Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Endha Kathavum Thirakkum
Endha Kathavum Thirakkum
Endha Kathavum Thirakkum
Ebook111 pages38 minutes

Endha Kathavum Thirakkum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

போலீஸ்காரர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை காட்டும் கதை. ஒரு கொலையை செய்துவிட்டு அதை மறைத்து விடலாம் என்று நினைக்க முடியாது. வேறுவேறு கோணங்களில் யோசித்து ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது என்று அலசி குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான கதை.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580131005014
Endha Kathavum Thirakkum

Read more from S. Kumar

Related authors

Related to Endha Kathavum Thirakkum

Related ebooks

Related categories

Reviews for Endha Kathavum Thirakkum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Endha Kathavum Thirakkum - S. Kumar

    http://www.pustaka.co.in

    எந்தக் கதவும் திறக்கும்

    Endha Kathavum Thirakkum

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    ஆகஸ்ட் 17

    கரடுமுரடான அந்தக் தரையில் அவன் அசாதாரணமாக விழுந்து கிடந்தான்.

    சற்று முன்தான் போலீஸ் அவன் மீது ஒரு ரவுண்ட் விளையாடியது.

    அறைக் கதவு சரக்கென்று திறக்கப்பட்டது.

    தரையை வித்தியாசமாகத் தேய்த்த ஷூக்களின் ஓசையோடு புதிய காக்கிச் சட்டை உள்ளே வந்தது.

    உன் பேரென்னடா?

    "ஆனந்த்.'’

    நான் எஸ்.ஐ. பிரபாகர். என்னோட மெதட் ரொம்ப முரட்டுத்தனமானது.

    உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆனந்த் பலவீனமாக தலையைத் தூக்கி அவரைப் பார்த்தான். சிரமப்பட்டு பேசினான்.

    எந்த முரட்டுத்தனத்தாலும் நான் செய்யாத குற்றத்தை என் மேலே சுமத்த முடியாது.

    புத்திசாலித்தனமா பேசறதா நினைக்காதே! என்று பிரபாகர் ஓர் எட்டு முன்னால் வந்தார்.

    சார், நீங்க உங்களை முன் கூட்டியே முரட்டுத்தனமானவர்னு சொல்றீங்க. மத்தவங்க சொல்லலே. காட்டிட்டாங்க.

    யூ டிசர்வ் இட்.

    நோ... என்னை மாதிரி அப்பாவியைத் தான் உங்களால பிடிக்கவும் அடிக்கவும் முடியும். உண்மையான கொலைகாரனை பிடிக்க உங்களுக்குத் துப்பில்லே.

    பிரபாகர் சட்டென்று அவன் முன்னுச்சி மயிரைப் பற்றி உலுக்கி வாகாக இழுத்து லத்தியால் அடித்தார்.

    எலும்பெல்லாம் முறிந்து போய்விட்ட மாதிரி வலி தெறித்தது.

    ஆனந்த் அலற துவங்கினான்.

    அவர் நிறுத்தாமல் மீண்டும் மீண்டும் அடிக்கத் தரையில் விழுந்து புரண்டான்.

    ப்ளீஸ், என்னை...

    மன்றாட உயர்த்திய கைகளிலும் பலமான அடி விழத்தொய்ந்து விழுந்தான்.

    விட்டுடுங்க ப்ளீஸ்.

    சொல்லு.

    மௌனமாய் வாயிலிருந்து வழியும் எச்சிலுடனும் ரத்தத்துடனும் தலையை உயர்த்தக் கூட முடியாமல் குற்றுயிராய்க் கிடந்தான்.

    பாஸ்டர்ட், ஆஃப்டர் ஆல் பத்தாயிரம் ரூபாய்க்காக ஈவு இரக்கமில்லாம ஒருத்தனை அடிச்சிக் கொன்னியே! அப்போ அவனும் இப்படித்தானே துடிச்சான்? ரத்தம் ஒழுக ஒழுக அவன் எப்படியெல்லாம் அலறி இருப்பான்? அப்ப உனக்குத் தெரியாத வலியும் கஷ்டமும் இப்பப் புரியுதா?

    ஆனந்த் மிகவும் கஷ்டப்பட்டு ஒற்றைக் கையை உயர்த்தி போதும், விட்டு விடுங்கள் என்று சைகையால் கெஞ்சினான்.

    உள்காயங்கள் மட்டுமில்லாமல் நிறைய வெளிக்காயங்களும் ஏற்பட்டு விட்ட இந்த நிலையில் தொடர்ந்து சித்திரவதை செய்ததில் பயனில்லை. பிரபாகர் வெளியே வந்தார்.

    ஆனந்த். ரிமெம்பர் இட். இப்ப உன்னால் பேச முடியாது. அடுத்து உன் வாயில பேச்சு வரும்போது எனக்கு உன் ஸ்டேட்மெண்ட் வந்தாகணும். அப்பவும் இதே மாதிரி சாதிச்சே, நானே உன்னை என் கையாலயே அடிச்சு சாகடிப்பேன். கடைசியாக கழுத்தை நெரிச்சு தூக்கில தொங்க விடுவேன்.

    அங்கிருந்து நடந்து தன் டேபிளுக்கு வந்து உட்கார்ந்தார்.

    அவனை அடித்து விட்டு வந்ததில் கொஞ்சம் களைப்பை உணர்ந்து எதிரே மூடி வைக்கப்பட்டிருந்த கிளாஸை எடுத்துத் தண்ணீர் குடித்தார். சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து கொண்டார்.

    ரூமை மூடுய்யா.

    கட்டளைக்காகக் காத்திருந்த கான்ஸ்டிபிள் சாவியை எடுத்துக் கொண்டு அறையை நெருங்கினார்.

    கதவை இழுத்துச் சாத்த முற்பட்ட பொழுது –

    ஆனந்தைப் பார்த்தார்.

    யோவ், ஆனந்து. எஸ்.ஐ. ரொம்ப நல்லவர். ஏதோ ஒரு வேகத்தில் தப்பு பண்ணிட்டே! நடந்ததை மறைக்காம அப்படியே சொல்லிடு. அனாவசியமா இப்படி அடிவாங்கிச் சாக வேண்டியதில்லே. இப்பல்லாம் நிறைய கேஸ்ல குற்றவாளிங்களே வெளியே வந்துடறாங்க எஃபு.ஐ.ஆர். போட்டு, கோர்ட்டுக்கு போனா அங்கே கவனிச்சிக்கலாம். எல்லாவற்றையும் தெளிவாச் சொல்லிவிட்டு பெய்ல போற வழியைப் பாருய்யா.

    ரொம்பவும் மெல்லிய குரலில் சொல்லி விட்டு கதவைப் பூட்டி விட்டு, எஸ்.ஐ.யின் முன்னால் போய் நின்றார்.

    எஸ்.ஐ. செயினாக அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.

    டேபிளின் மேலே கிடந்த கண்ணாடிக் குமிழை உருட்டி விட்டார்.

    என்னய்யா, சொல்றான்?

    சொல்ற மாதிரி இல்லே, சார். ஆனா அடுத்து சொல்ற மாதிரி சக்தி வர்ரபோது ஸ்டேட்மெண்ட்தான்!

    ட்ராவை இழுத்தார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தார். 'இரும்புக் கழியால் அடித்துக் கபால எலும்பு சேதமடைந்து மரணம்.'

    மதிய உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரத்துக்குள்ளான மரித்துப் போயிருக்கிறான்.

    சார்.

    அடடே, நீங்களா?

    அந்த நேரத்தில் அவர்கள் வேண்டாத விருந்தாளிகள் தான்! என்றாலும் சுதாரித்துக் கொண்டு சுமுகமாகவே வரவேற்றார்.

    உட்காருங்க.

    எதிரே இருந்த நீள பெஞ்சில் உட்கார்ந்தார்கள். பருமனான உடம்பில் கதர் ஜிப்பா போட்டு, மல்வேட்டி கட்டி, கண்களில் பவர் கிளாஸ் வைத்து படிய வாரி விட்டிருந்த சதாசிவம் ஆனந்தின் அப்பா. பாம்பே டையிங் லுங்கியும் செக்ட்

    Enjoying the preview?
    Page 1 of 1