Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaavalai Meeriya Kaatru
Kaavalai Meeriya Kaatru
Kaavalai Meeriya Kaatru
Ebook94 pages51 minutes

Kaavalai Meeriya Kaatru

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2017
ISBN9781043466053
Kaavalai Meeriya Kaatru

Read more from Parimala Rajendran

Related to Kaavalai Meeriya Kaatru

Related ebooks

Reviews for Kaavalai Meeriya Kaatru

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaavalai Meeriya Kaatru - Parimala Rajendran

    15

    1

    அந்த அகன்ற தெரு, வசதியானவர்கள் வாழும் தெரு என்பதை அங்கு இருந்த வீடுகளின் மூலம் தெரியப்படுத்தியது.

    தனித்தனி வீடுகள். சுற்றிலும் காம்பவுளண்டு சுவர்கள். தெருவில் வளர்ந்திருந்த பெரிய மரங்கள், தங்கள் கிளைகளை அகல விரித்து அந்த இடத்தை நிழலாக்கி, தென்றல் காற்றை அனுப்பிக் கொண்டிருந்தன.

    மூன்றாம் எண் போட்ட, அந்த வீட்டின் முன் ஒரு சிறிய கூட்டமே கூடியிருந்தது.

    காம்பவுண்ட் சுவரை பிடித்து எட்டி, எட்டி பார்த்தபடி, வெளிகேட்டில் இரண்டு போலீஸ்காரர்கள் இருக்க...

    உள்ளே சிந்தனை கோடுகள் நெற்றியில் தெரிய, நின்று கொண்டிருந்தார் க்ரைம் ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் ரகுபதி.

    வீட்டினுள் அழுகுரல் வாசல் வரை கேட்டது.

    ‘‘எதுக்கு இங்கே இவ்வளவு கூட்டம்... என்னாச்சு...?" கூட்டத்தில் ஒருவர் கேட்க,

    "ஒரு கொலை நடந்துடுச்சாம்.’’

    ‘‘என்னது கொலையா...?’’

    "அட இல்லப்பா... அந்த வீட்டில் ஒரு பெண் தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்.’’

    "இரண்டு வயசிலும், நாலு வயசிலும் இரண்டு பிள்ளைகள். பாவம்... புருஷன் பெரிய இஞ்சினியராம்... என்ன கஷ்டமோ... தெரியலை...’’

    ‘‘பெரிய இடத்து சமாசாரம்... நமக்கெங்கே புரிய போகுது...’’

    கீரைக்காரி, கூடையை இறக்கி மரத்தடியில் வைத்தவள்,

    அந்த அம்மாவை எனக்கு நல்லாத் தெரியும். சின்ன வயசுதான். தங்கமான குணம். சாகற வயசா அது... என்கிட்டே அப்பப்ப கீரை வாங்குவாங்க. இப்படி அற்பாயுசிலே போய் சேர்ந்துட்டாங்களே மகாராசி.

    எல்லாம் நகருங்க...

    ஆம்புலன்ஸ் நுழைய,

    அடுத்த பத்தாவது நிமடம், ஸ்டெர்ச்சரில் பாடி ஏற்றப்பட்டு, வேன் புறப்பட...

    கூட்டம் கலையத் தொடங்குகிறது.

    கீர்த்தனா... கீர்த்தி... அழகின் சுரங்கம்.

    பிரம்மா, சில பேரை தான் எந்த குறையுமில்லாமல் நேர்த்தியாக படைத்திருப்பான்.

    அதில் ஒருத்தி தான் கீர்த்தனா.

    அவளுக்கேற்ற ராஜகுமாரனாய் அவள் கணவன் விஜயன்.

    ஆறு வருட தாம்பத்யம். அழகாய் இரண்டு குழந்தைகள்.

    வெளியில் பார்க்க எந்த குறையுமில்லாமல் வாழ்ந்தவர்கள்.

    இன்று கீர்த்தனா இந்த உலகில் இல்லை. அந்த அழகிய மலர் உதிர்ந்துவிட்டது.

    நொடிகளில் மாறக்கூடியது வாழ்க்கை என்பது எவ்வளவு உண்மை. கணவன், குடும்பம், குழந்தை என சிறு கூட்டுக்குள் வாழ்ந்த பறவை பறந்துவிட்டது.

    நிலைகுலைந்து போயிருந்தாள் மரகதம்.

    ஒரே மகள்... நான் இருக்க... போய்விட்டாளே... அழுதழுது முகம் சிவந்திருந்தது. விஜயனின் காலை கட்டியபடி உட்கார்ந்திருந்த பேரன்களை பார்க்க,

    அடிவயிற்றில் துக்கம் பந்தாய் சுருண்டது.

    விஜயனின் அண்ணன் கதிர்வேலன், உள்ளே வந்தார்.

    ‘‘அத்தை, கீர்த்தனாவின் இழப்பு யாராலும் ஜீரணிக்க முடியாததுதான். அதுக்காக பெரியவங்க நீங்களே இப்படி ஒடிஞ்சுபோய் உட்கார்ந்தா... இந்த குழந்தைகளை யார் பார்க்கிறது..."

    "முடியலை தம்பி... சாகற வயசா என் மகளுக்கு... மாப்பிள்ளையை பாருங்க... உயிரே போனதுபோல சிலையாக இருக்காரு... இனி இந்த குடும்பம் எப்படி நிமிர போகுது...?

    இந்த குழந்தைகள் தாயில்லாமல் வாழணுமா...? கடவுளே இது உனக்கே அடுக்குமா...’’ வாய்விட்டு கதறுகிறாள்.

    "என்ன செய்யறது... விதி. அந்த பித்தளை பூ ஜாடி உருவில் வந்திருக்கு.

    பரணிலிருந்த அந்த ஜாடி தவறி அங்கு உட்கார்ந்திருந்த கீர்த்தனாவின் மண்டையில் விழணும்னு விதி இருந்திருக்கு.

    உச்சி மண்டையில் அடிபட்டு, நிமிஷமாய் போயிட்டா... இது கொலையும் இல்லை... தற்கொலையும் இல்லை. தற்செயலான விபத்துன்னு சொல்லிட்டாங்களே... இதுக்கு மேலே நாம் என்ன செய்ய முடியும்...?

    அடுத்து ஆகவேண்டிய காரியங்களை பார்க்கணும்...’’ சொன்னவர்,

    "விஜய் எழுந்திரு... குழந்தைகளை பாரு... கண்ணுங்களா, பெரியப்பா கிட்டே வாங்க...’’

    ‘‘நாங்க வரமாட்டோம். எனக்கு அம்மா வேணும்...’’ நான்கு வயது ஆதி, அழ ஆரம்பிக்க...

    இரண்டே வயது நிரம்பிய அருணும் புரியாமல் அழுகிறான்.

    விஜயனின் கண்களில் மடை திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருகுகிறது.

    ஆவேசம் வந்தவள் போல், இடத்தை விட்டு எழுந்திருக்கிறாள் மரகதம்.

    "இல்லை... என் மகள் தற்செயலாக சாகலை. இது கொலைதான். யாரோ அவளை கொலை பண்ணியிருக்காங்க. இதை நான் சும்மா விடமாட்டேன்.

    என் மகளுக்கு கொடுக்கணும்னு காப்பாத்தி வச்ச சொத்து முழுக்க கரைஞ்சாலும் பரவாயில்லை...

    எனக்கு நியாயம் கிடைக்கணும். என் மகள் சாவுக்கு காரணம் யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும்...’’ வேகமாக வெளியேறுகிறாள்.

    ‘‘என்னம்மா சொல்றீங்க...?"

    ‘‘எனக்கு நியாயம் வேணும் சார். மனுஷ உயிர் என்ன அவ்வளவு மலிவானதா...?

    அப்பனில்லாம வளர்ந்தவ சார் என் மகள். ஒரு குறை வைக்கலை.

    அவளுக்கு அமைஞ்ச கணவனும் அப்பழுக்கில்லாத வைரம். இந்த ஆறு வருஷம், அவர் வாழ்ந்த வாழ்க்கையை பார்த்து பூரிச்சு போனேன். நிமிஷமாய் கடவுள் எல்லாத்தையும் பறிச்சுட்டானே..."

    ‘‘என்னம்மா இது... உங்க வருத்தம் எனக்கு புரியாமலில்லை. தற்செயலாக நடந்த விபத்துக்கு நாங்க என்ன செய்ய முடியும்...?’’

    "இல்லை, இது. விபத்து இல்லை. கொலை சார். என் மகள்

    Enjoying the preview?
    Page 1 of 1