Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Priyam Enbathu...
Priyam Enbathu...
Priyam Enbathu...
Ebook108 pages35 minutes

Priyam Enbathu...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஓர் ஆண்மகனை உருவாக்க அவனது பெற்றோர் கடும் உழைப்பைச் சிந்துகிறார்கள். மனைவியின் வழியாக அவனை எட்டும் சம்பந்தி வீட்டாருக்கோ மாப்பிள்ளை மட்டும் போதும். அவன் பெற்றோரின் அந்தஸ்து போதாது. இந்த முரண் அந்த இளம் ஜோடியைப் பிரிக்கிறது. சட்டப்பூர்வமாக பிரிகிறார்கள். ஆனால்.....

பலரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் குடும்ப நாவல்

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580131007652
Priyam Enbathu...

Read more from S. Kumar

Related authors

Related to Priyam Enbathu...

Related ebooks

Reviews for Priyam Enbathu...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Priyam Enbathu... - S. Kumar

    https://www.pustaka.co.in

    பிரியம் என்பது...

    Priyam Enbathu…

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    பிரியமுடன் நான்...

    இன்றைய நாவல் உலகின் இணையற்ற எழுத்தாளர் மாலா குமார்.

    இவரது நூல்களை தொடர்ந்து உங்களுக்காகவே வெளியிடுகிறோம்.

    பிரியம் என்பது... தமிழில் ஒரு தரமான நாவல்.

    சம்பவங்களை வாசிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி நிகழ்வதைப் போன்ற ஓர் உணர்வு. கதாபாத்திரங்களை கண்ணுறும்போது ஏதோ நமக்கு அறிமுகமானவர்களைப் போன்ற ஒரு நினைவு.

    மாலா குமாரின் நாவல்கள் வேகமாகப் படிக்க முடிந்த விவேகமானவைகள்.

    பிரியம் என்பதையும் படியுங்கள். பிரியமுடன் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள்.

    பிரியமுடன்

    அரு. சோலையப்பன்

    1

    தண்டபாணி வீட்டுக்குள் நுழைந்தபோது அதிசயமாக சிவா வீட்டில் இருந்தான்.

    தனியார் கம்பெனி ஒன்றில் பியூன் வேலையில் இருக்கும் அவருக்கு - கைக்கும் வாய்க்குமான வாழ்க்கைதான்! என்றாலும் கடன்பட்டு பெண்ணைக் கரையேற்றி விட்டார். சிவாவையும் மெக்கானிகல் டிப்ளமோ படிக்க வைத்து விட்டார்.

    வேலை கிடைப்பதென்ன சுலபமாகவா இருக்கிறது!

    நண்பர்கள், தெரிந்தவர்களிடம் சொல்லி ஒரு காண்ட்ராக்டரிடம் வேலைக்குச் சேர்த்து விட்டார். அவன்தான் அங்கு நிலைக்கவில்லை. இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு அடிமை மாதிரி வேலை வாங்கறான். ஆறு மாசமாயிருச்சி, சம்பளத்தைக் கூட்டிக் கொடுங்கன்னேன். பார்க்கலாம்னு தட்டிக் கழிச்சிருக்கலாம். இப்போ முடியாதுன்னு மறுத்துச் சொல்லியிருக்கலாம். ஆனா அவன்... நீ வேலை செய்யற வேலைக்கு இதுவே அதிகம்னான். இப்போ நினைச்சாக் கூட சாட்டையால அடிக்கிற மாதிரி இருக்கு. நீ கொடுக்கிற சம்பளத்துக்கு இந்த வேலை ரொம்ப அதிகம்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

    அவன் சொன்னது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் நியாயமாக இருந்தது. அடுத்த மாத பட்ஜெட்டில் இரண்டாயிரம் ரூபாய் துண்டு விழுமே என்று எண்ணி பயந்தார். ஆனால் சிவாவைக் கோபிக்கவில்லை. இன்று தான் அதிசயமாக வீட்டில் இருக்கிறான். லட்சுமி காபி கொண்டு வந்தாள். குடித்தார்.

    அவன் பொறுப்பானவன், அவன் கோபத்தில் நியாயம் இருக்கும். ஆனால் நியாயமும் தன்மானமும் ஏழைகளுக்குத் துணை வருமா? அனுபவப்பட்டு தான் அவன் இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணி அமைதியாக இருந்து விட்டார்.

    அவனுக்குத்தான் கொஞ்சம் குற்ற உணர்வு. இப்படிச் செய்துவிட்டு வந்து விட்டோமே, எப்படி அப்பாவின் முகத்தில் விழிப்பதென்று.

    காலையில் நண்பர்களைச் சந்திக்கப் புறப்பட்டுப் போய் விடுவான். மாலையில் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்து விட்டு இரவுதான் வீடு திரும்புவான் இன்று தான் அதிசயமாக வீட்டில் இருக்கிறான். லட்சுமி காபி கொண்டு வந்தாள். குடித்தார்.

    பையன் குடிச்சிட்டானா?

    ஆச்சி.

    என்ன இன்னிக்கு அதிசயமா வீட்டில் இருக்கான்.

    ஏதோ இண்டர்வியூ வந்திருக்காம்?

    சுரத்தில்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

    சிவா ஒரு கடிதத்துடன் தண்டபாணியிடம் வந்தான்.

    அப்பா, ஒரு நல்ல கம்பெனியிலிருந்து இண்டர்வியூ வந்திருக்குப்பா...

    அப்படியா, இண்டர்வியூ எங்கே?

    மும்பைல.

    மும்பையா, மெட்ராஸ்னா பரவாயில்லை.

    நல்ல கம்பெனிப்பா.

    சரி, அவ்வளவு தூரம் போகணுமா?

    இப்போ கஷ்டப்பட்டா எதிர்காலம் நல்லாயிருக்கும்.

    இண்டர்வியூவையே மும்பைல வைக்கிறவன் வேலையை எங்கே தருவான்?

    அதுவும் வடக்கேதான் இருக்கும்.

    லட்சுமி அடுக்களையிலிருந்து வந்தாள்.

    அவனை அங்கே எல்லாம் போக வேணாம்னு சொல்லுங்க.

    ஓ... அம்மாவும், பிள்ளையும் ஏற்கனவே விவாதம் பண்ணி முடிச்சிட்டிங்களா?

    ஆமாம்... அவ்வளவு தூரம் போய் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லேன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்றாள் லட்சுமி.

    சரி.

    என்னப்பா, சரி! இன்னும் இண்டர்வியூவே நடக்கலை. வேலை கிடைக்கிறதே கஷ்டம்... இதில் நம்ம வீட்டுப் பக்கத்தில் கிடைக்குமா?

    அதுவும் சரி.

    என்ன நீங்க, அதையும் சரிங்கிறீங்க. அவன் உள்ளூர்லியே ஏதாவது வேலை பார்க்கட்டும் என்று லட்சுமி குறுக்கிட்டாள்.

    உள்ளூர்ல என்னத்தைப் பார்க்கிறது. ரெண்டாயிரம் ரூபாய் வேலையா? - சிவா கேட்டான்.

    பரவாயில்லை.

    என்ன பரவாயில்லை?

    நீ எங்களை விட்டுப் பிரிஞ்சி போய் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறதைவிட எங்களோட இருந்து, ஒரே ஒரு ஆயிரம் சம்பாதிச்சாக்கூட போதும்.

    புரியாமப் பேசாதேம்மா. தூரம், கஷ்டம் எல்லாம் பார்க்கக் கூடாது. நல்ல வேலை எங்கே கிடைக்குதோ அங்கே போய்த்தான் ஆகணும்.

    "நீ பிறந்ததிலிருந்து இன்னி வரை ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1