Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Enakkena Viriyum Vaanam
Enakkena Viriyum Vaanam
Enakkena Viriyum Vaanam
Ebook113 pages55 minutes

Enakkena Viriyum Vaanam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

G.A. Prabha, an exceptional Tamil novelist, written over 200 novels, 100 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466329
Enakkena Viriyum Vaanam

Read more from G.A.Prabha

Related to Enakkena Viriyum Vaanam

Related ebooks

Reviews for Enakkena Viriyum Vaanam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Enakkena Viriyum Vaanam - G.A.Prabha

    15

    1

    "சிவாய நம ஓம்."

    கண்மூடி சிவலிங்கத்தை மனதில் தியானித்து சிறிது நேரம் அமர்ந்திருந்தார் வாசுதேவன். அதிகாலைக் காற்றின் சில்லிப்பில் மனதும் உடலும் குளிர்ந்து. கண் மூடி அமர்ந்தார்.

    எந்நேரமும் இப்படிக் கண்மூடி, இறைவனின் பெருமைகளை, அவன் செய்யும் அற்புதத்தை எண்ணியபடி இருக்கவே மனம் விரும்புகிறது. எத்தனை ஆடினாலும் இறைவன் திட்டப்படிதான் அனைத்தும் நடக்கும் என்று நம்பினார் வாசுதேவன்.

    கடவுள் அள்ளிக் கொடுத்திருக்கிறார். சொந்த வீடு பெரிதாக இருக்கிறது. கீழே பெரிய போர்ஷன். அதில் வாசுதேவன் இருக்கிறார். மேலே இரண்டு போர்ஷன் இருக்கிறது. அதில் இரண்டு குடும்பம் இருக்கிறது. டெக்ஸ்டைல் வியாபாரம்.

    ஒரே மகன். அவன் பி.ஈ. படித்துவிட்டு லண்டனில் இருக்கிறான். இன்னும் ஒரு மாதத்தில் திரும்பி வந்து விடுவான். அவருக்கும் அம்பது வயது ஆகிறது. மகனுக்கு திருமணம் செய்து விட்டு தொழிலை அவன் கையில் ஒப்படைத்து விட்டால் அவர் தன கடைசி காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம் என்று இருக்கிறார்.

    அறுபது வயதுக்கு மேல் தன் வாழ்க்கை பற்றி ஒரு தீர்மானம் இருக்கிறது. ஒரு குறிக்கோள் இருக்கிறது. வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் வாழ்க்கையாக அது இருக்க வேண்டும்.

    யோசித்தபடி படுத்திருந்தார் வாசுதேவன்.

    கீழே காலை சுப்ரபாதம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அவரின் தங்கை பெண் மாலதி எழுந்து காலை நேர வேலையை ஆரம்பித்திருப்பாள். அவள் பிறக்கும்போதே அவள் அம்மா இறந்து விட்டாள். அவள் அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய்விட வாசுதேவன்தான் தூக்கி வந்து வளர்த்தார். அவருடைய மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றிருக்கிறார்.

    வாசுதேவன் எழுந்து உட்கார்ந்தார். கட்டிலை விட்டு இறங்கி காலில் செருப்பு அணிந்து கொண்டார். கோவையில் குளிர் காலத்தில் வீடே ஐஸ் ஆகிவிடும். வாசுதேவனுக்கு வீசிங் இருப்பதால் இந்த நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பார். அதிகமாக குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக்க மாட்டார்.

    மாலதியும் அவருக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்துச் செய்வாள். அவளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அவரின் அம்மா போன பிறகு மாலதியின் எதிர்காலம் பற்றி ஒரு உறுத்தல் மனதில் ஆரம்பித்து விட்டது.

    இறைவா சீக்கிரம் ஒரு நல்ல வழி காட்டு. வாழ்வில் வேதனைகள் வந்தாலும் அதையும் தாண்டி மனதை சந்தோஷமாக வை.

    மனதுக்குள் வேண்டியபடி வெளியில் வந்தார். மாலதி குளித்துவிட்டு வீடு முழுக்க சாம்பிராணி காட்டிக் கொண்டிருந்தாள். புகை வெள்ளத்தில் மிதந்தது வீடு.

    மாமா உங்களுக்கு டிபன் செஞ்சுட்டேன். குளிச்சுட்டு வாங்க. டேபிள்ள ரெடியா இருக்கும்.

    அது ஒரு வேலையா? இந்த குளிக்கிறது பல்லு தேய்க்கறதை எல்லாம் யார் கண்டு பிடித்தாங்களோ? வாசுதேவன் குளிக்கப் போனார்.

    குளித்து வரும்போது டேபிள் மேல் டிபன் ரெடியாக சுடச் சுட இருந்தது. அரிசி உப்புமா கொழுக்கட்டை, வெங்காய கொத்சு, தக்காளி தொக்கு. வெஜிடபிள் சூப்.

    அற்புதம். இது மாதிரி சுவையா சமைச்சுப் போட்டு மனுஷனை ருசிக்கு அடிமைப் படுத்திட்டு தண்ணீர் மட்டுமே குடின்னா எப்படி?

    மாமா ஒரு நல்லதுன்னா எல்லா சூழ்நிலைக்கும் மனதை சரிப்படுத்திக்கணும். எதுவும் நம்ம மனசுலதானே இருக்கு. அறுசுவை உணவுன்னாலும், பட்டினின்னாலும் மனசால சரிப்படுத்திக்க முடியும், ஏன் உங்களையே எடுத்துக்குங்க. எவ்வளவு பெரிய அடி விழுந்தது உங்களுக்கு. அதைத் தாங்கி நிமிர்ந்து நிக்கலையா? எல்லாம் நடக்கும் மாமா

    உண்மைதான். சாதாரண அடியா? மரண அடி. இதிலிருந்து தான் எழ மாட்டோம் என்று நினைத்தவர்களை வாயடைக்க வைத்து விட்டார் வாசுதேவன். மீண்டு வந்து விட்டார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரபஞ்சத்தின் கட்டளை. யார் நம் வாழ்வில் வர வேண்டும், போக வேண்டும் என்பது இறைவன் சித்தம். வந்தவர்கள் வாழ்க, சென்றவர்களும் வாழ்க..

    வாசுதேவன் நிதானமாக ரசித்துச் சாப்பிட்டார். காபி குடித்து விட்டு கிளம்பினார்.

    வரேம்மா. ஜாக்கிரதை.

    இங்க என்ன பயம் மாமா?

    பேப்பர்ல கண்டதையும் படிக்கறப்போ பயமா இருக்கே.

    மாமா இது நடக்கனும்னு இருந்தா நடந்தே தீரும்.

    உண்மைதான். எந்த விஷயமும் நடக்க வேணும்னு இருந்தா நடந்தே தீரும். கருணாவுடன் கல்யாணமும் அப்படித்தான். அப்பாவின் வற்புறுத்தலுக்காக நடந்த கல்யாணம். அப்பாவின் பிசினஸ் பார்ட்னரின் பெண். அவருக்குப் பிடிக்கவே இல்லை. கருணா சிறிது உம்மணா மூஞ்சி. யாருடனும் பழகவோ, பேசவோ மாட்டாள். வாசுதேவனுக்கு நண்பர்கள் அதிகம், எந்நேரமும் கலகலவென்று இருப்பார். வீடே சிரிப்பும்,குதூகலமாக இருக்கும்.

    கருணா வந்த பிறகு வீடு நரகமாகி விட்டது. எந்நேரமும் ரூமேதான் கதி. அவருடனும் பேச மாட்டாள். கல்யாணம் ஆன மூன்றாம் மாசம் கர்ப்பம் என்றாள். ஏழாம் மாசம் குழந்தை பிறந்தது. ஒன்பதாம் மாசம் குழந்தையை வீட்டில் வைத்து விட்டு தன் பழைய காதலனுடன் சென்று விட்டாள்.

    அவமானத்தில் சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே குமைந்து கிடந்தார். பிறகு மனம் தேறியது. தன்னை, வாசுதேவன் தொட விட்டதில்லை. நீ உண்மையான ஆம்பளைன்னா என்னைத் தொடாதே என்றாள். வயிற்றில் வளரும் குழந்தையை அழித்தே தீருவேன் என்று பிடிவாதமாக நின்றாள். அவளுக்குள் என்ன வெறியோ? ஆத்திரமோ? காளி மாதிரி ஆடினாள். யாருக்கும் தெரியாமல் டாக்டரிடம் அழைத்துப் போனார்.

    அழிக்க முடியாது. குழந்தைக்கு அஞ்சு மாசம். என்றார் டாக்டர்.

    எப்படி? கல்யாணம் ஆகியே இரண்டு மாசம்தானே ஆகிறது?கருணாவிடம் கேட்டார்.

    ஆமாம். இது உன் குழந்தை இல்லை. வெடுக் என்று வந்தது பதில்.

    அந்த நிமிஷம் உடைந்து போனார் வாசுதேவன்.

    கருணாவிடம் நிதானமாகக் கேட்டார்." எவ்வளவு பெரிய அசிங்கத்தைச் செய்துட்டு எங்களை அசிங்கப் படுத்தினியே? இதை நான் பகிரங்கப் படுத்தவா?

    தடாலென்று காலில் விழுந்தாள் கருணா.

    ஏமாந்துட்டேன். ஒருத்தனை உயிரா நேசிச்சேன். அவனுக்கு என்னையே தந்தேன். ஆனா அவன் என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான். சாகலாம்னு போனவளை எங்கப்பாதான் காப்பாத்தி உங்களுக்கு கட்டி வைத்தார். இந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லக் கூடாதுன்னு சொன்னார். அழுதார்.

    ஏமாந்ததை விட, ஏமாற்றியதை தாங்க முடியவில்லை. அவளின் அப்பாவிடம் போய்க் கேட்டார். உன்னால் என்ன பண்ண முடியும்? இதை வெளியில் சொன்னால் உனக்குத்தான் கேவலம் என்றார் அவள் அப்பா.

    தைரியம் இருந்தா உங்க வீட்டில் இந்த விஷயத்தைச் சொல்லுஎன்றார்.

    நான் சொல்ல வேண்டியதில்லை. காலம் காட்டிக் கொடுக்கும் என்றார்.

    அதேபோல் கருணாவின் காதலன் வந்தான். அவனை வெளியூருக்கு அனுப்பி,

    Enjoying the preview?
    Page 1 of 1