Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Bommai Manithargal
Bommai Manithargal
Bommai Manithargal
Ebook87 pages24 minutes

Bommai Manithargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் இலக்கியம் படித்த மூன்று நண்பர்கள் வேறுபட்ட வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுள் தவறான வழியில் பொருள் ஈட்டும் அரசியல்வாதி ஒருவர் ஒரு எளிமையான பாமரனின் செயலால் எவ்வாறு மனம் மாறுகிறார் என்பதை சுவராசியமான இந்த நாவலை படித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580131006292
Bommai Manithargal

Read more from S. Kumar

Related authors

Related to Bommai Manithargal

Related ebooks

Reviews for Bommai Manithargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Bommai Manithargal - S. Kumar

    http://www.pustaka.co.in

    பொம்மை மனிதர்கள்

    Bommai Manithargal

    Author:

    எஸ்.குமார்

    S.Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamil/s-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    முன்னுரை

    தமிழ் இலக்கியம் படித்த மூன்று நண்பர்கள் வேறுபட்ட வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுள் தவறான வழியில் பொருள் ஈட்டும் அரசியல்வாதி ஒருவர் ஒரு எளிமையான பாமரனின் செயலால் எவ்வாறு மனம் மாறுகிறார் என்பதை சுவராசியமான இந்த நாவலை படித்து அறிவோம்.

    *****

    அத்தியாயம் 1

    சென்னை திருவல்லிக்கேணியின் ஒரு புராதனக் கட்டிடத்து வாசலில் ஒற்றை ஆளை நிறுத்தி வைத்து விட்டு, அங்கிருந்து மாடிப்படி வழியாக நடந்தால் வரும் ஹாலின் ஒரு மூலையின் வழியாக அடுத்த இடிந்த கட்டிட மாடிக்குள் நுழையுமிடத்தில் கார்ட் போர்ட் தடுப்பு வைத்து இயங்கிக் கொண்டிருந்தது, அந்த ஆசிரியர் குழு.

    ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஜாதிக்கட்சி என்று எதிலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.

    வார்த்தையால் மோதுவார்கள். ஆயுதங்களாலும் தாக்குவார்கள். சமயத்தில் போலீஸ் வரும்.

    வாளின் முனையை விட பேனா முனையே கூர்மையானது என்று வசனம் பேச முடியாது. 'காட்டு' காட்டி விட்டுத் தான் போவார்கள்.

    முன் ஜாக்கிரதையாக கீழே காத்திருக்கும் ஆள் ஓடி வந்து சொல்வான். பின் கதவு வழியாக எடிட்டோரியல் அம்பேல் ஆகிவிடும்.

    மாறாக –

    ஓரிருவர் ரிப்போர்ட் செய்யவோ, தகவல் தரவோ வந்தால் அவர்களைத் தீர விசாரித்து மேலே அனுப்பும் பணியும் அந்த வாயில் காப்போனுடையது தான்!

    வயிற்றில் புளியைக் கரைக்கும் அந்த வேலையில் இருந்த இளைஞர்கள் அடிக்கடி தமிழக வி.ஐ.பி.க்களைக் கலக்கிக் கொண்டு தான் இருந்தார்கள். அந்த த்ரில்லுக்காகவே அந்த வேலையை நேசித்தார்கள்.

    ‘ஆராய்ச்சி மணி' என்பது பத்திரிகையின் பெயர்.

    மனுநீதி கேட்டுப் பலமுறை மணியடித்திருக்கிறது.

    அடிக்கடி பரபரப்பான செய்திகளை வெளியிட்டு மக்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. அரசியல் மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது.

    அதன் ஆசிரியர் ராமராஜ் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அவன் பக்கத்தில் கேள்வியுடன் சுகுமாரன்.

    என்ன யோசனை?

    அடுத்த இதழுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு...

    என்ன விஷயம்?

    அமைச்சர் முருகேசனின் ஊழலைப் பத்தித்தான்...

    அதைப்பற்றி எந்தச் செய்தி வந்தாலும் அவர் கவலைப்படலையே! எந்த எதிர்வினையும் காட்டாம அதை உதறித் தள்ளிடறாரே!

    திரும்பவும் அவரைப் பேச வைக்கணும்.

    முருகேசன் சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர். மின்ன சோட்டாவில் இருக்கும் ஒரு என்.ஆர்.ஐ.க்கு சென்னையில் ஓட்டல் கட்ட அரசு நிலத்தை விற்றதில் அவர் ஊழல் செய்திருக்கிறார் என்பது இதழாளர்களின் குற்றச்சாட்டு.

    ஆரம்பத்தில் முருகேசன் அந்தச் செய்திகளுக்கு எம்பிக் குதித்தார். ஆவேச அறிக்கைகள் விட்டார்.

    பிறகு –

    எல்லா எதிர்க்கட்சிகளும் எல்லா இதழ்களும்

    Enjoying the preview?
    Page 1 of 1