Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nooru Vayathu Vaazha Nooru Vazhigal
Nooru Vayathu Vaazha Nooru Vazhigal
Nooru Vayathu Vaazha Nooru Vazhigal
Ebook228 pages1 hour

Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். மனிதனாகப் பிறக்கும் அனைவருமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். நூறாண்டு காலம் வாழ்வது சுலபமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் மனித வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. முயற்சி மட்டும்தான் நம்முடையது. ஆனால் முடிவு அவன் கையில் என்றால் அது மிகையாகாது. இதன்படி பார்த்தால் இந்த புத்தகமும் ஒரு முயற்சிதான்.

முறையான உணவு வழக்கம், மகிழ்ச்சியான மனநிலை, நல்ல தூக்கம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றினால் நூறாண்டுகள் வாழ முடியும் என்பது ஒரு வித முயற்சியே. ஆரோக்கிமான மனிதர்களாலேயே நம் நாடு முன்னேற்றம் அடையும். அதன்படி எல்லோரும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது. வாங்கிப் படியுங்கள். இந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களை பின்பற்றுங்கள். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிச்சயம் உங்களுக்குச் சொந்தமாகும்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580138806369
Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

Read more from R.V.Pathy

Related to Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

Related ebooks

Reviews for Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nooru Vayathu Vaazha Nooru Vazhigal - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    நூறு வயது வாழ நூறு வழிகள்

    Nooru Vayathu Vaazha Nooru Vazhigal

    Author:

    ஆர்.வி. பதி

    R.V. Pathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    வணக்கம். மனிதனாகப் பிறக்கும் அனைவருமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள். நூறாண்டு காலம் வாழ்வது சுலபமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் மனித வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. முயற்சி மட்டும்தான் நம்முடையது. ஆனால் முடிவு அவன் கையில் என்றால் அது மிகையாகாது. இதன்படி பார்த்தால் இந்த புத்தகமும் ஒரு முயற்சிதான்.

    முறையான உணவு வழக்கம், மகிழ்ச்சியான மனநிலை, நல்ல தூக்கம், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை இப்படி பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றினால் நூறாண்டுகள் வாழ முடியும் என்பது ஒரு வித முயற்சியே. ஆரோக்கிமான மனிதர்களாலேயே நம் நாடு முன்னேற்றம் அடையும். அதன்படி எல்லோரும் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையில் இந்த புத்தகம் உருவாகியுள்ளது. வாங்கிப் படியுங்கள். இந்த புத்தகத்தில் உள்ள விஷயங்களை பின்பற்றுங்கள். வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிச்சயம் உங்களுக்குச் சொந்தமாகும்.

    இந்த புத்தகத்தை அச்சு நூலாக வெளியிட்ட கோவை எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எனது இனிய நண்பர் திரு.ஜெ.வீரநாதன் அவர்களுக்கு நன்றி. இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

    நம்பிக்கையுடன்

    ஆர். வி. பதி

    பொருளடக்கம்

    01. வாருங்கள் வாழ்வோம்

    02. கவலையைத் துரத்துங்கள்

    03. மகிழ்ச்சி

    04. எண்ணெயை மாற்றுங்கள்

    05. தண்ணீர் தண்ணீர்

    06. உடற்பயிற்சி

    07. நடை பழகுங்கள்

    08. அறுசுவை உணவு

    09. கீரைகளின் மகத்துவம்

    10. தூக்கம்

    11. மதுவை மற

    12. மென்று சாப்பிடுங்கள்

    13. பசித்த பின் சாப்பிடுங்கள்

    14. பழங்கள்

    15. அளவாய் சாப்பிடுங்கள்

    16. வெந்தயம்

    17. ஆறு வேளை சாப்பிடுங்கள்

    18. எடையைக் குறை

    19. தினமும் ஒரு கொய்யா

    20. வாழை இலை

    21. பிளாஸ்டிக்

    22. எலுமிச்சை சாறு

    23. சிகரெட்

    24. அரை உப்பு அதிக ஆயுள்

    25. சுற்றுலா

    26. சிரிப்பு

    27. அளவான பேச்சு

    28. மலைக்கோயில்

    29. அரைநாள் பட்டினி

    30. வெந்நீர்

    31. இசை

    32. பருப்புகள்

    33. பேரீச்சை

    34. பூண்டு

    35. மஞ்சள் மகிமை

    36. திரிகடுகம்

    37. பச்சைத் தண்ணீர் குளியல்

    38. கடல் உணவுகள்

    39. இஞ்சி

    40. இளநீர்

    41. ஓட்டல் உணவு

    42. காற்றோட்டம்

    43. நார்சத்து

    44. மலச்சிக்கல்

    45. வைட்டமின்கள்

    46. தேவை கொழுப்பு

    47. நல்ல நட்பு

    48. மாவுச்சத்து

    49. மாத்திரைகளை மற

    50. மாஸ்டர் ஹெல்த் செக்கப்

    51. துளசி

    52. பின் தூங்கி முன் எழு

    53. வாழையடி வாழை

    54. தாய்ப்பால்

    55. சீரகம்

    56. மோர்

    57. சாப்பிட்ட பின்னர் என்ன செய்ய வேண்டும்?

    58. பப்பாளி

    59. சுண்டல்

    60. கடுகு

    61. ஆயில் புல்லிங்

    62. பழச்சாறு

    63. கழுவி சாப்பிடுங்க

    64. யோகாசனம்

    65. மூச்சுப்பயிற்சி

    66. முத்ரா

    67. தியானம்

    68. நீச்சல்

    69. தேன்

    70. தக்காளி

    71. கலப்படம்

    72. சைவ உணவு

    73. லெமன் டீ

    74. காலை உணவு

    75. சைக்கிள்

    76. பட்டை

    77. கடன் வாங்காதீர்

    78. புற்றுநோய்

    79. உமிழ்நீர்

    80. பசலைக் கீரை

    81. உணவை சூடாக்காதீர்

    82. மனம் விட்டுப் பேசுங்கள்

    83. கிராம்பு

    84. இப்படிச் செய்யுங்கள்

    85. வாழைப்பழம்

    86. சர்க்கரை

    87. ஆப்பிள்

    88. மா

    89. கொள்ளு

    90. புதினா

    91. அருகம்புல்

    92. இரத்ததானம்

    93. லிப்ட்

    94. முளைப்பயறு

    95. புரதச்சத்து

    96. கறிவேப்பிலை

    97. மாதுளை

    98. நீர் காய்கறிகள்

    99. இயற்கையோடு கை குலுக்குங்கள்

    100. நூறாண்டு காலம் வாழ்க

    01. வாருங்கள் வாழ்வோம்

    புனிதமான இந்த பூமிப்பந்தின் மீது வந்து பிறக்கும் அனைவருக்குமே நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நியாயமான ஆசைதான். ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? ஒரு இலக்கை அடையும் முயற்சியில் முழுமனதோடு ஈடுபட வேண்டாமா? ஆனால் இதற்கான முயற்சிகளில் நம்மில் எத்தனை பேர் முழுமனதோடு ஈடுபடுகிறோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

    ஒரு சமயம் பிக்கு ஒருவர் புத்தரைச் சந்தித்தார். தன் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு விஷயத்தை ஒரு கேள்வியை புத்தரிடம் கேட்டார்.

    பகவரே. தாங்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் மனிதர்கள் எதனால் மோட்சத்தை அடைவதில்லை

    புத்தர் சிறிது நேர யோசனைக்குப் பின்னர் பிக்குவிடம் ஒரு விஷயத்தைத் தெரிவித்தார்.

    இன்றே நீ ஒரு காரியம் செய். இந்த பகுதியிலுள்ள மனிதர்களைச் சந்தித்து அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று கேட்டு அவர்கள் சொல்வதையெல்லாம் மனதில் பதிவு செய்து கொண்டு வா

    புத்தபெருமான் இவ்வாறு சொன்னதும் அந்த பிக்கு உடனே அந்த வேலையைத் தொடங்கினார்.

    அந்த ஊரில் இருந்த பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து புத்தர் கேட்கச் சொன்னது போலவே தாங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? என்று கேட்டார். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.

    அன்று மாலை பிக்கு புத்தரைச் சந்தித்தார்.

    நான் சொன்னவாறு செய்தாயா? என்று கேட்டார் புத்தர்.

    ஆம். தாங்கள் சொன்னபடியே செய்தேன்

    கேட்டவற்றைச் சொல்

    பிக்கு தான் சந்தித்த மனிதர்கள் அடைய விரும்பிய விஷயங்களை ஒவ்வொன்றாகக் கூறினார்.

    இவற்றை அமைதியாகக் கேட்ட புத்தர் பிக்குவிடம் கேட்டார்.

    இவர்களில் ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று சொல்லவில்லையே

    அந்த பிக்குவும் அப்போதுதான் இதைப் பற்றி யோசித்தார்.

    ஆம். ஒருவர் கூட மோட்சத்தை அடைய விரும்புகிறேன் என்று என்னிடம் சொல்லவில்லை

    இப்போது புத்தபெருமான் பிக்குவிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார்.

    விரும்பாத ஒன்றை எவ்வாறு அடைய முடியும்?

    பிக்குவும் புத்தபிரானின் கேள்வியில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதி காத்து நின்றார்.

    நாம் யாரையாவது வாழ்த்தும் போது நூறு ஆண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துகிறோம். யாராவது நம்மை நினைக்கும் போது நாம் அங்கே சென்றால் இப்பதான் உங்களைப் பத்தி நினைச்சேன். வந்து நிக்கறீங்க. உங்களுக்கு நூறு ஆயுசு என்பார்கள்.

    நூறு வயது வாழ்வது என்பது பெரிய விஷயமல்ல. இந்த உலகில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆரோக்கியமாக வாழ வேண்டும். நிம்மதியாக வாழ வேண்டும். அதுதான் முக்கியம். படுத்த படுக்கையாக ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதில் யாருக்கு என்ன லாபம். மாறாக பிறருக்கு தொந்தரவுதான். இப்படி பிறருக்குத் தொந்தரவு கொடுத்து நூறு ஆண்டுகள் வாழ்வதால் ஒரு பயனும் இல்லை. முழுமையான ஆரோக்கியமே நமது வாழ்நாள் குறிக்கோளாக இருக்க வேண்டும். எந்த ஒன்றையும் நாம் அடைய வேண்டும் என்று விரும்பினால் அதன் மீது நாம் ஆசைப்பட வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அடைய நாம் முழுமனதோடு முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நம் ஆசை நிறைவேறும். வாருங்கள். ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்ற விஷயத்தைப் பற்றி பேசுவோம்.

    02. கவலையைத் துரத்துங்கள்

    நூறு வயது வாழ வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உள்ளது. கவலை வேண்டாம். நிச்சயம் வாழ்வோம். அதற்கு மிக மிக முக்கியமாக நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம் கவலையற்ற வாழ்க்கை. கவலை என்பது ஒரு கரையானைக் போல செயல்படும். கரையான் மரத்தை அரித்துத் தின்று தின்று அந்த மரத்தையே அழித்து விடும். கவலை நம்மை சிறிது சிறிதாக அழித்துக் கொன்று விடும். பக்கவாதம், ஹார்ட்அட்டாக் போன்ற நோய்கள் கவலையின் காரணமாகவே ஏற்படுகிறது. கவலைப்படும் போது நமது மனம் மிகவும் பாதிப்படைகிறது. இதனால் நமது வழக்கமான செயல்கள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக தூக்கம் கெடுகிறது. துக்கம் நம் மனதைச் சூழ்ந்து கொள்ளுகிறது. மனஉளைச்சல் காரணமாக வியாதிகள் நம்மை சுலபமாக நெருங்குகின்றன.

    உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரனாய் இருந்தாலும் சரி. நம்பர் ஒன் ஏழையாக இருந்தாலும் சரி. பூமியில் பிறக்கும் அனைவருமே கவலைக்கு உறவினர்களாகவே இருக்கிறார்கள். கவலை மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடுகிறது. கவலை மனிதர்களின் மனதை அரித்து விரைவில் மரணத்துடன் கை குலுக்க வைக்கிறது.

    உலகத்தில் இரண்டுவிதமான கவலைகள் இருக்கின்றன. தீர்க்க முடிந்த கவலைகள். தீர்க்க முடியாத கவலைகள். நாம் கவலையே இல்லாமல் வாழவே விரும்புகிறோம். இதுவே நமது பிரச்சினை. நமது கவலைகளில் பெரும்பாலும் தீர்க்க முடிந்த கவலைகளாகவே இருக்கின்றன. பிரச்சினையை ஆராய்ந்து அதை எவ்வாறு தீர்க்கலாம் என்று யோசிக்கப் பழக வேண்டும். நமது பிரச்சினையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் பிரச்சினை தீராது. கவலையை வளர விட்டால் அது நமது மனதை காயப்படுத்தி உடலின் இயக்கத்தை மாற்றி பல வியாதிகளை கொண்டு வந்து சேர்த்து விடும். கடைசியில் திடீரென்று மரணம் ஏற்பட்டுவிடும்.

    கவலைப்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1