Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veedu Varai Uravu
Veedu Varai Uravu
Veedu Varai Uravu
Ebook98 pages1 hour

Veedu Varai Uravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நகரத்தின் மிகப்பெரிய கொள்ளைக்காரனும், கொலைக்காரனுமாகிய ராம்சிங் ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு அவளை அவள் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொள்கிறான்.

அவளோ தன் கணவனை நல்வழிக்கு திருப்ப முயற்சிக்கிறாள். அந்த முயற்சியில் தன் குழந்தையை இழக்கிறாள்.

அதன்பின் ராம்சிங் திருந்தினா? அவன் மனைவி என்ன ஆனாள்? என்பதை சுவாரசியத்துடனும், பல திருப்பங்களுடனும் நாம் கதைக்குள் சென்று காணலாம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580125405856
Veedu Varai Uravu

Read more from Vaasanthi

Related to Veedu Varai Uravu

Related ebooks

Reviews for Veedu Varai Uravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veedu Varai Uravu - Vaasanthi

    https://www.pustaka.co.in

    வீடு வரை உறவு

    Veedu Varai Uravu

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    மொரேனா டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் பன்னாலால் ஒரு சோம்பலான அலுப்புடன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அந்த மத்தியானப் புழுக்கத்திலும், சற்று முன்னால் வயிற்றினுள் சென்றிருந்த பரோட்டாவும் ஸப்ஜியும் ஒரு சுகமான மந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 'ஙொய் ஙொய்' என்று சுவர் கோழிகள் எழுப்பிய சுருதியில் கண் இமைகள் லேசாக மூடிக் கொள்ள ஆரம்பித்தன.

    ஏதோ சத்தம் கேட்டு அவர் சரேலென்று விழித்துக் கொண்டு நிமிர்ந்து கண்களைத் தேய்த்து விட்டுக் கொண்டார்.

    இப்பப் பார்க்க முடியாது போ! வேளை கெட்ட வேளையிலே எல்லாம் கலெக்டர் ஸாஹிப்பைத் தொந்திரவு பண்ணக் கூடாது!

    நா அவசியம் ஸாஹிப்பைப் பார்க்கணும். இன்னிக்கு!

    ஒரு பெண் குரல்.

    என்ன விஷயமாய் பார்க்கணும்?

    உன்கிட்ட நா எதுக்கு சொல்லணும்?

    அப்ப உள்ளே விட முடியாது. போ!

    ஹே பகவான்! இது என்ன தொந்திரவு? சரி சொல்றேன். பந்தூக் (துப்பாக்கி) லைசென்ஸ் வேணும்.

    அதுவா கதை! அப்ப நிச்சயம் முடியாது. தினமும் இருபத்தி அஞ்சு பேர் லைசென்ஸ் கேட்கறதாப் பேச்சு உன் புருஷன் தானே உன்னை அனுப்பிச்சான்?

    சத்தியமாய் இல்லை!

    அடுத்தாப்போலே உன் பிள்ளையை அனுப்புவான்.

    தூ! எனக்குக் கல்யாணமே ஆகல்லே!

    அந்தப் பெண்ணின் குரல் பெரிதாக ஒலித்தது.

    ஸாம்! மஹராஜ்!

    ஏய், இப்படி நீ கத்தினால் போலீஸைக் கூப்பிட வேண்டியது தான்...

    பன்னாலால் ஒரு அலுப்புடன் எழுந்தார்.

    என்ன சத்தம் இங்கே?

    மஹராஜ், மஹராஜ்! உங்க ஆள் என்னை ரொம்ப விரட்டறான்!

    அவள் பளிச்சென்றிருந்தாள். வழித்து விட்ட மாதிரி, பளபளவென்ற கோதுமை நிற முகத்தில், கண்கள் அசாதாரண ஒளியுடன் துருதுருத்தன. இரண்டு மூன்று தினுசு பிரகாசமான நிறத்துணிகளை ஒட்டுப்போட்ட கட்சோளியில் கச்சிதமான மார்பகங்கள்!

    ‘டெய்லர் ரவிக்கையை இந்தத் தடவையும் கெடுத்து விட்டான்' என்று எப்பவும் முணு முணுக்கும் மனைவி ராமேச்வரியின் நினைவு வந்தது. இவர்கள் உடம்பிலேயே துணியை வைத்துத் தைத்துக் கொள்வார்களோ என்று தோன்றிற்று.

    மஹராஜ்! நா உள்ளே வரலாமா?

    யாரம்மா நீ? என்ன வேணும் உனக்கு?

    உள்ளே வந்து சொல்றேன். மஹராஜ்.

    உள்ளே வா.

    இத்தனை நேரம் அவளோடு மல்லுக்கு நின்றிருந்த துக்காராமுக்கு ஓர் அழகு காட்டிவிட்டு அவள் கால் கொலுசுகள் சப்திக்க உள்ளே வருவதை கவனிக்காத மாதிரி பன்னாலால் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

    உன் பெயர் என்ன?

    கங்கா.

    என்ன வேணும் உனக்கு?

    பந்தூக் லைசென்ஸ் வேணும்.

    எதுக்கு வேணும்?

    ஓ மஹராஜ். மொரேனாவிலே இருந்துண்டு இந்தக் கேள்வியை நீங்க கேட்கலாமா?

    பன்னாலால் ஒரு சுவாரஸ்யத்துடன் அவளைப் பார்த்தார்.

    இங்கேதான் நா கேக்கணும். தினமும் முப்பது பேர் லைசென்ஸ் கேட்டுண்டு வராங்க. இந்த ரீதியிலே போனா ஒவ்வொரு குழந்தைகிட்டயும் துப்பாக்கி இருக்கும் இந்த ஊரிலே...

    அவள் வசதியாகத் தரையில் உட்கார்ந்து கொண்டாள். தலையில் கையை வைத்தபடி கவலை தொனிக்கச் சொன்னாள்.

    என்ன செய்யறது ஸாப்! பெண்களும், குழந்தைகளும் துப்பாக்கி பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப் போச்சு. இத்தனை வருஷமா இந்தச் சம்பல் ‘காட்டி’லே நடக்கிற கொள்ளைக்கும், கொலைக்கும் போலீஸாலே என்ன செய்ய முடிந்தது? நாளுக்கு நாள் டாக்குக்களுடைய அக்கிரமம் அதிகமாப் போச்சு.

    இதப்பார் கங்கா! எல்லாருக்கும் துப்பாக்கி கொடுத்தா நிலைமை சரியாயிடாது. சின்னச் சின்ன விஷயமெல்லாம் பெரிய விஷயமாகி துப்பாக்கியை உபயோகிக்க ஆரம்பிப்பீங்க!

    ஆ! என்று அவள் அழகு காட்டினாள்.

    அந்த நாற்காலியிலே உட்கார்ந்துகிட்டு நீங்க பேசுவீங்க! ராம்சிங்கை உங்க போலீஸ் பிடிக்க முடியலே நீங்க பேசறீங்க? வீட்டுக்குள்ளே நாங்க நிம்மதியா உட்கார முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா? எப்ப அவன் உள்ளே நுழைவானோ, மானம் போகுமோன்னு உட்கார்ந்திருக்கோம். என்னை அவன் கெடுத்தப்புறம் நீங்க வருவீர்களா உதவிக்கு?"

    துப்பாக்கி இருந்தா என்ன செய்வே?

    கிட்ட நெருங்க விடமாட்டேன். போலீஸ் செய்யாததை நா செய்வேன்.

    அவள் முகத்தின் தீவிரத்தைப் பார்க்கும்போது அவள் செய்தாலும் செய்வாள் என்று பன்னாலால் நினைத்துக் கொண்டார்.

    உன் வீட்டில் யாரும் இல்லையா?

    இல்லை. நானும் என்னுடைய அம்மாவும் தான்.

    நிஜம்தானா அது?

    நா தாக்கூர் ஜாதி மகராஜ். பொய் சொல்ல மாட்டேன்.

    அவருக்குச் சிரிப்பு

    Enjoying the preview?
    Page 1 of 1