Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Pondatti
Iraval Pondatti
Iraval Pondatti
Ebook103 pages39 minutes

Iraval Pondatti

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114202931
Iraval Pondatti

Read more from Hamsa Dhanagopal

Related to Iraval Pondatti

Related ebooks

Reviews for Iraval Pondatti

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Pondatti - Hamsa Dhanagopal

    www.pustaka.co.in

    இரவல் பொண்டாட்டி

    Iraval Pondatti

    Author:

    ஹம்ஸா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For other books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரவல் பொண்டாட்டி

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    இரவல் பொண்டாட்டி

    1

    வானம் கரு மேகப் போர்வைக்குள் அடங்கிக் குளிர் காய...

    பகலுக்கு மேல் நேரம் கடந்திருந்தும் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்க, சின்னஞ்சிறிசுகள் குட்டைகளில் குதித்து ஆர்ப்பரிக்க-

    ஒற்றை மாட்டு வண்டியில் கத்திரிப் பிஞ்சு தக்காளிக் கூடைகளுடன் சந்தைக்குப் பயணம் போய்க் கொண்டிருந்த கருப்புசாமி, ஊர்ப் பெரியவர் சதாசிவம் பல் குச்சியுடன் தெருவில் நடந்து வருவது கண்டு வண்டி ஒதுக்கினான்.

    யாருலே அது. கருப்புசாமியா?

    ஆமா மாமு. சந்தைக்குப் போறேன். மாமுக்கு ஏதாச்சும் வாங்கியாரணுமா? இல்ல, சுப்பிரமணிக்கு ஏதாச்சும்... பேசியபடி மாட்டு வண்டியிலிருந்து லாகவமாய்க் குதித்து தோள் துண்டை கைகளில் ஏந்தினான்.

    மீசை முறுக்கப் போன கைக்குத் தடை விதித்து வலிந்து பவ்யம் காட்டினான்.

    அட எம்மவனே, நாலெழுத்துப் படிச்சுப் போட்டம்னு அலையாம என்ன மருவாதி. ஊம்... பாக்க உன் ஆயி அப்பனுக்குக் குடுப்பினை இல்ல கருப்பு. ஒம் பாட்டியாச்சும் உசிரோடு இருந்திருக்கக்கூடாதா?

    முதுமையில் அடியெடுத்து வைத்திருந்தபோதும் இன்னும் இளமைத் துள்ளலோடு பேசின சமரசம் முறிந்து போகாமல் திடகாத்திரமாய் இருந்தார் பெரியவர். சோகத்தில் சொல்லிழந்தான் கருப்புசாமி.

    கருப்பு, நீயும் செவந்தியும் ஒரே வூட்லயா இருக்கீங்க?

    என்ன மாமு தெரிஞ்சு கேக்கறீங்களா, இல்ல தெரியாமத்தான் கேக்கறீங்களா? அது எங்கிட்டு போவும்? இந்த வூடுவுட்டா சொந்தம்னு சொல்லிக்க அதுக்கு யாரிருக்கா மாமு?

    என்னமோ தம்பி, கண்ணாலத்துக்கு முந்தி கைய வச்சுடாத. செவந்தி, சொந்த அயித்த மவளா இருந்தாலும் மஞ்சக் கயித்த தொட்டுட்டு அவளத் தொடு கருப்பு. நம்ம வூரு வழக்கம் தெரியுமில்ல?

    என்னிய தப்பா எடை போடாதீங்க மாமு. நான் அப்படிப்பட்டவன் இல்ல.

    தெரியும் கருப்பு. ஆனா செவந்தி நிறமும் உன் வயசும் எதுவும் நடக்கலாம்னு சொல்லுதே.

    செவந்தி அப்படிப்பட்டவ இல்ல மாமு. நானும் அப்படிப்பட்டவன் இல்லை. வரட்டுமா மாமு. சந்தைக்கு நேரமாச்சு.

    பெரியவர் மீது அவனுக்கு ஏராளமான மரியாதை. அவனைத் தப்பான எடை போடலாமா... அழகும் இளமையும் தனிமையும் கிடைத்தால் மனிதன் தவறு தான் செய்வான் என கணிக்கலாமா? சே, நம்ப மறுக்கிறார்கள்.

    இவர்கள் வாயை அடைக்கிற மாதிரி நல்லவர்களாய் வாழ்ந்து காட்டவேண்டும்.

    அதற்கு உண்டாகப் போகும் சோதனை, அவன் கொடுக்கப் போகும் விலை, அவன் அறியவில்லை.

    கிராமத்தில் நிலத்தில் பாதிக்கு மேல் பெரியவர் சதா சிவத்திற்குச் சொந்தமானது. மீதி பாதியில் அதிகம் சொந்தம் கொண்டவர் அவர் தங்கை கணவர் நெல்லியப்பர்.

    பெரியவரின் வீடே ஏதோ பழம் அரண்மனை போல காட்சியளிக்கும். பெரிய பெரிய தூண்களும், கடைந்தெடுத்த தேக்கு நிலைப் படிகளும் கதவுகளும் முகம் பார்க்கும்படியான வழவழப்பான நடையும் திண்ணைகளும் குட்டி அரண்மனைதான்.

    கிராமத்திலிருந்து நகரம் போய்ப் படிப்பவன் அவர் ஒரே மகன் சுப்பிரமணிதான்.

    கருப்புசாமியின் சொந்த அத்தைப் பெண் தான் செவந்தி. கிராமத்துப் பள்ளியில் ஐந்தாவது படித்தவள். அந்தக் கிராமத்தின் இப்போதைய கிளியோபாட்ரா.

    அவள் பிறப்பதற்குச் சில நாள் முன்பே தந்தை இறந்து விட்டிருந்தார், அவளைப் பெற்றுப் போட்டதுடன் உலக பந்தத்தை முடித்திருந்தாள் அவள் தாய்.

    கருப்புசாமியின் பெற்றோர் தான் அவளை அரவணைத்து ஆளாக்கினார்கள். அவள் மாமனுக்கு அவளை நிறையப் படிக்க வைக்க ஆசை. ஆனால் மாமிக்கோ மருமகள் அதிகம் படித்தால் தன்னை மதிக்க மாட்டாள். அடங்கி ஒடுங்கி நடக்க மாட்டாள் என்கிற கவலை. அது அவள் படிப்புக்கு வேட்டு வைத்தது.

    கருப்புசாமியின் தாயும் தந்தையும் புதுப்புணலில் குளிக்க துணி அலச என புறப்பட்டுப் போனார்கள்.

    திரும்புகையில் ஊரே கூடி நின்று வேடிக்கைப் பார்க்கப் பிரேதங்களாக வந்தார்கள்.

    கரையோரம் நின்று குளித்து துணி அலசிப் பிழிந்து நீர் குடத்துடன் வந்திருக்கலாம்.

    வழக்கமாய் எப்போதும் மனைவியுடன் அவர் போக மாட்டார். ஏதோ சபலம், போனார்.

    வெயிலின் செம்மண் சிகப்பு நீரில் வெள்ளித் தகடுகளாய் மின்னி மறையும் மீன்களைப் பார்த்ததும் அவன் தந்தைக்கு மீன் குழம்பு நினைப்பு வந்தது.

    மனைவி ஒரு பக்கம், கணவன் ஒரு பக்கம் என புதுப் புனலில் வேட்டியைப் பிடித்து நிற்க வேட்டியில் மீன்கள் சிக்கி, விடுதலைக்குத் துள்ளின.

    சுதந்திரத்திற்குப் போராடின.

    சிறிது நேரத்தில் ஏழெட்டு மீன்கள் சேர்ந்துவிட்டன. அதோடு. திரும்பி இருக்கலாம்.

    ஆசைக்கு அளவுகோல் உண்டா?

    சுழன்று ஓடும் புனலில் மீண்டும் மீண்டும் வேட்டி பிடித்தனர். தெரிய மீன் வேட்டியில் சிக்கிய மகிழ்ச்சியில் அவன் தந்தை கால் எடுத்து வைக்கையில்...

    சேற்றில் கால் சிக்க எங்கோ இழுத்துப் போயிற்று.

    கண் முன்னால்

    Enjoying the preview?
    Page 1 of 1