Ennai Maranthean Thendrale
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Androru Naal Rating: 3 out of 5 stars3/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsEngirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal Rating: 5 out of 5 stars5/5Kalyana Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5
Related to Ennai Maranthean Thendrale
Related ebooks
Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Neerindri Oru Nadhi Rating: 0 out of 5 stars0 ratingsSollamaley... Sangeetha Rating: 0 out of 5 stars0 ratingsPonnaadai Rating: 4 out of 5 stars4/5Anbu Kadal Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Kanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5En Uyire Rating: 4 out of 5 stars4/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Nyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kaatru Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Arangerum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Amirtha Rating: 0 out of 5 stars0 ratingsThen Sinthum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Mannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Venpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Kalyana Pandhal Rating: 5 out of 5 stars5/5Kana Kanden Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Thozhi Rating: 5 out of 5 stars5/5Innoru Koodu Innoru Paravai Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Innoru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ennai Maranthean Thendrale
0 ratings0 reviews
Book preview
Ennai Maranthean Thendrale - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
என்னை மறந்ததேன் தென்றலே
Ennai Maranthean Thendrale
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
1
வீடு கல்யாணப் பெண் போல பூரண அலங்காரத்தோடிருந்தது. புது டிஸ்டம்பர் பூச்சு, கதவு ஜன்னல்களில் வர்ணப் பூச்சு, வாசற் கதவில் மாவிலைத் தோரணம், நிலைக் கதவுக்கு மேலிருந்த கஜலஷ்மிக்கு தடிமனான சாமந்தி ரோஜாப்பூ மாலை, தெருவடைத்துப் போட்டிருந்த மாக்கோலம்.
பார்த்தசாரதி வாசலில் நின்றபடி வீட்டை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார்.
திருப்தியாயிருந்தது.
வீட்டைச் சுற்றிச் சுத்தம் செய்து கொண்டிருந்த வேலை யாளை அழைத்து ஒரு சில உத்தரவுகளைக் கொடுத்து விட்டு உள்ளே வந்தார். கழுவி விடப்பட்டிருந்த சிமென்ட் தரை, காலில் சிலீரிட்டது. அந்தக் காலத்து தரை, மழமழவென்று இன்னும் பொலிவு மாறாமலிருந்தது. இப்படித் தரை போடுவதற்கு இப்போது ஆட்கள் இல்லை. டைல்ஸ் போடலாமே என்று எத்தனையோ பேர் பரிந்துரைத்தும் அவர் ஏற்கவில்லை. இந்த சிமென்ட் தரையின் சுகமும், சில்லிப்பும் அவர் ரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.
வெறுந்தரையில் காலும் கையும் பரத்தி முதுகு படிய படுக்கும்போது கிடைக்கும் சுகமும், ஆனந்தமாய் வரும் நித்திரையும் வேறு எதிலும் கிடைக்காது என்று தெரியும் அவருக்கு.
நாளை வீடு நிறைந்திருக்கும். இந்தப் பெரிய கூடம் நிறையப் பெண்களும், பிள்ளைகளும் பேரன் பேத்திகளுமாய் கூடியிருப்பார்கள். மூத்த பிள்ளை வயிற்றுப் பேரனுக்கு அடுத்த வாரம் திருமணம். சொந்த மண்ணில் வைத்துத்தான் தன் மகனின் திருமணம் நடக்க வேண்டும் என்பது பிள்ளையின் விருப்பம்.
பார்த்தசாரதிக்கு சந்தோஷமாயிருந்தது. உத்யோகம் காரணமாகப் பல ஊர்களிலும் சிதறியிருக்கும் தன் வாரிசுகளை ஒருமித்து ஒரே இடத்தில் பார்க்கப்போகும் உற்சாகத்தில் அவருக்குப் பத்து வயது குறைந்திருந்தது. ஒவ்வொரு ஏற்பாட்டையும் தானே பார்த்துப் பார்த்துச் செய்தார். முக்கியமாக இருபது வருடத்திற்கு முன் திருமணமாகி சான்பிரான்சிஸ் கோவுக்குச் சென்ற அவரது செல்லப் பெண் விலாசினியும், அவளது குடும்பமும் கூட கண்டிப்பாக இந்தத் திருமணத்திற்கு வருவார்கள்.
பிள்ளை சொன்னது அவரது சந்தோஷத்தைப் பல மடங்கு கூட்டியிருந்தது. கல்யாணமாகிச் சென்றதிலிருந்து இரண்டு முறைதான் இந்தியா வந்திருந்தாள் விலாசினி. உத்யோகம், குடும்ப பாரம் என்று அவள் இங்கு வந்து பதினான்கு வருடமாகப் போகிறது. மற்ற இரண்டு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் நினைத்தால் பார்க்கிற தூரத்திலிருக்க அவர் மிகவும் பிரியம் வைத்திருந்த விலாசினி மட்டும் எங்கோ கடல் கடந்து சென்று விட்டது அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
பத்து நாள் முன்பு பெண் அவரோடு பேசியிருந்தாள். கல்யாணத்திற்குக் கண்டிப்பாக வந்து விடுவதாகக் கூறினாள். மூன்று மாதமாவது அவளும் அவளது பெண்ணும் அவரோடு இருந்து விட்டுப் போவதாக வாக்களித்திருந்தாள். இரண்டு பிள்ளைகளுக்குப் பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை என்பதாலும், அவள் பிறந்த பிறகு அந்த வீட்டில் பல நன்மைகள் நடந்துள்ளது என்பதாலும் அவள் மீது அவருக்குத் தனி பாசம் என்பது எல்லோருக்கும் சொல்லும் காரணம்.
அதையும் மீறி விலாசினியிடம் காரணம் சொல்லத் தெரியாது ஒரு அன்பு இருந்தது அவருக்கு.
அவள் முகத்தில் நிரந்தரமாய் குடியிருக்கும் புன்னகையும், சாந்தமும் வேறு யாரிடமும் காண முடியாத ஒன்று. அதோடு கருணை, அறிவு, கர்வமற்ற நிலை, பணிவு, பண்பு இத்தனையும் சேர்ந்த பெண்ணைக் கடல் கடந்து அனுப்பும்பொழுது தன் உயிரில் பாதியைப் பிரிவது போல்தான் உணர்ந்தார்.
அவரையும் மீறி அவரது கண் கலங்கும், குரல் நெகிழும், இன்னும் பத்தே நாள்தாம்ப்பா, நான் உங்க முன்னாடி வந்து நின்னுடுவேன். உங்ககூட மூணு மாசம் முழுசா இருக்கப் போறேன். திருப்திதானே?
பத்து நாள் முன்பு அவள் சொன்ன நிமிடத்திலிருந்து அவர் கடிகாரத்தையும், நாட்காட்டியையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்.
பத்து நாள் பத்து யுகம் போலிருந்தது.
வீட்டை அவளுக்காகவே புதுப்பித்தார். மகளும், மருமகனும் பேத்தியும் தங்கப்போகும் அறைகளுக்கு ஏசி பொருத்தினார். அவர்களது உபயோகத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கி வைத்தார்.
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பேத்தி நந்தனாவுக்கு பிடித்தமானவற்றையும் பெண்ணிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு வாங்கி வைத்தார்.
ஆயிற்று. வீடு அவர்களை வரவேற்கத் தயாராகி விட்டது. இன்னும் ஒரு இரவும் பகலும் கழிந்து விட்டால் பெண்ணையும் பேத்தியையும் மருமகனையும் கண்ணெதிரே கண்டு மகிழலாம்.
அவர் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. மற்ற பிள்ளைகள், பெண்ணின் குடும்பம் எல்லாம் வந்திறங்கியதும் வீடு கலகலப்பாயிற்று. பேச்சும் சிரிப்பும், பொங்கியது. விலாசினியின் குடும்பத்தை வரவேற்க அனைவரும் தயாரானார்கள்.
***
யாரு ஏர்போர்ட்டுக்குப் போகப் போறது?
பார்த்த சாரதியின் மனைவி தேவகி கேட்க, அனைவரும் நான் நீ என்று புறப்படத் துடித்தார்கள்.
எல்லாரும் போய்ட்டா வீட்ல யார் மத்த வேலையெல்லாம் கவனிக்கறது?
அப்பா நீங்க சொல்லுங்க, யார் போகட்டும்?
யாரும் வேணாம், நான் மட்டும் போறேன், போதும்.
நீங்க மட்டும் தனியாவா?
உங்களைத் தனியா அனுப்பிட்டு என்னால் கவலைப்பட முடியாது. வயசான காலத்துல என்ன பிடிவாதம்? பசங்க போய்க் கூட்டிட்டு வரட்டும். நீங்க இங்கயே இருங்க.
மனைவி தீர்மானமாகச் சொல்ல, அவர் மறுக்கவில்லை. மூத்தவனை அனுப்பி விட்டு வாசலிலேயே அமர்ந்தார்.
வடை பாயசத்துடன் உள்ளே விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.
இளைய மகன் வயிற்றுப் பேரன் அவசரமாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தான்.
ஏண்டா ஸ்ரீதர் எங்க கிளம்பிட்ட?
ஆபீஸ்ல அர்ஜன்ட்டா கூப்பிடறாங்க தாத்தா, போய்ட்டு வந்துடறேன்.
"என்ன ஆபீஸோ, காலேல போனா பாதி