Nalla Manam Vaazhga
By Devibala
4/5
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Nenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Mounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Manithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsvayulla Oomaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nalla Manam Vaazhga
Related ebooks
Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Ammavukku Oru Veedu Rating: 5 out of 5 stars5/5Aanathikkam Rating: 5 out of 5 stars5/5Konchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsThendral Neethana? Rating: 3 out of 5 stars3/5அதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsVaazha Vaa Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsVaakku Sutham Rating: 5 out of 5 stars5/5Iruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsVithi Pichai Rating: 0 out of 5 stars0 ratingsThethi Kuruchidunga Rating: 5 out of 5 stars5/5Naathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Yen Rating: 5 out of 5 stars5/5Kaal Raasi Rating: 0 out of 5 stars0 ratingsArchanai Pookkal! Rating: 0 out of 5 stars0 ratingsBaagirathi Rating: 0 out of 5 stars0 ratingsAnantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Devan Mozhi Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5Anthi Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVettri En Pakkam Rating: 1 out of 5 stars1/5Karuvoolam Rating: 4 out of 5 stars4/5Ava(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nalla Manam Vaazhga
1 rating0 reviews
Book preview
Nalla Manam Vaazhga - Devibala
http://www.pustaka.co.in
நல்ல மனம் வாழ்க
Nalla Manam Vaazhga
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
1
சென்னை
அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.இ. படிக்க இடம் கிடைத்து விட்டது முருகனுக்கு! குறிப்பிட்ட நாளுக்குள் கல்லூரியில் சேரும்படி அன்றுதான் கடிதம் வத்திருந்தது.
அதை முருகன்தான் படித்தான்.
பூங்குன்று கிராமத்தில் நாலெழுத்து படிக்கத் தெரிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதில் முதல் நபர் முருகன்.
அப்பா மாணிக்கத்துக்கு விவசாயம் தவிர வேறு எதுவும் தெரியாது. அதுவும் சமீப காலமாக மழை இல்லாமல் வறண்டு போனதால், விளைச்சல் இல்லை! இருக்கும் நகை - நட்டுகளை விற்று எப்படியோ கஷ்ட ஜீவனம் நடந்து கொண்டிருக்கிறது.
அம்மா வேணிக்குத்தான் தன் பிள்ளை முருகன் பெரிய மனிதனாக சமூகத்தில் உயர்ந்து பேசப்பட வேண்டும் என்ற தீராத ஆசை.
அந்த கிராமத்திலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தால், ஒரு பள்ளிக்கூடம் வரும். அது நல்ல பள்ளிக்கூடம். அங்கேதான் அவனை சேர்த்தார்கள்.
சும்மா சொல்லக்கூடாது. முருகனுக்கு அசாத்திய அறிவுதான். ஒரு தடவை சொல்வதற்குள் 'கப்'பெனப் பிடித்துக் கொள்ளும் ஆற்றல். அது படிப்பில் உதவ, முதல் வகுப்பிலிருந்தே தொடங்கி, தொடர்ந்து முதலிடத்தை அவன் எவருக்கும் விட்டுத்தரவே இல்லை.
ஒன்பதாம் வகுப்பு வரும்போதே அந்தக் கல்வி நிறுவனத்துடன் இணைந்த ஒரு அறக்கட்டளை இவனது படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு விட்டது.
இவனது ஆற்றலைப் பார்த்து, அதுவே தேர்ந்தெடுத்தது.
பத்தாவது வகுப்பில், மாநிலத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிட்டான். பத்திரிகைகளில் புகைப்படம் வெளியானது. கொஞ்சம் ரொக்கப் பரிசும் வந்தது.
உற்சாகம் அதிகமாக, இன்னும் கடுமையாக உழைத்தான்.
12-வது வகுப்பில் மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டான். பேட்டி, படங்கள் என புகழ் பரவியது.
மாணிக்கம், வேணியைக்கூட தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்டது.
மாநிலமெங்கும் முருகன் புகழ் பரவ, கிராமத்தில் அவன் கதாநாயகனாகி விட்டான்.
அந்த அறக்கட்டளை, பள்ளிக்கூடப் படிப்புக்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை.
இப்போது முருகன் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்திருந்தான். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வந்தது. போய்விட்டு வந்தான்.
நம்பிக்கை இருந்தது.
இடம் கிடைத்துவிட்டால் படிக்க வைப்பது எப்படி? என்ற கலக்கம் மாணிக்கம், வேணிக்கு இருந்தது.
நிச்சயமாகக் கையில் பணமில்லை!
'முருகன் நாளை தலையெடுத்து கடனை அடைப்பான் என்ற நம்பிக்கையில் உதவ வேண்டும்.'
'அப்படி யார் இருக்கிறார்கள்?’
‘அத்தனை நாள் காத்திருக்கும் சக்தியும், நம்பிக்கையும் யாருக்கு உண்டு?'
கேள்வி மேல் கேள்வி வந்தது. ஆனால், பதில் ஒரே வாரத்தில் கிடைத்துவிட்டது.
நல்ல புத்திசாலிப் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் ஒரு தொண்டு நிறுவனம், இவனைத் தேர்ந்தெடுத்து விட்டது. இவனது படிப்புச் செலவு மொத்தத்தையும் ஏற்றுக் கொள்வதாக ஆதாரப்பூர்வமாக கடிதமே தந்துவிட்டுப் போய்விட்டது.
இதோ 'எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்', படிக்க இடம் கிடைத்துவிட்டது.
முருகன் அந்த நல்ல சேதியை கிராமம் முழுக்க பரப்ப ஓடிவிட்டான்.
மாணிக்கம் கை - கால் கழுவிவிட்டு, சாப்பிட உட்கார்ந்தார்.
பழைய சோறு, வெங்காயம்தான் இருந்தது.
வேணி! பையன் என்னிக்கு புறப்படணும்?
அது இப்ப பிரச்சினை இல்லீங்க...! அவன் எங்கே தங்குவான்?
மாணிக்கம் நிமிர்ந்தார்.
படிப்பு சம்பந்தப்பட்ட செலவை மட்டும்தான் அவங்க தருவாங்க! தங்கி, சாப்பிட்டு, உடுத்த யார் செய்வாங்க? சரி, துணிமணி இருக்கு. ராத்திரி படுக்க எடம் தர்றாங்கன்னு வைங்க! சோறு யார் போடுவாங்க?
மாணிக்கம் அவளைப் பார்த்தார்.
எங்க பெரியப்பா மகன் ஒருத்தர் இருக்கார். எனக்கு அண்ணன் முறை வேணும்!
நம்ம ராஜதுரை அத்தான்தானே?
அவரேதான்! அவர் வீட்ல இவன் தங்கிக்கட்டுமே!
சரிங்க! இவனுக்கு சோறு போட்டு, இவனை படிப்புக்கு அனுப்ப வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன?
இதப் பாரு! நாமே கேட்டுக்கிட்டிருந்தா சரிப்படாது. பையன்கூட நானும் போறேன். கேட்டுப் பாக்கறேன். அண்ணன் வசதியா இருக்காங்க. கண்டிப்பா செய்வாங்க!
சரி, பாருங்க!
அடுத்த இரண்டு நாட்களில் முருகன், அப்பா மாணிக்கத்துடன் புறப்பட்டு விட்டான்.
சென்னை மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில்தான் அண்ணன் ராஜதுரை இருந்தார். இருவரும் பஸ் பிடித்து சென்றார்கள்.
கொஞ்சம் பெரிய வீடுதான். இருவரும் தயக்கத்துடன் உள்ளே நுழைய, ராஜதுரை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அடடா... மாணிக்கமா? வாடா தம்பி! பையனோட பேர், பட்டிதொட்டியெல்லாம் பரவிப் போச்சே! வாழ்த்துகள்!
முருகா! பெரியப்பா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கு!
முருகன், காலில் விழுந்தான்.
நல்லாருப்பா!
மாணிக்கம் இடம் கிடைத்த விவரத்தையும், உபகாரச் சம்பள சங்கதியையும் சொன்னார்.
ரொம்ப சந்தோஷம்.
அண்ணி இல்லையா?
அவங்கம்மா வீட்டுக்கு போயிருக்கா... நாளைக்கு வருவா!
அண்ணே! படிப்புக்கு பணம் தர்றாங்க. அவன் இங்கே தங்கிக்கிட்டு காலேஜுக்கு போகலாமா? அவனுக்கு நீங்க சோறு போட்டு பார்த்துக்கிட்டா, அந்த நன்றிக் கடனை என்னிக்காவது ஒரு நாள் அவன் செலுத்துவான்!
என்ன மாணிக்கம் நீ? ஒரு முறைக்கு நீ எனக்குத் தம்பி. அப்படீன்னா, இவன் எனக்கு மகன்தானே? தாராளமா இருக்கட்டும். ரெண்டு வேளை இவன் சாப்பிடற காரணமா இந்தக் குடும்பம் அழிஞ்சிடுமா? படிக்கிற புள்ளைக்கு சோறு போட்டு ஆதரிச்ச புண்ணியம் எனக்குக் கிடைக்கட்டுமே! விட்டுட்டு போ...
அண்ணிகிட்ட...!
நான் சொல்லிக்கறேன் மாணிக்கம். பெரும்பாலும் எல்லா வீடுகள்லேயும் பொம்பளைங்க கொஞ்சம் நீக்கு போக்காத்தான் இருப்பாங்க. பெரிசுபடுத்திக்கக்கூடாது. ரெண்டு பேரும் சாப்பிட வாங்க. இன்னிக்கு என் சமையல்தான்!
இருவரும் குளித்துவிட்டு சாப்பிட்டார்கள்.
அப்ப நான் புறப்படறேன் அண்ணே! முருகா... பெரியப்பா, பெரியம்மாகிட்ட நல்லபடியா நடந்து நல்ல பேரெடு!
சரிப்பா.
மாணிக்கம் புறப்பட்டுப் போனார்.
*****
2
மறுநாள் மாலைதான் பெரியம்மா செண்பகம் வந்தாள். அவர்களுக்கு ஒரே மகள். பத்தாவது படிக்கிறாள். படிப்பில் ரொம்ப சுமார்.
செண்பகத்திடம் முருகன் பற்றிய விவரத்தைச் சொன்னார் ராஜதுரை.
அவள் எதுவும் பேசவில்லை. முகத்தில் சிரிப்பும் இல்லை. அவளுக்கு இது பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
பிரச்சினை என்று வந்தால், அவள் உடனே பேசமாட்டாள். ஆறப் போட்டு பிறகு வெடிப்பாள்.