Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Neerindri Oru Nadhi
Neerindri Oru Nadhi
Neerindri Oru Nadhi
Ebook104 pages40 minutes

Neerindri Oru Nadhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரனுடன் பிறந்தாலும் கஸ்தூரி தன் தந்தைக்கு மிகவும் செல்லமான பெண். கஸ்தூரியின் தாய் தந்தை இருவருமே கடுமையான உழைப்பாளிகள். கஸ்தூரிக்கு அரசு பணி கிடைத்தது.

கணவனின் பரிபூரண அன்பு மற்றும் தன் தந்தையின் அளவற்ற பாசத்தையும் பெற்றவளுக்கு. தன் தாயின் பாச நதியில் நனையும் வாய்ப்பு கிடைத்ததா?

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580105706783
Neerindri Oru Nadhi

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Neerindri Oru Nadhi

Related ebooks

Reviews for Neerindri Oru Nadhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Neerindri Oru Nadhi - Vidya Subramaniam

    https://www.pustaka.co.in

    நீரின்றி ஒரு நதி

    Neerindri Oru Nadhi

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    சென்னை செல்லும் பேருந்து புதுவையைவிட்டுப் புறப்பட்டதும் கடிகாரத்தைப் பார்த்தாள் கஸ்தூரி. ஆறடிக்கப் பத்து நிமிடமிருந்தது. எப்படியும் சென்னையை அடைய எட்டரை அல்லது எட்டேமுக்கால் ஆகிவிடும். கத்திப்பாராவிலிருந்து மற்றொரு மாநகரப்பேருந்தைப் பிடித்து வீடுபோய்ச் சேர எப்படியும் மணி ஒன்பதைத் தாண்டிவிடும். வினயாகுட்டி தூங்கியே போயிருக்கும். வழக்கமாக வெள்ளிக்கிழமை நாலுமணிக்கே அனுமதி வாங்கிக்கொண்டு அலுவலகத்தைவிட்டுப் புறப்பட்டு விடுவாள். இன்றைக்கு முடியவில்லை. இன்ஸ்பெக்‌ஷன் அது இது என்று தாமதமாகிவிட்டது. ஐந்தரைமணிக்கு அனுப்பியதே பெரிய விஷயம். மற்றவர்களுக்கெல்லாம் இரவாகிவிடும் வீடு செல்ல. சென்னைக்கு மாறுதல் கிடைக்கும்வரை இந்த அலைச்சல் தவிர்க்க முடியாதது. அரசுப்பணியை வேண்டாம் என்று புறக்கணிக்கவும் முடியாது. பாவம், குழந்தைதான் அவளைப் பிரிந்து அல்லாடுகிறது. கஸ்தூரியின் அம்மாதான் அதைப் பார்த்துக்கொள்கிறாள். அதற்காகவே அம்மா வீட்டுக்கு அருகில் வீடு பார்த்துக்கொண்டு வந்திருந்தார்கள். மாமியார், முகத்திலறைந்தாற்போல், முடியாதென்று கூறிவிட்டாள்.

    உன் பொண்டாட்டி என்னை ரொம்ப மதிக்கறா பாரு. இதக்கு மட்டும் நான் வேணுமாக்கும்? சுவாமிநாதனிடம் ஒரு வண்டி குறை இவளைப்பற்றிச் சொல்லிப் புலம்பியிருக்கிறாள். பாவம், சுவாமிநாதன்! தாய்க்கும், மனைவிக்கும் இடையில் மாட்டிக்கொண்டு வாய்திறக்கவே யோசித்தான். அம்மாவை வற்புறுத்த இயலாது. என்ன செய்யலாம்? என்று கஸ்தூரியிடம் கேட்டான்.

    பாத்துக்காட்டா போகட்டுமே. அதுக்காக அவ கால்லபோய் விழுவோமாக்கும். எங்க வீட்ல இப்படிச் சொல்லமாட்டாங்க. அதனால தனியா போய்டுவோம். எங்கம்மா வீட்டுகிட்டயே வீடு பாத்துக்குவோம்.

    சுவாமிநாதன் திகைத்தான். ‘தனிக்குடித்தனம் என்று சொன்னால் அம்மாவும் அப்பாவும் அதற்குச் சம்மதிப்பார்களா அல்லது கூடாதென்று சண்டை போடுவார்களா? எப்படிச் சொல்வது?’ என்று யோசித்தான்.

    நீ முதல்ல உங்க வீட்ல விஷயத்தைச் சொல்லி, குழந்தையைப் பாத்துக்க முடியுமான்னு கேளு. அதுக்கப்புறம் இங்க பேசுவோம். அப்போதைக்கு ஏதோ சொல்லி நழுவினான்.

    அவள் அடுத்தநாளே தன் பிறந்தவீட்டுக்குச் சென்றாள் - வினயாவையும் தூக்கிக்கொண்டு. குழந்தையைப் பார்த்ததும் தம்பி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டான்.

    என்னடா ஆபீஸ் போகல இன்னிக்கு?

    போகணும். மத்தியானத்துக்கு மேல போவேன். அவன் வினயாவுடன் விளையாட ஆரம்பித்தான்.

    என்னடி இந்த நேரத்துல வந்திருக்க?

    சொல்றேன். அப்பா எங்க?

    கடைக்குப் போனார். என்ன விஷயம்? சொல்லேன்.

    ஏங்க்கா. வேலை கிடைச்சதுக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தயா நீ? தம்பி உள்ளறையிலிருந்து சத்தமாகக் கேட்டான்.

    இந்தா, வாங்கிட்டு வா. கஸ்தூரி பர்ஸைப் பிரித்து ரூபாய் எடுத்து நீட்டினாள்.

    வேணா வேணாம்… கேட்டாதான் தருவியாக்கும்.

    போடான்னா. அவள் ரூபாயை அவன் கையில் திணிக்க, அவன் வினயாவையும் தூக்கிக்கொண்டு கடைக்குப் போனான்.

    அப்பா வந்துட்டாரு. வாசலிலிருந்து குரல் கொடுத்துவிட்டுப் போனான்.

    அப்பாவின் முகம் கஸ்தூரியைக் கண்டதும் மலர்ந்தது.

    எப்பொம்மா வந்த? மாப்ள வரல?

    இல்ல. என்னை விட்டுட்டு ஆபீஸ் போய்ட்டாரு. சாயங்காலம் வந்து கூட்டிட்டுப் போறேன்னாரு. உங்ககிட்ட ஒரு உதவி கேக்கத்தான் வந்தேம்பா.

    என்னம்மா?

    மாமியார் எம்பொண்ணைப் பாத்துக்கமாட்டேன்னுட்டாங்க.

    ஏனாம்? அப்பாவின் முகம் மாறியது.

    எப்படா கழுத்தறுக்கலாம்னு காத்துட்டிருந்தாங்க இல்ல? இப்ப அதுக்குச் சரியான சமயம். புத்தியைக் காட்டறாங்க.

    அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. அம்மா குறுக்கிட்டுத் தொடர்ந்தாள்.

    அப்படியெல்லாம் விட்ரமாட்டாங்க. பேரப்பொண்ணுமேல அவங்களுக்கு மட்டும் பாசமிருக்காதா என்ன? காரியம் ஆவணும்னா நீயும் கொஞ்சம் பணிஞ்சுதான் போகணும். நீ அதிகாரமா கேட்டிருப்ப.

    "உனக்குத் தெரியுமா? பாத்தியா நீ? நான் எதுவுமே தப்பா பேசல பணிவாத்தான் சொன்னேன். வேலை கிடைச்சிருக்கு. அரசாங்க வேலை. பாண்டிச்சேரி பக்கத்துலன்னு. கொஞ்சமாச்சும் சந்தோஷப்படணுமே. உம்முனு கேட்டுட்டிருந்தாங்க. அடுத்தவாரம் சேரணும். குழந்தையும் இவரும் இங்கதான் இருப்பாங்க. நான் மட்டும்தான் போறேன். வாரா வாரம் வந்துட்டுப்போவேன். குழந்தையை நீங்கதான் பாத்துக்கணும்னு சொல்றேன். முடியாதுன்னு பட்டுனு ஒரு பதில். உம்பொண்டாட்டி என்னை மதிக்கற அழகுக்கு நான் ஏன் பாத்துக்கணும்னு கேக்கறாங்க. எதுக்கும் எதுக்கும் முடிச்சுப்போடறது? அவங்க பையனுக்குப் பொறந்த குழந்தைன்னு கொஞ்சம்கூடப் பாசமில்லாம பேசறாங்க. இதுக்குமேல ரோஷம் கெட்டுப்போய் கால்லயா விழுவாங்க? பாத்துக்காட்டி போங்க,

    Enjoying the preview?
    Page 1 of 1