Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

100 Micron Sorgam
100 Micron Sorgam
100 Micron Sorgam
Ebook45 pages15 minutes

100 Micron Sorgam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By Sajitha Rajan
Languageதமிழ்
Release dateMay 30, 2019
ISBN9781043466633
100 Micron Sorgam

Read more from Sajitha Rajan

Related to 100 Micron Sorgam

Related ebooks

Related categories

Reviews for 100 Micron Sorgam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    100 Micron Sorgam - Sajitha Rajan

    15

    1

    சென்னை ஏர்போர்ட், பாதுகாப்புதுறை அமைச்சர் நீரஜா கிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

    மேடம் உங்களின் இந்த திடீர் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன?

    இந்தயா முழுவதிலும் போதை மருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் போதை மருந்துகளை பயன்ப்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் போதைபொருள் விற்பனை அமோகமாக உள்ளது என்று புள்ளி விபரங்கள் கூறுகிறது. பல்வேறு உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விவாதிக்க பிரதமரை சந்திக்க செல்கிறேன்.

    போதை பொருள் கடத்தலுக்கு பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

    இதற்கு பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை கண்டறிய உளவுதுறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    அரசியல் தலைவர்களுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

    அதை கண்டறிவது போலீஸின் வேலை.

    அமைச்சரின் பிஏ குறுகிட்டு மேடம் பிளைட்டுக்கு டைம் ஆகி விட்டது என்று கூறினார்.

    மேடம் உங்களின் பயணம்... என்று ஏதோ கேட்க நினைத்த நிருபர்களிடம்…

    உங்களின் எல்லா கேள்விகளுக்கும் எனது டெல்லி பயணத்தை முடித்துவிட்டு வந்து பதில் அளிக்கிறேன். இப்போது எனக்கு ஃபிளைட்டுக்கு டைம் ஆகிவிட்டது. என்று கூறி பத்திரிக்கையாளர்களிடமிருந்து நகர்ந்தார்.

    ஏர்போர்ட்டில் ஏராளமான தொண்டர்கள் பூங்கொத்துக்களோடு நீரஜாவை செண்ட் ஆப் செய்ய நின்றிருந்தனர்.

    அவர்கள் அனைவருக்கும் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றார்.

    2

    ஏசிபி தேவன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்ல ஜீப்பில் ஏறிய வினாடி அவர் செல்போன் அழைத்தது. அழைப்பது யார் என்று பார்த்த போது கமிஷனர் செந்தில் நாதன்.

    குட்மார்னிங் சார்…

    குட்ர மார்னிங் தேவன்.. இப்போ எங்க இருக்கீங்க?

    சார் ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன் சார் பத்து நிமிடத்தில் ரீச் ஆகி விடுவேன்.

    தேவன் நீங்க இப்போ இங்க வர வேண்டாம் டிஜிபி ஆபீஸுக்கு வாங்க. டிஜிபி இமீடியட்டா இரண்டு பேரையும் வர சொல்லிருக்கார்.

    இன்னும் பதினைந்து நிமிடத்தில் அங்கே இருப்பேன் சார்.

    என்று கூறி போனை பாக்கெட்டில் போட்டார்.

    டிஜிபி எதற்காக வர

    Enjoying the preview?
    Page 1 of 1