Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Iniya India
En Iniya India
En Iniya India
Ebook91 pages29 minutes

En Iniya India

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஐ பியின் உளவாளி தமிழ்மாறன் கடல் வழியாக கடத்தப்பட்டு வரும் வெடிமருந்துகளை கைப்பற்றி, தீவிரவாதக் குழுவுக்குள் ஊடுருவுகிறான். மறுபக்கம் அந்தக் கும்பலை அழிக்க டி.எஸ்.பி இதயத்துல்லா முயற்சிக்கிறார். ஆள் பலமின்றி தீவிரவாதிகளின் கோட்டைக்குள் அவர்கள். அவர்களின் உயிரைப் பணயம் வைக்கும் முயற்சிகளின் முடிவு என்ன?... படியுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580131008707
En Iniya India

Read more from S. Kumar

Related authors

Related to En Iniya India

Related ebooks

Related categories

Reviews for En Iniya India

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Iniya India - S. Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    என் இனிய இந்தியா

    En Iniya India

    Author:

    எஸ்.குமார்

    S. Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    சென்னையின் மையப் பரபரப்பிலிருந்து விலகியிருந்த சாலையில் அமைதியான எரிமலையாக...

    போலீஸ் கமிஷனர் அலுவலகம்.

    உள்ளே,

    நாகபூஷணம் மிகப்பெரிய மீசை வைத்திருந்தார். சிரிப்புக் காணாத முகம், சின்னக் கண்கள், யூனிஃபார்மைத் தவிர உடம்பிலும் கஞ்சி

    க்ளாட் டு மீட் யூ. மிஸ்டர் ஷிண்டே, எனி நியூஸ்?

    ஷிண்டே மத்திய அரசின் இண்டெலிஜென்ஸ் பீரோ அதிகாரி. மீசை, உடம்பு. கண்கள் என்று எதை வைத்தும் உத்தியோகத்துடன் சம்பந்தப்படுத்த முடியாத அமுல் பேபி முகம்.

    அவர் பேசவில்லை.

    தன்னுடைய கையிலிருந்த நீண்ட உறையைத் தந்தார்.

    நாகபூஷணம் உடனடியாக அதைப் பிரிக்காமல் கேட்டார்.

    எனிதிங் சீரியஸ்.

    எஸ், பம்பாய் நகர குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நம்ம போலீசுக்கும் உளவு நிறுவனங்களுக்கும் நிறைய வேலை. அஃப்கோர்ஸ், நிறைய சாதிச்சாங்க.

    ஆபத்து நீங்கிடுச்சில்லே?

    இல்லே.

    வாட் டு யூ மீன்?

    இப்போ சென்னைக்குக் குறிவச்சிருக்காங்க.

    நாகபூஷணம் அயர்ந்தார். அதிர்ச்சியும் அச்சமும் அவரின் மார்புக்கூட்டுக்குள் வந்து தங்கின.

    உண்மையாகவா?

    ஏன், சென்னையும் இந்தியாவில் தானே இருக்கு?

    இருக்கு, பட்...

    இது விதிவிலக்கா?

    ஆமாம், தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா, யூ டோன்ட் நோ, சார். இதனுடைய அறுபது வருட அரசியல் போராட்டங்கள்ல மத அடிப்படையில் ஒருத்தரையொருத்தர் எதிர்க்கமாட்டாங்க.

    எங்களுக்குக் கிடைச்ச தகவல்கள் உறுதியானவை.

    நாகபூஷணம் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

    ஷிண்டே கொடுத்த உறையைப் பிரித்தார்.

    வரிகளில் ஓடினார்.

    ஹாரிபிள். இந்த வெடிமருந்துகள் கரையிறங்கும் முன்பே பிடித்துவிட முடியாதா?

    முடியும். ஆனால் இங்கே இருக்கற தேசத்துரோகிகளை நாம் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். அதனால்தான் இந்த ஏற்பாடு.

    ஒருவேளை, அவர்கள் நம் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டால் சேதம் மிக அதிகமாகிவிடும் அல்லவா?

    உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுமா?

    ஐ’ம் சாரி, உங்கள் குறிப்பின்படி சென்னையிலிருந்து சற்று விலகியும் இந்தச் சரக்கு கரையிறங்கலாம். அல்லவா?

    ஆமாம், பெரும்பாலும் அவர்கள் அதைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

    அது எங்க எல்லையைத் தாண்டும்.

    டி.ஜி.பி.யிடம் ஒரு நகல் கொடுத்திருக்கிறோம், ஹீ வில் டேக் கேர்.

    நாகபூஷணத்தின் மீசைக்குள் வியர்த்தது. இதயத்தின் லப்டப் காங்கோ ட்ரம் போல் தடதடத்தது.

    வெளியே தன்னுடைய மாமூல் சுழற்சியை எந்தவித அச்சமுமின்றிச் செய்து கொண்டிருக்கும் இந்த மாநகரம் இனி பயங்கரவாதத்தின் பிடியில்.

    நாகபூஷணம் கமிஷனராகப் பதவியேற்று ஆறேமாதங்களாகின்றன. அதற்குள் இப்படியொரு சோதனை. பம்பாய் வெடி விபத்துக்களைத் தொடர்ந்து சென்னையில் நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாகிவிட்டது. அதைத் தளர்த்தி மக்கள் பீதி நீங்கி நடமாடத் துவங்கியுள்ள இந்தத் தருணத்தில் மீண்டும் சோதனை.

    அதுவும் இம்முறை சதியின் பிடியில் சென்னை என்ற நிச்சயமான தகவலுடன்.

    டி.ஜி.பி. விரைவில் உங்களை அழைத்துப் பேசுவார். என்றார், ஷிண்டே.

    ஆமாம், இனி சிவராத்திரிதான்!

    ஷிண்டே எழுந்து கொண்டார், நான் புறப்படறேன்.

    கார் வரை வந்து அவரை வழியனுப்பிய நாகபூஷணம் தன் இருக்கைக்குத் திரும்பினார்.

    மேஜையின் மேல் அழுத்தமாக உட்கார்ந்திருந்த அந்த மஞ்சள் உறையைப் பார்த்தார்.

    வெடிக்கக் காத்திருக்கும் சதிகார குண்டுகளைப் போலவே அதுவும் அமைதியான எமனாக அங்கே உட்கார்ந்திருந்தது.

    ஃபோன் ஒலித்தது.

    எஸ், கமிஷனர் ஆஃப் போலீஸ்.

    உங்க ஹோம் மினிஸ்டர் பேசறேன், என்றது மறுமுனைப் பெண் குரல்.

    அவருடைய மனைவி மங்களத்தின் குரல்.

    Enjoying the preview?
    Page 1 of 1