Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vainava Amutha Thuligal
Vainava Amutha Thuligal
Vainava Amutha Thuligal
Ebook145 pages52 minutes

Vainava Amutha Thuligal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தேன் கூட்டில் இருக்கும் தேன் பல்வேறு மலர்களின் தேன் சுவை கொண்டிருப்பது போல் இந்த நூல் பல்வேறு நூல்களின் சாரமாக நமக்குக் கிடைக்கிறது. எளிய தமிழ் நடையில் அமைந்திருக்கிறது. அரிய கருத்துக்களை முன் வைக்கிறது. விண்ணெறி முன் வைக்கும் முக்கிய கருதுகோள், இறைவனை அடைய பக்தி முக்கியம். பக்தி செய்ய சாதி வித்தியாசம் கிடையாது, ஆண் பெண் வேறுபாடு கிடையாது என்பது. அதை சில கட்டுரைகள் விளக்குகின்றன. அடுத்தது, இறைவனை விட அடியார் செய்யும் பக்திக்கே சிறப்பு என்பது. அடியார்தம் பெருமையை இறைவனும் விரும்புகிறான் என்பது. எனவே “பாகவத அபச்சாரம்” என்பது இறைவனிடம் படும் குற்றங்களை விடக் கொடியது என்றும் எச்சாதியில் இருந்தாலும் பாகவதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே எனும் சமதர்மக் கருத்து இந்நூலில் வலிந்து சொல்லப்படுகிறது.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151008032
Vainava Amutha Thuligal

Read more from S. Nagarajan

Related to Vainava Amutha Thuligal

Related ebooks

Reviews for Vainava Amutha Thuligal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vainava Amutha Thuligal - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    வைணவ அமுதத் துளிகள்

    Vainava Amutha Thuligal

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் மொழி வாயிலாக இயல், இசை, நாடகம், அறிவியல் சார்ந்த இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதோடு நல்ல ஆங்கில நூல்களையும் உலகத்தினருக்கு வழங்குவதே நமது நோக்கம்.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    என்னுரை

    1. உண்மை தெரிந்தவுடன் சண்டை இல்லை; சந்தோஷம் தான்!

    2. நம்மாழ்வார் தன் நிலையை ‘நின்று குமுறும்’ என்றாரா, ‘நின்று உகும் இறும்’ என்றாரா? அரசனின் விளக்கம் என்ன?

    3. இறைவனை எப்படி விளக்குவது?

    4. கூரத்தாழ்வானின் பண்பு நலம்!

    5. கடவுளின் கருணை!

    6. எல்லாப் பழியும் சமணன் தலையிலே!

    7. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 1

    8. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 2

    9. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 3

    10. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 4

    11. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 5

    12. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 6

    13. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் ஸ்தோத்திரங்கள்! – 7

    14. கடவுள் சித்தம் அதுவானால் அப்படியே இருக்கட்டும்! ராமானுஜரின் முடிவு!

    15. இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

    16.பாகவத அபசாரம் கூடாது!

    17.உண்மை வைஷ்ணவன் யார்?

    18. நின்ற மால் மலரடி மறவேனே!

    19. திருக்குறுங்குடி பற்றிய வல்லோசை மிகுந்த இரு பாடல்கள்!

    20. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?

    21. கண்ணன்! எத்தனை கண்ணனடி!

    22. கீதை தரும் ஏழு கட்டளைகள்!

    23. கீதை : மனித குலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! - முதலாவது கட்டளை!!

    24. கீதையின் இரண்டாவது கட்டளை!

    25.கீதையின் மூன்றாவது கட்டளை!

    26.கீதையின் நான்காவது கட்டளை!

    27. கீதையின் ஐந்தாவது கட்டளை!

    28.கீதையின் ஆறாவது கட்டளை!

    29.கீதையின் ஏழாவது கட்டளை!

    30. அபூர்வ வைஷ்ணவ ஆசார்யர் ரொனால்ட் நிக்ஸன் என்னும் கிருஷ்ண ப்ரேம்!

    31. கிருஷ்ண தியானம் ஏன்? தியானத்தின் மகிமையை இந்தியாவில் உணர்ந்த எழுத்தாளர் ஈ.எம்.பார்ஸ்டர்!

    நூலாசிரியர் பற்றிய குறிப்பு

    ***

    அணிந்துரை

    விண்ணெறி அல்லது திருமாலியம் என்பது சங்ககாலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மண்ணில் பயிலப்படும் சமய ஒழுங்கு ஆகும். தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியம் தமிழர் வாழ்வியலை நான்காகப் பிரித்துக் காண்கிறது. காடும் காடு சார்ந்த நிலப்பரப்பை முல்லை என்றும், மலையும் மலை சார்ந்த நிலப்பரப்பை குறிஞ்சி என்றும், நிலமும் நிலம் சார்ந்த கழனிப் பரப்பை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலப்பரப்பை நெய்தல் என்றும் காண்கிறது. இதில் ‘சிறப்புடைப் பொருளை முதற்படக் கிளர்த்தல்’ எனும் பண்டைய முறையால் முல்லையை முதன்மைப் படுத்திப் பேசும் தொல்காப்பியம், அதற்குக் காரணமான திருமால் வழிபாட்டை முன்னிருத்தி, ‘மாயோன் மேய காடுறை உலகமும்’ என்று தொல்காப்பியம் செப்புகிறது.

    இதன் வழி பின் வரும் காப்பியமான சிலப்பதிகாரம், பெரியவனை மாயவனை என்று தெளிவாக திருமால் எல்லாத் தெய்வங்களுக்கும் பெரியவன், தொன்மையானவன் என்று செப்புகிறது. திருக்குறளைச் சிறப்பித்துப் பேசும் திருவள்ளவ மாலையில் சங்கப் புலவரான பரணர், தேவரில் திருமால் எனச்சிறந்த தென்பவே பாவிற்கு வள்ளுவர்வெண்பா என்கிறார். ஆக, பெரியவனை, மாயவனை தொன்று தொட்டு தமிழர்கள் போற்றி வழிபட்டு வருவது தெரிகிறது.

    நமது ஊரில் புழங்கும் கருப்பன், கருப்பணசாமி, மாயாண்டி, பரமன் போன்ற பெயர்கள் அனைத்தும் கண்ணன் எனும் கருந்தெய்வத்தையே குறிக்கும். கண்ணனின் உடன் பிறப்பான பலராமன் பெயரை முன் வைத்து, வெள்ளையன், வெள்ளைச்சாமி, அண்ணாகண்ணன் போன்ற பெயர்களை வைக்கும் பழக்கமும் தமிழ் மண்ணில் தொன்று தொட்டு உண்டு. தமிழின் ஆகப் பழமையான பானை ஓட்டுப் பெயர்களில் கண்ணன், சாத்தான், ஆதன் போன்ற பெயர்கள் இருப்பதை தொல்லியல் கூறும்.

    இத்தகைய பழமையான தெய்வ நெறியின் சம்பிரதாயக் கூறுகளை விளக்கும் முகமாக திரு. ச. நாகராஜன் அவர்கள், வைணவ அமுதத் துளிகள் எனும் நூலை எழுதியுள்ளார். சங்கம் மருவிய காலத்தில் தமிழ் நெறிகள் வடமொழியை அரவணைக்கத் தொடங்கின. இது பெரும்பாலும் அரசின் ஆணையின் பேரில் நடந்திருப்பதாகவே சரித்திரம் கூறுகிறது. மௌரியர் காலத்திலிருந்து வடபுலத்தில் வாழும் அரசர்கள் தென்னகத்தோடு வர்த்தக, அரசியல் தொடர்புடன் இருந்ததைச் சங்கம் பகரும். வேளிர் எனும் 18 குடிகள் வடக்கிருந்து தெற்கே வந்து கலந்ததை கபிலர் சொல்லுவார். கிபி 7-8ம் நூற்றாண்டில் அரச குடும்பங்களில் சாளுக்கியரோடும், தெலுங்கர்களோடும், களப்பிரரோடும், சௌராஷ்ஷியரோடும் திருமண உறவுகள் ஏற்பட்டதின் காரணமாக வடமொழி ஆதிக்கம் தமிழ் மண்ணில் அதிகமாகவே இருந்திருக்கிறது. இவ்வரசர்கள் சதுர்வேதி மங்கலங்கலை உருவாக்கி, பிரம்மதேயம் எனும் பெயரில் பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினர். தமிழ்ப் பிராமணர்கள் வேதம் ஓதி, வடமறைகளை பாதுகாக்கும் பொறுப்பை அளித்தனர். இதன் பயனாய் தமிழ்ச் சமய ஒழுங்கு மெல்ல, மெல்ல ஆரியக் கலப்பை ஏற்றுக் கொள்ளத் தொடங்குகிறது. வடமொழி கலந்து தமிழை எழுதும் மணிப்பிரவாளம் எனும் புலவர் நடை பிரபலமாகத் தொடங்குகிறது. தமிழ்ப் பிராமணர்கள் அரசு ஆதரவு பெற்று வடமொழியிலும், தெலுங்கிலும் இலக்கியம் படைக்கத் தொடங்கினர். இதன் தாக்கம் விண்ணெறியிலும் தெரிவதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது. வேதாந்த தேசிகர் எனும் காஞ்சிபுரத்து பன்மொழிப் புலவர் இயற்றிய பல்வேறு சமிஸ்கிருத நூல்கள் பற்றிய விவரணை இந்த நூலில் கிடைக்கிறது.

    இதே காலக் கட்டத்தில் ஒரு தமிழ் மறுமலர்ச்சியும் காணக்கிடைக்கிறது. மதுரகவி எனும் பிராமணர், காரிமாறன் எனும் நான்காம் வருணத்தைச் சேர்ந்த அருளாளர் சொல்லிய திருவாய்மொழியைத் தமிழ் வேதம் என பிரகடணப்படுத்த. நம்மாழ்வாரை குலகுருவாகக் கொண்டு ஒரு புதிய புரட்சி சம்பிரதாயத்தை நாதமுனிகள் எனும் தமிழ் பிராமணர் தொடங்குகிறார். பெண்ணிய கருத்தாக்கம் கொண்ட இப்புதிய வழியை "ஸ்ரீ சம்பிரதாயம் என அழைத்தனர். அகமரபிற்கு வடமொழி ஆதரவைத் தேட உருவாக்கிய நெறிதான், ஸ்ரீவைஷ்ணவம் என்பது. திருமால் எனும் பதத்தில் முதலில் திரு வருவதைக் கொண்டு ஸ்ரீ வைஷ்ணவம்" முன் வைக்கப்படுகிறது. அரசு ஆதரவு கொண்ட வடமொழியுடன் உறவு வைத்துக் கொண்டு தமிழ் மரபு முன்வைக்கப்படுகிறது. அரங்கநாதன் வடமொழிக்கு பின்புறம் காட்டி, தென்மொழிக்கு முகம் காட்டுகிறான் எனும் புரட்சிப்போக்குத் தொடர்ந்ததை கம்பன் தனது சடகோபரந்தாதியில் பதிவு செய்கிறான். அதன் பிரகாரம் தென் தமிழ் நாட்டில் தமிழ் கோயில் மொழியானதையும், பெருமாள் புறப்பாட்டில் தமிழ்ப் பிரபந்தங்கள் முன் செல்ல, இறைவன் தமிழ் நோக்கி ஓட, வேதம் பெருமாளுக்குப் பின்னால் தொடர்வதாக சரித்திரம் மாறிப்

    Enjoying the preview?
    Page 1 of 1