப்புடன் வரவேற்றாள்.

    நேத்து உங்க வீட்டுக்கு வந்து பத்தாயிரம் ரூபாய் டிரஸ்ஸுக்கும் மோதிரத்துக்கும் குடுத்துட்டு வந்தேன். மாப்பிள்ளை. அப்பா ஏதாவது சொல்லி அனுப்பினாரா.

    அம்மா தவித்துப்போனாள். பார்த்துப் பார்த்து இவள் கட்டின கூடு.

    அதெல்லாம் ஒண்ணும்மில்லை அத்தை. நான் இங்கே வந்ததே அவங்களுக்குத் தெரியாது. தர்ஷனாவை வெளியே அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன் அத்தை.

    ஒருவித கலக்கத்துடன் பார்த்தாள் அன்னபூரணி.

    கல்யாணத்திற்குப் பதினைஞ்சு நாள்தானே மாப்பிள்ளை இருக்கு. அப்புறம் உங்களைத்தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

    ஸாரி அத்தை. உங்களுக்கு விருப்பம் இல்லன்னா வேணாம்.

    அப்படியில்ல மாப்பிள்ளை, தர்ஷனா என்னைவிட தைரியசாலியான பொண்ணு. உங்க மேலயும் எனக்குப் பூரண நம்பிக்கையிருக்கு. ஆனா பார்க்கிறவங்க.... சரி, மாப்பிள்ளை நீங்க அழைச்சிட்டுப் போங்க. எதாவது சாப்பிடறீங்களா.

    வேணாம் அத்தை. தர்ஷனாவை ஒரு மணியிலே திரும்ப அழைச்சிட்டு வந்துடறேன்.

    உள்ளே வேறு சேலை உடுத்திக்கொண்டிருந்தாள் தர்ஷனா. அன்னபூரணி கதவு திறந்து உள் நுழைந்தாள்.

    நான் உனக்கு ஒண்ணும் சொல்ல வேணாம். பார்த்து நடந்துக்கோ.

    என்னம்மா இது. உனக்கு நம்பிக்கையில்லனா வேண்டாம்.

    உங்க ரெண்டு பேர்மேலேயும் நம்பிக்கை இருக்கு தர்ஷனா. ஆனா உங்க வயச நெனச்சா பயமா இருக்கு. சுருக்க வந்துடப் பாரு.

    தர்ஷனாவிற்குள் கோபம் கொந்தளிக்கப் பார்க்கிறது. ஆனால் அதை வெளியிட வழி இல்லாமல் தாய் வெளியேறி விட்டாள்.

    அவள் - அவன் ராஜ்தூத் பிலியனில் அமர்ந்து புறப்படுகையில் அவள் தாய்மட்டும் வேடிக்கை பார்க்கவில்லை அக்கம்பக்கம் வேடிக்கை பார்த்தது.

    அவர்கள் தெரு திரும்புகையில் கூட்டத்தினிடையே மார்ச்சுவரி வேனிலிருந்து உஷா உடல் இறக்கப்பட்டது. அவள் தாய் பரிதாபமாய் தலையில் அடித்து அழுதுகொண்டிருந்தாள். இவளுள் நெருடல்.

    ஹாய் தர்ஷனா, எங்கே போகலாம்.

    உங்க விருப்பம்.

    என் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போகலாமா?. அவன் குடும்பத்தோட வெளியூர் போய் இருக்கான். சாவி என்கிட்டதான் இருக்கு,

    பதினஞ்சு நாட்கள் போகட்டும்.

    நீ தானே என் விருப்பம் கேட்டே.

    ஓ.கே. எலியட்ஸ் பீச்.

    சலிப்பேயில்லாமல் காலம் காலமாய் ஓடிப்பிடித்து விளையாடும் அலைகள். சிதிலமடைந்த அந்த படகின் ஒரு பக்கத்தில் மணல் கம்பளத்தில்

    அவனை ஒட்டி அவள்.

    பூஞ்சாரலாய் நீர்த்துளிகள் அடிக்கடி சாமரம் வீச, காற்று அவள் சேலைத் தலைப்பை களவாடத் துடித்தது. அவன் விழிகளும்தான். காற்றுக்கும் அவன் விழிகளுக்கும் போட்டி.

    மணலிற்குள் ஓடி புதைந்து மறையும் நண்டுகள் தேடும் அவள் விரல்களை மெல்ல அழுத்திப் பிடிக்கின்றன அவன் முரட்டுக்கரம்.

    என்னமோ பேசணும்னு அழைச்சுட்டு வந்து....

    என்னைத் தருண்குமார்னு அழைக்கலாம்.

    தேங்க் யூ. என்னை எதுக்கு...

    தர்ஷனா, என்னென்னமோ பேசணும்னு நினச்சேன். எல்லாமே நீ பக்கத்தில் இருக்கிறப்ப மறந்துருது. எனக்கு அம்மா பல பெண்களைப் பார்த்தாங்க. எனக்குப் பிடிக்கல. ஆனா உன்னைப் பார்த்ததும்....

    பாவம் அந்தப் பெண்கள்.

    கேலி செய்யாதே தர்ஷா, எங்க அம்மா அப்பா பெரும்பாலும் எங்க அண்ணன் கிட்டதான் இருப்பாங்க. டெல்லியில் அண்ணணும் அண்ணியும் ஆபீஸ் போறாங்க. அப்ப உங்கம்மா நம்மோட வந்துடட்டும். அவங்க எதுக்குத் தனியா கஷ்டப்படணும்.

    அவள் தலைக்குனிந்து மெளனித்தாள்.

    என்ன தர்ஷா பதிலே இல்லை.

    அவள் முகவாய் நிமிர்த்தினான். அவள் பெரிய விழிகள் கண்ணீராடின.

    உங்க நல்ல மனச நெனச்சா எனக்குப் பேச்சு வரல தருண். தேங்க் யூ

    அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே சில ஜோடிகள். அலைகளுக்குப் போட்டியாய்

    Enjoying the preview?
    Page 1 of 1