Selvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal!
By S. Nagarajan
()
About this ebook
பெங் சுயி சீன வாஸ்து சாஸ்திரம்.
நவமணிகளை அவரவர்க்கு உரிய விதத்தில் தேர்ந்தெடுத்து அணிவது, வாஸ்து சாஸ்திரப்படி இல்லங்களையும், அலுவலகங்களையும் அமைப்பது, பெங் சுயி படி பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய மூன்றும் எளிய வழிகள். அவற்றின் பல வழிகளையும், உத்திகளையும் இந்த நூலில் காணலாம்.
Read more from S. Nagarajan
Jothidam Paarkkum Mun Therinthu Kollungal! Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Subhashitham 200! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsPsychic Wonders And Pathway To Success Rating: 0 out of 5 stars0 ratingsNoi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam! Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsVetrikku Thirukkural Rating: 0 out of 5 stars0 ratingsSethu Dharisanam! Rating: 0 out of 5 stars0 ratingsAnaivarukkum Aarogyam - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsVakkirkku Arunagiri! - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsJothidam Unmaiya? Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kaattu! Rating: 0 out of 5 stars0 ratingsGeethai Vazhi! Rating: 0 out of 5 stars0 ratingsSutrupura Soozhal Sinthanaigal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkaana Puraana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathira Athisayangalum Marmangalum Rating: 0 out of 5 stars0 ratingsNoyilla Vazhvu Pera Sila Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsZen Kaattum Vazhkai Neri Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Selvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal!
Related ebooks
Aayiram Hindu Madha Ponmozhigal Rating: 0 out of 5 stars0 ratingsPanmuga Nokkinil Vaniyal Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsInippin Vetri Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Agarathi Rating: 0 out of 5 stars0 ratingsNatchathirangal – Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsBhagavath Geethaiyil Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsZen Buddhar Thaayumanavar Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Indhu Madham! Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsManapenne Unakkaga Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsSidhargal Pithargala? Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Avasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsSri Mahavishnu Mahatmyam Rating: 0 out of 5 stars0 ratingsIshwaryam Tharum Athirsta Karkal Rating: 0 out of 5 stars0 ratingsSri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal Rating: 0 out of 5 stars0 ratingsThelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsSri Hayagreevar Sthothiram Rating: 0 out of 5 stars0 ratingsDeiveega Ragasiyangal! Rating: 0 out of 5 stars0 ratingsThiruppavai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Selvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal!
0 ratings0 reviews
Book preview
Selvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal! - S. Nagarajan
https://www.pustaka.co.in
செல்வம் செழிக்க - ஜெம்ஸ், வாஸ்து வழிகள்!
Selvam Chezhikka - Gems, Vaasthu, Vazhigal!
Author:
ச. நாகராஜன்
S. Nagarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/s-nagarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் - ஒரு அறிமுகம்!
2. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
3. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் - 1
4. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் - 2
5. செல்வமும் புகழும் தரும் வைரங்கள் - 3
6. முத்தான முத்து, கடவுள் தந்த சொத்து!
7. அச்சம் அகற்றும் பவளம்!
8. வெற்றி தரும் கோமேதகம்!
9. நீலம் செய்யும் ஜாலம்!
10. இசைபட வாழ வைக்கும் வைடூரியம்!
11. தெய்வீக மணி புஷ்பராகம்!
12. மகுடம் சூட்டும் மரகதம்!
13. இல்லத்தில் செல்வம் செழிக்க உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க சுபிட்சமாக வாழ எளிய வழிகள் இதோ!
14. காசு மேலே காசு வரும்!
15. Clutter-ஐ ஒழியுங்கள்!
16. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க உலகின் தலைசிறந்த மூன்று பெண்மணிகளின் அன்புரைகள்!
17. இப்படி இருக்கிறதா உங்கள் வீடு? வாழ்க்கை வளம்பெற பெங் சுயி வழிகள்!
18. பெங் சுயி லோ ஷு சதுரம்
19. பெங்சுயி காட்டும் மேஜை ரகசியம்!
20. பெங் சுயி ரகசியம்! - கண்ணாடி தரும் நன்மைகள்!
21. சிங்கப்பூர் சீக்ரட்! பா குவா தரும் பெங்சுயி அதிர்ஷ்டம்!
22. சிங்கப்பூரின் செல்வ வளத்திற்குக் காரணம் பெங்-சுயி! ஒரு அதிசய உண்மைச் சம்பவம்!
முடிவுரை
முன்னுரை
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வளத்துடனும் செல்வத்துடனும் மனநிம்மதியுடனும் பூரண ஆரோக்கியத்துடனும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்பதுதான் ஹிந்து மதம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்.
இதற்கென ஏராளமான அருமையான வழிகளையும் உத்திகளையும் வழிகாட்டுதலையும் அது தருகிறது.
ஹிந்து மத சாஸ்திரங்கள் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வு உண்டு என்பதை வலியுறுத்துகின்றன.
சம்ஸ்கிருத சுபாஷித ஸ்லோகம் ஒன்று தரும் அரிய செய்தி இது:
அன்யானி சாஸ்த்ராணி வினோத மாத்ரம்
ப்ராப்தேஷு காலேஷு நதைச்ச கிஞ்சித் |
சிகித்ஸித ஜ்யோதிஷ மந்த்ரஹதா
பதே பதே ப்ரத்யய பாவஹந்தி ||
இதன் பொருள்: உலகில் உள்ள மற்ற சாஸ்திரங்கள் எல்லாம், மனிதருக்கு ஒரு வழியில் விநோதமாத்திரமாகவே இருக்கிறது. ஆனால் ஒருவனுக்கு ஆபத்து வரும்போது எந்த ஒரு வேடிக்கை சாஸ்திரமும் அவனைக் காப்பாற்ற வராது. மனிதனின் கஷ்டத்தைப் போக்கி வைத்தியமோ, ஜோதிடமோ, மந்திரமோதான் ஆபத்திலிருந்து அவனை விடுவிக்கும்.
இவற்றில் ஒரு பகுதியாக மந்திரம், யந்திரம், தந்திரம், மணிகள், மூலிகைகள், வாஸ்து அமைகின்றன.
இத்துடனும் ஜோதிடம், எண்கணிதம், மூச்சுக்கலை, யோகா, தலயாத்திரை வழிபாடு உள்ளிட்ட இன்னும் பல வழிகளையும் ஹிந்து மத அறநூல்கள் தருகின்றன.
பெங் சுயி சீன வாஸ்து சாஸ்திரம்.
நவமணிகளை அவரவர்க்கு உரிய விதத்தில் தேர்ந்தெடுத்து அணிவது, வாஸ்து சாஸ்திரப்படி இல்லங்களையும், அலுவலகங்களையும் அமைப்பது, பெங் சுயி படி பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிப்பது ஆகிய மூன்றும் எளிய வழிகள்.
அவற்றின் பல வழிகளையும், உத்திகளையும் இந்த நூலில் காணலாம்.
சுருக்கமாக மணி, மந்திர, ஔஷதம் என்பது காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் சொல் தொடர். இந்த மூன்றில் மணிகளைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது; நலம்பெற, வளம்பெற உரிய வழிகளைச் சுட்டிக் காட்டுகிறது. அத்துடன் வாஸ்து சாஸ்திரம் மற்றும் சீன வாஸ்து சாஸ்திரமான பெங் சுயி பற்றிய விளக்கங்களையும் தருகிறது.
அன்பர்கள் எந்தப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு என்ற நம்பிக்கையுடன் கூடிய அணுகுமுறையில், இதை ‘உதவும் கையேடாக’ எப்போதும் தம்முடன் வைத்துக்கொண்டு நலம்பெற வாழ்த்துகிறேன்.
இந்தக் கட்டுரைகளை மாலை மலர் பத்திரிகையில் வெளியிட்ட தினத்தந்தி அதிபர் திரு S. பாலசுப்ரமண்யன் ஆதித்தன் அவர்களுக்கும் ஆலயம் ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகையில் வெளியிட்ட திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் வெவ்வேறு காலங்களில் வெளியானவை.
இங்கு ஒரே நூலாகத் தொகுத்துத் தரப்படுகிறது. ஆகவே ஒருசில குறிப்புகள் மீண்டும் வந்திருப்பதைக் காணலாம், என்றாலும்கூட அவை நலம் பயக்கும் முக்கியமான குறிப்புகள் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை படிப்பதும் நல்லதுதானே!
இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன்வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதைப் படிக்கும் அன்பர்கள் வாழ்க்கையில் எல்லா நலங்களையும் பெற்று முன்னேறுவர் என்பதில் ஐயம் இல்லை.
இறைவன் அருள்பாலிப்பானாக!
நன்றி.
பங்களூர்
ச.நாகராஜன்
6-3-2022
முதல் பாகம் - நவரத்தினங்கள்
1. பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் நவரத்தினங்கள் - ஒரு அறிமுகம்!
பூமித்தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்!
தன் மக்கள் நீடித்து ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் பூரணமான நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள்.
ஆகவே தான் எழுந்தவுடன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறே அவளுக்கு நன்றிக்கூறி ‘விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்; பாத ஸ்பர்ஸம் க்ஷமஸ்வ மே’ விஷ்ணுவின் பத்னியே, உன்னைக் காலால் தொட்டு இன்று முழுவதும் நடக்க இருக்கிறேன். இதற்காக என்னை மன்னித்தருள் என்றுக் கூறி வேலையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது நமது அறநூல்கள். நன்றி மறப்பது நன்றல்ல, அல்லவா!
தானியங்கள், நீர், காற்று, இருக்க இடம், வெப்பம், வானிலிருந்து விளையும் நன்மைகள் என அனைத்தையும் தன் மண்டலத்தில் தந்த அவள் கருணைக்கு எல்லையே இல்லை.
இத்துடன் மூலிகைகள், மினரல்கள் எனப்படும் தாதுப்பொருள்கள், தங்கம் உள்ளிட்ட விலைமதிக்கவே முடியாத உலோகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போனால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.
அன்னை பூமிக்கு 53 பெயர்கள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று வசுந்தரா என்பதாகும்.
வசுந்தரா என்றால் செழிப்பான நிலத்தையும் அளப்பரிய செல்வங்களையும் கொண்டவள் என்று பொருள். ‘உலகம் முழுவதும் எதிலிருந்து ஆரம்பித்து எதில் முடிகிறதோ அது வசுந்தரா’ என்று இன்னொரு பொருளும் உண்டு. புத்தமத நூல்களும் பாலி மொழியில் உள்ள கிரந்தங்களும் தரும் பொருள்கள் பிரமிக்க வைப்பவை; ரகசியமானவை!
இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள வெவ்வேறு விதமான மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சனைகள்.
இவற்றிற்கு அவரவர் அறிவுக்குத் தக அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.
மனம்கனிந்த அன்னை, சரியான வழியைக்காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவவிட்டு, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக - அறநூல்களாக வடிவம் எடுத்தன.
அவற்றுள் ஒன்று தாதுப்பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப் பகுதி நவரத்தினங்களைப் பற்றியது.
மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது இது.
இதன் முக்கியத்துவம் என்ன?
மூன்று முக்கிய சாஸ்திரங்களுள் முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.
அன்யானி சாஸ்த்ராணி விநோத மாத்ரம் - மற்றக் கலைகள் எல்லாம் வேடிக்கைக்காக உள்ளனவேதான்.
ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது, மணி மந்த்ர ஔஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர்.
மணி என்பதில் ஜ்யோதிஷம், வைத்யம், வாஸ்து, எண் கணிதம், வைத்தியம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன.
மினரல் எனப்படும் தாதுபொருள்களை கணக்கிலடங்காத அளவில் பூமித்தாய் தந்திருக்கிறாள்.
அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரியப் பயன்களைச் சொல்லி வருகின்றனர்.
இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என மணிகளில் நிபுணர்களாக உள்ளோர் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் எகிப்திய, அஸிரிய, ரோமானிய, கிரேக்க, யூத, ஹிந்து, பௌத்த, அராபிய நாகரிகம் உள்ளிட்ட அனைத்துமே, உச்சிமேல் வைத்துக் கொண்டாடுகின்றன.
ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக்கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
நவரத்தினங்களாவன:
மாணிக்கம் - Ruby
முத்து - Pearl
பவளம் - Coral
மரகதம் - Emerald
புஷ்பராகம் - Topaz
வைரம் - Diamond
நீலக்கல் - Blue Sapphire
கோமேதகம் - Zircon
வைடூரியம் - Cat’s Eye
ஹிந்து நாகரிகத்தில் கருடபுராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.
இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால்தான் இந்த பிரமிப்பு.
ரஸ ஜல நிதி என்ற நூல் ஒவ்வொரு விஷயத்தையும் ‘பிட்டுப் பிட்டு’