Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vannakili Seitha Maayam
Vannakili Seitha Maayam
Vannakili Seitha Maayam
Ebook128 pages32 minutes

Vannakili Seitha Maayam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்த நவீன காலத்திலும் வரதட்சணை பிரச்சனை இந்த மண்ணில் தலைவிரித்தாடுகிறது.
இந்த கதையில் வரும் ராஜாங்கமும் தன் மகளின் நல்வாழ்வுக்காக தன் சொத்து முழுவதையும் இழக்கிறார்.
அதன்பின் ராஜாங்கம் என்ன ஆனார்? அவள் மகளுக்கு நல்வாழ்வு கிட்டியதா? இறுதியில் கதையில் மகள் தரும் மிகப்பெரிய திருப்பம் என்ன? அந்த சொத்தை வைத்து பின் நடக்கும் ரகளைகள் என்ன என்ன என்பதை நாம் கதைக்குள் சென்று காணலாம்.
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137106175
Vannakili Seitha Maayam

Read more from R. Sumathi

Related to Vannakili Seitha Maayam

Related ebooks

Reviews for Vannakili Seitha Maayam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vannakili Seitha Maayam - R. Sumathi

    http://www.pustaka.co.in

    வண்ணக்கிளி செய்த மாயம்

    Vannakili Seitha Maayam

    Author:

    ஆர்.சுமதி

    R. Sumathi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    அடுப்பிலிருந்த கோழிக்குழம்பை இறக்கி வைத்த போது அம்மா என்ற அழைப்புடன் சமையலறைக்குள் நுழைந்தாள் சின்னு.

    வா... சின்னு என்றபடி திரும்பிய பொன்னம்மாள் அம்பது வயதிற்குரிய அழகுடன் மிளிர்ந்தாள். கொண்டையாகியிருந்த கூந்தல், அதில் வண்டுகள் மொய்க்கும் குண்டு மல்லிகை. மஞ்சள் முகம். தஞ்சமாய் ஒட்டிக் கொண்ட குங்குமம். பெரிய விழிகள். மின்னும் வைர மூக்குத்தி. கண்ணின் பளபளப்பிற்கும் மின்னும் வைரத்தின் பளபளப்பிற்கும் போட்டி வைத்தால் ஜெயிக்கப் போவது என்னவோ கண்கள்தான்.

    என்ன சின்னு, பாப்பாக்கிட்ட நெய் முறுக்கைக் கொடுத்தியா? என்ன சொன்னா? நல்லாயிருக்குன்னு சொன்னாளா?

    பொன்னம்மாளின் படபடப்பான வார்த்தைகளில் அன்பும் அக்கறையும் வழிந்தது.

    அம்மா...

    சின்னுவின் குரல் மிகவும் கலக்கமாக வந்தது.

    என்ன சின்னு... ஏன் உன் குரல் ஒரு மாதிரியாயிருக்கு? என்றபடி அவளுடைய முகத்தைப் பார்த்தவள் துணுக்குற்றாள்.

    சின்னுவின் முகத்தில் கவலைப் படர்ந்து இருந்தது.

    குழப்பமும் கலக்கமும் தெரிந்தது.

    சின்னு என்னாச்சு? சொல்லு.

    சின்னம்மா... பாப்பா...

    சின்னுவின் வாயிலிருந்து 'பாப்பா' என்ற வார்த்தை வந்ததும் பொன்னம்மா பதறினாள்.

    பாப்பாவுக்கு என்ன சின்னு. உடம்புக்கு முடியலையா?

    அம்மா... பாப்பா சந்தோஷமா இல்லைன்னு நினைக்கிறேன்.

    சுருக்கென முள் தைத்ததைப் போலிருந்தது.

    சட்டென்று சின்னுவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பொன்னம்மாள்.

    சின்னு நீ என்ன சொல்றே?

    நீங்க கொடுத்த நெய் முறுக்கை கொடுக்க நான் போயிருந்தப்ப பாப்பாவோட முகம் அழுது வீங்கிப் போயிருந்தது. அதுமட்டுமில்லை... நான் உள்ள நுழையும் போதே மாப்பிள்ளை கன்னாபின்னான்னு கத்தற சத்தம் கேட்டுது. அடிக்கிற மாதிரி கூட சத்தம் கேட்டுது. பாப்பா கத்தற சத்தம் கேட்டுது. அப்புறம் என்னைப் பார்த்ததும் எதுவும் நடக்காத மாதிரி பாப்பா நடந்துக்கிட்டது. நானும் மெல்லக் கேட்டுப் பார்த்தேன். எதுவுமே சொல்லலை.

    இதைக் கேட்டதுமே பொன்னம்மாவின் முகம் திகிலடைந்ததைப் போல் வெளிறியது.

    சண்முகம் அடிக்கிறானா?

    நம்ப முடியவில்லை.

    குப்பென உடம்பெல்லாம் ரத்தம் பாய்ந்து தலைக்கு ஏறி தலையை சுற்றியது.

    சின்னு நீ என்ன சொல்றே? சண்முகமா அடிக்கிறான்.

    ஆமாம்மா. நான் கண்ணால பார்க்கலைன்னாலும் காதால திட்டறதையும் அடிக்கிற சத்தத்தையும் கேட்டேன்.

    சின்னு உறுதிப்படுத்தியதும் பொன்னம்மா அப்படியே அதிர்ச்சியில் உறைந்தவளைப் போல் அங்கே கிடந்த ஸ்டூல் ஒன்றில் அமர்ந்து விட்டாள்.

    அதே சமயம் -

    கூடத்தில் காலடி ஓசைக் கேட்டது. ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஓசைக் கேட்டது.

    ராஜாங்கம் வந்து விட்டார் என்பது தெரிந்தது. குடத்திலிருந்து குளிர்ந்த நீரை அவசரமாக முகர்ந்தாள்.

    அம்மா அய்யாக்கிட்ட எதையும் சொல்ல வேண்டாம். கேட்டவுடனே அய்யாவுக்கு கோபம் வந்துடும். பாப்பா அடிவாங்கிச்சுன்னு தெரிஞ்சா அவரை வெட்டியே போட்டுடுவாரு.

    சின்னு அவசரமாக அறிவுறுத்தினாள்.

    பாவம் பொன்னம்மாவால் சின்னு சொன்னவற்றைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

    நெஞ்சடைத்து கண்கள் கலங்கி நின்றன.

    தண்ணீர் சொம்புடன் கூடத்திற்கு வந்தாள். ராஜாங்கம் ஊஞ்சலில் மெதுவாக ஆடியபடி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அவள் தண்ணீருடன் அருகே வந்து நின்றாள். அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு தண்ணீரை நீட்டினாள்.

    வாங்கி அருந்தியவர் முகத்தில் சந்தோஷம் படர கேட்டார்.

    என்ன பொன்னம்மா, கோழி சமைச்சிருக்கியா? வாசனை ஆளைத் தூக்குது. பசியை பத்து மடங்காக்குது. சீக்கிரம் இலையைப் போடு... போ... போ...

    சொன்னவர் அவளுடைய பதிலுக்குக் கூட காத்திராமல் எழுந்து கைகழுவச் சென்றார்.

    சின்னு சொன்னவற்றையெல்லாம் உடனே சொல்லி ஓவென அழவேண்டும் போலிருந்தது.

    நெஞ்சு வரை பொங்கிய வேதனைகளையும், நாவு வரை வந்துவிட்ட வார்த்தைகளையும் அடக்கிக் கொண்டு அவருக்கு இலை போட சென்றாள்.

    தலைவாழை இலை பரப்பி மல்லிகைப்பூ சோற்றை இட்டு மணக்கும் கறிக்குழம்பை வகை வகையான கூட்டுக்கறிகளுடன் பரிமாறினாள்.

    ராஜாங்கம் அமர்ந்து ஒரு பிடிபிடித்தார். இடையிடையே அவளுடைய கைமணத்தை வெகுவாகப் பாராட்டினார்.

    அவருடைய பாராட்டில் மனம் லயிக்கவில்லை.

    இந்தா... நீயும் ஒரு எலையைப் போட்டு உட்கார்ந்து சாப்பிடு என்று வாஞ்சையுடன் கையைப் பற்றினார்.

    இருக்கட்டுங்க. நான் அப்புறம் சாப்பிடறேன்.

    அதெல்லாம் முடியாது. நீ இப்ப உட்காரப் போறியா இல்லையா?

    அவர் மிகவும் வற்புறுத்தவே இலையைப் போட்டு அமர்ந்தாள். ஆனால் சாப்பிட முடியவில்லை. வயிற்றைக் கட்டியதைப் போல் இருந்தது.

    பெயருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்தாள். இலைகளை எடுத்துப் போடும் போது மனவேதனைகளையும் சேர்த்து எடுத்துப் போட முடியவில்லை.

    ராஜாங்கம் சாப்பிட்ட திருப்தியுடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்தார்.

    அவர் சாப்பிட்டதுமே வெற்றிலை மடித்துக் கொடுக்க வேண்டும்.; வெற்றிலையை மடித்தவாறு அவருக்கருகில் வந்து அமர்ந்தாள் பொன்னம்மா.

    அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்த ராஜாங்கம் துணுக்குற்றார்.

    கலங்கி கலங்கி அடங்கிய கண்கள் அவருடைய கண்ணில் படவே செய்தது.

    பொன்னம்மா! ஏன் ஒரு மாதிரியா இருக்கே? சரியா கூட சாப்பிடலை. கண்ணெல்லாம் கலங்குற மாதிரி இருக்கு. உடம்பு சரியில்லையா?

    அவர் கேட்டதுதான் தாமதம். இதயம் வெடித்து விடும் போலிருந்தது.

    சின்னு எதையும் சொல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

    வந்து... உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். ஆனா பயமாயிருக்கு.

    பயமா? அப்படி என்ன விஷயம் சொல்லப் போறே?

    வந்து... சின்னுக்கிட்ட பாப்பாவுக்காக முறுக்குக் கொடுத்து அனுப்பினேன். பாப்பாக்கிட்ட அவ கொடுக்க போகும் போது பாப்பாவுக்கும் சண்முகத்துக்கும் ஏதோ சண்டை நடந்தமாதிரி சத்தம் கேட்டு தாம். சண்முகம் காச்மூச்சுன்னு கத்தினானாம். அதுமட்டும் இல்லை...

    அதுமட்டுமில்லைன்னா...? அப்புறம் என்ன?

    வந்து... கேட்டப்பவே என் நெஞ்சு வெடிச்சுடும் போலிருந்தது. சண்முகம்... சண்முகம்...

    சண்முகம்? கேட்கும் போதே ராஜாங்கத்தின் கண்கள் சிவக்கத்

    Enjoying the preview?
    Page 1 of 1