Karpoora Kaatru
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsChinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Veezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Ullam Kavarven Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Androru Naal Rating: 3 out of 5 stars3/5Engirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsSavithriyin Kathapaathiram Rating: 4 out of 5 stars4/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karpoora Kaatru
Related ebooks
Nenjaththil Nee Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsOttrai Roja Rating: 5 out of 5 stars5/5Malathi Oru Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Karaiyaangal Rating: 5 out of 5 stars5/5En Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Nokki... Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsSuriyagrahanam Rating: 5 out of 5 stars5/5Oru Kaathal Crime Rating: 0 out of 5 stars0 ratingsPeyar Solla Mattean Rating: 0 out of 5 stars0 ratingsSaayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Marumagal Rating: 0 out of 5 stars0 ratingsGopura Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsUravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsSippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Unnodu Naan Ennodu Nee Rating: 4 out of 5 stars4/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsKaanalai Thedum Kaveri Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karpoora Kaatru
0 ratings0 reviews
Book preview
Karpoora Kaatru - Vidya Subramaniam
http://www.pustaka.co.in
கற்பூர காற்று
Karpoora Kaatru
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
எங்கிருந்து இத்தனை மேகங்கள் வானத்தில் குவிந்தன என்று தெரியவில்லை. சற்று முன் வரை பளிச்சென்றிருந்த வானம் நிமிடத்தில் மப்பு தட்டிக்கொண்டு குளிர்ந்தகாற்றும் வீசத்தொடங்கியது. இதமான இந்த சீதோஷ்ணம் மனதில் இனம் புரியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது. சந்தோஷத்திற்கு காரணம் இதுமட்டுமல்ல. அமெரிக்காவிலிருந்து அபிஷேக் வருகிறான்.
எட்டு வருடமாகிறதா அவனைப் பார்த்து இந்த எட்டு வருடத்தில் தான் எவ்வளவு புயல்கள்.
அபிஷேக் அவனுடைய சொந்த அத்தையின் பிள்ளைதான். அத்தையின் புருஷன் திடீரென்று செத்துப்போன பின், அத்தையும் அவனும் இவர்கள் வீட்டுக்கு தான் அடைக்கலம் கேட்டு வந்திறங்கினார்கள். அப்போது அபிஷேக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருந்தான். அப்பா அவனை அரவணைத்து தைரியம் சொல்லி உள்ளே அழைத்துச் செல்ல, அம்மாவோ; அவர்கள் இருவரையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு போனாள். அர்ச்சனாவுக்கு அம்மா அப்படி செய்தது வருத்தமாக இருந்தது, ஆனால் அம்மாவின் சுபாவத்தை மாற்ற முடியாது.
நன்கு வாழ்ந்தவர்கள் நொடித்துப் போனால் இப்படித்தான், உறவுகள் முகம் சுளிக்கும் போலும் புருஷன் வழி உறவு என்றால் சுளிப்பு இன்னும் அதிகமாகிவிடும். அம்மா சராசரி பெண்மணிதான் யாரைப் பார்த்தாலும், அவர்களது புடவையின் மதிப்பு, அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களின் மதிப்பு எவ்வளவு என்று அவள் மனசு கணக்குப் போடும். அவர்கள் காரில் வந்து இறங்கினால் கேட்கவே வேண்டாம் அதே நேரம் அவர்கள் தன்னை விட பணக்காரர்களாக இருந்துவிட்டால் அம்மாவின் முகம் வாடிவிடும்.
பொல்லாத வைர அட்டிகை! பெரிய ரங்கூன் வைரம்! அதைப் போட்டு அலட்டிண்டாஆச்சா? எங்களுக்கு வைரம் ஆகாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
அப்பாவிடம் வந்து குமுறுவாள்.
சரியான அசடுடி பிருந்தா நீ வைரம் ஆகாதுன்னா அதை ஏன் காதுல போட்டுண்டிருக்கன்னு அந்த மாமி கேக்கலையாக்கும்?
கேட்டிருந்தா இது இண்டியன் வைரம்னு சொல்லியிருப்பேன். நாங்களாம் பி இண்டியன் பை இண்டியன் எங்களுக்கு ரங்கூன் வைரம் தான் ஆகாதுன்னுர்ப்பேன்.
அப்பாவும் அர்ச்சனாவும் சிரிப்பை அடக்கிக் கொள்வார்கள். அம்மாவின் சுபாவம் அப்படி தனக்கு சமமானவர்களோடு தான் பேசுவாள். அப்படிப்பட்டவளிடம் அடைக்கலம் தேடி அத்தை வந்திருக்கக்கூடாது. ஆனால் வேறு வழியில்லாது வந்துவிட்டாள்.
அத்தையின் குடும்பமும் வசதியான குடும்பம்தான். அத்தையின் கணவர் பிஸினஸில் நிறைய தான் சம்பாதித்தார். வருடத்தில் பாதிநாள் ஊரில் இருக்க மாட்டார்.
அவர் செத்த பிறகு தான் அவருடைய மறுபாதி வாழ்க்கை வெளிச்சமாயிற்று. அவர் காலடியில் அத்தை மட்டும் அழவில்லை. மற்றொரு பெண்மணியும் தலைவிரிகோலமாக அழத்துவங்கிய போது உறவுகள் அதிர்ந்தன.
பதினோரு வருஷமாச்சு இவர் என்னைக் கட்டிக்கிட்டு பெங்களூர்ல குடிவெச்சிருந்தார் இவரை நம்பி ரெண்டு பொண்ணை பெத்துக்கிட்டேன் இப்டி பாதிலயே என்னை தவிக்க விட்டுட்டு போய்ட்டாரே. நா என்ன செய்வேன்? எப்டி என் பொண்ணுங்களை கரைஏத்துவேன்?
அவர் தலையில் அடித்துக் கொண்டு அழுத அழுகையில் அத்தையின் அழுகை நின்றுவிட்டது.
பூமாலையோடு கிடத்தியிருந்த புருஷனை வெறுப்போடு பார்த்தாள். பிறகு எழுந்து உள்ளே போய் அபிஷேக்கை அழைத்தாள்.
உங்கப்பா நம்பளை ஏமாத்திட்டார்டா அபிஷேக். நா அவருக்கு என்ன குறைவெச்சேன்னு இப்டி...
இப்டி ஒரு துரோகத்தை செய்தவருக்கு நா கொள்ளி வெச்சு தான் ஆகணுமாம்மா?
அது கடன். அந்த கடனைத் தீர்த்துடு அதோட எல்லாத்துக்கும் தலைமுழுகிடுவோம் என்ன சொல்ற?
சரிம்மா.
எல்லாத்துக்கும் நா சொன்னதுக்கு அர்த்தம் புரிஞ்சுதா? இந்த வீடு வாசல், பணம் எல்லாத்துக்கும். இதுல உனக்கு வருத்தமில்லையே இனி இந்த மனுஷன் காசுல சாப்டறது எனக்கு கேவலம் என்னடா அம்மா இப்டி சொல்றாளேன்னு தோணித்துன்னா தாராளமா நீ இங்க இருந்து இதை எல்லாம் அனுபவி. நா போயிடறேன்.
இல்லம்மா. எனக்கு நீ தான் வேணும்.
அபிஷேக் தீர்மானமாகச் சொன்னான். பதிமூன்றுநாள் காரியமும் பல்லை கடித்துக் கொண்டு முடித்தான் காரியத்திற்கு வந்த தம்பியிடம் அத்தை மனசு விட்டு பேசினாள்.
எனக்கு உன் வீட்டுல அடைக்கலம் தருவாயாடா மூர்த்தி? எனக்கு சும்மா கூட சோறு போட வேண்டாம். அங்க வந்து நான் நாயா உழைக்கறேன் எம்பிள்ளையும் உனக்கு எடுபிடியா இருப்பான் ரெண்டு வேளை சோறு போட்டா போதும்.
என்னக்கா இப்டி சொல்ற. அது உன் வீடு உன்னைக் காப்பாத்த வேண்டியது என் கடமை. எப்பொ வேணா நீ வரலாம் அபிஷேக்கோட படிப்பைபத்தி கவலைப்படாதே நா இருக்கேன் பாத்துக்கறேன்.
அப்பா சொல்லி விட்டு வந்ததும் அம்மா அவர் மீது பாய்ந்தாள் அறிவிருக்கா உங்களுக்கு? இங்க என்ன பணம் ஆறா ஒடறதாக்கும்.
எல்லார்க்கும்அள்ளிஅள்ளிகொட்ட! புருஷன் தப்பு பண்ணிட்டு போய்ச் சேர்ந்தாச்சு இருக்கற சொத்தை வீசி எறிஞ்சுட்டு வராளாம் என்ன ரோஷம் வேண்டிக்கிடக்கு ஊர் அறிய தாலி கட்டிண்டவ உதறிட்டு வருவாளம் திருட்டு தாலி கட்டிண்டவ பட்ட மகிஷியாட்டம் அந்த வீட்ல உலா வருவாளாம் உங்கக்காக்கு தான் புத்தியில்லன்னா உங்களுக்குமா?
இந்த காலத்துல பணங்காசு இல்லாட்டா கழுதை கூட மதிக்காதுன்னு சொல்லி அங்கயே இருக்கச் சொல்றதை விட்டு இங்க வந்துடுங்கோன்னு தாம்பூலம் வெச்சு அழைச்சுட்டு வந்துர்க்கேளே."
மூர்த்தி அவளை அமைதியாகப் பார்த்தார் மனிதர்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள இயலாதவர்களுக்கு எல்லாமே குற்றமாகத்தான் தெரியும்.
இதோ பார் பிருந்தா எங்கக்கா இங்க வரதுனால உன்னோட எந்த செளகர்யமும் குறைஞ்சுடாது. அப்டி குறைஞ்ச மாதிரி உனக்கு தோணித்துன்னா என்னை செருப்பால அடி. இந்த விஷயத்தை இதோட விட்ரு எங்கக்கா இங்கதான் வருவா. அவ வரக்கூடாதுன்னு சொன்னா நா இங்க இருக்க மாட்டேன். வேற ஒரு வீடு எடுத்து அக்காவோட நானும் அங்க இருந்துடுவேன்.
அப்பா மிக உறுதியான குரலில் பேச அம்மாவின் வாயடைத்துப் போயிற்று.
அத்தையும் அபிஷேக்கும் அதற்கடுத்த வாரம் வந்தார்கள். சின்ன சூட்கேஸ் ஒன்றில் இருவருடைய துணிமணிகள் மட்டுமே அவர்கள் கொண்டு வந்த சாமான் மற்றபடி ஒரு தூசி கூட அங்கிருந்து எடுத்து வரவில்லை.
அவர்கள் இருவரையும் பார்த்தாலே அம்மாவின் முகத்தில்