Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Yaar Theriyuma?
Naan Yaar Theriyuma?
Naan Yaar Theriyuma?
Ebook83 pages26 minutes

Naan Yaar Theriyuma?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இன்ஸ்பெக்டர் விஜய் அரசியல்வாதியால் கொல்லப்பட்ட நிருபர் ஜானகிராமனின் கொலைக்குச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனாலும் அவர் நீதி வழங்குகிறார். எப்படி என்பதை கதை சொல்லும்.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580131008711
Naan Yaar Theriyuma?

Read more from S. Kumar

Related authors

Related to Naan Yaar Theriyuma?

Related ebooks

Related categories

Reviews for Naan Yaar Theriyuma?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Yaar Theriyuma? - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் யார் தெரியுமா?

    Naan Yaar Theriyuma?

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    ஜானகிராமன் சென்னையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்தக் கிராமத்து டீக்கடையில் இருந்தான்.

    ஒரு ஸ்ட்ராங் டீ.

    ஓர் ஈவ் டீசிங் விவகாரம் கொஞ்சம் பெரிதாகி ஜாதிக்கலவரச் சாயம் பூசிக்கொண்டதை அவனுடைய ஜோல்னாவுக்குள்ளிருந்த ரிப்போர்ட் தெளிவுபடுத்தியது. எடிட்டர் படித்தால் பூரித்துப்போவார்.

    பி.லிட் முடித்தபின் எம்.ஏ. ஜர்னலிசம் எடுத்ததைக் குறித்து ஜானகிக்குப் பெருமைதான்!

    டீயை அவன் வாங்கியபோது பக்கத்தில் ஒருவன் வந்து நிற்க, அவனிடமிருந்து விலகியபொழுது பின்னால் நின்று ஒருவன் மீது மோதி நேர்ந்தது.

    சார், பார்த்து வரக்கூடாதா? என்றான், ஜானகி.

    ஏன், உன்னாலப் பார்த்துத் திரும்ப முடியாதா?

    வேடிக்கையா இருக்கே. எனக்கென்ன முதுகிலியா கண்ணிருக்கு?

    ஒருவன் மற்றவனிடம், சார். பிரமாதமா பேசறாருல என்றான்.

    அதெல்லாம் அவருக்குக் கைவந்த கலைய்யா. சார், யாரு தெரியுமில்லே? ரிப்போர்ட்டர் புகையும் போலீசும் நுழையாத இடத்தில்கூட இவர் நுழைவார்.

    அப்போ இவருக்கு முதுகிலும் கண்ணிருக்குமே!

    நிச்சயமா இருக்கும்.

    அப்படியிருந்தும் மோதறாரே!

    அவர் மோதாமல் ஒருநாளும் இருக்கமாட்டார்.

    இவர்கள் எதற்காக திட்டமிட்டு தன்னை வம்புக்கிழுக்க முனைகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டான்.

    டீக்குக் காசு கொடுத்துவிட்டு நகர்ந்தான்.

    மரத்தடியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

    சற்றுதூரம் சென்று திரும்பிப் பார்த்தபொழுது டீக்கடையில் தகராறு செய்த இருவரும் அவன் பின்னால் நடந்து வருவது தெரிந்தது. வேகமான நடைதான்! என்றாலும் அவர்கள் அவனைப் பிடித்துவிட முடியாது.

    சைக்கிளை மேலும் அழுத்தி மிதித்தான். பொழுது இருட்டத் துவங்கிவிட்டது. ஒரு கிலோமீட்டர் தள்ளி சாலைச் சந்திப்பு வரும்.

    அங்கிருந்து பிரதான சாலை வழியே மூன்று கிலோமீட்டர் பயணம்செய்து டவுனில் சைக்கிளைக் கடையில் கொடுத்துவிட்டு சென்னைக்கு பஸ் பிடிக்க வேண்டும்.

    அரைகிலோ மீட்டர் தூரம் சென்றதும் எதிரே மசமசவென்று உருவங்கள் தென்பட்டன. மிக அருகே சென்றதும் நான்கைந்து ஆட்கள் தென்பட்டனர். அவர்களை விட்டு விலகிக் கடக்கும் நோக்கத்துடன் சைக்கிளை ஓரமாகச் செலுத்தியபோது அவர்களும் பரவி வழிமறித்த எதிரில் நின்றார்கள். கைகளில் உருட்டுக்கட்டைகள்.

    கால்களை ஊன்றி நின்றான்.

    நீங்கள்ளாம் யாரு

    இது கேள்வி... நாங்க யாரு, எதுக்கு வந்திருக்கோம் என்ன பண்ணப் போறோம்னு உனக்குத் தெரியாதில்லே?

    தெரியாது.

    ஏண்டா, டேய். உன் கையில் மட்டும்தான் பேனா இருக்கு. உனக்கு மட்டும்தான் எழுத்து தெரியுமா?... அட, எழுத்து தெரிஞ்சாதான் என்ன? நெலாவைப்பத்தி எழுது, பூவைப்பத்தி எழுது. பொண்ணைப்பத்தி எழுது. அண்ணனைப்பத்தி ஏண்டா எழுதறே?

    அவனுக்குச் சட்டென்று புரியவில்லை. சமீபத்தில் அவன் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளைப் பற்றி மூன்று கட்டுரைகள் எழுதினான். அதில் எவனுடைய ஆட்கள் இவர்கள்?

    நீங்க அண்ணன்னு சொல்றது...

    "மாவட்டம்டா எங்க அண்ணன். ஆளும் கட்சிடா எங்க

    Enjoying the preview?
    Page 1 of 1