Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irakkam Enna Vilai?
Irakkam Enna Vilai?
Irakkam Enna Vilai?
Ebook73 pages23 minutes

Irakkam Enna Vilai?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சித்தப்பா தேவசகாயம் தன்னை அவருடைய வாரிசாக்க மாட்டார் என்பதையும் ஐந்து லட்ச ரூபாயை அவர் ஓர் ஆசிரமத்துக்குத் தருவதையும் பார்த்து ரமேஷ் ஒரு முடிவுக்கு வருகிறான். ஆசிரம மேனேஜரிடமிருந்து பணத்தைப் பறிக்க திட்டமிடுகிறான். அது ஒரு கொலையில் முடிகிறது. பிறகு?

கதைக்குள் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateAug 27, 2022
ISBN6580131008713
Irakkam Enna Vilai?

Read more from S. Kumar

Related authors

Related to Irakkam Enna Vilai?

Related ebooks

Related categories

Reviews for Irakkam Enna Vilai?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irakkam Enna Vilai? - S. Kumar

    http://www.pustaka.co.in

    இரக்கம் என்ன விலை?

    Irakkam Enna Vilai?

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சென்னையிலிருந்து திருப்போரூர் செல்லும் சாலையில் கேளம்பாக்கத்துக்கு அருகில் இருந்தது ஜாஸ்மின் ஹாட்சரீஸ்.

    அந்த இறால் வளர்ப்புப் பண்ணை தேவசகாயத்தின் ஆறாவது வியாபாரம். சுருட்டைப் பொருத்தியிருந்த தேவசகாயம் இறால் பாத்திகளையே பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    சுருட்டிலிருந்து பரவும் இனிமையான மணத்தைப் போலவே சிலநேரம் அவருடைய வார்த்தைகள் அவர்களைச் சந்தோஷப்படுத்தும். மாறாக வேறு சில நேரங்களில் அந்தச் சுருட்டின் முனையில் ஒளிரும் நெருப்பாக வார்த்தைகள் விழும், சங்கடப்படுத்தும்.

    மேனேஜர்.

    சார்.

    ஏதாவது ப்ராப்ளம் இருக்கா?

    எதுவும் இல்லை, சார். எல்லாம் சரியா எதிர்பார்த்தபடியே நடந்துட்டிருக்கு.

    புது பிசினஸ்னு இதில் அடி எடுத்து வச்ச சிலபேர் இதுக்குள்ள காணாமப் போயிட்டாங்க.

    நீங்க கை வச்சதெல்லாம்...

    ஸ்டாப் இட். எனக்கு முகஸ்துதி பிடிக்காது.

    சாரி, சார்.

    ஓகே. இதுவே கடைசி முறையா இருக்கட்டும். இறால் குஞ்சுகளுக்கு நிறைய ஆர்டர் வந்திருக்கு. அடுத்த வாரம் நாலு பார்ட்டிகள் வர்றாங்க. நினைவிருக்கா?

    இருக்கு, சார்.

    அக்கௌண்ட்ஸ் எல்லாம் சரி பார்க்கணுமே!

    அப்பப்போ ரமேஷ் சார் வந்து பார்த்துட்டிருக்கார்.

    கடைசியா எப்போ பார்த்தான்?

    நேத்து.

    ஐ ஸீ.

    அவர் அங்கிருந்து விலகினார்.

    நுழைவாயிலுக்கு இடப்புறமாக ப்ளைவுட்டினால் தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த சேம்பருக்கு வந்தார்.

    ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், நால்வர் நிற்கலாம் என்று அறை.

    ஒரு கட்டை நாற்காலி. முன்னால் இழைப்பாற வைத்த மேஜை. அதில் உள்புறமாக தடித்த கணக்குப் புத்தகங்களும் கடிதங்களின் இன்வர்ட் அவுட்வர்ட் கோப்புகளும்.

    அவர் நாற்காலியில் உட்கார்த்தார். மேனேஜர் நின்றார்.

    அவர் கணக்குப் புத்தகங்களையும் வரவுச் செலவுகளையும் சரிபார்த்தார்.

    மெட்ராசிலிருந்து இங்கு வர வேன் வாடகை தொள்ளாயிரம் போட்டிருக்கு.

    ஆமாம், சார்.

    என்ன. ஆமாம் சார்? போன வாரம் வரை எழு நூறுக்கு வந்தாங்க.

    இந்த வாரம் மழையினால் ரோடு சரியில்லை. வர்றதே ரிஸ்க். அதனால வாடகை அதிகமாகக் கொடுத்தாதான் வருவேன்னு பிடிவாதம் பிடிச்சாங்க. நமக்கும் வேலை ஆகணுமே!

    இவன் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்... விசாரிக்க வேண்டும். எதையும் விசாரிக்காமல் விவாதிக்காமல் அப்படியே ஏற்பது அபாயகரமானது. இந்த ரமேஷ் மடையன் இந்த வவுச்சரையும் பார்த்து டிக் அடித்திருக்கான் முட்டாள்.

    "இப்படி நேரத்துக்கு ஒரு வண்டி பிடிச்சா இப்படித்தான் அடிக்கடி ரேட்டை ஏத்துவாங்க. அதனால சிடியில்

    Enjoying the preview?
    Page 1 of 1