Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Malarum
Meendum Malarum
Meendum Malarum
Ebook105 pages42 minutes

Meendum Malarum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..

மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.

நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580114203233
Meendum Malarum

Read more from Hamsa Dhanagopal

Related to Meendum Malarum

Related ebooks

Reviews for Meendum Malarum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Malarum - Hamsa Dhanagopal

    http://www.pustaka.co.in

    மீண்டும் மலரும்

    Meendum Malarum

    Author:

    ஹம்சா தனகோபால்

    Hamsa Dhanagopal

    For more books

    http://www.pustaka.co.in/home/author/hamsa-dhanagopal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    ஜெய்ஷாலி கண்ணாடி முன் இருந்தாள். விதம் விதமாய் அலங்கரித்து பார்த்திருந்தாள். அலங்காரமே இல்லாதபோது இருக்கும் கவர்ச்சி, அலங்காரம் செய்த பின் இல்லை போலத் தோன்றியது. அலங்காரம் இல்லாமலே தந்தத்தில் கடைந்தெடுத்த அழகிய சிற்பம் போன்ற உடல்வாகு அவளுக்கு.

    பெண்கள்கூட பொறாமையுடன் இரண்டாவது முறை திரும்பிப் பார்த்து தங்களோடு ஒப்பிட்டு பெருமூச்சுவிடும் பேரழகின் சொந்தக்காரி அவள். தக்க கல்வியும் நல்ல பாதுகாப்பும் இருந்தால் அவள் அரச பரம்பரை போல இருந்திருப்பாள்.

    நகைகள், பட்டுச் சேலைகள் என மாற்றி மாற்றி அவள் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. சிரிக்கும்போது முகவாயில் குழி. கண்களில் தனியானதொரு கவர்ச்சி. மின்னல் தோற்கும் ஒளி. எதிர் நிற்பவரை ஒருமுறை பார்த்தாலே அவர்கள் இவள் காதலிப்பதாய் தப்புக் கணக்குப் போட வைக்கும் யவ்வனமும் எழிலும்.

    ஜெய் ஷாலிக்கு இத்தனை அழகிருந்தும் நல்லதோர் மாப்பிள்ளை கிடைத்து அவளைக் கைக்குள் மாணிக்கமாய் வைத்துத் தாங்க வேண்டும் என்று ஆசை. கனவிலும் நனவிலும் முகம் தெரியாத அந்தக் கணவனுடன் கொஞ்சல்தான். சல்லாபம்தான்.

    இவளைப் போன்ற வீடே சர்வமும் என்றாகிவிட்ட பெண்ணிற்கு-பத்திரிகைகள்கூட அதிகம் கிடைக்காத பெண்ணிற்கு வேறு என்னதான் பொழுது போக்கு இருக்க முடியும். இவள் தாய் பர்வத வர்த்தினி உயிருடன் இருக்கும்வரை இவள் பள்ளிக்கூட வாசல் மிதித்து வந்தாள். அப்போதே இவள் ஒன்றும் அப்படி நன்றாகப் படிக்கும் மாணவி அல்ல. ஏதோ பாஸாகிவிடும் ரகம். அப்படிப் பட்டவளுக்குத் தாயின் மறைவும் அதைத் தொடர்ந்து தந்தை மகாதேவ் நிறுத்திவிட்ட போது அப்படி ஒன்றும் பெரும் இழப்பாகத் தெரியவில்லை.

    அவளுக்கு வருத்தம் உண்டு; படிக்க முடியாததற்காக அல்ல. மனம் விட்டுப் பழகும் சிநேகிதிகளைப் பார்க்க முடியாமல் போனதற்காக.

    இப்படித்தான் ஆறு வருடங்கள் போன இடம் தெரியவில்லை. பன்னிரண்டாவது வயதிலிருந்து அவள் வீடுதான் பள்ளிக்கூடம். விளையாட்டு மைதானம். பள்ளித் தோழிகள் எல்லாம்.

    அவள் பத்திரிகைகளுடன் இருந்த நேரத்தைவிட வீட்டு வேலைகளுடன் இருந்த நேரம் அதிகம்.

    சமையல், வீட்டுப் பராமரிப்பு. துணி அலசிப் பிழிவது. தோட்டம் கவனிப்பது மின்சாரம் இல்லாதபோது நீர் இறைத்தல் எல்லாம் அவளேதான்.

    நல்ல காலம், வெளியே போய் வரும் வேலைகளை அவர் கவனித்துக் கொண்டார். அவளை அழைப்பதில்லை.

    இவள் இங்கே தன் அறையில் அலங்கரித்து நிற்கையில் அங்கே சமையல் உள்ளில் நானாவித சிற்றுண்டிகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. எல்லாம் சமையல்காரியும் அவள் பெண் கங்காவும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இவளைப் பெண் பார்க்க யாராவது வரும் போதெல்லாம் அவர்களை அழைத்து வருகிறார் இவள் தந்தை மகாதேவ்.

    இருபதுக்கும் மேற்பட்ட பொழுதுகள் அவர்கள் வருகையில் கழிந்திருக்கின்றன. இன்று வருபவனுக்காவது இவளையும் இவள் வீட்டையும் பிடிக்க வேண்டும். இவளை இவள் அழகை அவர்களுக்குப் பெரிதும் பிடித்துத்தான் இருக்கிறது. பிறகு எப்படித்தான் இந்த கல்யாணம் தட்டிப் போகிறதோ அவளுக்கே தெரியாது.

    கேட்டால் ‘இந்த இடம் தகையவில்லை' என்பார். தந்தைக்கும் பெற்ற மகளுக்கும் இடையே யாரோ பெரிய திரை தொங்க விட்டதைப்போல அவர் நடவடிக்கை இருக்கும். இவள் சாப்பிட ஏழெட்டு முறைகள் அழைத்தால்தான் வந்து சாப்பிடுவார். அதுவும் அவர் சாப்பிட்டு எழுந்து போனபின்பு இவள் சாப்பிட வேண்டும். இவளை எங்கும் அழைத்துப் போக மாட்டார்.

    குறைந்த பட்சம் வீட்டில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டிகூட கிடையாது. அவள் அக்கம் பக்கம் என போகக்கூடாது.

    இவள் பொழுது போக்கு மையம், தோழி, பேச்சுத் துணை எல்லாம் வீடுதான். இந்த கண்ணாடிதான். அப்படி இல்லாவிட்டால் அவர் அலுவலகம் போனபின்பு ஜன்னல் அருகே அமர்ந்து வேடிக்கை பார்ப்பாள். எந்த நேரம் யார் போவார்கள் என்று அவளுக்கு அத்துப்படி. தந்தை வருவதற்கு முன் அங்கிருந்து எழுந்து விடுவாள்.

    அவளை அங்கு பார்த்தால் அவருக்குக் கோபம் கொந்தளிக்கும். கையில் என்ன கிடைக்கிறதோ எடுத்து வீசுவார். அருகில் நின்றால் பின்னலை இழுத்து சுவரில் மோதுவார். வளர்ந்த மகள் என்கிற எண்ணம் அவரிடம் துளியும் இருந்ததில்லை.

    'இந்த துர்வாசரிடம் அம்மா எப்படித்தான் குடித்தனம் நடத்தினாள்! அதனால்தான் விரைந்து போய் சேர்ந்து விட்டாளோ' என எண்ணுவாள். அதையும் வாய் திறந்து சொல்ல முடியாது. ஏன் அம்மாவைப் பற்றி பேசினாலே அவருக்குக் கோபம்.

    ஜன்னலில் அமர்ந்து தெரு பார்க்கையில், குழந்தைகள் தங்கள் தந்தையின் கைகளில் அமர்ந்து போனால், இல்லை விரல் பிடித்து குதித்துப் போனால் அவளுக்குத் தன் விதி புரியும். விழிகள் நிறையும். தனக்கு மட்டும் ஏன் தாய் மறைந்து போனாள்? உயிருடன் இருக்கும் தந்தையும் இப்படி முகம் கொடுத்து இரண்டு சொற்கள் பேசாமல் - எப்போதும் போர்க்களத்தில் குடியிருப்பவர் போல... சிரித்துப் பேசினால் தூக்கில் போட்டு விடுவார்களோ என அஞ்சி வாழ்பவர் போல தந்தை இருக்கிறாரே என்கிற எண்ணம் அவளுக்கு உண்டு.

    ஒருமுறை அவள் ஜன்னலில் உட்கார்ந்து வழக்கம்போல தன்னை மறந்து வேடிக்கை பார்க்க, இவளுடன் ஏழாம் வகுப்பில் படித்த கீதா போய்க் கொண்டிருந்தாள். இவள் அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. அவளும் அடையாளம் கண்டு பேச வந்தாள்.

    இவளுடன் படித்தவர்கள் யார்

    Enjoying the preview?
    Page 1 of 1