Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!
Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!
Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!
Ebook112 pages35 minutes

Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமுமே. இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.

சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் - 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்கள் வெளியாகின. அடுத்து இந்த நூல் வெளியாகிறது.

கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள், 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில், கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர், மான் விழியாளுக்கு எது ஆபரணம், நையாண்டிப் பாடல்கள், எனக்கு மூன்று மனைவிகள், கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்! பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல, உள்ளிட்ட 30 அத்தியாயங்களில் சம்ஸ்கிருத கடலில் ஒரு சில துளிகளைப் படித்து ஆனந்திக்கலாம்!

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580151009067
Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!

Read more from S. Nagarajan

Related to Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!

Related ebooks

Reviews for Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum! - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சம்ஸ்கிருத இலக்கியத்தில் சில புதிர்க் கவிதைகளும், அறிவுரைகளும்!

    Samskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. மான் விழியாளுக்கு எது ஆபரணம்?

    2. ஆறு கேள்விகளுக்கு பதில் தரும் ஒரு சொற்றொடர்!

    3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

    4. கணவனைப் பிரிந்த சீதை எப்படி மகிழ்ச்சியுடன் இருந்தாள்?

    5. மீன்களுக்குப் பிடிக்காத நீர்நிலை எது? எதனால்?

    6. கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள்!

    7. வளமாக இருக்கும் போது பரிதாபத்திற்குரியது எது?

    8. கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர்!

    9. கையெழுத்து முதல் தலையெழுத்து வரை!

    10. கேள்விகள் பல; பதிலோ ஒரு வார்த்தையில்!

    11. சிவனின் உடல் எப்படி இருக்கிறது?

    12. 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத விந்தை!!

    13. நையாண்டிப் பாடல்கள் – சம்ஸ்கிருதத்தில்!

    14. எனக்கு மூன்று மனைவிகள்!

    15. கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்!

    16. உப்பே உத்தமம்!

    17. மேலானவன் யார்? மேதாவி யார்?

    18. புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் 13 நல்ல விஷயங்களும் சந்தோஷத்தை தரும் எட்டு விஷயங்களும்!

    19. வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

    20. மஹாத்மா என்பவர் யார்?

    21. இறந்ததற்குச் சமம்!

    22. காளிதாஸன் மீது போஜனின் நட்பு!

    23. கீதத்தின் பெருமை!

    24. படிப்பது எப்படி?

    25. பாரதத்தின் பெருமை!

    26. சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

    27. பேராசை பெரு நஷ்டம் - மூன்று சுபாஷிதங்கள்!

    28. பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல!

    29. கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

    30. வாழ்த்துவதிலும் ஒரு அழகு, முறை, ஆசீர்வாதம்!

    பிற்சேர்க்கை - 1

    பிற்சேர்க்கை - 2

    என்னுரை

    பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமுமே.

    இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.

    உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இந்த நூல்கள் ஓலைச் சுவடிகளாக உள்ளன; பாரதத்திலேயே கல்வெட்டுக்களில் இலக்கியச் செல்வம் பொதிந்திருக்கிறது. இன்னும் முறையாக அவை தொகுக்கப்படவில்லை.

    சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். அதில் தனி ஒரு இடத்தை சுபாஷிதங்கள் பெறுகின்றன.

    பல தனிப்பாடல்களைத் தொகுத்து உள்ள தொகுப்பு நூல்களும் ஏராளமாக உள்ளன.

    இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.

    அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் - 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்களை அடுத்து இந்த நூல் வெளியாகிறது.

    கட்டுரைகளாக வெளி வந்த போது பாராட்டி ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி.

    இவற்றை www.tamilandvedas.com ப்ளாக்கில் வெளியிட்ட லண்டன் திரு எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    அழகிய முறையில் இதை நூலாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    நன்றி

    சான்பிரான்ஸிஸ்கோ

    10-9-2022

    ச.நாகராஜன்

    1. மான் விழியாளுக்கு எது ஆபரணம்?

    சம்ஸ்கிருதம் என்னும் பெருங்கடலில் கவிதைப் புதிர்கள் சுவாரசியமான ஒரு பகுதி.

    ஆயிரக்கணக்கான புதிர்களை நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.

    இந்தப் புதிர்களில் பல வகை உண்டு.

    சமஸ்யா என்னும் விடுகதைப் புதிர்களில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டு அதில் உள்ள புதிரை விடுவிக்க அறைகூவல் விடப்படும். சாமர்த்தியசாலிகள் அந்தப் புதிரை அவிழ்த்து அனைவரின் பாராட்டையும் பெறுவர்.

    இன்னொரு விதம், ஒரு கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; விடையும் அதே கவிதையில் இருக்கும். இதை அந்தர் ஆலாப வகை என்று கூறுவர்.

    இன்னொரு விதக் கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; ஆனால் விடை அந்தக் கவிதையில் இருக்காது; நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். இந்த வகையை பஹிர்-ஆலாப வகை என்று கூறுவர்.

    முதலில் அந்தர் ஆலாப வகை புதிர் கவிதை ஒன்றைப் பார்ப்போம்:-

    கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா: கா சுந்தரி யௌவனதுக்கபாரா I தாதா லிபி வா விததாதி குத்ர சிந்தூரபிந்துவிதவாலலாடே II

    இந்த்ரவ்ரஜா என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்தக் கவிதைப் புதிரின் பொருள்

    Enjoying the preview?
    Page 1 of 1