Ennil Nee...
()
About this ebook
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Read more from Hamsa Dhanagopal
Thisai Thedum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIngu Pengal Virpanaikku Alla! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Pondatti Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Illamal Thodathey! Rating: 0 out of 5 stars0 ratingsUnnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Sorna Rating: 0 out of 5 stars0 ratingsKanal Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Theril Aval Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5Kaadhal Silai Rating: 0 out of 5 stars0 ratingsKannum Kannum Kollai Adithal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum...Naanum Neeyum... Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsNee...Nee Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMona Paravai Rating: 0 out of 5 stars0 ratingsThirumana Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNe En Uyirthean Rating: 0 out of 5 stars0 ratingsThendralin Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsPasapinaippugal! Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedi... Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhali, Meendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vidiyal Thedum Pullinangal Rating: 0 out of 5 stars0 ratingsAavi I Love You! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Vellai Nila Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Vaasal Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsVeliyilla Velladugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ennil Nee...
Related ebooks
Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Irattai Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Manaivi Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi! Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Ragangal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkena Viriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Thavazhum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Rajarathnathin Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsValiya Illai Bhoomiyil? Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthiya Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Aasai Kodi Sumanthu… Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaga Kaathirukkum Idhayam! Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu Express Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Vittu Vaa Rating: 5 out of 5 stars5/5Ullam Varudum Thendral Rating: 5 out of 5 stars5/5Saagara Sangamam Rating: 0 out of 5 stars0 ratingsThottuvidavaa Rating: 0 out of 5 stars0 ratingsEnaiyalum Ejamaney...! Rating: 0 out of 5 stars0 ratingsKannile Anbirunthal! Rating: 0 out of 5 stars0 ratingsNijam Pondra Poi Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maarum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsதிசை மாறும் தென்றல் Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaki Nindral Rating: 5 out of 5 stars5/5Radha Madhavam Rating: 0 out of 5 stars0 ratingsஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே .. Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Ithuthan Kaadhala? Rating: 0 out of 5 stars0 ratingsMaatti Yosi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ennil Nee...
0 ratings0 reviews
Book preview
Ennil Nee... - Hamsa Dhanagopal
http://www.pustaka.co.in
என்னில் நீ...
Ennil Nee…
Author:
ஹம்சா தனகோபால்
Hamsa Dhanagopal
For more books
http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
கடற்கரை. அலைகள் வந்து கரை உரசும் போதெல்லாம் சரயூவின் மீதும் வசீகரனின் மீதும் பூஞ்சாரலாய் தண்ணீர் தெளிக்கிறது. பன்னீர் தெளிப்பது போல இதம் தெரிந்தது. பல ஜோடிகள் கடல் அலைகளில் நின்று களித்தார்கள். கூட்டம் ஆங்காங்கே ஒதுங்கி உட்கார்ந்திருக்க சரயூ அவர்களையெல்லாம் கவனியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
வசீகரன் பெயருக்கு ஏற்றாற் போல வசீகரமாய் இருந்தான். ஊதா நிற ஜீன்ஸூம் டைட் பனியனும் போட்டிருந்தான். மணலில் உட்கார சிரமப்பட்டான். பளிச்சிடும் கண்களால் தன் பக்கத்தில் தேவதைப் போல உட்கார்ந்திருக்கும் சரயூவைப் பார்த்தான். அவள் நீண்ட கூந்தல் மணலில் அலைந்தது. கருவண்டு விழிகளும், வளைந்த புருவங்களும் அவள் செண்பகப் பூ நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது. வட்டமுகம். ஒற்றை வெள்ளை ரோஜாவைக் கூந்தலில் செருகியிருந்தாள்.
வெள்ளை சூரிதார் அணிந்து அதற்கு பாந்தமாய் கருப்பு துப்பட்டா அணிந்திருந்தாள். அது காற்றில் வசீகரனின் முகத்தில் அடிக்கடி தழுவிப் போயிற்று.
உன்னுடைய அப்பா உன்னோட நல்லதுக்குத்தானே சொல்வாங்க சரயூ
அவங்க நல்லதுன்னு நினைக்கறது என்னைப் பொறுத்த வரை பாதகமாய் இருக்கு. அவங்க ரொம்பப் பெரிய பணக் காரங்களாம். நானோ நடுத்தர வர்க்கம். எனக்குச் சரிப்பட்டு வருமா. இது சரியா அமையாது வசீகரன்.
அவள் கண்களை ஊடுருவியபடி கேட்டான் வசீகரன். ஏன் நீ யாரையாவது காதல் செய்யறியா
அவனுக்கு அவள் மீது அபரிதமான நேசம் உண்டு நல்லதொரு நட்பாய் பழகும் அவளிடம் தன் இதயத்தைத் திறந்து சொல்ல அவன் தக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் தப்பிதமாய் நினைத்துக் கொள்ளக்கூடாதே என்று எண்ணினான்.
ஆனால் அதற்குள் அவள் வீட்டில் அவளுக்கு வரன் பார்த்திருந்தார்கள். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாய் நல்ல நண்பர்கள்.
அவள் இவன் மீது காதல் கொண்டிருப்பதாய் சொல்லி விட மாட்டாளா என்கிற நப்பாசை அவனுக்கு.
என்ன வசீகரன், உங்களுக்குத் தெரியாம நான் யாரைக் காதலிப்பேன். இத்தனை நாள் பழகியும் இதைப் புரிஞ்சுக்க லியா நீங்க என் மனசிலே யாருமே இல்லை
.
வாளால் வெட்டுவது போன்ற பதில் அவன் இதயத்தைக்கிள்ளிற்று. தன் முகவாட்டத்தை அவன் சடுதியில் மறைத்துக் கொண்டான்.
காதல் இல்லை என்கிறாள் அவளிடம் போய் தன் காதலைச் சொல்வதால் என்ன பயன். அவன் இப்படி நினைத்தான். ஆனால் அவன் இதயத்தைத் திறந்து உண்மை சொல்லியிருந்தால், பல தவிர்க்க வேண்டிய எத்தனையோ அனர்த்தங்கள் நடைபெறாமல் சரயூவிற்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருக்கும்.
அவன் சொல்லாததால் அவள் எத்தனையோ இடர்ப்பாடுகளைச் சந்திக்கப் போகிறாள் என்பது இருவரும் அந்த நேரம் அறிந்திருக்கவில்லை.
பதில் எதுவும் பேசாமல் கடல் மணலில் அவள் பெயரை எழுதிக் கொண்டிருந்தான். வசீகரன் அவள் பெயருடன் தன் பெயரையும் இணைத்து எழுத விரும்பியவன் நொடியில் விரல்களை எடுத்துவிட்டான்.
நீ யாரையும் காதலிக்கலைன்னா பேசாம உன்னோட பெற்றோர் பார்த்திருக்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்துக்கறது சரிதான்.
அவங்க பங்களா, எஸ்டேட், பல கம்பெனின்னு இருக்கிறவங்க அவங்க எப்படி எனக்கு பொருத்தமாய் இருக்க முடி யும். அவங்க நிலைக்குத் தகுந்தாப்பல அவங்க பெரிய பணக்கார இடம் தேடாம, என்னைத் தேடியிருக்காங்கன்னா, எதுவோ, சரியில்லைன்னு தோணுது
உனக்கு எதுலேயும் சந்தேகம்தான் சரயூ உன்னைப் பார்த்ததும் அவங்களுக்குப் பிடிச்சுப் போச்சு. அதான் கேட்கிறாங்க பேசாம சம்மதம் சொல்லிரு. அவங்களுக்குத் தெரியாதா
.
எங்கப்பாக்கு கடன் இருக்கு பத்து லட்ச ரூபாய்க்கு மேலே இருக்கும். எல்லாம் என் அம்மா கேன்சர்ல படுத்திருந்தப்ப வாங்கி செலவு செஞ்சது
ஓ... இந்தக் கல்யாணம் செய்து அந்த கடனை அடைக்கப் பார்க்கிறாங்களா.
ஆமாம் வசீகரன். சுருக்கமா சொன்னா என்னைப் பணத்துக்காக விக்கிற மாதிரி
அவள் பறக்கும் மயிரிழைகளை ஒதுக்கிவிட்டுக் கொண்டு, அவனைப் பார்த்து பரிதாபமாய் சிரிக்க முயன்றாள்.
சே... அப்பாவ அப்படி சொல்லாதே சரயூ தங்கள் பெண் எப்பவும் நல்லாயிருக்கத்தான் பெற்றோர் விரும்புவாங்க
ப்ச்ட்... என்னமோ இந்த் கல்யாணம் எனக்குப் பிடிக்கலை, சொன்னா அவங்க கேட்கலை பிடிவாதமா இருக்காங்க
அதற்குள் வெளிச்சம் மெல்ல மறையத் தொடங்கிற்று. இருள் சத்தமில்லாமல் எட்டிப் பார்த்தது. கார்ப்பரேஷன் விளக்குகள் கண் திறந்து ஒளிரப் பார்த்தன.
நேரமாச்சு வசீகரன். அப்பா கேட்பாங்க. நான் புறப்படட்டுமா.
அவள் எழுந்து பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டுக் கொண்டாள். கர்சீப் போட்டு அமர்ந்திருந்த வசீகரன் எழுந்து கர்சீப்பை உதறினான். அவள் விடைபெற்ற போது தன் உயிரே தன்னை விட்டு விலகிப் போவது போல உணர்ந்தான்.
இருப்பினும் தன் மனதைத்திறந்து காட்ட அவன் தயாராய் இல்லை.
சரயூ பலமுறை சொல்லியிருக்கிறாள். இந்த ஆண்கள்கிட்ட சகஜமாய் பழக வேண்டியதுதான் உடனே காதல் கத்திரிக் காயின்னு ஆரம்பிச்சிருவாங்க. எல்லாம் டைம் பாஸிங்குத் தான். கல்யாணம்னா ஓடிருவாங்க.
அவள் கருத்து இது. இதை மாற்ற அவன் பலமுறை முயன்றும் தோற்று இருக்கிறான். அவன்தான் அவளிடமிருந்து தன் மனதை மறைக்க வேண்டியதாயிற்று.
அந்த ஆண்களில் அவனும் ஒருவன் என அவள் சொல்லிவிடக் கூடாதே என்கிற எண்ணம் அவனுக்கு.
மணலில் ஒட்டி நடந்தவர்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தார்கள்.
அவள் தன் ஸ்கூட்டியில் ஏறிக் கொண்டாள். அவன் தன் ஹோண்டாவில் ஏறிக் கொண்டான். கையசைத்துவிட்டு இருவேறு திசைகளில் பறந்தார்கள்.
சரயூவிற்கு ஏமாற்றமாய் இருந்தது. வசீகரனை அவள் உள்ளுக்குள் நேசித்தாள். அதனாலேயே தன் அப்பா வரன்