Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natchathira Kutram
Natchathira Kutram
Natchathira Kutram
Ebook85 pages26 minutes

Natchathira Kutram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு நேர்மையான நல்லகுணம் படைத்த மின்மினி என்ற நடிகையைச் சுற்றி நடக்கும் சதி. பத்திரிகையாளரான பிரபாகர் குற்றத்தை துப்பறிந்து சதிகாரர்களைக் கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான க்ரைம் நாவல். படிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்த இயலாத அளவிற்கு விறுவிறுப்புகள் நிறைந்த நாவல் இது.

- ஆர்.வி.பதி

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580138806428
Natchathira Kutram

Read more from R.V.Pathy

Related to Natchathira Kutram

Related ebooks

Reviews for Natchathira Kutram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natchathira Kutram - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    நட்சத்திரக் குற்றம்

    Natchathira Kutram

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அது ஒரு முன்னிரவு நேரம். நடிகை மின்மினியின் நவீன பங்களா பளிச்சென்று பார்க்க ரம்மியமாக இருந்தது.

    மேடம்

    ம். என்ன குரு?

    இன்னைக்கு ராத்திரி பத்துலே இருந்து காலையிலே அறு மணிவரைக்கும் நந்தினி டப்பிங் தியேட்டர்லே ஒர்க் இருக்கு

    சரி. நான் குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு ரெடியாயிடறேன்

    வெளியே டிரைவர் ராஜா காருக்குள் படுத்திருந்தான்.

    ராஜா. ஒன்பது மணிக்கு புறப்படணும். எங்கேயும் போயிடாதே

    தலையசைத்தான்.

    குரு உள்ளே போனான்.

    மெயின் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்சா.

    அம்சாவைப் பார்த்த ராஜா ஒருமாதிரியாக சிரித்தான். அவனை முறைத்தபடி உள்ளே போனாள் அம்சா.

    மின்மினியின் வீட்டு வேலைகள் சமையல் வேலைகள் அனைத்தும் அம்சாவின் பொறுப்பு. திறமைசாலி. கை சுத்தம். மின்மினிக்கு அம்சாவின் பொறுமையும் நேர்மையும் பிடிக்கும்.

    மின்மினி புறப்பட்டாள்.

    குரு பங்களாவை பூட்டி சாவியை மின்மினியிடம் கொடுத்து காரில் உட்கார கார் புறப்பட்டது. காவலாளி அருள்தாஸ் அந்த பெரிய கேட்டை திறந்து விட்டான்.

    அம்சா தன் அவுட்ஹவுசிற்குள் போய் படுத்துக் கொண்டாள்.

    அடுத்த அரைமணி நேரத்தில் டப்பிங் தியேட்டரில் இருந்தார்கள்.

    ராஜா. நீ குருவை அவரோட வீட்டிலே டிராப் பண்ணிட்டு வண்டியை பங்களாவிலே விட்டுட்டு கார் சாவியை அம்சாகிட்டே குடுத்துட்டுப் போ. நான் காலையிலே கம்பெனி கார்லே வந்துடறேன். நீ பத்து மணிக்கு வந்தா போதும்

    யெஸ் மேடம் என்று வழக்கமான மரியாதையோடு தலையாட்டிவிட்டு குருவுடன் புறப்பட்டான் ராஜா.

    குருவை அவன் வீட்டில் இறக்கிவிட்டு மின்மினியின் பங்களாவிற்கு வந்தான்.

    ஹாரன் அடித்தான். கதவு திறக்கவில்லை.

    காரிலிருந்து இறங்கி மேல் தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தான். அருள்தாஸ் சேரில் உட்கார்ந்தபடியே சுவரில் சாய்ந்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

    வண்டியை போர்ட்டிகோவில் விட்டு முன் கதவை மூடினான்.

    அருள்தாஸ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

    அவுட்ஹவுசிற்குப் போய் கதவைத் தட்டினான்.

    தூக்கம் படிந்த கண்களுடன் கதவைத்திறந்தாள் அம்சா.

    என்ன இந்த நேரத்திலே?

    வேற எந்த நேரத்திலே வர்றது?

    சிரித்தபடியே கேட்டான்.

    அம்சா முறைத்தாள்.

    ராஜாவின் பார்வை சரியில்லை.

    அம்மா வண்டி சாவியை உன்கிட்டே குடுத்துட்டு என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாங்க

    சரி. சாவியை குடுத்துட்டுப் போ

    சாவியை அவள் கையில் திணித்தபோது அவள் கை ராஜாவின் கையில் பட்டது. ஷாக் அடித்தது போல உணர்ந்த ராஜா சட்டென கதவை மூடினான்.

    விபரீதத்தை உணர்ந்தாள் அம்சா.

    டிரைவர் ராஜாவின் பிடியிலிருந்து சிரமப்பட்டு விடுபட்டாள். கையில் கிடைத்ததை தூக்கி அடித்தாள். ராஜா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

    Enjoying the preview?
    Page 1 of 1