Vedhamadi Nee Enakku...
By R. Sumathi
()
About this ebook
இரு வீட்டார் எதிர்ப்பிலும் காதல் திருமணம் செய்யும் ஜேம்ஸ், வித்யா. வித்யாவை சந்திக்க வரும் அவளது தங்கை வேதா. வித்யா கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர்களிடம் கூறுகிறாள்.
வித்யா மகப்பேறு காலத்தில் தன் தாயின் துணையை விரும்பி பெற்றோர்களிடம் கெஞ்சுகிறாள். அதை வித்யாவின் தந்தை மறுக்க, மகப்பேறு காலத்தில் குழந்தையை பெற்றுவிட்டு இறக்கிறாள் வித்யா. வித்யாவின் மரணத்திற்கு பிறகாவது அவளின் தந்தையின் மனம் மாறியதா? வித்யாவின் குழந்தை நிலை என்ன? அந்த குழந்தையால் வேதாவின் வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம் என்ன? தொடர்ந்து வாசிப்போம்.
Read more from R. Sumathi
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsVannakili Seitha Maayam Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Ethanai Kanavugal... Rating: 0 out of 5 stars0 ratingsUyiroviyam Unakkagathan Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Veenai Thoonguvathillai... Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsMalligai Panthal Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Unathu Kaanikkai Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kiliyai Maarava? Rating: 0 out of 5 stars0 ratingsIlaiya Manathu Inaiyum Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsThaamarai Thottil! Rating: 0 out of 5 stars0 ratingsKovil Purakkal! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vedhamadi Nee Enakku...
Related ebooks
Pirivu Ini Illai Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Ullam Irandum Ondru Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthathu Rating: 3 out of 5 stars3/5Thoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Pani Vizhum Malar Vanam! Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Thilaitha Uravu… Rating: 4 out of 5 stars4/5Anal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsIlamai Kaatru Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Thaimai Marappathillai! Rating: 0 out of 5 stars0 ratingsPenalla Penalla Rojapoo Rating: 0 out of 5 stars0 ratingsSiragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Antha Vanam Enthan Vasam Rating: 0 out of 5 stars0 ratingsPoo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Anbin Niram Maarathu Rating: 0 out of 5 stars0 ratingsSol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsKai Arugil Thendral Rating: 5 out of 5 stars5/5Neeyum Naanum Ondru Than Rating: 0 out of 5 stars0 ratingsInithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Vasantham! Rating: 0 out of 5 stars0 ratingsOonjalaadum Nenjam Rating: 4 out of 5 stars4/5Ketkkum Varam Kidaikkum Varai Rating: 0 out of 5 stars0 ratingsPalaar Rating: 0 out of 5 stars0 ratingsPiriyaudan Oru Vaarththai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vedhamadi Nee Enakku...
0 ratings0 reviews
Book preview
Vedhamadi Nee Enakku... - R. Sumathi
https://www.pustaka.co.in
வேதமடி நீ எனக்கு...
Vedhamadi Nee Enakku...
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
https://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
அழைப்புமணி விடாது ஒலித்துக் கொண்டேயிருக்கது. பின் பக்கம் துணிக்காயப் போட்டுக் கொண்டிருந்த வித்யா யோசித்தவாறே வந்தாள்.
‘யாராக இருக்கும்? ஜேம்ஸ் இப்பத்தானே புறப்பட்டுப் போனார்!’
கதவைத் திறந்தாள். கண்களில் விழுந்த உருவம் அவளுக்குள் இன்ப அதிர்சியை உண்டு பண்ணியது.
தோளில் தொங்கிய தோல்பையை ஸ்டைலாக பிடித்தபடி சிரித்து முகம் காட்டி நின்றிருந்தவளைக் கண்டதும் உயிர்வரை பரவசப்பட்டவளாக விழிகளை ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் விரித்தாள் வித்யா
வேதா… வேது குட்டி…
சட்டென்று முன்னால் வந்து அவளை இறுகத் தழுவிக் கொண்டாள். வேதாவின் கரங்களும் வித்யாவை தழுவிக் கொண்டன.
சில கணங்கள் கழித்து இருவரும் பிரிந்த போது நான்கு விழிகளிலும் இடிக்காமல் மின்னாமல் மழை உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.
வாடி உள்ளே வா!
கைப்பற்றி உள்ளே அழைத்து வந்தான்.
சோபாவில் அவளை அமர்த்திவிட்டு தானும் அருகிலேயே அமாந்துக் கொண்டு வேதாவின் கையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.
வேதா... எப்படி கண்டு பிடிச்சே? நான் இங்கயிருக்கேன்னு எப்படி தெரியும்?
விஜயலட்சுமி தெரியுமா?
ஆமா! உன் ஃபிரண்ட்... பங்களா தெருவுல இருக்காளே..
அவதான். அவ அண்ணன் இங்கதான் அண்ணாமலையில படிக்கிறானாம். அத்தானைப் பார்த்திருக்கான். வீட்ல வந்து சொல்லியிருக்கான். காலேஜ்ல விஜயலட்சுமி சொன்னா… அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். ஆமா... சிதம்பரத்துக்கு எப்போ வந்தே...?
மூணு மாசம் ஆகுது. அண்ணாமலையில அத்தானுக்கு போஸ்ட் கிடைச்சிருக்கு. அம்மா அப்பா எப்படியிருக்காங்க?
நல்லாயிருக்காங்க…
அப்பா அப்படியேதான் இருக்காரா?
ஆமா! துளிகூட மாற்றம் இல்லை. கோபம் ஆத்திரமெல்லாம் கூடியிருக்கே ஒழிய குறையலை. உன்னைப்பத்தின பேச்சு அடிபட்டா போதும். அடிபட்ட புலிமாதிரி குதற ஆரம்பிச்சுடுவார்.
வித்யா தலைகுனிந்தாள். முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
விடுக்கா! அப்பாவோட சுபாவம்தான் தெரிஞ்ச விஷயமாச்சசே நீ எப்படியிருக்கே? சந்தோஷமாயிருக்கியா?
எப்படி சந்தோஷமாயிருக்க முடியும்? உங்களையெல்லாம் பார்க்க முடியாம பேச முடியாம அம்மா கையால ஒரு வாய் சாப்பிட முடியாம... எப்படி சந்தோஷமாயிருக்க முடியும்?
சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.
சட்டென்று அக்காவை தோளில் சாய்த்துக் கொண்ட வேதா அப்பொழுதுதான் கவனித்தாள் அக்காவின் வயிறு மேடிட்டிருந்தது.
ஹேய் பொய்யா போசறே சந்தோஷமா இல்லைன்னு? சந்தோஷமா இல்லாம இதெப்படி?
வித்யாவின் வயிற்றை தொட்டாள்.
சட்டென்று சோகம் மறந்து சிரித்தாள் வித்யா
ச்சீ…
வெட்கப்பட்டாள்.
எத்தனை மாசம்?
மறுபடியும் வித்யாவை அணைத்துக் கொண்டாள்
எவ்வளவு சந்தோஷமாயிருக்குத் தெரியுமா? அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க…
"நீ இங்க வந்தது அம்மாவுக்குத் தெரியுமா?
தெரியாது. நான் வந்தது மட்டும் இல்லை, நீ சிதம்பரத்துக்கு வந்திருக்கறது அம்மா அப்பாவுக்குத் தெரியாது.
நான் இப்படி இருக்கறது தெரிஞ்சா அம்மா என்னைப் பார்க்க ஆசைப்படுவாங்களாடி!
ஆசைப்படாம எப்படியிருப்பாங்க? ஆனா அப்பா பார்க்க விடுவாரா இதோ... நான் காலேஜை கட்டடிச்சுட்டு உன்னைப் பார்க்க வந்தமாதிரி, திருட்டுத்தனமா பார்க்க வர்ற அளவுக்கு அம்மாவுக்கு தைரியம் போதாது
.
எல்லாம் நான் பண்ணின தப்பு! காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்புத்தானே
கிசுகிசுப்பதைப் போல் பேசினாள் வித்யா.
ஜேம்ஸ் உன்னை எப்படி வச்சிருக்கார்
குழந்தை மாதிரி வச்சிருக்கார்
குழந்தை மாதிரின்னா தினமும் இடுப்புல தூக்கிட்டுத்தான் வெளியில போவாரா?
ச்சீ! அதே கிண்டல் கேலிப்பேச்சு மாறவே இல்லைடி நீ…
உன் புருஷன் உன்னை நல்லா வச்சிருக்கார். அப்புறம் எப்படி தப்புன்னு பேசறே? நான் ஒண்ணு சொல்லட்டா... அப்பாவே பார்த்திருந்தாகூட ஜேம்ஸ் மாதிரி ஒருத்தரை பிடிச்சிருக்க முடியாது. வந்தவனை உட்கார வச்சு பேசிக்கிட்டேயிருக்கியே! உன்னைப் பார்க்க காலேஜை கட்டடிச்சுட்டு வீட்ல சொல்லாம திருட்டுத்தனமா ஓடி வந்திருக்கேன் ஒரு காபி கிடையாதா?
அல்பம்! காபி மட்டும் வேணுமா? சூடா டிபன் பண்றேன் இரு
என எழுந்துக் கொண்டாள் வித்யா.
டிபனெல்லாம் வேண்டாம். நான் சீக்கிரம் வீடு திரும்பணும். இல்லே அப்பா என்னை கொன்று போட்டுடுவார். நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டு சந்தோஷமாயிருக்கே. உன்னால நான்தான் பாதிக்கப்படறேன்.
என்னடி சொல்றே?
சொல்றேன். நீ காபி கலக்கு
இருவரும் சமையலறைக்குள் நுழைந்தனர். பாலை அடுப்பில் ஏற்றி சூடாக்கினாள் வித்யா.
‘சொல்லுடி! என்னால உனக்கென்ன பாதிப்பு, நான் வேறு மதக்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்டதால உன்னோட கல்யாண விஷயத்துல ஏதாவது பிரச்சினையா?
வேதா கலகலவென சிரித்தாள்
அக்கா... நீ எந்த காலத்துல இருக்கே? ஜாதி மதம்னு பேசறவங்களை அயல்கிரகத்து ஆள் மாதிரி பார்க்கற காலம் இது. எல்லாரும் அப்பா மாதிரி இருக்க மாட்டாங்க. அப்பா மாதிரி ஆட்கள் கும்பகர்ணன் மாதிரி. பல வருஷங்கள் தூங்கிட்டு எழுந்து தூங்கின அன்னைக்கு இருந்த மாதிரியே ஊர் உலகம் ஜீவராசிகள் இருக்கணும்னு நினைச்சா எப்படி இருப்பாங்க. பரிணாம வளர்ச்சி நடந்துக்கிட்டேதான் இருக்கும். பார்க்கப் பிடிக்காதவங்க விழிச்சுக்கிட்டே தூங்குற கேஸ்சுங்க. அப்பா அப்படித்தான் இருக்கார். நாட்டுக்குள்ள இந்து முஸ்லிம், கிறிஸ்தவங்க கலந்திருந்தது பழைய காலம். இப்போ குடும்பத்திலேயே மூணு மதமும் கலந்துட்டு. காலம் மாறிட்டு. என்னை கல்யாணம் பண்ணிக்க வர்றவங்க இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க மாட்டாங்க...
சரி! வேற என்ன பிரச்சினை?
காபி பொடியை போட்டு சர்க்கரையோடு சேர்த்து ஆற்றியவாறே கேட்டாள் வித்யா
பிரச்சினையே அப்பாதான், உன் மேல உள்ள கோபத்தையெல்லாம் என் மேல் காட்டறார். பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி...
வித்யா தங்கையை பாவமாகப் பார்த்தாள்.
"உன்னை மாதிரியே நானும் யாரையாவது காதலிச்சிடுவேனோன்னு உள்ளூர அப்பாவுக்கு பயம். அந்த பயத்தை வார்த்தைகளை விஷமாக்கி பேசறார். படிக்காம இருக்கக் கூடாதுங்கறதுக்காக டிகிரி படிக்க வச்சார். அதுக்கு மேல் படிக்க வைக்க