Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samskirutha Selvam
Samskirutha Selvam
Samskirutha Selvam
Ebook140 pages33 minutes

Samskirutha Selvam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு பெரும் கடல். பெரும் பாண்டித்யம் இல்லாமல் அதில் நான் புகுந்து சம்ஸ்கிருத செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கம்பனுடைய சொற்களால் ‘ஆசை பற்றி அறையலுற்ற’ கதை தான். ‘அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளை தரையினில் கீறிடில் தச்சரும் காய்வரோ’ (வீட்டின் வரைபடத்தையும் ஆடிட்டோரியத்தின் டிசைனையும் சிறு குழந்தை தரையில் கிறுக்கினால் அதைப் பார்த்து அந்தக் குழந்தையின் தந்தையான சிற்பி கோபப்படுவானா, என்ன! அடடா, நம் குழந்தை பிறவி மேதை; இப்பொழுதே என்னை விட அழகாக டிசைன் செய்யும் பெரிய ஆர்கிடெக்ட் ஆகி விட்டானே என்றல்லவா புகழ்வான்!) என்று கம்பன் கூறிய பாடலை நினைவில் கொண்டவுடன் தைரியம் வந்து தமிழ் மக்களின் முன் இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.

சம்ஸ்கிருதமும் தமிழும் அழகிய, தொன்மை வாய்ந்த, அபூர்வமான, இலக்கண, இலக்கியம் கொண்ட, உலகின் பேரறிஞர்கள் கண்டு வியந்த, இன்றும் வியக்கும் மொழிகள். இதற்கான காரணம், இந்த இரண்டு மொழிகளும் சிவ பிரானால் உருவாக்கப்பட்டவை, கந்தனால் வளர்க்கப்பட்டவை என்பதே!

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580151007907
Samskirutha Selvam

Read more from S. Nagarajan

Related to Samskirutha Selvam

Related ebooks

Reviews for Samskirutha Selvam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samskirutha Selvam - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சம்ஸ்கிருதச் செல்வம்

    Samskirutha Selvam

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    என்னுரை

    சிவனுக்கு இணை இல்லை!

    யார் மிக மிகக் கீழானவன்?

    நல்லவர்களை யாருடன்தான் ஒப்பிடுவது?

    பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!

    புலவரின் வேதனை - சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

    சிதையும் சிந்தையும்!

    தாயர், தந்தையர் யார் யார்?

    மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

    கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள்!

    அனைத்தும் பெற ஆறு கேள்விகள்!

    காக்க காக்க ரகசியம் காக்க!

    மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

    வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!

    சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை! ரகசியம் இதோ!

    எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

    கருமமே கண்ணாயினார்!

    முன்னேறுவதற்கு உள்ள ஆறு தடைகள்!

    தீரர்கள் நியாயமான வழியை விட்டு ஒரு அடி கூடப் பிறழ மாட்டார்கள்!

    யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!

    தன்னையே அழிக்கும் கோபம்!

    யாருக்கு எது அலங்காரம்?

    பணமும் படிப்பும்

    கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம், முக்தி தரும்!

    சூரியோதயம், சூரியாஸ்தமனம் கண்டு உத்வேகம் பெறலாம்!

    அறிவு வளரும் விதம்!

    ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

    ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!!

    ஐந்து ‘ல’ கர மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!

    மனைவிகளின் பெருமையும், லேக தோஷமும்!

    பசுவும் பாம்பும்!

    எதற்கு எது அழகு?

    அஹிம்சையே பரம தர்மம்!

    ஸ்லோக முதற்குறிப்பு விவரணம்

    சுபாஷித நூல்கள்

    முன்னுரை

    தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

    இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

    பழமை

    உலகில் இப்போது பயன்படுத்தப்படும் மொழிகளில் எந்த மொழியையும் விட மிகப் பழமையான சான்று கிடைத்த மொழி சம்ஸ்கிருதம். துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் பொகாஸ்கோய் பகுதியில் கிடைத்த சம்ஸ்கிருதக் கல்வெட்டில் (கி.மு 1400) வேதகால தெய்வங்களான மித்ரன், வருணன் முதலியோரைக் காண்கிறோம். அதற்குப் பின் மிட்டனி வம்ச அரசர்களின் (கி.மு.1300) பெயர்களில் தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களைப் படிக்கிறோம். எகிப்தில் உள்ள அமர்னா கடிதங்களில் தசரதன் எழுதிய உருக்கமான கடிதங்களைக் காண்கிறோம். 3000 ஆண்டுகளுக்கு முன் கிக்குலி எழுதிய அஸ்வ (குதிரை சாத்திரத்தில் சம்ஸ்கிருதத்தில் 1,2,3,4 முதலிய எண்களைப் பார்க்கிறோம். இவ்வளவு பழமை வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லை.

    அருமை

    சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை. இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு அறிவியல், தர்க்கவியல், உளவியல், மானுடவியல் கதைகள் முதலிய எல்லா இயல்களுக்கும் நூல்கள் கிடைக்கின்றன. இவைகள் எல்லாம் நாளந்தா, தட்சசீலப் பல்கலைக்கழகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் எஞ்சிய நூல்கள்! இப்போதுள்ள பழைய நூல்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டாலேயே அது பல நூறு தொகுதிகளாக வெளியாகும். கி.மு 800-ல் கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞன் இலியட், ஆடிசி காவியங்களை எழுதுவதற்கு முன்னரே வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் என பிரம்மாண்டமான இலக்கியத் தொகுதிகளை உருவாக்கிவிட்டனர் சம்ஸ்கிருதம் பேசிய ரிஷி, முனிவர்கள்.

    பெருமை

    வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்றும் பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே, பார்மிசை ஏதொரு நூல் இது போலே என்றும் சொற்தேரின் சாரதியாம் பாரதியால் போற்றப்பட்ட பெருமைமிகு நூல்கள் உடையது சம்ஸ்கிருதம்..காலத்தால் அழியாத ராமாயண, மஹாபாரதம் உடையது இம்மொழி. நாலு லட்சம் புராண ஸ்லோகங்களில் உள்ள கருத்துகள் மனித சமுதாயம் எல்லாவற்றுக்கும் பயன்படும். நாட்டியம் என்றால் பரதம், வைத்தியம் என்றால் சரக சம்ஹிதை, சோதிடம் என்றால் ப்ருஹத்ஜாதகம், வான சாத்திரம் என்றால் ஆர்யபட்டீயம், யோகம்

    Enjoying the preview?
    Page 1 of 1