Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Azhagiya Andaman Theevugal
Azhagiya Andaman Theevugal
Azhagiya Andaman Theevugal
Ebook113 pages36 minutes

Azhagiya Andaman Theevugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வணக்கம். சுற்றுலா என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்கக் கூடாத ஒரு விஷயம் என்பதை நாம் உணர வேண்டும். பிறப்பு, வளர்ச்சி, கல்வி, பொருள் ஈட்டுதல், குழந்தைகள், அவர்களின் திருமணம், நம் எதிர்காலம், ஏமாற்றங்கள், வயோதிகம், இறப்பு. இதுவே நம்மில் பலரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்து விடுகிறது. உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கவலைப்பட்டு நிகழ்காலத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுகிறோம். “நிகழ்காலத்தில் வாழுங்கள்” என்பதே புத்தரின் பிரதான போதனை என்பதை இக்கணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரம்மாண்டமான இந்த பூமியில் நாம் நிற்கும் இடம் எவ்வளவு ஒரு மிகச் சிறிய புள்ளி என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். விதவிதமான இடங்கள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான மொழிகள், விதவிதமான மனோபாவங்கள், விதவிதமான அனுபவங்கள். உலகின் எந்த கல்வி நிலையமும் கற்றுத் தராத, கற்றுத் தர இயலாத விஷயங்களை சுற்றுலா மட்டுமே கற்றுத் தரும். இந்த பிரம்மாண்டமான உலகத்தில் நாம் யார் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.

ஊர் சுற்றுவது எனக்குப் பிடித்தமான ஒன்று. சமீபத்தில் அந்தமானுக்குப் பயணித்தேன். அங்கே நான் கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அற்புதமான புதையல்களைக் கொண்ட இடம் அந்தமான். நான் புதையல் என்பது தங்கத்தையோ வைரத்தையோ அல்ல. காடு, மலை, இயற்கை வளங்கள், கடல், தீவுகள் என சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியையும் அரசுக்கு கணிசமான வருமானத்தையும் அள்ளித்தரும் இடம் தான் அந்தமான் தீவுகள். இதையே என் பார்வையில் நான் புதையல் என்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அந்தமான் செல்லுங்கள். சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து விதத்திலும் பாதுகாப்பையும் மனமகிழ்ச்சியையும் தரும் ஒரு இடம் அந்தமான் தீவுகள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580138806358
Azhagiya Andaman Theevugal

Read more from R.V.Pathy

Related to Azhagiya Andaman Theevugal

Related ebooks

Related categories

Reviews for Azhagiya Andaman Theevugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Azhagiya Andaman Theevugal - R.V.Pathy

    http://www.pustaka.co.in

    அழகிய அந்தமான் தீவுகள்

    Azhagiya Andaman Theevugal

    Author:

    ஆர்.வி.பதி

    R.V.Pathy

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பயணத்தைத் தொடங்கும் முன்

    2. அந்தமான் தீவுகள்

    3. லேண்டிங் @ போர்ட் பிளேயர்

    4. மானிடவியல் அருங்காட்சியகம் (Anthropological Museum)

    5. செல்லுலர் சிறைச்சாலை (Cellular Jail)

    6. கார்பியன் கோவ் கடற்கரை (Corbyn’s Cove Beach)

    7. ஹேவ்லாக் தீவு (Havelock Island)

    8. பாராடங் தீவு (Baratang Island)

    9. ராஸ் மற்றும் நார்த்பே தீவுகள்

    10. அந்தமான் அருங்காட்சியகங்கள்

    11. அந்தமான் ஆலயங்கள்

    12. அந்தமான் மாநிலத்தின் பறவை, விலங்கு, மரம், பூ

    13. அந்தமான் மரங்கள்

    14. அந்தமான் பவளப்பாறைகள்

    15. அந்தமான் சங்குகள் சிப்பிகள்

    16. அந்தமான் தீவுகளில் காணப்படும் ஊர்வன இனங்கள்

    17. சயின்ஸ் சென்டர் (Science Centre)

    18. காந்தி பூங்கா (Gandhi Park)

    19. சத்தம் சா மில் (Chatham Saw Mill)

    20. திக்லிபூர் (Digilipur)

    21. பாரென் தீவு (Barren Island)

    22. நெய்ல் தீவு (Neil Island)

    23. தீவு சுற்றுலாத் திருவிழா

    24. இணையதளம்

    25. சுற்றுலா திட்டமிடல்

    26. சுற்றுலா பயணத்திட்டம்

    27. இனிமையான நினைவுகள்

    முன்னுரை

    அன்புள்ள வாசகர்களே,

    வணக்கம். சுற்றுலா என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்கக் கூடாத ஒரு விஷயம் என்பதை நாம் உணர வேண்டும். பிறப்பு, வளர்ச்சி, கல்வி, பொருள் ஈட்டுதல், குழந்தைகள், அவர்களின் திருமணம், நம் எதிர்காலம், ஏமாற்றங்கள், வயோதிகம், இறப்பு. இதுவே நம்மில் பலரின் வாழ்க்கைப் பயணமாக அமைந்து விடுகிறது. உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களாகிய நாம் மட்டும்தான் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டு கவலைப்பட்டு நிகழ்காலத்தை அனுபவிக்காமல் இருந்துவிடுகிறோம். நிகழ்காலத்தில் வாழுங்கள் என்பதே புத்தரின் பிரதான போதனை என்பதை இக்கணத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    பிரம்மாண்டமான இந்த பூமியில் நாம் நிற்கும் இடம் எவ்வளவு ஒரு மிகச் சிறிய புள்ளி என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். விதவிதமான இடங்கள், விதவிதமான மனிதர்கள், விதவிதமான மொழிகள், விதவிதமான மனோபாவங்கள், விதவிதமான அனுபவங்கள். உலகின் எந்த கல்வி நிலையமும் கற்றுத் தராத, கற்றுத் தர இயலாத விஷயங்களை சுற்றுலா மட்டுமே கற்றுத் தரும். இந்த பிரம்மாண்டமான உலகத்தில் நாம் யார் என்பதை நமக்குப் புரிய வைக்கும்.

    சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, பேருந்து, ரயில், கார், மாட்டுவண்டி, குதிரை வண்டி, லாரி, வேன், படகு, கப்பல், விமானம், ஹெலிகாப்டர் என பலவிதமான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தன்மையானவை. தனியே பயணிக்க சைக்கிள், துணையோடு பயணிக்க மோட்டார் சைக்கிள், தெரியாதவர்களோடு பயணிக்க பேருந்து, கூட்டம் கூட்டமாய் பயணிக்க ரயில், சொகுசாய் பயணிக்க கார், விலங்குகளோடு பயணிக்க மாட்டுவண்டி, குதிரை வண்டி, தண்ணீரில் பயணிக்க படகு, கப்பல், நம்மிடம் நிறைவான செல்வ வளம் உள்ளது என்பதை நமக்கு உணர்த்தும் விமானப் பயணம் இப்படி ஒவ்வொரு பயணமும் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்தும்.

    சுற்றுலா நமது மனதை மேம்படுத்தும். பலதரப்பட்ட இடங்களுக்கு நாம் பயணிக்கும் போதுதான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படுவர்களையும் இருக்கும் சொற்ப பணத்தை பார்த்துப் பார்த்து செலவு செய்பவர்களையும் செல்வத்தில் புரளும் ஆடம்பர மனிதர்களையும் நாம் காண முடியும். பலதரப்பட்ட மக்களின் பண்பாடு, கலாச்சாரம், கலை, இலக்கியம், அவர்களின் வித்தியாசமான வாழ்க்கைச் சூழல்களை நாம் நேரில் காணும் போது நமது மனம் அவற்றோடு ஒப்பிட்டு நம்மை யோசிக்க வைக்கும். இதன்விளைவாக நமது செய்கையில் பலதரப்பட்ட மாற்றங்கள் நிகழும். உலகின் பல பகுதிகளில் வாழும் மனிதர்கள் யாவரும் நமது சகோதர சகோதரிகளே என்ற எண்ணமும் ஒற்றுமை மனோபாவமும் உருவாகும். ஊர் சுற்றாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? இலக்கின்றி ஊர் சுற்றும் நாடோடிகளுக்கு இருக்கும் அறிவு வேறு யாருக்காவது இருக்குமா? எத்தகைய இடங்களிலும் எத்தகைய சூழல்களிலும் தங்களைப் பொருத்திக் கொள்ளும் திறமை இத்தகையவர்களுக்கு எளிதில் கைகூடும். ஏனெனில் ஊர் சுற்றுவதன் மூலம் அவர்கள் பெற்றுள்ள பட்டறிவு அப்படி.

    தன் வாழ்நாள் முழுவதும் தான் வசிக்கும் இடத்திலிருந்து நூறு கிலோமீட்டர் கூடத் தாண்டாத எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை தனது அடிப்படை தேவைகளுக்குக் கூட செலவு செய்யாமல் அப்படியே வங்கியில் போட்டு வைத்து மகிழ்ச்சி அடையும் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். சம்பாதிக்கும் பணத்தை அன்றைக்கே எவ்வித இலக்கின்றி செலவு செய்து மகிழ்ச்சி அடையும் மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.

    மாதத்திற்கு ஒருநாள் நீங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து அருகில் உள்ள ஒரு புதிய பகுதிக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் வருடத்திற்கொருமுறை அண்டை மாநிலத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1