Vaakku Sutham
By Devibala
5/5
()
About this ebook
Read more from Devibala
Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyum Varai Rating: 5 out of 5 stars5/5Aasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vaakku Sutham
Related ebooks
Kaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsKedayam Rating: 1 out of 5 stars1/5Ennai Thedathey! Rating: 0 out of 5 stars0 ratingsIlakku Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsSandhitha Neram! Rating: 3 out of 5 stars3/5Thunaiyiruppaal Durga Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsKathalikka Mudiyale Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsஜரிகை வேட்டி Rating: 0 out of 5 stars0 ratingsTharisanam Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsPadma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsMummy Rammy Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsVara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Kaatraluththa Mandalam Rating: 5 out of 5 stars5/5Ava(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsNavarasa Nayagi Rating: 0 out of 5 stars0 ratingsKaalaththin Kattalai Rating: 4 out of 5 stars4/5Pazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Theerpu Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Aanantham Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Pothum Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vaakku Sutham
1 rating0 reviews
Book preview
Vaakku Sutham - Devibala
12
1
இருபத்தி மூன்று வயது அபிராமிக்கு அசர வைக்கும் அழகு! தங்க விளக்கு போல அப்படி ஒரு தகதகப்பு! சர்வ லட்சணமும் பொருந்திய ஒரு பெண்ணை நீங்கள் பார்க்க வேண்டுமானால் அது அபிராமிதான்!
பதினாறு வயது வரை அபிராமி இருந்தஇடம் - அந்தக் கிராமத்தில் யாருக்கும் தெரியவில்லை!
பள்ளிக்கூடப் படிப்பு! அதை முடிப்பதற்கே அவள் பட்டபாடு கொஞ்சமல்ல...!
தனது ஏழாவது வயதில் அம்மாவை இழந்தவள் அபிராமி. மஞ்சள் காமாலை வந்து - சரியாக கவனிக்கப்படாமல் உயிரை விட்டவள் அபிராமியின் அம்மா பங்கஜம்!
அபிராமிக்கு மூன்று வயது பெரியவன் பாண்டியன்! அபிராமிக்கு ஐந்து வயதாக இருக்கும் போது, அப்பாவுடன் வெளியூருக்குப் போன பாண்டியன் தொலைந்து போய் விட்டான். இன்றுவரை அவன் கிடைக்கவில்லை! தேடாத இடமில்லை! வேண்டாத தெய்வம் இல்லை! போலீசில் புகார் கொடுத்து பலவித முயற்சிகளை மேற்கொண்டும் அவன் கிடைக்கவேயில்லை!
அந்த ஏக்கத்தில் படுத்த படுக்கையான அம்மா பங்கஜத்தை மஞ்சள்காமாலையும் தாக்க, உயிரை விட்டாள்.
ஏழுவயது அபிராமியை பார்த்து ஊரே உடைந்து போனது!
‘எத்தனை அழகான ஒரு பெண் குழந்தை - இன்னிக்கு தாயில்லாம நிக்குதே!’
அந்த ஊரைச்சுற்றி நிலம் நீச்சு ஏக்கராக் கணக்கில். கிராமத்தில் - நாலைந்து வீடுகள் - தவிர ரைஸ் மில் - பேக்டரி என அபிராமியின் அப்பா - ரத்னத்துக்கு ஏராளமான சொத்துக்கள். அத்தனையும் அம்மா பங்கஜத்தின் அப்பா சம்பாதித்த சொத்துக்கள் - தன் ஒரே மகளின் பேரில்! அதன் பிறகு பேரக் குழந்தைகளைச் சேர வேண்டும் என்பது உயில். அனுபவ பாத்யதை மட்டும் ரத்னத்துக்கு. ஒருக்கால் அபிராமிக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், சொத்துக்கள், கார்டியனாக இருக்கும் அப்பா ரத்னத்துக்கு வந்து சேரும்!
ரத்னத்தின் அத்தை ஒருத்தி வெளியூரில் இருந்தாள்.
சகல விவரமும் தெரிந்து வைத்திருந்தாள்!
அவளின் ஒரே மகள் மோகனா! சுமாராக இருப்பாள். ஆனால் அம்மாவும், மகளும் பக்கா க்ரிமினல்! சாவை சாக்காக வைத்து உள்ளே புகுந்து விட்டார்கள்!
ஒப்பாரி வைத்துக் கதறி, இந்தக் குழந்தையை எப்படீடா வளர்க்கப் போறே என புலம்பி, காரியங்கள் முடியும் வரை அங்கேயே தங்கி, அபிராமியிடம் அதிக பட்ச அன்பைக் காட்டுவதைப் போல நடித்து, படிப்படியாக ரத்னத்துக்கு வலை வீசி, ஒரு வருட காலம் இடைவிடாத முயற்சியில் ரத்னத்தை வீழ்த்தி விட்டாள் மோகனா!
ரத்னத்தின் பலவீனமான நிமிடங்களில் அதிகபட்ச நெருக்கம் காட்டி படுக்கையில் சரித்து விட்டாள்.
அதைக் காரணமாக்கி அத்தை ஆண்டாளு ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்ட, ரத்னம் நொந்து போக..
சரிங்க! அவரும் சின்ன வயசு! எல்லா ஆசைகளும் இருக்குமில்லையா? பொண்டாட்டி செத்தா, உணர்ச்சிகளும் செத்துப் போகணும்னு கட்டாயமா? அத்தை மகள்தானே! உரிமை எடுத்துக்கிட்டாரு! தப்பென்ன? கட்டி வச்சிடுங்க! புள்ளைக்கும் ஒரு அம்மா வேணுமில்லை?
குரல்கள் சாதகமாக, முடிவெடுக்கப்பட்டது!
வெளியூரில் இருந்த - பங்கஜத்தின் தம்பி - அபிராமியின் தாய்மாமன் இதைக் கேள்விப்பட்டு போர்க் கொடி தூக்க, அதை யாரும் பொருட்படுத்தவில்லை. அம்மாவின் உறவுகள் யாருக்கும் அங்கே மரியாதை இல்லை!
தடாலடியாக மோகனா, ரத்னத்தின் மனைவியாகும் போது அபிராமிக்கு எட்டு வயது முடிந்திருந்தது!
தொலைந்த பாண்டியனும் கிடைக்கவில்லை.
மேலும் ஒரு வருடகாலம் ரத்னத்தின் கண்களைக் கட்ட, அபிராமியின் மேல் உயிரையே வைத்திருப்பதாக வேஷம் போட்டாள் மோகனா! அது வேலை செய்தது!
அடுத்த வருடமே மோகனா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்!
அது பிறந்த முதல் மோகனாவின் நிஜ சொரூபம் வெளியே வந்து விட்டது! போதாக் குறைக்கு கிழவி ஆண்டாளு!
ரத்னத்துக்கு நேரே வேஷம் கட்டி, ஆடி விட்டு, மறைவில் சிறுமி அபிராமிக்கு கொடுமைகள் ஆரம்பமாகி விட்டன!
அபிராமிக்கு அவள் அம்மா பங்கஜத்தின் குணம். அசாத்திய சகிப்புத் தன்மை. பத்து வயதைத் தொடும் போதே பக்குவப்பட்ட குணம்!
சித்தியை எதிர்க்கவேயில்லை!
அப்பாவிடம் போட்டுத் தருவது - குழப்பத்தை உண்டாக்குவது என்ற எதுவும் இல்லை!
சித்தி பெற்ற பெண் குழந்தை இந்திரா மேல் தன் சொந்தத் தங்கையாக பாசம் வைத்தாள் அபிராமி!
சகல வீட்டுவேலைகளையும் செய்தாள்.
அதோடு உள்ளூர் பள்ளிக் கூடத்தில் படிப்பு. அசாத்திய புத்திசாலித்தனத்தால் எதிலும் முதல் மாணவி!
அந்த ஊர் அங்காளம்மன் போல அபிராமி ஜொலித்ததால் அவளிடம் அந்த ஊருக்கே ஈர்ப்பு இருந்தது!
அம்மா வழி சொந்தமான மாமா, அத்தை அவளைப் பார்க்க வந்தால் நெருங்க விடாமல் தடுத்து விடுவாள் மோகனா.
கிழவி ஆண்டாளும் பல சமயம் ஓவராக அபிராமியை படுத்துவாள்.
அம்மா! அடக்கி வாசி! எதுக்கு வந்திருக்கோம்? சொத்துக்கள் மொத்தமும் அவ பேர்ல. அது அவளுக்கே தெரியாது!
சரிடீ! உன் புருஷனுக்குத் தெரியுமில்லை?
அம்மா! அவளுக்கு இருபத்தியோரு வயசு வர்றதுக்கு முன்னால ஏதாவது நேர்ந்துட்டா, சொத்து மொத்தமும் தர்ம ஸ்தாபனத்துக்கு போயிடும்! அவ மேஜரானதும் அவ பேருக்கு வந்துடும்! அப்ப அவ கதையை முடிச்சா, இவர் பேருக்கு மாறிடும்! அப்புறமா இந்த ஆளை முடிக்கறதுல கஷ்டமே இல்லை! அதுவரைக்கும் புத்திகெட்டதனமா நடக்காதே!
இதுதான் அந்தக் குடும்ப நிலை!
மோகனாவுக்கு, இந்திராவுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான்!
அபிராமி பன்னிரெண்டு வயதில் பருவம் அடைந்தாள்.