Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iraval Manaivi
Iraval Manaivi
Iraval Manaivi
Ebook103 pages48 minutes

Iraval Manaivi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114204129
Iraval Manaivi

Read more from Hamsa Dhanagopal

Related to Iraval Manaivi

Related ebooks

Reviews for Iraval Manaivi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iraval Manaivi - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    இரவல் மனைவி

    Iraval Manaivi

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    காற்று திருடனைப்போல் உள்நுழைந்து அவளைத் தொட்டுப் போகிறது. மேனி சிலிர்க்கும் ஒரு தொடர். ஆனால் காஞ்சனா அப்படியே சிலை போல அந்த சாளரத்தில் உறைந்திருக்கிறாள்.

    வெளியே வாகனங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. சில இளசுகள் சன்னலில் அமர்ந்திருக்கும் அந்த உயிர்ச் சிற்பத்தைப் பார்த்து பரவசித்துப் போகிறார்கள். இங்கே இந்த பாலவாக்கம் பங்களாவிற்கு வந்த நாளாய் அவள் இப்படி சிலா ரூபம் கொண்டவள் அல்ல. வீட்டு வேலைகள் ஒன்று மாற்றி ஒன்று என்று செய்திருப்பாள்.

    நேற்று எதிர்பாராமல் இவளே அறியாமல் உணராமல் நடந்தது... அப்படி சொல்லி தவறிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலுமா? அது முறையா?

    அறியாமல் உணராமல் என்று சொல்வது எப்படி நியாயமாகும். அறிந்தே உணர்ந்தே என்று சொன்னால்கூட பொருத்தமாகத்தான் இருக்கும். அதற்காக தவமிருந்த காலம்கூட ஒன்றுண்டு. அதை எப்படி தெரியாமல் என்று குற்றத்தைத் தூக்கி எறிந்துவிட முடியும். மணலில் அமர்ந்து எழுந்ததைப்போல தட்டி சரிப்படுத்திக் கொள்ள இயலவில்லையே.

    கதறி அழுதுவிட மனம் பரபரக்கிறது. உடல் கெஞ்சுகிறது. ஆனால் விழிகளின் நீர் வற்றிப் போய்விட்டதுபோல ஒரு மௌனம் குறித்து அவளை அலைக்கழிக்கிறது. இதோ அங்கே இந்த சாலை வாகனங்களின் ஆரவாரம் இல்லாத போது, கடல் அலைகளின் ஓசை ஓடிவந்து அவள் செவிகளில் செய்தி சொல்லவே செய்கிறது.

    ஆனால் காதுகளும் கண்களும் தங்கள் வேலையைச் செய்ய மறந்தன போல...

    ஸ்ரீநந்தன் வந்திருக்கக் கூடாது. ஏன் வந்தான். எதற்காக வந்தான்? மதுவண்ணன் ஊரில் இல்லாமல் இருப்பதை அறிந்து வந்திருப்பானோ.

    ஸ்ரீநந்தன் பொய் சொல்லி அவள் அறியாதவள். மது ஊரில் இல்லாதது தெரியாது என்று அல்லவா சொன்னான்.

    'ஸ்ரீநந்தன் நீ எதற்காக வந்தாய். என் அமைதி, மோனம் எல்லாவற்றையும் கொண்டு போகவா நீ வந்தாய்.'

    தொலைபேசி விடாமல் குரல் நீட்டுகிறது. யார்... அவள் கணவன் மதுவண்ணனாய் இருக்குமோ. டெல்லி போனவனின் வேலைகள் முடிந்து விட்டதா. இந்த மாலையில் மனைவியின் நினைவு வந்துவிட்டதோ.

    மதுவிற்கு இது தெரிந்தால்... அவள் என்ன செய்வாள். காஞ்சனா மெல்ல நடந்து போய் தொலைபேசியைக் கையில் எடுக்கிறாள்.

    காஞ்சி, எப்படி இருக்கிறே. நீ போன்ல பேசி மூணு மாசம் போல ஆகுதுடி. ஒரு வார்த்தை பேசக்கூடாதா. இங்கே உன் அண்ணாவும் அண்ணியும் வேலைக்குப் போயிடறாங்க. நான் மூணு குழந்தைகளையும் பார்த்துக்கவே சரியா இருக்கு. நீயோ ஒரு வரி கடுதாசிகூட போட மாட்டேங்கறே.

    அம்மா... அம்மாதான் இப்படி வாய் ஓயாமல் எதிர் நபர் ஏதும் பேசாத போதே பேசிக் கொண்டே போவாள்.

    அம்மா, நீ எப்படி இருக்கே. அதைச் சொல்லாம வேற ஏதேதோ சொல்றியே.

    எனக்கென்ன நான் நல்லாதான் இருக்கேன் காஞ்சி. நீ போன்ல பேசலாம் இல்லியா. உனக்கும் மாப்பிள்ளைக்கும் எதுவும் ஒத்துப். போகலையோன்னு நான் பயந்துட்டேன்.

    வேலை சரியா இருக்குமா. இங்கே அவர் கம்பெனியில் கொடுத்திருக்கிறது பங்களா டைப் வீடும்மா. வேலை ஒழியலை. எல்லோரும் சௌக்கியம்தானேமா.

    உம்... எல்லா வேலையும் என்னைச் செய்யச் சொல்லிட்டு உன் அண்ணி ஆபீஸ் போயிடறா. நான் மாடு போல உழைக்க வேண்டியிருக்கு. மாப்பிள்ளை எப்படி இருக்கார்.

    டெல்லி போய் இருக்கிறார் மது என்று சொல்ல வந்தவள், நாக்கைக் கடித்து அந்த சொற்களுக்குத் தடை சொல்கிறாள். உடனே அம்மா எதையாவது கேட்டுத் தொலைப்பாள்.

    இருக்கார்மா. ஒரு நடை நீ இங்கே வாயேன்மா. அங்கே அண்ணா வீட்லதான் இருக்கணுமா.

    வரலாம். நீ உண்டாகியிருந்தா அதைச் சாக்கா வச்சுட்டு நான் வந்துருவேன். இந்த மூணு வருஷமாய் ஒண்ணும் காணலையே. ஏண்டி ஏதும் விசேஷமா. நாள் தள்ளிப் போச்சா.

    காஞ்சனாவிற்கு இந்தப் பேச்சே பிடிக்கவில்லை. மெளனமாய் இருந்தாள். அப்படி இருந்தால் அம்மா ஏதோ நினைத்து கற்பனையில் லயித்துப் போவாள் என்பது நினைவில் நெருட அதெல்லாம் இல்லைம்மா. நீ வெறுமனே வாயேன். அப்படியே மெட்ராஸைச் சுத்திப் பார்த்துட்டு போவியாம். அங்கே திருச்சியையும் காவிரியையும் உச்சிப் பிள்ளையாரையும் கட்டிண்டு எத்தனை நாள் நிற்பியாம்.

    அம்மாவின் ஏக்கப் பெருமூச்சு இத்தனைக் கிலோமீட்டர் கடந்தும் காஞ்சனாவை வந்து தொடுகிறது.

    எங்கேடி முடியும் காஞ்சி. உன் அண்ணா வீட்டு லோன் போட்டிருக்கான். வீடு வேற கட்ட பிளான் போட்டிருக்கான். உன் அண்ணி வேலைப் பார்த்தாத்தான் முடியும். அதுக்கு நான் ஓடியாடி வேலை பார்த்தாகணும். மாப்பிள்ளையைக் கேட்டதா சொல். அவர் மனம் கோணாம நடந்துக்கோடி. ஒரு வார்த்தை என்னண்ட பேசச் சொல்லு.

    சரிம்மா.

    போனை வச்சுடறேண்டி. அப்புறம் போன் பில் எகிறிப் போச்சும்பான் உன் அண்ணன்.

    அம்மாவின் குரல் இவள் இதயத்தைத் தொட்டுவிட்டு தொலைந்து போயிற்று. இந்த மூன்று வருடங்களாய் அம்மாவின் எதிர்பார்ப்பு பொய்த்துக் கொண்டுதான்

    Enjoying the preview?
    Page 1 of 1