Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kaayangal
Kaadhal Kaayangal
Kaadhal Kaayangal
Ebook99 pages31 minutes

Kaadhal Kaayangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மதுமதி மிக அழகிய பெண். அவளின் பெற்றோர் மோகன் என்பவருக்கு மதுமதியை திருமணம் செய்து தர ஏற்பாடு செய்கின்றனர், தன் முன்னால் காதலனான ராஜசேகரால் திருமணத்தில் தடை ஏற்படுமோ என மதுமதி அஞ்சுகிறாள். அவள் ராஜசேகரனை விட்டு விலகியதன் காரணம் என்ன?

மறுபுறம், மகளை இழந்த டேவிட் தன் மகள் இறப்பிற்கு காரணமானவனை கொலை செய்யத் துடிக்கிறான். போலீஸ் ஒரு புறம் டேவிட்டை துரத்துகிறது.

ஒரு கட்டத்தில் மது மற்றும் டேவிட் இருவரின் வாழ்க்கைப் பயணமும் ஒரே நேர்க்கோட்டில் இணைகிறது. மோகனை மதுமதி திருமணம் செய்து கொண்டாளா?

ராஜசேகர் என்ன ஆனான்? இறுதியில் டேவிட்டின் நிலை என்ன ஆனது? வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateNov 27, 2021
ISBN6580131007650
Kaadhal Kaayangal

Read more from S. Kumar

Related authors

Related to Kaadhal Kaayangal

Related ebooks

Related categories

Reviews for Kaadhal Kaayangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kaayangal - S. Kumar

    https://www.pustaka.co.in

    காதல் காயங்கள்

    Kaadhal Kaayangal

    Author:

    எஸ். குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    முகத்தை மீண்டும் கண்ணாடியில் பார்த்து டச் அப் செய்து கொண்டாள், மதுமதி. ஸ்டிக்கர் பொட்டு இடம் பெயராதிருக்கிறதா, கழுத்துச் சங்கிலி ஜாக்கெட்டில் பின் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு நகர்ந்தாள்.

    அம்மா அப்பாவின் காதைக் கடித்தாள்.

    சாவி அவளிடம் திருகினால் அப்பா பேசுவார்.

    பேசினார்.

    மது, ஒரு நிமிஷம்.

    என்னப்பா?

    இன்னிக்கு ஆபீஸ் முடிஞ்சதும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு. ஓட்டியெல்லாம் இருந்தாலும் இன்னிக்கு வேணாம்.

    ஏம்பா?

    சாயங்காலம் ஆறு மணிக்கு அந்தக் கோயம்புத்தூர்க்காரங்க நம்ம வீட்டுக்கு வர்ராங்க.

    அப்பா, எனக்கு...

    கல்யாணமே வேணாம்னு சொல்லப்போறே! அது தானேம்மா? கேட்டுக் கேட்டு எனக்கும் அலுத்துப் போச்சு. ஊரில நாலு பேர் சம்பாதிக்கிற பொண்ணைக் கட்டிக் கொடுக்க மனசில்லாம வச்சிருக்கான்னு என்னைச் சொல்லக்கூடாதும்மா. உனக்கு ஒரு நல்ல புருஷனைத் தேடிக் கொடுத்துட்டா என் பாரம் குறைஞ்சிடும்.

    அப்பா, நாம வாழறது மத்தவங்களுக்காக இல்லே. நமக்காக. எனக்கு இப்பக் கல்யாணம் வேணாம்.

    நான் அவங்களை வரச் சொல்லிட்டேம்மா. அவங்களும் வர்றதா தகவல் அனுப்பிட்டாங்க. அதனால ஆபீசிலிருந்து சீக்கிரமா வந்துடு.

    சரி.

    தெருவில் இறங்கினாள்.

    மதுமதி அசாதாரணப் பெண்ணில்லை.

    சராசரிதான்!

    அவளுக்கும் வெள்ளைக் குதிரையில் முகமற்ற ராஜகுமாரன் வந்து முத்தமிடும் கனவு வரும். வந்தது.

    அவள் தேர்ந்தெடுத்த ராஜகுமாரனுக்கு அழகான முகம், பெயர், உருவம்.

    மீனாவின் திருமணத்துக்குச் சென்ற போதுதான் அவள் அவனை மீண்டும் சந்தித்தாள்.

    அவன்தான் முதலில் பேசினான்.

    நீங்க மதுமதிதானே?

    ஆமாம்... நீங்க ராஜசேகர் இல்லே?

    "கரெக்டா ஞாபகம் வச்சிருக்கீங்களே!'

    அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவனோடு கல்லூரியில் படித்த எந்தப் பெண்ணும் அவனை மறந்திருக்க முடியாது.

    ஸ்போர்ட்ஸ்மேன். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை மொத்தமாக அள்ளிக்கொண்டு போய்விடுவான்.

    ஒன்றிரண்டு மாணவிகளின் பெயர்களை அவனோடு இணைத்துப் பேசினாலும் ஆதாரம் கிடையாது.

    வகுப்பில் ஆப்சர்வேஷனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்தான்!

    ஆனால்-

    வெளியே அமைதியாக இருக்க மாட்டான். அரட்டை மன்னன்.

    பெண்களுக்கு அவன் மீது க்ரேஸ் இருந்ததில் ஆச்சர்யமில்லை.

    இப்ப நீங்க என்ன பண்றீங்க?

    எம்.பி.ஏ. முடிச்சி வேலையும் கிடைச்சிட்டுது. நீங்க?

    நான் ஸ்டெனோவா இருக்கேன்.

    எங்கே?

    மோதி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்.

    ஐ.ஸீ... மூர்த்திதானே உங்க மேனேஜர்?

    ஆமாம், உங்களுக்குத் தெரியுமா?

    நல்லாத் தெரியும்.

    உங்க ஃப்ரெண்டா?

    கிண்டலா? மூர்த்தி ஐம்பது. நான் முப்பது. ஹவ் கேன் வீ பீ ஃப்ரெண்ட்ஸ்?

    சிரித்தாள்.

    ஸீ.யூ. சொல்லி விலகும்போது அவளுக்குள் கொஞ்சம் ராஜசேகர் நினைவு.

    அவனுக்குள் அவள் முழுவதாய் இருந்தாள்.

    அடுத்த சந்திப்பு வெகுவிரைவில் நடந்தது.

    இன்னொரு நாள் அலுவலக கடிகாரம் மணி அறிவித்து, அலுவலகக் கிழம் அனுமதித்து, அவள் வெளியே வந்தபோது-

    பக்கத்தில் வந்து நின்றது, புல்லட்.

    இஃப் யூ டோன்ட் மைண்ட், ஷல் ஐ ட்ராப் யூ இன் யுவர் ஹோம்?

    ராஜசேகர் பைக்கைப் பிடித்தபடி ஆங்கில அகரம் போல் கால்களை வைத்துக் கொண்டு நின்றான்.

    வாவ், என்ன பெர்சனாலிடி!

    திறந்த மார்பிலிருந்த முடிச்சுருள்களும் கழுத்துச் சங்கிலியில் இருந்த RAJம் அவன் அழகில் அடங்கிப்போயின.

    அவள் பைக்கில் உட்கார்ந்து அவனைத் தொட்டுக்கொள்ள, சப்கான்ஷியஸில் ஆசையின் ஹார்ஸ்பவர்கள்.

    ஆனால்-

    பயந்தாள்.

    நோ, தாங்க்ஸ். நான் பஸ்ல போய்க்கிறேன்.

    சரி... அப்போ பஸ் ஸ்டாப் வரை நானும் வரேன்.

    பைக்கை ஓரமாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1