Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Agathiyar Andhathi
Agathiyar Andhathi
Agathiyar Andhathi
Ebook56 pages14 minutes

Agathiyar Andhathi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘அகத்தியர் அந்தாதி’ நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறு நூல். 100 வெண்பாக்களைக் கொண்ட அந்தாதி. இதை 2005ல் மதுரை சின்மயா மிஷனில் இருந்த என் உயிர்க்கினிய நண்பர் சுவாமி சிவயோகானந்தா அவர்கள் மற்றும் என்னுடைய நான்கு சிறு நூல்களுடன் வெளியிட்டார்.

எல்லாவற்றுக்கும் முன்னோடியான, தமிழையும், தமிழின் ஆன்மிக மரபையும் வகுத்துத் தந்த அகத்தியர் மீது நான் புனைந்த துதிகள் டிஜிடல் முறையில் முதல் நூலாக வெளிவருவது அவருடைய ஆசிகள் என்றே கருதி நெகிழ்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 30, 2023
ISBN6580172510553
Agathiyar Andhathi

Read more from Isaikavi Ramanan

Related to Agathiyar Andhathi

Related ebooks

Reviews for Agathiyar Andhathi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Agathiyar Andhathi - Isaikavi Ramanan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அகத்தியர் அந்தாதி

    Agathiyar Andhathi

    Author:

    இசைக்கவி ரமணன்

    Isaikavi Ramanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/isaikavi-ramanan

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஒரு சில வார்த்தைகள்

    காப்பு

    நூல்

    ஆதவன் போற்றி

    முன்னுரை

    ‘அகத்தியர் அந்தாதி’ நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய சிறு நூல். 100 வெண்பாக்களைக் கொண்ட அந்தாதி. இதை 2005ல் மதுரை சின்மயா மிஷனில் இருந்த என் உயிர்க்கினிய நண்பர் சுவாமி சிவயோகானந்தா அவர்கள் மற்றும் என்னுடைய நான்கு சிறு நூல்களுடன் வெளியிட்டார். இப்போது ‘புஸ்தகா’ அதை மின்னூலாக வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி. நண்பர் டாக்டர் ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றி. என்னுடைய நூல்களில் டிஜிடல் முறையில் வெளிவரும் முதல் நூல் இது.

    எல்லாவற்றுக்கும் முன்னோடியான, தமிழையும், தமிழின் ஆன்மிக மரபையும் வகுத்துத் தந்த அகத்தியர் மீது நான் புனைந்த துதிகள் டிஜிடல் முறையில் முதல் நூலாக வெளிவருவது அவருடைய ஆசிகள் என்றே கருதி நெகிழ்கிறேன்.

    ஒரு சில வார்த்தைகள்

    உலகில், பிறந்த கணமே, இது தவத்திற்குத் தோதான இடமில்லை என்று நேரே தவலோகத்திற்கு விரைந்த மஹரிஷி அகத்தியர்; கும்பமுனி; பரமசிவனின் உடுக்கொலியில் பிறந்த உயிரான தமிழை வகுத்துத் தந்த வள்ளல்; தடாதகை, ராஜமாதங்கி என்றெல்லாம் போற்றப்படும் மலையத்வஜ பாண்டியன் மகளான மீனாட்சியின் திருமணக் கோலம் காண, சிவனின் கட்டளைக்கேற்ப, இமயம் விட்டு, விந்தியச் செருக்கடக்கித் தெற்கே வந்து தங்கிவிட்ட மாமுனி; குறுமுனி; யோகத்தின் சிகரம்; லோபமுத்ரை என்னும் சக்தியின் மணாளர்; இதிகாசங்கள் இன்று நம்நாட்டில் கிடைக்கப் பெறுவதற்கு அகத்தியரே காரணம்; போர்க்களத்தில் களைத்து நின்ற காகுத்தனுக்கு ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் தோத்திரம் அருளிச் சோர்வு நீக்கிய வித்தைக்கு அகத்தியன்.

    எல்லாப் புகழுக்கும் போற்றுதலுக்கும் பாத்திரமான அகத்தியரை ‘அகஸ்த்யோ பகவான் ரிஷி’ என்று வால்மீகி கொண்டாடுவதில் வியப்பேது? கிழக்காசிய நாடுகளில் கூட இன்றும் அகத்தியரின் திருவுருவச் சிலைகளைக் காணலாம்.

    அப்பேற்பட்ட மாமுனியைக் குறித்து எழுதப்பட்டது இந்த அகத்தியர் அந்தாதி. 100 வெண்பாக்கள் கொண்டது. நூல்முழுதும் அகத்தியர் குருவாக நிற்கிறார். சீடனின் சாதனையில் ஏற்ற இறக்கங்கள் பாடல்களில் தெரிகின்றன.

    இதில், எந்தவிதமான இலக்கிய ஆழத்தையும்,

    Enjoying the preview?
    Page 1 of 1