Kanavalavu Ulagam
By S. Kumar
()
About this ebook
இது என் பார்வை. என் கனவு. என் கனவில் விரிந்த உலகம்.
பள்ளிக்கூட நாட்களில் சினிமா நாயகர்களுக்கு பதிலாக எழுத்தாளர்களை ஆதர்சமாய்க் கொண்டிருந்தேன்.
எழுபதுகளின் இறுதியில் என் சிறுகதைகள் பிரசுரமாகத் துவங்கின. பிறகு குறுநாவல்கள். நாவல்கள்.
நாவல்கள் எழுத்தாளனைப் பிரபலப்படுத்தலாம். சிறுகதைகளின் வீச்சும் வெளிப்பாடும்தான் அவனைச் சரியாக அடையாளம் காட்டும்.
இது என் முதல் சிறுகதைத் தொகுதி.
இந்தக் கனவளவு உலகம் நிஜ உலகத்தின் நீட்சிதான். காலத்தை ஜெயித்து ஞாபக நரம்புகளில் கனவென உறைந்துபோன செல்லுலாய்ட் சிற்பங்கள்.
- எஸ். குமார்
Read more from S. Kumar
Kolaikku Saatchi Illai Rating: 0 out of 5 stars0 ratingsEngey Andha Iruvar? Rating: 0 out of 5 stars0 ratingsIthayame Nindru Po Rating: 0 out of 5 stars0 ratingsNeeyoru Kolai Seivai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Unnudaiya Naal Rating: 0 out of 5 stars0 ratingsIrakkam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsVanam Mannil Veezhvathillai Rating: 0 out of 5 stars0 ratingsEndha Kathavum Thirakkum Rating: 0 out of 5 stars0 ratingsKanavai Thurathiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vairam! Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsKaattil Nila Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya India Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravai Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kaayangal Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsKuthiraiyil Oru Rajakumaran Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Kuzhappam Enna? Rating: 0 out of 5 stars0 ratingsPriyam Enbathu... Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsVettai Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsAthiradi Padai Rating: 0 out of 5 stars0 ratingsMonikavukku Motcham Rating: 0 out of 5 stars0 ratingsNaan Yaar Theriyuma? Rating: 0 out of 5 stars0 ratingsArugey Oru Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsKondral Paavamillai Rating: 0 out of 5 stars0 ratingsBommai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVarambu Meerum Vayathu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanavalavu Ulagam
Related ebooks
Engeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsKaalamellam Kaathirupen Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Ellaigalin Vilimbil Rating: 5 out of 5 stars5/5Nishabdha Sangeetham Rating: 5 out of 5 stars5/5Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsAnumathi Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsPon Maalai Mayakkam Rating: 4 out of 5 stars4/5Un Madiyil Naan Uranga... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Pathintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Niram Manjal Rating: 5 out of 5 stars5/5Tharaiyil Irangum Vimanangal Rating: 5 out of 5 stars5/5Nilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Nesa Kavithai Solladi Rating: 4 out of 5 stars4/5Nilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Thisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsVazhikatti Vazhi Thavarugirathu! Rating: 5 out of 5 stars5/5Niram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Vaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsUn Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Oru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsNenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Rail Sneham Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaatril Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsNee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanavalavu Ulagam
0 ratings0 reviews
Book preview
Kanavalavu Ulagam - S. Kumar
http://www.pustaka.co.in
கனவளவு உலகம்
Kanavalavu Ulagam
Author:
எஸ்.குமார்
S. Kumar
For more books
http://www.pustaka.co.in/home/author/s-kumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மரியாதை
முதலிரவு
அவள்தான் வேண்டும்
அப்பா
ரோஷம்
விலாசமற்ற இரவுகள்
தரை தட்டிய காகிதக் கப்பல்
கம்பிகளுக்குப் பின்னால் சில கதைகள்
வாரிசு
எதிர்வீட்டில் ஒரு டீன்ஏஜ்
கனவு மரங்கள்
விசாலியின் கையில் ஒரு ரோஜா
ஒருவழிப் பாதை
சமூக நியாயம்
சீருடை
அவளுக்கு உண்டு இவனுக்கு இல்லை
அவனுக்கு இல்லை
மீண்டும் தொட்டிலுக்கு...
சாவுக்கூத்து
முதல் கடிதம்
என்னுரை
இது என் பார்வை. என் கனவு. என் கனவில் விரிந்த உலகம்.
பள்ளிக்கூட நாட்களில் சினிமா நாயகர்களுக்கு பதிலாக எழுத்தாளர்களை ஆதர்சமாய்க் கொண்டிருந்தேன்.
எழுபதுகளின் இறுதியில் என் சிறுகதைகள் பிரசுரமாகத் துவங்கின. பிறகு குறுநாவல்கள். நாவல்கள்.
நாவல்கள் எழுத்தாளனைப் பிரபலப்படுத்தலாம். சிறுகதைகளின் வீச்சும் வெளிப்பாடும்தான் அவனைச் சரியாக அடையாளம் காட்டும்.
இது என் முதல் சிறுகதைத் தொகுதி.
இந்தக் கனவளவு உலகம் நிஜ உலகத்தின் நீட்சிதான். காலத்தை ஜெயித்து ஞாபக நரம்புகளில் கனவென உறைந்துபோன செல்லுலாய்ட் சிற்பங்கள்.
எஸ். குமார்
*****
மரியாதை
சாயி பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு மிக அருகே அந்தக் கார் வந்து நின்றது. பக்கத்தில் நின்றிருக்கும் அந்த ஃபாரின் நைலக்ஸுக்காக அது நின்றிருக்க வேண்டும் என்று அவன் அனுமானம் செய்தான்.
சாயி
- குரல் காருக்குள்ளிருந்து வந்தது.
அவன் காரைப் பார்வையால் ஊடுருவினான்.
ஷாம்பூ விளம்பர ஹீரோ மாதிரி அடர்ந்திருந்த முடியை அடுத்திருந்தது கோகோ கிளாஸ். முகத்தின் முழு பரிமாணம் தெரியாததால் சாயிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது.
‘குரல் காருக்குள்ளிருந்து வந்திருக்காதோ?’
கார் கதவு திறக்கப்பட்டது. ஹீரோ தரையில் கால் பாவினான். தாடியில்லாத கபீர் பேடியைப் பார்ப்பதுபோல் இருந்தது.
இத்தாலியப் பெண்களுக்குப் பிடிக்கும்!
அவன் சாயியை நெருங்கி தோள்களை அழுத்தினான்.
கார்லே ஏறுடா.
சாயியின் கைகளைப் பற்றி காருக்கு இழுத்துச் சென்றான்.
சாயி காரில் முன் சீட்டில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் கோகோவைக் கையில் எடுத்துத் துடைத்தான்.
அந்த நீளமுகம்... வலது கன்னத்தில் இருக்கும் சிறிய அம்மைத் தழும்புகள்...
நீ... நீங்க ஜானகிராமன் தானே!
நோ, ‘நாங்க' ஜானகிராமன் இல்லே! நான் ஜானி.
அவன் தன் மரியாதையைப் புறக்கணித்தது சாயிக்குப் பிடித்திருந்தது.
படிக்கிற நாட்களில் வீட்டுக்குத் தெரியாமல் இரண்டு வில்ஸ் ஒரு தீப்பெட்டியுடன் கிளியாற்றுப் பாலத்தின் கீழ் ரகசியமாகக் கம்பெனி கொடுக்கும் அந்த ஜானி இன்னும் அதே ஜானியாகவே இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஜானி, இப்போ என்ன பண்றே?
ஐந்து டிஜிட் சம்பளத்திலே, அழகான பெண்டாட்டியோட வாழ்க்கையை அனுபவிக்கிறேன்... நீ எப்படி இருக்கே?
நாலு டிஜிட் சம்பளத்திலே, சுமாரான பெண்டாட்டியோட வாழ்க்கையிலே அனுபவிக்கிறேன்!
ஜானி சிரித்தான் - தான் படற கஷ்டத்தைக்கூட மத்தவங்க ரசிக்கிற மாதிரி எடுத்துச் சொல்ல உன்னாலதான் முடியும்.
கார் கொஞ்ச தூரம் வழுக்கியதும்
இப்போ நீ எங்கே போகணம்
ஆபீசுக்கு. டைம் - ஹவுஸ்கிட்டே இறக்கிவிட்டா போதும்.
சாயி, நீ ஏன் வேறே நல்ல வேலைக்குப் போகக் கூடாது?
வேறே வேலை கிடைக்கலே.
என்னாலே உனக்கு ஒரு நல்ல வேலையை வாங்கித் தர முடியும்... உன் வீடு எங்கே இருக்குன்னு சொல்லு. சண்டே நான் வர்றேன்.
சாயி ஒருகணம் கற்பனை செய்து பார்த்தான்.
அந்த ஒண்டுக் குடித்தன ஓட்டு வீட்டின் முன்னால் ஜானியின் படகுக் கார். பக்கத்துப் போர்ஷன் ராமசேஷூவின் பையன்கள் அழுக்குக் கைகளால் காரைத் தடவுகின்றனர். நுழைவாசலில் ஜானியின் தலை இடித்துக் கொள்கிறது. கரி பூசிய முகத்துடன் வரவேற்கிறாள் அவன் மனைவி.
ஜானி, நானே உன் வீட்டுக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்.
ஓ.கே. பிட்வீன் டவெல் அண்ட் டூ வீட்டிலே இருப்பேன்.
கார் டைம் ஹவுஸ் வாசலில் நின்றது. சாயி இறங்கிக் கொண்டான்.
ஸீ யூ
கார் புறப்பட்டது.
***
அந்த ஞாயிற்றுக்கிழமை.
சாயி ஜன்னலுக்கு அருகே நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். உள்ளே ரமேஷ் பேசுவது கேட்டது.
அம்மா, இந்தப் பென்சில் ரொம்ப சின்னதாப் போச்சு. வேற வாங்கித் தந்தாதான் நாளைக்கு ஸ்கூலுக்குப் போக முடியும்.
கொஞ்சம் பொறுத்துக்கோடா கண்ணா. சீக்கிரம் நம்ம கஷ்டமெல்லாம் விடியப் போகுதுடா. அப்பா இந்தச் சனியன் பிடிச்ச வேலைக்கு முழுக்குப் போடட்டும். அப்புறம் நீ கேட்டதெல்லாம் வாங்கித் தர்ரேன். அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!
முடியாது. இத்தனூண்டு பென்சில்லே எழுத முடியாது. ஒழுங்கா எழுதலேன்னா டீச்சர் வெளியே துரத்திருவாங்க!
சனியனே, இவ்வளவு தூரம் சொல்றேன். கையைக் காலை உதைச்சிக்கிட்டு சண்டித்தனம் பண்றியே!
அவள் பொறுமை இழந்துவிட்டாள்.
சாயி எழுந்து அவளருகே வந்தான். அவளது ஓங்கிய கையைத் தடுத்து நிறுத்தினான். சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினான்.
போடா, போய் பென்சில் வாங்கிட்டு மிச்சத்தைக் கொண்டா.
பையன் பறந்து சென்றான்.
இந்த மாசக் கடைசியிலே உங்களிடம் பணம் ஏது?
கடன் வாங்கினேன்.
புது வேலை கிடைக்கப் போற தைரியத்தில் கடன் வேறு வாங்க ஆரம்பிச்சிட்டீங்களா?
டோண்ட் ஒர்ரி. வேற வேலை நிச்சயம் கிடைக்கும். ஜானி சொன்னா சொன்னதுதான்! இத்தனை வருஷத்துக்கப்புறம் அவனாகவே வந்து என்னை அடையாளம் கண்டுபிடித்துப் பேசி வேலை வாங்கித் தர்ரேன்னு சொல்லியிருக்கானே! இதிலிருந்து தெரியலையா, அவன் குணம்?
வால் கிளாக்கின் ஒற்றை மணி, அவர்களுக்கு நேரத்தை நினைவூட்டியது.
சீக்கிரம் குளிச்சிட்டுச் சாப்பிட வாங்க.
அவன் மோவாயைத் தடவினான்.
கொஞ்சம் பொறுத்துக்கோ. ஷேவிங்கும் பண்ணிக்கிட்டு வந்திடறேன்.
***
பிவேர் ஆஃப் டாக்ஸ்.
சார் ஜானியைப் பார்க்கணும்.
உங்க பேர் என்ன?
சாயின்னு சொன்னா அவனுக்குத் தெரியும்.
அவர் வீட்டிலே இருக்காரான்னு தெரியலே! கொஞ்சம் நில்லுங்க. தோ வரேன்.
அவன் வீட்டுவாசலை அடைந்தபோது ஜானி அவனை எதிர்கொண்டான்.
வாடா
வாங்க
வரவேற்றவள் சிம்பிளாக இருந்தாள்.
இவதான் என்னோட ஒய்ஃப்.
விமலா, எல்லாம் ரெடியாயிருக்கா?
ரெடிங்க.
சாயி, நான் இன்னும் சாப்பிடலே. உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.
நான் ஏற்கனவே சாப்பிட்டுட்டேன்.
நல்ல காரியம் பண்ணே! முதல் முதலா எங்க வீட்டுக்கு வர்ரே, இங்கே சாப்பிடாமப் போக விடுவேனா?
சாயி அவன் திருப்திக்காகச் சாப்பிடப் போனான்.
அவன் இலைக்கு முன்னால் உட்கார்ந்தபோது
கேட்டில் அவனைச் சந்தித்தவன் அங்கே வந்தான்.
சார், உங்களைப் பார்க்க அட்வகேட் சந்திரசேகர் வந்திருக்கார்.
சாயி, நீ சாப்பிடு. நான் இதோ வந்துடறேன்.
அரைமணி ஆகியும் அவன் வரவில்லை. விமலா மட்டும் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தாள்.
அவன் விமலாவை விசாரித்தான்.
"எங்கே ஜானியைக் காணோம்?'
அட்வகேட்டும், சில ஃப்ரெண்ட்ஸும் வந்திருக்காங்க. அவங்களோடு டைனிங் ஹால்லே இருக்கார்.
அவனுக்குத் துணுக்கென்றது.
'அட்வகேட் போன்ற பெரிய மனிதர்களுடன் டைனிங் ஹாலில் சாப்பிடும் அவன் என்னை மட்டும் தரையில் உட்கார வைத்து விட்டுப்போனதேன்...?'
அவன் விமலாவிடம் சொன்னான் - நான் அப்புறம் வர்ரேன்.
அவளுக்குத் தடை சொல்லக்கூட அவகாசம் தராமல் வேகமாக நடந்தான். கேட்டைக் கடந்தான்.
தெரு முனையைக் கடந்து பஸ் ஸ்டாப்பை நெருங்கிய போது அந்தக் கார் அவனை